Wednesday, July 9, 2025
Home Blog Page 23

இலவச சிலிண்டர் பெற வேண்டுமா; உடனே இதை பண்ணிடுங்க!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் மக்களுக்காக இலவச சிலிண்டர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக ஒரு சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம்.

இந்த அப்டேட்டை முடிக்கவில்லை என்றால் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். அல்லது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சிலிண்டர் மானிய பணமும் நின்றுவிடும். மோசடியை தடுக்கவும் இத்திட்டத்தின் நன்மைகளில் உண்மையான மற்றும் தகுதியான பெண்களுக்கு மட்டும் சென்றடைய மத்திய அரசு கேஒய்சி சரிபார்ப்பை கொண்டுவந்துள்ளது. மேலும் 18 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் பெண்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட பெண்கள் தகுதியுடையவர்களாக கருதப்படும் நிலையில் சிலிண்டர் இணைப்பு உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தை பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சிலிண்டர்களை பெற முடியும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வரும் நிலையில் அனைத்து பயனாளிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். அதற்கு ஆதார் அட்டை ,வங்கி பாஸ் புக், ஆதரவுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், சிலிண்டர் இணைப்பு எண் என இந்த ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருந்தால் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.

முதலில் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தை திறக்க வேண்டும். வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் eKYC ஆப்ஷன் இருக்கும் l. அதனை கிளிக் செய்தால் உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் ஆதாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். தகவலை உள்ளிட்ட பிறகு ஓடிபி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

உடனே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதனை பதிவிட வேண்டும். இதன் வழிமுறைகள் முடித்த பிறகு செயல்முறை முடிந்து விடும் அருகில் உள்ள சிலிண்டர் நிறுவனம் அல்லது பொதுச் சேவை மையத்திற்கு சென்று ஆதார் கார்டு நகல் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருந்தால் சிலிண்டர் நிறுவனம் அல்லது பொது சேவை மையத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.

பெயர் முகவரி, எரிவாயு இணைப்பு எண் மற்றும் ஆதார் எண் போன்றவை அந்த படிவத்தில் சரியாக உள்ளிட வேண்டும். அனைத்து தகவலையும் நிரப்பிய பிறகு ஆவணங்களின் நகலை படிவத்துடன் இணைக்க வேண்டும். இப்போது நிரப்பப்பட்ட படிவம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை சிலிண்டர் நிறுவனம் அல்லது பொது சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் பயனாளிகளின் கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை முடித்துக் கொள்ளலாம்.

பெண் காவலர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு; இனி நீங்கள் விரும்பும் இடத்திலேயே பணியாற்றலாம்!

அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணம் இன்றி வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இலவச திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கூடியவர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு சட்டசபையில் முன்கூட்டியே அறிவித்தார்.

அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. விவசாயிகளுக்கு 50,000 மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகப்பேறு விடுப்பு முடிவடைந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 209 பெண் காவலர்களுக்கு தங்கள் பேறுகால விடுபிற்கு பிறகு குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு மற்ற மாநகரம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பி இருந்தால் அந்த பணியிடமாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஷியோ குஷி..மாணவர்களும் வெளியான குட் நியூஸ்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. அதில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு முடிவடைந்து 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது.

அதன் பிறகு ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை கிடைப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சற்று கவலை அடைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் விடுமுறை கிடைக்குமா என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

தென்மேற்கு பருவமழை தற்போது வெளுத்து வாங்கி வரும் நிலையில் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியிலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனால் நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ள நிலையில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், உள்ளிட்ட நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

2026 தேர்தல் கூட்டணி; விஜயை பாஜக பக்கம் கொண்டுவர சீக்ரெட் பிளான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் இவர் சினிமாவில் இருக்கும் பொழுதே பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வந்த நிலையில் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த கட்சியின் மூலம் தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்காக செய்து வருகின்றனர். மேலும் 2026 தேர்தல் தான் தனது குறிக்கோள் என விஜய் கூறிவரும் நிலையில் அதற்கு தனது கட்சியை தயார் செய்து வருகின்றார் தற்போது தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் திமுக தான் அரசியல் எதிரி என விஜய் கூறியுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் பேசி வந்தனர்.

