Monday, July 21, 2025
Home Blog Page 4582

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

0

தமிழ் சினிமாவில் பூஜை, புலி வேதாளம், சிங்கம் 3, 3, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுருதிகாசன். அத்துடன் மட்டுமல்லாமல் அவர் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.

 

https://www.instagram.com/p/CPGoOVYBhDQ/?utm_source=ig_embed&ig_rid=1e23f25b-ce71-43f3-9bb7-93ce6a14e17b

இதனையடுத்து சுருதிகாசன் தற்சமயம் தந்தை கமல்ஹாசனும் ஒன்றிணைந்து சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

அவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கின்ற கவர்ச்சி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”

0

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி.

 

இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் தெலுங்கு டப்பிங், மற்றும் உப்பென்னா போன்ற படங்களில் வில்லனாக நடித்து தெலுங்கு மக்களின் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

 

இந்நிலையில் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாம். பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் எடுக்க உள்ளார்களாம்.

 

இந்த படத்திற்கான கதையையும் விஜய் சேதுபதியிடம் சொல்லி அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. படம் குறைந்த பட்ஜெட் என்பதால் அவருக்கு சம்பளம் எதுவும் இல்லையாம்.

 

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சம்பளத்துக்கு பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கை கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிரங்க மன்னிப்பு கேட்டார்! அமைச்சர் பொன்முடி!

0

விழுப்புரம் மாவட்டம் மேல மங்கலம் கிராமத்தில் நோய்த்தொற்று தடுப்பூசி முகாமை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆரம்பித்து வைத்தார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த நிருபர்கள் தமிழக அரசின் பத்திரிகையாளர்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராம நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அமைச்சர் பொன்முடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அங்கே இருந்தவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தவே கிராமத்தில் வசிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலாது. மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்படும் என்று ஒருமையில் பேசி இருக்கின்றார். இதற்கு முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை அவமதித்த உரையாற்றிய விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததன் காரணமாக, தன்னுடைய செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

படகு விபத்தில் சிக்கி 50 பேர் பலி! 100 பேரை காணவில்லை!!

0

படகு விபத்தில் சிக்கி 60 பேர் உயரிழந்துள்ள சம்பவம் நைஜீரியாவில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் படகு உடைந்து 60 பேர் பலியாகி உள்ள நிலையில் 100 பேரை காணவில்லை.

 

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி என்ற மாகாணத்தில் உள்ள நிகர் நதியில், 200 பயணிகளுடன் படகு ஒன்று நேற்று சென்றுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் மூட்டைகள் சென்றுள்ளன.

 

கெப்பி மாகாணத்தில் உள்ள சந்தையில் விற்பனைக்காக இந்த மணல் மூட்டைகள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல் பயணிகளும் அந்த சந்தைக்கு செல்வதற்காகவே படகில் பயணித்தனர்.‌

 

புறப்பட ஒரு மணி நேரத்தில் வாரா நகரில் உள்ள கைன்ஜி என்ற ஏரியில் ஏற்பட்ட விபத்தில் படகு விபத்துக்கு உள்ளாகி இரண்டாக உடைந்து அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பலியாகி உள்ளனர். மேலும் 100 பேரை காணவில்லை. அவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கு எந்த ஒரு வாய்ப்பு இல்லை என மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.

 

மேலும் காணாமல் போன 100 பேரை தேடும் பணியில் தீவிரமாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். மேலும் பாரம் தாங்காமல் படகு இரண்டாக உடைந்து இருக்கலாம் என நைஜீரியாவின் நீர்வழி போக்குவரத்து துறையினர் கூறியுள்ளனர்.

 

இது நைஜீரியாவில் இந்த மாதத்தில் நடந்த 2-வது படகு விபத்தாகும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நைஜர் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

திமுகவினருக்கு முக்கிய வேண்டுகோளை வைத்த ஸ்டாலின்!

0

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் உற்பத்தி 1079 பேருக்கு நேற்று உரையாற்றிய பிறகு இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 186 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 855 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக அதிகரித்திருக்கிறது.

கோவை மாவட்டத்தில் சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3937 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 818 பேருக்கும், இந்த நோய்த்தொற்று உறுதி செய்திருக்கிறது. அதேபோல திருச்சியில் 1287 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்து 823 பேருக்கும் மதுரை மாவட்டத்தில் 1140 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1831 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 379 இருக்கும் இந்த நோய் தொற்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியை பொருத்தவரையில் 1007 பேருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் இந்த தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும் உள் மாவட்டங்களில் இந்த நோய் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

இந்த சூழலில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கின்ற பதிவில் கோயமுத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற மாவட்டங்களில் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட இருக்கின்றேன். அவசர கால பயணம் என்ற காரணத்தால் கழகத்தினர் நேரில் வருவதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். பொது மக்களின் பசியைப் போக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!

