சனிக்கிழமை, ஜூலை 27, 2024
Home Blog Page 4

சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

 

சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 6000 சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது போதுமானதாக இருக்காது எனக் கூறி மதுரை சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு நாளுக்கு 200 என்ற வீதம் மாதம் ரூ 6000 சம்பளம் என நிர்ணயித்தால் போதுமானதாக இருக்குமா, என நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு எப்படி இந்த சம்பளத்தை நிர்ணயித்து கையெழுத்து போட்டிருக்க முடியும்.

இதனை சிறிதளவு கூட அரசுத்துறை செயலாளர் யோசிக்க வேண்டாமா என்று கேட்டுள்ளனர். மேலும் கண்ணை மூடிக்கொண்டு தான் அரசாணையில் கையெழுத்து விடுவதா? என்று அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்துள்ளனர். மேற்கொண்டு இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாது பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

FLASH: “ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

0

FLASH: “ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சி முறையில் டெல்லியில் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் இருவரும் பல கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். இதனை எப்படி கையாளுவது என்று அறியாமல் பதவியிலிருந்தாலும் இவர்களின் பிணை கைதி போல தான் தற்பொழுது மோடியின் நிலை உள்ளது.

அதுமட்டுமன்றி இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூட்டணியில் உள்ள இரு மாநிலங்களுக்குத்தான் அதிகளவில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாடு முழுவதும் ஒரே மின்கட்டணம் என்ற திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தினார். “இந்த ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டமானது முழுமையாக கொண்டு வருவதென்பது சாத்தியமற்றது. இது குறித்து நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்றும் கூறலாம்.

அந்த வகையில் இன்று மத்திய மின்சார துறை இணையமைச்சர் ஶ்ரீ பத் யாசோ கூறியதாவது, மின்சாரத்துறை சட்டத்தின் 2003 விதிகளின் கீழ், ஒவ்வொருவரின் கட்டணத்தையும் அந்தந்த மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. இதனை நாடு முழுவதும் என பொதுவான முறையில் கணக்கிட முடியாது. மேற்கொண்டு நாடு முழுவதும் பொதுவான மின்சார கட்டணம் என்ற திட்டம் மத்திய அரசு கையில் இல்லை என தெளிவாக கூறியுள்ளார்.

ஆளுநர் பதிவி நீட்டிப்பு.. போடப்படும் அதிரடி வழக்கு!! மத்திய அரசுக்கு பறந்த கடிதம்!!

0

ஆளுநர் பதிவி நீட்டிப்பு.. போடப்படும் அதிரடி வழக்கு!! மத்திய அரசுக்கு பறந்த கடிதம்!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது. நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்பொழுது இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அடுத்து தமிழக ஆளுநராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவிற்கும் ஆளுநர் உடனடி ஒப்புதல் கொடுத்ததில்லை. ஆரம்ப கட்டத்திலிருந்தே திமுக விற்கும் ஆளுநர்-க்கும் ஏகா பொருத்தமாக தான் உள்ளது.

இவர் மத்திய அரசுக்கு அதிகளவு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்களுக்காகத்தான் இவர் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஆளுநர் டெல்லிக்கு சென்று மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். மேற்கொண்டு தமிழ்நாட்டின் கவர்னராக இவரே நீட்டிக்கப்படத்தான் இந்த சந்திப்பு பேச்சு வார்த்தை என பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது.

தற்பொழுது இது குறித்து கேள்வி எழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துரைசாமி டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கவர்னரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக யார் நியமிக்கப்படுவார். மேற்கொண்டு இவரை நியமிக்கப்படும் பட்ச்சத்தில் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு செய்யும் துரோகம். மேற்கொண்டு இவரே தொடர்வார் என்றால் கட்டாயம் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும். ஆளுநர் பதவி குறித்து உங்களது திட்டம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

தேதி குறித்த ஸ்டாலின்.. எல்லாமே தலைகீழாகப் போகுது!! அமைச்சர்களுக்கு வரும் ஆப்பு!! 

0

தேதி குறித்த ஸ்டாலின்.. எல்லாமே தலைகீழாகப் போகுது!! அமைச்சர்களுக்கு வரும் ஆப்பு!!

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து வெளிநாட்டு மூலதனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இவர் ஜூலை மாதம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவ ரீதியான பரிசோதனைக்கு சென்றதால் தேதி குறிப்பிடாமல் இவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளிநாட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும் என பலரும் கூறி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் மாநில தலைவர் கொலை வழக்கு , கஞ்சா ஊடுருவல் என பல பிரச்சனைகளில் திமுகவின் தலை ஓங்கி நிற்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இவை அனைத்தும் ஆட்சி ஒழுங்கின்மை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

இதனை மாற்ற வேண்டுமென்றால் பரீட்சியமிக்க மற்றும் மக்கள் ஆதரவு கொடுக்கும் அமைச்சர்களை பெரிய பதவிகளில் உட்கார வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் முதலாவதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு அமர்த்தப்படலாம். மேற்கொண்டு மின்சாரம் மற்றும் அமலாக்கத்துறை, போக்குவரத்து துறை என அனைத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பல அமைச்சர்களின் இலக்காகக்கள் கட்டாயம் மாற்றம் செய்யப்படும். குறிப்பாக துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட உள்ளதால் இளம் தலைக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவிற்கு பிறகு ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அதற்குள் அமைச்சரவையில் மாற்றம் வந்துவிடும் என கூறுகின்றனர்.

பட்ஜெட்டில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி! 

