Tuesday, July 15, 2025
Home Blog Page 4233

அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

0

இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு இடையே நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளையதினம் இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற லண்டன் நகரில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினால் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ ராமன் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும், தலா ஒரு வெற்றி பெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றன. முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. நாளைய தினம் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இருக்கின்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

முதல் மூன்று கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் 5 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார் இதில் இந்திய அணி முன்னிலை பெறும் அளவிற்கு மிகப்பெரிய இன்னிங்சில் அவர் விளையாடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டபுள்யூ வி ராமன் விராட்கோலி அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தால் மறுபடியும் பழைய நிலைக்கு இந்திய அணி திரும்பும் அவர் மீது அதிக அழுத்தம் இருக்கிறது. அதனாலேயே எல்லாருடைய கவனமும் அவர் மீது திரும்பியிருக்கிறது, அதோடு மட்டுமல்லாமல் அவர் சிறந்த வீரர் என்பதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாகவே அவர் ஆளாக்கப்படுகிறார் என்று கூறியிருக்கிறார்.

3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் விராட் கோலி மறுபடியும் பழைய திறமையுடன் ஆடினார் கண்டிப்பாக அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் நன்றாகவே விளையாடுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

0

பள்ளிகள் திறப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து இன்று முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அனுமதி வழங்கினாலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

பள்ளிகள் வாரத்தில் ஆறு தினங்களும் செயல்படும் வகுப்பறைகளில் இருபது மாணவர்கள் மட்டுமே அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் எல்லோரும் நோய் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.. பள்ளிகள் திறந்த உடனேயே பாடம் நடத்தப்படாது, மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தும் நிறத்திலும் பழைய பாடங்களை நினைவில் நிறுத்தும் வகையிலும் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு முதல் 45 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் அதற்கான புத்தகமும் வெளியிடப்பட்டு உள்ளது.

மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் இடையே ஒரு சிறிய பயம் இருந்தாலும் இதுவரையில் யாரும் வெளிப்படையாக அதனை காட்டிக்கொள்ளவில்லை. இதனை மனதில் வைத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

அதேபோல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்த வழக்கு ஒன்று தொடரப்பட்டது. சமயத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த படமாட்டார்கள். இணையதள வகுப்புகளும் மேற்கொள்ளப்படும் இதன் மூலம் அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிப்பதற்காக மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக 37 மாவட்ட அதிகாரிகளை பள்ளிகல்வி துறை நியமனம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்களின் வருகை எப்படி இருக்கிறது ?போன்ற விஷயங்களை கண்காணித்து பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள்.

கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

0

கனிம வளங்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதி அளித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் மற்றும் கனிமவளத்துறை மீதான விவாதம் நடந்தது.அந்த விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பிரின்ஸ் கன்னியாகுமரியில் மலைப்பகுதி கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

அவருடைய இந்த கோரிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி தெரிவித்த துரைமுருகன், இதனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனாலும் கனிம வளங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கையை அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்ட துரைமுருகன் பயன்படாமல் இருக்கும் பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை பொதுமக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு கனிமங்கள் எடுப்பதை தடுப்பதற்காக ஆளில்லாத சிறிய விமானங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

கட்டுமான பணிகளில் மணலுக்கு பதிலாக தற்சமயம் எம்சாண்ட் உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகின்றது. ஆகவே தரமற்ற எம் சாண்டினை சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காகவும், அதனை கண்காணிக்கவும், தயாரிப்பு, தரம் விலை மற்றும் அவற்றை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றில் வரைமுறை படுத்துவதற்கு மாநில அளவில் புதிய கொள்கை ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் துரைமுருகன்.

சுரங்கம் இருக்கும் பகுதியில் மலை போல குவிந்து இருக்கும் குறைந கழிவு கற்களை அரசுக்கு வருவாய் தரும் விதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம் நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிவதற்காக ஆய்வு செய்யப்படும் 20 லட்சத்தில் நவீன நில அளவை கருவி கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு

0

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் தமிழக முதலமைச்சர்.

டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற T63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், மாரியப்பனின் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இதேபோல் அவருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த கிராமமே பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக தமது திறமையை நிரூபித்துள்ளார் மாரியப்பன்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.

இந்தப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான சரத் குமார் தமது முதல் முயற்சியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டிய நிலையில், மூன்று முறை தோல்விக்குப் பிறகு 1.86 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெறும் தமிழகத்தின் முதல் வீரர் மாரியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!

0

பீகாரின் கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி தனது மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி காயப்படுத்திய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது நண்பர்களுடன் பாலியல் உறவை ஏற்படுத்த மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மார்பு மற்றும் கைகளில் கத்தியால் அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நாளந்தா மாவட்டத்தில் உள்ள சோஹ்சரை கிராமத்தில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கணவன் வீட்டில் நடந்துள்ளது.

 

போலீசில் அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண் 2006 ஆம் ஆண்டு மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு 13 வயது மகள் மற்றும் 11 வயது மகன் உள்ளதாகவும் கூறினார். “கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் என் கணவர் மருத்துவ அதிகாரியாக (எம்பிபிஎஸ் மருத்துவர்) நியமிக்கப்படும் வரை கடந்த 13 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை சுமூகமாக நடந்து கொண்டிருந்தது என கூறி உள்ளார். அதன்பின் அப்போதிருந்து, அவரது நடத்தை மாறத் தொடங்கியது. அவர் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உடல் ரீதியான உறவை ஏற்படுத்த எனக்கு அழுத்தம் கொடுத்தார். நான் மறுத்தபோது, ​​அவர் என்னை அடித்தார், ”என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.

 

இந்த மாதிரியான விஷயம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. மேலும் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அதனால் மற்ற ஆண் நண்பர்களுடன் நான் ஒன்றாக இருந்தால் அதை வீடியோவாக எடுத்து என் சுயமரியாதையை கெடுத்து என்னை விவாகரத்து செய்ய விரும்புவதாக கூறினார். சனிக்கிழமை நடந்த சிறிய தகராறில் பிளேடால் அவர் என்னை காயப்படுத்தினர் என்றெல்லாம் அந்த பெண் கூறியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது கொலை முயற்சி ஐபிசி பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பு மற்றும் கையில் கத்திக்குத்து காயங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் மாமனாரிடமிருந்தும் எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. இந்த விவகாரம் அனைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. என இந்த வழக்கை விசாரித்த போலீசார் கூறினர்.

இந்தியாவில் வாகனங்கள் தயாரிப்பு மீதான வரியை குறைக்க சொல்லி மன்றாடும் அமெரிக்க கார் நிறுவனம்!

0

அமெரிக்காவின் முன்னணி வாகன நிறுவனமான டெஸ்லாயிங்க் இந்திய சந்தையில் வருவதற்கு முன்பாகவே இந்தியாவின் மூன்று வாகன உதிரி பாகங்கள் சப்ளையர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ஜெஸிலா உதிரிபாகங்கள் சப்ளை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுவே முக்கிய மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் என்று பலவற்றுக்கும் நாடுவதாக தெரியவந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பேனர்கள், கண்ணாடிகள், பிரேக்குகள், கியர்கள் மற்றும் பவர் சீட்ஸ் போன்ற பல உதிரி பாகங்களும் சப்லை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னரே டெஸ்லா நிறுவனத்திற்கு சோனா தான் ஸ்டார் லிமிடெட் சந்தர் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பாரத் போர்ச் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் உதிரிபாகங்களை சப்ளை செய்து வருகின்றன இந்த சூழ்நிலையில் சந்தையில் நுழையும் முன்பாகவே அதற்காக டெஸ்லா நிறுவனம் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது.

