Tuesday, July 8, 2025
Home Blog Page 20

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா; கல்யாண தேதி எப்போ!

நடிகை ராஸ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகின்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வருகின்றது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதனால் இவர்களுக்கு இடையே காதல் இருப்பதை ரசிகர்கள் தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருவரும் தங்களுடைய காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் இருவரும் சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொள்ளும் கருத்துகளும், பொது இடங்களில் ஒன்றாக இருபதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகின்றது

கடந்த ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான சுற்றுலா இடங்களுக்கும் விஜய் தேவரகொண்டா வீட்டிற்கு ராஷ்மிகா செல்வது மற்றும் இன்ஸ்டாகிராமில் அதனை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அண்மையில் ராஷ்மிகாவின் பதிவில்  எனக்கு பிடித்தவை அனைத்தும் இந்த படங்களில் உள்ளன இடம், சேலை கொடுத்த அன்பான பெண், புகைப்படக்காரர் என்று பதிவு செய்திருந்தார்.

அந்த புகைப்படங்களை தேவரகொண்டா எடுத்தார் என்றும் சேலையை அவரின் தாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்ட இருவரும் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் ராஷ்மிகா தேவரகொண்டா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்; தலைமை எடுத்த அதிரடி முடிவு!

அதிமுக கடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது வரும் 2026 தேர்தலில் வெற்றி அடைய தனது கட்சியை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வருகின்றார். ஆனால் அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் கட்சி இரண்டாக பிரிக்கப்பட்டது.

யார் அதிமுகவில் தலைவராக இருப்பார்கள் என தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடித்து வருகின்றார். 2026 தேர்தலுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகின்றார்.

இந்நிலையில்  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாநகராட்சி 59 ஆவது வார்டு கவுன்சிலருமான எஸ் பி எஸ் ராஜா தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்..

தனது சொந்த அக்காவிடம் நகை மற்றும் 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ராஜா தனது சொந்த அக்காவிடம் மோசடியில் ஈடுபட்டதால் தான் எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. கணவன் மனைவி இருவரும் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்த பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது .

குஷியோ குஷி..பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கும் மேலாக விடுமுறையை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி முதல் கோடை விடுமுறை முடிவடைந்து.

மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது, ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் போதிய அளவு விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கவலை அடைந்து வந்தனர். கோடை விடுமுறையின் பொழுது வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறக்கப்படும் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவ மழை பெய்ததால் குளிர்ச்சி அடைந்தது.

அதனால் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி திறக்கபட்ட்து. ஆனால் தற்போது நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது..

ஜூலை மாதத்தில் அரசு விடுமுறை என்று பார்க்கும் பொழுது மொஹரம் பண்டிகை மட்டுமே உள்ளது. அந்த பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மொஹரம் பண்டிகையின் பொழுது நமக்கு மறுநாள் தான் பிறை தென்படும் மறுநாள் தென்பட்டால் ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது.

அப்பொழுது சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களின் மனதை குளிர வைத்த தமிழக அரசு; இலவச வீட்டு மனை பட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் பட்டா இல்லாத இடங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகின்றது. அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரக்கூடிய ஏழை எளிய குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் பிற மாநகராட்சிகளிலும் புறம்போக்கு நிலங்களில் வசிக்க கூடியவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எந்தவித ஆட்சியபசனையும் இல்லாத பொறம்போக்கு பகுதியில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அங்கு வசிக்க வேண்டும்.

அந்த இடத்தில் எந்தவித ஆட்சியபசனையும் இருக்கக் கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மூன்று லட்ச ஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நகரப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் வரையில் வழங்கப்படும்.

மேலும் அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் இந்த புறம்போக்கு இடங்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடங்களில் நீர் நிலைகளோ, கோவில் நிலமும் கால்வாய் போகும் இடமாக இருந்தால் பட்டா வழங்க முடியாது.

அங்கு வசிக்கும் மக்கள் பட்டாவிற்கு விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து எந்தவித ஆட்சியபசனையும் இல்லாத பட்சத்தில் பட்டா வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் சிரமம் இல்லாமல் மிக எளிய முறையில் விண்ணப்பித்து என் ஓ சி பெரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு கூறுகையில் simpleGov  முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது மற்றும் அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்த இருக்கின்றன, அடையாளச் சான்றிதழ் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றது..

அரசு ஊழியர்கள் விரிவான முறையில் ஆவணங்களை சேகரித்து சமர்ப்பிப்பது சவாலான ஒன்றாக உள்ள நிலையில் ஆவணங்கள் ஒவ்வொன்றும் பெறுவதற்கான நடவடிக்கையில் படிநிலையில் தாமதமாகி வருகின்றது.

துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பிரச்சனைகள் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்று பெறுவதற்கு பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு என்பது அவசியம் தேவைப்படுகின்றது. போதிய தகவல் பகிர்வு இல்லாதது , ஒத்துழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் சான்று பெறுவது காலதாமதம் ஆகும்.