0
பட்ஜெட்டில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்டதை அடுத்து எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் எதுவும் காட்டவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 23ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறினார்.
அதற்கு தகுந்த வகையில் இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்காக பல அறிவிப்புகள் வெளியானது. மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள், கல்விக்கடன் குறித்த அறிவிப்புகளும் வெளியானது. மேலும் இந்த மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி எதிர்கட்சிகள் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டில் எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் “நான் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. குறிப்பிட்ட மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாமல் மத்திய அரசு சில மாநிலங்களை ஒதுக்குகின்றது என்று எதிர்கட்சிகள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றது.
ஒரு சில மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு மற்ற மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாமல் இருந்தால் அது புறக்கணிப்பு ஆகாது. அனைத்து மாநில மக்களும் பயன்பெறும் வகையில் தான் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

 

“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றியமைத்து உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போல மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் நோக்கில் மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. தற்பொழுது இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி “தமிழ் புதல்வன்” திட்டம் மூலம் ஆயிரம் பெற கட்டாயம் ஆதார் அட்டை அவசியம் என கூறியுள்ளனர். ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள ஆதார் மையம் அல்லது இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளனர். மேற்கொண்டு தாங்கள் இருக்கும் பகுதியில் இ சேவை மையம் போன்றவை இல்லையென்றால் தாங்கள் படித்த கல்வி வாயிலாக ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளும் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதிக்குள் தமிழ் புதல்வன் திட்டதில் மாணவர்கள் விண்ணப்பித்து அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தமிழ் புதல்வன் திட்டமானது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

0

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதேபோல பெரிய கடை, வீதி ரோஸ்கோர்ஸ், கிராஸ் கட், வெரைட்டி ஹால், பாரதி பார்க் சாலை, என் எஸ் ஆர் உள்ளேட்டப் பகுதிகளிலும் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய திட்டமிட்டு வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கு சிட்டிசன் வாய்ஸ் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கும் முன்பே வசூலிக்கப்பட்டு வரும் பார்க்கின் கட்டணம் நிர்ணயித்த தொகை விட ஒப்பந்ததாரர்கள் அதிகளவு வசூல் செய்வதாகவும் மேலும் இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக மின்னணு முறையில் பார்க்கிங் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிரசித்தி பெற்ற முறையில் வண்டி வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை நிறுவுமாறு கூறியுள்ளனர்.

இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் தற்பொழுது கவனிப்பிற்கு வந்துள்ளது. இது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். குறிப்பிட்ட சில இடங்களை தேர்ந்தெடுத்து வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். அதன் பிறகு தான் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 

0
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்!! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் ஒரு  முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி கள்ளச்சாரயம் குடித்தவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்தான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் தான் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக “முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கல்வராயன் மலைப்பகுதியை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். முதல்வர் செல்ல முடியாத பட்சத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்று ஆய்வு நடத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12% வட்டி கொடுக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

0

12% வட்டி கொடுக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் அதிக கவனம் பெற்ற திட்டமாக குழந்தைகளுக்கான NPS வாத்சல்யா உள்ளது.இந்த திட்டத்தின் ஸ்பெஷல் இதர திட்டங்களை காட்டிலும் அதிகப்படியான வட்டி வழங்கக் கூடியதாக உள்ளது.

அஞ்சல் அலுவலங்களில் கொடுக்கப்படும் வட்டியை காட்டிலும் NPS வாத்சல்யா திட்டத்தின் மூலம் அதிக லாபம் பெறமுடியும்.அஞ்சல் அலுவலங்களில் அதிக வட்டி(8.2%) வழங்கக் கூடிய திட்டமாக பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா உள்ளது.ஆனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்தால் 12% வரை வட்டி பெறமுடியும்.

அஞ்சல் அலுவலங்கங்களில் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய வயது வரம்பு இருக்கிறது.ஆனால் NPS வாத்சல்யா திட்டத்தை பொறுத்தவரை அடிப்படை வயது வரம்பு எதுவும் இல்லை.இந்த திட்டத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரின் பெயரிலும் முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 80CCB(1B) பிரிவின் கீழ் ரூ.50,000 வரை வரிச்சலுகை பெற முடியும்.குழந்தைகளுக்கான தேசிய ஓய்வூதியம் என்ற இந்த திட்டம் 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் NPS வாத்சல்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.இத்திட்டத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் முதலீடு செய்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் இத்திட்டம் சாதாரண NPS திட்டமாக மாற்றப்பட்டு விடும்.

ஆதார் பதிவு எண் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி!!

0

ஆதார் பதிவு எண் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி!!

ஜூலை 23 அன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான தனது 7-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மக்களவை தேர்தலுக்கு முன்னர் பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் நேற்று மீதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது.அதில் ஒன்று ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்த தடை விதிக்கப்படுதற்கான அறிவிப்பு.

ஆதார் பதிவு எண் பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகிறது.இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக இனி பான் கார்டு பெற ஆதார் பதிவு எண் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆதார் இல்லாதவர்கள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தது.ஆனால் தற்போதைய விவரப்படி பெரும்பாலான மக்களிடம் ஆதார் எண் இருப்பதால் அதை பயன்படுத்தி பான் கார்டுக்கு அப்ளை செய்யலாம் என்று பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் பதிவு எண் பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆதார் எண் வந்ததும் அதை தெரிவிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு ஐடி கண்டறியும் முறை:

முதலில் UIDAI என்ற இணையதளத்திற்கு சென்று “My Aadhaar” க்ளிக் செய்யவும் .பிறகு அதிலுள்ள EID/UIDஐக் கிளிக் செய்யவும்.

அடுத்து தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி மற்றும் தங்களின் முழுப் பெயரை அதில் என்டர் செய்யவும்.

பிறகு கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து “Send OTP” என்பதைக் கிளிக் செய்யவும்.அடுத்து OTP எண்ணை பதிவு செய்யவும்.இவ்வாறு செய்த பின்னர் EID விவரங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.