மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

0
225
#image_title

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

ஒருவருக்கு சளி ஏற்பட்டால் அவை குணமாக பல நாட்கள் ஆகும்.முன்பெல்லாம் சளி பிடித்தால் மூலிகை கசாயம் வைத்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று அனைவரும் மருந்து,மாத்திரையை நாட தொடங்கி விட்டோம்.

அதிகளவு மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஒரு சிலருக்கு வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஏற்படும்.ஒரு சிலருக்கு என்னதான் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவ்வளவு எளிதில் சளி குணமாகாது.

தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டாலும் அதிகாலை நேரத்தில் வறண்ட பனி பெய்கிறது.இதனால் வறட்டு இருமல்,சளியால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.

சளியை கரைத்து தள்ளும் மூலிகை பானம் தயாரிப்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தூதுவளை பொடி
2)முசுமுசுக்கை பொடி
3)வெள்ளெருக்கு பூ பொடி

இவை மூன்றும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.ஒவ்வொன்றையும் 25 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.அதன் பின்னர் வாங்கி வந்த தூதுவளை பொடி,முசுமுசுக்கை மற்றும் வெள்ளெருக்கு பொடி தலா ஒரு ஸ்பூன் அளவு போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு தயாரித்த பானம் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்ததும் குடிக்கவும்.தேவைப்பட்டால் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

கெட்டி படிந்த சளி கரைய தூதுவளை சிறந்த தீர்வாக இருக்கும்.அதேபோல் வெள்ளெருக்கு நாள்பட்ட சளி பாதிப்பால் ஏற்படக் கூடிய ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது.நாள்பட்ட சளி காச நோயாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.இதற்கு முசுமுசுக்கையை சிறந்த தீர்வாக இருக்கும்.