அதிகப்படியான ஆவணங்களை கையாளும் வகையில் தள்ளிவிடப்படுகின்றது இதனால் வாய்ப்புகள் தவற விடுதல், பொறியியல், மருத்துவம் அளித்த பல்வேறு துறைகளைச் சார்ந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், சர்வதேச கருத்தரங்கங்கள் சர்வதேச அறிவு மையங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.

ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பாஸ்போர்ட் பெரும் நடைமுறைகளில் அதிக சிக்கல் இருப்பதால்தான் வாய்ப்புகளை தவற விட்டு வருவதாக கூறப்படுகின்றது. தனிப்பட்ட பயணங்கள் மற்றும் குடும்பமாக வெளிநாடு பயணிக்க திட்டமிடும்பொழுது அதில் ஒருவர் அரசு ஊழியராக இருந்தால் சிக்கல் ஏற்படுகின்றது. அதனால் போதிய அனுமதிச்சான்ற பெறுவதில் நிலவும் சிரமங்கள், காலதாமதம் ஆகுவதால் பயணங்களை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் தமிழக அரசு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி விரிவாக ஆய்வு செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த பரிந்துரை செய்தது.

மேலும் அவசரகால நடவடிக்கையாக விவரங்கள் தேவைப்படும் சூழலில் துறை தலைமையே என்ஓசி அல்லது அடையாள சான்றிதழ் அல்லது இரண்டையும் வழங்குவதற்கான நடவடிக்கையில்  ஈடுபடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று விதிகளில் திருத்தம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீடு தேடி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!

0

தேர்தலின் பொழுது அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் திமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது..

அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது.

ஆனால் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் மீண்டும் இதற்கான முகாம்கள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. ஜூன் மாதத்தில் 9000 முகாம்கள் மூலம் புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மகளிர் உரிமை பெற்று வரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு வரும் மகளிர் உரிமை தொகை ரத்து செய்யப்படலாம் என அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இந்நிலையில் தஞ்சாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொண்டு விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 45 நாட்களுக்குள் மகளிர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களுக்கு முடிவு எடுக்கப்படும்.

ஜூலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. உள்ளூர் அளவில் தன்னார்வலர்கள் உங்கள் வீடு தேடி வந்து ஸ்டாலின் திட்டத்தை பற்றி உங்களுக்கு கூறுவார்கள். நீங்கள் இந்த  திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், ஆவணங்கள் என்ன சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வின் முக்கிய நிர்வாகிக்கு திடீர் நெஞ்சுவலி.. கட்சிக்குள் தொடர் பரபரப்பு!!

PMK: பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக் கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி தான் ஏற்க போகிறார் எனக் கூறிய மறுநாளே நான் தான் சாகும் வரை தலைவர் என்று நிலை தடுமாறி மாற்றி பேசி வருகிறார். அன்புமணியும் மற்றொரு பக்கம் பொதுக்குழு கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நான்தான் அதனால் தலைவர் பதவி எனக்கு தான் எனக் கூறுகிறார்.

இதனிடையே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இவர்களின் இருவரின் சண்டையால் கட்சியின் மதிப்பானது குறைந்து கொண்டே வருவதாக அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில் இவர்கள் மீண்டும் இணைய வேண்டுமென எண்ணி சேலம் மாவட்டத்தின் எம்எல்ஏ அருள் இவர்கள் இணையவில்லை என்றால் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இப்படி கட்சிக்குள் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாளை சேலத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் பட்சத்தில் இன்று சேலம் எம்எல்ஏவான அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2026 யில் ஹிட்டடிக்கும் தவெக.. சிதறும் திமுக கூட்டணி!! பக்கா பிளானை இறக்கிய விஜய்!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் யாருடன் மெகா கூட்டணி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிதும் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்று கூறி வந்தனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை ஒத்து வராத நிலையில் அதிமுக பாஜகவுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. அதேபோல பாஜக மற்றும் திமுக இருவரும் விஜய்யின் அரசியலுக்கு எதிரி.

இதனால் மீண்டும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. ஆனால் திமுக கூட்டணி கட்சிக்களிக்கிடையே சில அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. அதாவது மாற்றுக் கட்சிகளில் கூட்டணிகளுக்கு கொடுக்கும் தொகுதி பங்கீடு வைத்து திமுகவிலும் கேட்கிறார்களாம். அதிலும் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் வழக்கம்போல் ஆறு தொகுதி வேண்டாம் என கேட்டுள்ளது. இதற்கு அடுத்து காங்கிரஸும் தொகுதி பங்கிட்டு காரராக உள்ளார்களாம்.