0

நேற்றைய தினம்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த நாட்டின் பிரதமரை அரை மணி நேரமாக காக்க வைத்து கூட்டத்தை புறக்கணித்தது இதுதான் முதல் முறை என்று ஊடகங்கள் மம்தா பானர்ஜி தொடர்பாக கூறி வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகளை நேற்று நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் சென்ற சமயத்தில் அவரை வரவேற்பதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வருகை தரவில்லை. ஆளுநர் ஜக்திப் தங்கர் மட்டுமே வருகை தந்திருந்தார்.

விமானம் மூலமாக புயல் பாதித்த இடங்களை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஆய்வு செய்தார். அதன் பிறகு மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் ,அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குபெறும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டார் .

இதன் காரணமாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோபமடைந்து கூட்டத்தை புரக்கணித்ததாக சொல்லப்படுகிறது.இதனால் முதல்வர் இல்லாமலேயே ஆலோசனை கூட்டம் நடந்ததாக தெரிகிறது.புயல் சேதங்களை பார்வையிட திகா பகுதிக்கு செல்ல வேண்டி இருந்ததால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.

அய்யா! விட்றுய்யா! கதறி துடித்த மூதாட்டி!! விடாத மூர்த்தி!

0

ஆந்திராவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தில் அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 60 வயது மூதாட்டி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதே பகுதியில் மூர்த்தி என்றவரும் வாழ்ந்து வந்துள்ளார்.

 

மூதாட்டி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு, மூதாட்டியை கடுமையாகத் தாக்கி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி தப்பிச் சென்றுள்ளார்.

 

இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த மூதாட்டி கதறிக் கொண்டு இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் கிராம மக்கள் அனைவருக்கும் தெரிவித்தனர். கிராம மக்கள் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள புங்கனூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

மூர்த்தியின் இந்த செயலை கண்டு ஆவேசமடைந்த கிராம மக்கள், மூர்த்தி தனது வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து மூர்த்தியை பிடித்து தாக்கி அடித்து கொன்றனர்.

 

இதனால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கிராம மக்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

நீயின்றி நான் இல்லை! கொரோனாவல் குடும்பத்திற்கு ஏற்பட்ட கதி!!

0

கணவனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது. முதல் அலையில் ஊரடங்கு அதிகமானதால் அனைவரும் பொருளாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.

 

இரண்டாவது அலையில் அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி சொந்தங்களை பிரியமானவர்களை இழந்துவருகின்றனர். பலரும் தன் அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.

 

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி என்ற ஊரில் விவசாயி மூர்த்தி மற்றும் சிந்தாமணி ஆகிய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

 

இந்நிலையில் மூர்த்திக்கு கடந்த சில நாட்களாக சளி இருமல் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி மருத்துவமனையில் மூர்த்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கணவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மனைவி மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது மன வேதனை தாளாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிந்தாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருதோ ?இல்லையோ!! “சரக்கு” வருது!!

0

தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் கர்நாடகாவில் இருந்து பரிசலில் வரும் மதுபானங்களை குடிமகன்கள் இரட்டை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.

 

ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.

 

கர்நாடகாவில் ஊரடங்கு 12 மணிக்கு மேல் அமல் படுத்தப் படுவதால் அங்கு மதுபான கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் 12 மணி வரை தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு அமல் படுத்தப் படுகின்றது. அதனால் மதுபான கடைகள் 12 மணி வரை செயல்படுகின்றது.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் பிறந்த கோபிநத்தம் அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள மதுபான கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து இரு மாநில எல்லையில் ஓடும் காவிரி ஆற்றில் பரிசல் மூலம் கடந்து தமிழக எல்லை கிராமங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்கின்றனர். இரட்டை விலை கொடுத்து மதுபான பிரியர்களும் வாங்கி குடிக்கின்றனர். தடைகள் அனைத்தையும் மீறி மதுபான விற்பனை மிகவும் ஜோராக நடைபெறுகிறது.

 

இந்த கடத்தலை தடுக்க சேலம் தலைமை எஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் கொளத்தூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்க கிராமத்துல காய்கறி வண்டி வரும்! ரெடியா இருங்க! 342 வாகனங்களுக்கு அனுமதி!

0

மதுரையில் கொரோனா பரவலை தடுக்க 342 தனியார் வாகனங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

 

கிராமப்புறங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. மதுரையில் மட்டும் 13 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 420 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மக்கள் நகர்புறங்களுக்கு சென்று வருகின்றனர். தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கிராமப்புறங்களுக்கு சென்று சப்ளை செய்ய உத்தரவிட்டார்.

 

அதன்படி 342 தனியார் வாகனங்களுக்கு ஒப்புதல் அளித்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செல்லதுரை அவர்கள் தலைமையில் அதிகாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சப்ளை செய்ய அனுமதித்தனர்.

 

அனைத்து கிராமப்புறங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கிருமி நாசினி தெளித்து மற்றும் முக கவசம் வழங்குதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

சற்று அதிகமாக ஏற்பட்டுள்ள கிராமப்புறங்களில் தனிமை படுத்தி அவர்களுக்கான அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.