அதிமுக தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் விஜயை தங்கள் கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆனால் பாஜக இருக்கும் கூட்டணியில் விஜய் சேர்வாரா என்பது கேள்விக்குறியாக நிற்கின்றது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்றும் அதற்கு ரஜினி ஆதரவு தர வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.

விஜய் தலைமையிலான ஒரு புதிய கூட்டணி உருவாகும் எனவும் அதில் தேமுதிக, அதிமுக, பாமக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைய அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகின்றது. வரும் 2026 தேர்தல் விஜயை மையப்படுத்தி இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் அரசியரைப் பொறுத்தவரை அவர் ஒரு புது முகாம். அரசியல் தந்திரங்கள் தெரியாது அவர் ஒரு போராட்டத்தை கூட களத்தில் இறங்கி நடத்தவில்லை எனவும் மக்களை சந்திக்கவில்லை என விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் மதுரை வந்த அமித்ஷா தனது கட்சி பிரமுகர்களிடம் எப்படியாவது விஜயை நமது கூட்டணிக்கு கொண்டு வந்து விடுங்க. அவர் இருந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்; இனி பொருட்கள் வாங்குவது இவ்வளவு சுலபமா!

தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது மேலும் ரேஷன் கார்டு மூலம் மக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே அரசு வழங்கக்கூடிய திட்டங்களை பெற உதவியாக இருக்கும்.

மேலும் தமிழக முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் உள்ள நிலையில் அதில் 26 ஆயிரத்து 618 முழு நேர கடைகளும், 10,710 பகுதி நேர கடைகளும் செயல்படுகின்றது இவற்றின் மூலம் பொருட்கள் விநியோகம் சீராக நடைபெற்று வரும் நிலையில் அதனை உறுதி செய்ய பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கைரேகை அங்கீகார வீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை விரைவாக பெற்று செல்ல முடியும். ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு தற்போது மின்னணு விற்பனை கருவி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருவியின் மூலம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்வது அவசியம். இந்த கைரேகை ஆதார் அட்டையில் உள்ள கை ரேகையுடன் பொருந்தினால் மட்டுமே அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

முன்பிருந்த விதிகளின்படி கைரேகை 40 சதவீதம் துல்லியமாக இருந்தால் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 90% துல்லியமாக இருக்க வேண்டும் எனவும் விதியை மாற்றி அமைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் கைரேகை சரியாக பதிவாக விட்டால் கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்படும். இதன் மூலம் பொருட்கள் தர தாமதம் ஏற்படுகின்றது. அதனால் கூட்டுறவுத்துறை மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைத்து கைரேகை பதிவின் 90 சதவீதம் துள்ளியத்தை தற்போது 70% ஒத்துப் போனால் பொருட்கள் வழங்கும் வகையில் மாற்றியமைத்துள்ளது. அதனால் பொதுமக்கள் விரைவாக ரேஷன் பொருட்களை பெற்று செல்கின்றனர். 

சுய உதவிக் குழுவில் இருக்கீங்களா; லட்ச கணக்கில் பணம் பெறலாம் எப்படி தெரியுமா!

தமிழக அரசு சார்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 1,168 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா ஈரோடு வேளாளர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் 996 குழுக்களுக்கு 296.20 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 8867 மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் 94,281 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 10% பேர் மகளிர் சுய உதவி குழுவில் இருக்கின்றனர்.

மீதமுள்ள மகளிருக்கு இந்த திட்டத்தில் இணைந்து தங்கள் குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மகளிர் குழுக்களின் வங்கி கடன் இணைப்புக்கு 1120 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவை வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மகளிர்களுக்கு சுய உதவி குழுவின் வங்கி இணைப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு 31 லட்சம் கடன் உதவி மற்றும் 67 பயனாளிகளுக்கு 62 லட்சம் தொழில் முனைவோர் கடன் உதவி என மொத்தம் 96.20 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்டம் முன்னோடி ,வங்கி மேலாளர், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?

ஜெயம் ரவிக்கு கொஞ்ச மாதங்களாகவே நேரம் சரிஇல்ல என்று தான் சொல்லணும். மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை அதை தொடர்ந்து பாடகி கெனிஷாவுடன் காதல் என தொடர்ந்து எதாவது வதந்தியில் சிக்கிக்கிட்டு தான் இருக்கிறார். அதுமட்டுமல்ல அண்மையில் ஜெயம் ரவி என்று இருந்த தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிவிட்டார்.

இவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் நீங்க எனக்கும், என் பிள்ளைகளுக்கும் மாதாமாதம்40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெயம் ரவியும், SJ சூர்யாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் ரெண்டாவது படத்தில் யோகி பாபுவை ஹீரோவாக களமிறக்க உள்ளார் ஜெயம் ரவி.

இவரு நடிக்கிற படமே ஓடலைன்னு இவங்க மாமியார் கம்பளைண்ட் பண்ணிக்கிட்டு இருக்கு, இதுல இவரே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு அதுல நடிச்சா மாமியார் நிலைமை தான் இவருக்கும் வரும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் குழப்பத்தில் பாமக தொண்டர்கள்! இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?

கடந்த சில வருடங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. தலைவர் ராமதாசுக்கோ அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்கணும்னு ஆசை. ஆனால் மகனுக்கோ பாஜக கட்சியுடன் கூட்டணி சேரணும்னு விருப்பம். அண்மையில் மேடையிலேயே இருவரும் வாய்க்கு வந்தபடி பேசியதை நம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.

இதனால் இருவரும் தங்களுக்கு சாதகமான ஆட்களுக்கு தொடர்ந்து பதவிகளை மாறி மாறி கொடுத்து வருகின்றனர். இவங்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னமோ பாவம் அப்பாவி தொண்டர்கள் தான். அப்பாவுடன் போவதா, இல்லை மகனுடன் தங்கள் கட்சி பணியை தொடர்வதா என்று கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 50 பாட்டாளி மக்கள் ஆட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக ஆட்சியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இப்படியே நிலைமை எல்லை மீறிப்போனால் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜாக்பாட் அடிக்கப்போகும் லோகேஷ்! எல்லாத்துக்கும் காரணம் கூலி படம் தான்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்து விட்டார். படம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த கூலி படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர் கான் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கூலி படம் LCU விற்குள் வராது என ஏற்கனவே லோகேஷ் அறிவித்துவிட்டார். இந்த படத்தின் முதல் பாதியை அண்மையில் பார்த்த ரஜினிகாந்த் படம் அருமையாக வந்துள்ளது. படம் பக்கா மாஸ் என லோகேசை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

அதேபோல லோகேசுடன் வேலை செய்த அமீர் கானுக்கு லோகேசூடன் வேலை செய்வது ரொம்ப பிடித்து விட்டதாம். தனது அடுத்த படத்தை லோகேஷ் தான் இயக்க வேண்டும் என்று லோகேசை புக் செய்துவிட்டார் ஆமீர் கான். லோகேஷ் மற்றும் ஆமீர் கான் இணையும் படத்திற்கான வேலைகள் அடுத்த வருடம் தொடங்கும் என அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ். இந்த லோகேஷ் அமீர் கான் கூட்டணியில் உருவாகும் படம் சூப்பர் ஹீரோ subject என்றும் சொல்லப்படுகிறது.

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த எதுவும் இல்லையா? உண்மை இதுதான்!

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியதால் ஜனநாயகன் படம் தான் விஜய் சினிமாவில் நடிக்கப்போகும் கடைசி படம் என்கிற தகவலை விஜய் ஏற்கனவே வெளியிட்டார். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22.

பொதுவாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தின் ட்ரைலர், டீஸர் அல்லது பாடல் வெளியாகும். இந்நிலையில் ஜனநாயகன் தளபதியின் கடைசி படம் என்பதால் படத்தின் டீசரோ ட்ரைலரோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஜனநாயகன் படம் வெளியாவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் படத்தின் ட்ரைலர், டீசெர் அல்லது பாடலை இப்போதே வெளியிடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பையம், படத்தின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும் என படக்குழுவினரும், விஜய்யும் நினைத்துள்ளனர். இதனால் விஜய் பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என முதலில் முடிவெடுத்திருந்தனர்.

தளபதி பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிடாவிட்டால் அது ரசிகர்களை சோர்வடைய செய்யும் என்பதால் படம் தொடர்பான சிறு glimpseஒன்றை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.