சென்ற வருடம் ஜூலை மாதம் மஸ் டெஸ்லா தன்னுடைய கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ததால் அதன் பின்னரும் உற்பத்தியினை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் வரி குறைப்புக்காக அரசின் உதவியை நாடி இருக்கிறது. இதற்கு தற்சமயம் வரையில் அரசு தரப்பில் எந்தவிதமான சாதகமான பதிலும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் மின்சார வாரியம் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தது. அதோடு இவ்வாறு வருகை குறைப்பதன் மூலமாக இந்தியாவில் மின்சார வாகனம் வணிகம் அதிகமாகும். இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று டெஸ்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடப்பு வருடத்தில் இந்தியாவின் தன்னுடைய விற்பனையை தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்த எலான் மஸ்க் டெஸ்லா நிறுவன கார்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சூழ்நிலையில், அரசு வரியை குறைக்குமாறு இங்கே உற்பத்தியை ஆரம்பிக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால் அரசு தரப்பில் வரியை குறைக்க இயலாது என்று தெரிவித்து இருந்த சூழ்நிலையில், டெஸ்லாவின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதிலும் எதற்காக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது என்ற பல கேள்விகளும் பூதாகாரமாக இருக்கிறது.

கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்!

0

கத்தார் தலைநகரில் தலீபான்களின் பிரதிநிதியை சந்தித்த இந்திய தூதர்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் தற்போது வெளியேறி விட்டன. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களது ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தலிபான் பிரதிநிதியை இந்திய தூதர் தீபக் மெட்டல்  இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான இந்திய தூதர் தீபக் மீட்டல், தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர் அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் சந்தித்துப் பேசினார்கள். தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும், பயங்கரவாத செயல்களையும் எந்த வகையிலும் நடைபெறக் கூடாது என இந்திய தூதர் குறிப்பிட்டதாகவும். இந்த விவரங்களுக்கு நேர்மையான முறையில் தீர்வு காணப்படும் என்றும் தலிபான் பிரதிநிதி கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தடையை மீறி மிக வேகமாக வளர்ந்து வரும் சீன செயலிகள்!

0

இந்தியாவில் சீன நாட்டின் செயலிகள் மக்களுடைய தரவுகளை அதிக அளவில் பெருகி வருகின்றது என்று குற்றம் சாட்டப்பட்டு 200க்கும் மேற்பட்ட சீன செயல்களை மத்திய அரசு பொதுமக்களின் தகவல் பாதுகாப்பு கருதி தடை செய்தது.இந்த தடைக்கு பின்னர் இந்தியா, சீனா எல்லையில் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் உண்டான மோதலும் மிக முக்கியமான காரணம் என்று பேசப்பட்டாலும் சீன அரசு தற்சமயம் தன்னுடைய நாட்டின் தகவல் பாதுகாப்புக்காக சீன நிறுவனங்கள் மீது எடுத்திருக்கின்ற நடவடிக்கையின் மூலமாக மத்திய அரசு செய்தது சரி என்றும், எல்லை பிரச்சனைக்காக தடை செய்யப்படவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது.

இவ்வளவு பிரச்சனைக்கு பின்னரும் இந்தியாவில் இதுவரையிலும் சீனா செயலிகள் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் சென்ற ஒரு வருட காலத்தில் அதாவது தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை இந்த செயலிகள் அடைந்திருக்கிறது.நாட்டில் சீனா செயலிகள் தடை செய்யப்பட்ட பிறகு பல முன்னணி நிறுவனங்களின் செயல்கள் கூட அதாவது அலிபாபா ஜியோமி போன்ற நிறுவனங்களின் செயலிகள் தங்களுடைய சுய அடையாளத்தை மறைத்து புதிய நிறுவனத்தின் பெயரிலும், சீன பெயர்கள் அல்லாத பெயரிலும், இந்தியாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தற்சமயம் முன்னிலையில் இருக்கின்ற 60 செயலிகள்பட்டியலில் 8 சீன செயலிகள் இருக்கிறது. இந்த எட்டு சீன செயலிகளில் சுமார் 217 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஜூலை 2020இல் இந்த எட்டு செயல்களின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெறும் 96 மில்லியன் வாடிக்கையாளர்கள் மட்டுமே என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும் சென்ற 13 மாதங்களில் சீன செயலிகள் ஆகவே இருந்து தன்னுடைய அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைத்து சுமார் 115 மில்லியன் வாடிக்கையாளர்களை பலவிதத்தில் பிடித்து வைத்திருக்கிறது. இந்தியாவில் சீன செயலிகள் பாதுகாப்பற்றது என தெரிந்தும் ஒரு சிலர் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்து உள்ளதும் நடந்தேறியிருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 267 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது என்ற தலையில் திட்டம் பிரவுசர் ஹலோ அலி எக்ஸ்பிரஸ் லைக் ஷேர் இட் மீ விசேட் மை டு விகோ என பல செயலிகள் தடைசெய்யப்பட்டது.