ஆனால் வழக்கமான பங்கீட்டிலிருந்து திமுக நிலை மாறுவதாக தெரியவில்லை. இதனால் திருமா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறுவதாக கூறுகின்றனர். அப்படி வெளியேறும் கட்சிகளை தன் வசப்படுத்த விஜய் திட்டம் தீட்டி உள்ளாராம். அதிலும் இவர்களுடன் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளதாம். இந்த கூட்டணி மட்டும் இணையும் பட்சத்தில் திமுக வை எதிர்த்து வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என கூறுகின்றனர். அதிலும் முதலாண்டு விஜய் முதல்வராகவும் இவர் கூட்டணியில் இருப்பவர்கள் துணை முதல்வராகவும் இருப்பதாக பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாம்.

அடுத்தடுத்த வருடம் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல்வராக ஆட்சி செய்வார்களாம். தேர்தல் நெருங்கும் பட்சத்தில் தான் இது எந்த அளவுக்கு நிதர்சனமான உண்மையாக மாறும் என்பதை பார்க்க முடியும்.

எஸ்பிஐ கார்டு இருக்கா..கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; உடனே இத நோட் பண்ணிக்கோங்க!

எஸ்பிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களில் அதிக தொகையை செலுத்த நேரிடலாம் அபராதங்களை தவிர்க்க வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை நிறுவனம் கணக்கிடும் முறையில் கடந்த வாரம் மாற்றம் செய்தனர்.

இந்நிலையில் இந்த திருத்தம் பில் செலுத்துதலை விரிவுபடுத்த வழிவகை செய்யும். பணப்புழக்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்ச தொகையை செலுத்தும் பயனர்களுக்கு இது சுமையாக அமைய கூடும் எனவும் கூறப்படுகின்றது.

ஸ்பிஐ கார்டின் அறிவிப்பின்படி குறைந்தபட்ச கட்டணத் தொகையில் தற்போது வரைந்த அளவிலான கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இஎம்ஐ தொகை, இஎம்ஐ மற்றும் கார்டு மீதான கடன் உட்பட 100 சதவீத கட்டணங்கள் ,100% நிதி வட்டி வரம்பை மீறி தொகை மீதமுள்ள நிலுவைத் தொகுதி இது 2% முன்னதாக இஎம்ஐ மற்றும் கட்டணங்களில் ஒரு பகுதி மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய தொகையை செலுத்தி மீதமுள்ள தொகையை அடுத்த மாதத்திற்கு மாற்ற அனுமதித்தது. புதிய முறையில் அதிக நிலுவைத் தொகைகள்  அல்லது இஎம்ஐ உள்ள பயனர்களுக்கு குறைந்தபட்ச மாத செலவை கணிசமாக உயர்த்த வழங்கப்பட்டுள்ளது.

தற்போது திருத்தப்பட்ட கட்டண முறையில் குறைந்தபட்ச கட்டணத் தொகையின் மாற்றத்துடன் sbi  கார்டு பணம் செலுத்தப்படும் முறையையும் புதுப்பித்துள்ளது. ஜிஎஸ்டி, இஎம்ஐ தொகை கட்டணங்கள் நிதி இருப்பு, சில்லறை செலவுகள் இந்த திருத்தப்பட்ட வரிசை வட்டி மற்றும் அபராதங்களில் உருவாக்கும் கூறுகள் முதலில் திருத்தப்படுவதை உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு வட்டி சுமை குறைகிறது. புதிய மாற்றத்தின் மூலம் கட்டணங்கள் முதலில் தீர்க்கப்படுவதால், உங்கள் அசல் கடன் விரைவில் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். நிதி ஒழுங்கு இந்த மாற்றங்களை பயனர்களை செலவுகளையும் மிகவும் விவேகத்துடன் நிர்வாகிக்க தூண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்பநிதி-யை புதிய பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் முதல்வர் குடும்பம்..திமுக தொண்டர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகின்றார். இந்நிலையில் சினிமாவில் இருந்த தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது பரப்புரை செய்தார். அப்போது அவருக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

முதலில் இவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவின் இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்தார் அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஸ்டாலின் உடன் சேர்ந்து திமுக ஆட்சியை நடத்தி வருகின்றார் இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேரனும் துணை முதலமைச்சரின் மகனும் ஆன இன்பநிதிக்கு கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இவர் தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 5.3௦ மணி வரை பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாக தொடர்பான கட்டப்படைப்பை படித்து வந்த நிலையில் படிப்பை முடித்தவுடன் ஜூன் மூன்றாம் தேதி திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்திற்கு இன்பநிதியை அவருடைய தாய் கிருத்திகா அழைத்து வந்தார்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி மகன் கார்த்திகேயன் அந்த நிறுவனத்தின் தலைமை நீதி அதிகாரியாக இருக்கும் நிலையில் அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் மகன் இன்பநிதியை அமர வைத்து அவருக்கு கிருத்திகா வாழ்த்து கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாக பணிகள் குறித்து அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன்  தினந்தோறும் இன்பநிதி ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது