வெறும் 15 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

0
31
#image_title

வெறும் 15 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

அனைவரும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் சில நாட்களில் அவை மலச்சிக்கலாக மாற வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.

இதை உடனடியாக சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகளை பாலோ செய்தால் சில நிமிடத்தில் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகி விடும்.

தேவையான பொருட்கள்:-

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*விளக்கு எண்ணெய் – 1தேக்கரண்டி

*உப்பு – 1 சிட்டிகை

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து பெருஞ்சீரக தண்ணீரை ஒரு டம்ளருக்கு வடிகட்டவும். அடுத்து அதில் சுத்தமான விளக்கு எண்ணெய் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து 1 சிட்டிகை அளவு சாதாரண உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து கலக்கவும்.

பிறகு அதில் 10 முதல் 15 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இவ்வாறு பருகிய சில நிமிடங்களில் மலம் வெளியேறத் தொடங்கும். அடுத்த 2 மணி நேரத்தில் மொத்த மலமும் வெளியேறி குடல் சுத்தமாகும்.

மற்றொரு எளியத் தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அவை சூடானதும் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி கலக்கி பருகவும். இவ்வாறு செய்த அடுத்த 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மலம் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.