இந்த தடைக்கு பின்னரும் கூட சுமார் 13 மாதங்களுக்குப் பின்னர் ப்ளே இட் என்ற சீனசெயலி இந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் செயலியாக இருக்கிறது. வெறும் இருபத்தி எட்டு மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ப்ளே இட் தற்சமயம் 67 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருக்கிறது.

புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்தியாவின் பொருளாதாரம்!

0

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் வரலாற்று உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பலிக்காது என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 20 சதவீதம் வரையில் ஏற்றம் காணும் என்று ரீயூடர்ஸ் தளத்தில் 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்திருக்கிறார்கள். அதேபோல எஸ்பிஐ வங்கியின் ஒரு அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் இந்த காலகட்டத்தில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது.

அதோடு ரிசர்வ் வங்கி ஜூன் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 26.2 சதவீதத்திலிருந்து 21.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல இந்தியா ரெடிங்ஸ்& ரிசர்ச் ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருக்கிறது.சென்ற நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நோய்த்தொற்று மற்றும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றின் மூலமாக 24.4 சதவீதம் வரையில் சரிந்து இருந்தது.

இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்சமயம் நாட்டின் பொருளாதாரம் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை காணக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது low base effect அடிப்படையிலான வளர்ச்சி தான் என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஒரு சில அதிர்வுகளை எதிர்பார்க்கப்படுகின்றது இந்த தரவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதேபோல இந்தியாவில் ஜூன் காலாண்டில் ஆர்டிஓ கலெக்சன் மின்சார பயன்பாடு போக்குவரத்து ஜிஎஸ்டி வரி வசூல் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு அளவு உள்ளிட்ட அனைத்து காரணிகளும் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

அதோடு இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 20 சதவீதம் வரையிலான வளர்ச்சியை கண்டால் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை உறுதி செய்வதாக எடுத்துக்கொள்ளலாம் இருந்தாலும் அரசு வெளியிடும் தரவுகளில் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை என்ன மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீடு 1.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

0

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. அவர் நடிகை நக்மாவின் தங்கையும் ஆவார். அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் சிவகுமார் வீட்டு மருமகளாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு மற்ற பெண்களை போல் அல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அவருக்கு சூர்யாவும் மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பதாக  பேட்டிகளில் கூட சொல்லி இருக்கிறார்.

சூர்யா ஒரு பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் பெயர் 2D இன்டர்நேஷனல் என்பதாகும். இவரது படங்களை எல்லாம் இந்த நிறுவனமே தயாரிக்கிறது. 36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்த ஜோதிகா தற்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில், உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்துக்கொண்டே பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அதை அவரது கணவரும் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். அதில் தேசியக் கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும் புகைப்படங்களை, பதிவிட்டு உள்ளார். இரண்டு இலட்சம் பேருக்கு மேல் அவரது பக்கத்தை விரும்பியுள்ளனர். மேலும் ஜோதிகா இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரை மட்டும் 14 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் இரண்டு பேர் கோடி கூட பின் தொடர்வார்கள் என்றும் ராஷ்மிகா பந்தனாவையே முந்தி ஜோதிகா முதலிடத்தில் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. கணவன் மனைவி என்றால் இப்படி அல்லவா? இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்காத கணவன் கிடைக்க அவர் என்ன தவம் செய்தாரோ? இந்த ஜோடியை பிடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள்.