Friday, August 1, 2025
Home Blog Page 4531

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது.

இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது.

இதற்குமுன் மார்ச் 31ஆம் தேதி கடைசி தேதி என அரசு அறிவித்திருந்த நிலையில் கொரோனாவில் தாக்கத்தால் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 30-ஆம் தேதி கடைசி தேதி என அறிவித்தது.

கொரோனா தொற்று அதிகமாக பரவி இருந்த காரணத்தால் வரி செலுத்துவோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடைசி தேதியை நீட்டித்தது.

ஜூன் 30-ஆம் தேதி யின் காலக்கெடுவில் நெருங்கி வருவதோடு தேதியை ஒத்தி வைப்பதாக அரசாங்கம் இன்னும் எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை என்பதால் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு சொல்லியுள்ளது. இதற்கு மூன்று வழிகள் உள்ளன.

1. SMS மூலம் இணைக்கலாம்.
2. அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar 

1. SMS வழியாக:

அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலம் தங்களது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்க முடியவில்லை எனில் ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு செய்த மொபைல் எண்ணின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதால் இணைக்க முடியும்.

567678 or 56161 என்ற எண்ணிற்கு UIDPAN ( 12 இலக்க ஆதார் எண்) (10 இலக்க பான் கார்டு நம்பர்) டைப் செய்து உங்கள் ஆதார் எண் ணில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பினால் இரண்டு நிமிடத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் பான் கார்டு இணைத்து விடும்.

2. வலைத்தள வழியாக:

1. Https://incometaxindiafilling.gov.in இந்த வலைத்தளத்தில் உள்நுழையவும்.
2. அது இடதுபுறம் Link aadhar என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3. அதில் உங்களது பான் கார்டு நம்பர் ஆதார் கார்டு நம்பர் மற்றும் உங்களது ஆதார் கார்டில் என்ன பெயர் உள்ளதோ அதை அப்படியே உள்ளிடவும். பின் கீழே ஸ்கொயர் பாக்ஸ் என்று இருக்கும் அதை டிக் செய்து கொள்ளவும்.
4. பின் கீழே உள்ள captcha code அப்படியே டைப் செய்யவும்.
5. இப்பொழுது link Adhar என்ற பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்களது ஆதார் கானுடன் இணைந்து விடும்.

காவல்துறையினரின் வாகனங்கள் உடைப்பு! மது பிரியர்களின் செல்ல சேட்டைகள்!

0

சென்னையில் இருக்கின்ற ஐ.சி. எஸ் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோகுல் இவரை அந்த பகுதியைச் சார்ந்த ஒரு மது பிரியர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையை சேர்ந்தவர்கள் கோகுலை தாக்கிய இளைஞர்களை கைது செய்ய முயற்சி செய்யவே அவருக்கு ஆதரவாக ஏற்கனவே மதுபோதையில் இருந்த ஒரு சிலர் விரைவாக வந்து காவல்துறையினரை முற்றுகையிட தொடங்கியிருக்கிறார்கள்.

அதோடு காவல்துறை அதிகாரிகளின் கார் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாற்ற வாகனத்தையும் கற்கள் கொண்டு அடித்து நொறுக்கிய அந்த கும்பல் சில வாகனத்தை கீழே தள்ளிவிட்டு சென்றது. மதுபோதையில் எல்லாவற்றையும் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது அந்த கும்பல்.

இதனைத்தொடர்ந்து குடியிருப்புவாசிகள் இடமிருந்து புகார்களை வாங்கிக்கொண்ட காவல்துறையினர் அம்பத்தூர் அருகே பதுங்கி இருந்த அந்த மதப்பிரியர் கும்பலை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!

0

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கர் நகர் காவல் துறையினர் கிஷோர் கே சாமியை கைது செய்திருக்கிறார்கள்.

திமுக தகவல் தொழில்நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக ஊடகங்களில் பங்கேற்று கொள்பவர். தன்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்று கடந்த 10ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கிஷோர் கே சாமி கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டி தாம்பரம் நீதித்துறை நீதிபதி அனுப்பிரியா அவர்களின் மாதவரம் இல்லத்தில் கிஷோர் கே சாமி அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 15 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக அவதூறாக பேசி வரும் திமுகவைச் சார்ந்தவரும் இதேபோல கைது செய்யப்படுவார்கள்? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா தன்னுடைய வலைப்பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவரைக் கைது செய்தது நியாயம் என்றால் இதற்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பல முக்கிய தலைவர்களையும் மிகக் கேவலமாக விமர்சனம் செய்து திமுகவினரை என்னவென்று சொல்வது என்ற கருத்தை மாநிலம் முழுவதும் உலா வரத் தொடங்கியிருக்கிறது.

ஒரு நாட்டின் பிரதமரையே மிகக் கேவலமாக விமர்சனம் செய்தவர்கள் தான் திமுகவை சேர்ந்தவர்கள் அப்படிப் பார்த்தோமானால் இவரை கைது செய்வதற்கு முன்னர் திமுகவைச் சார்ந்தவர்களை தான் கைது செய்திருக்க வேண்டும் என்ற கருத்தும் தமிழகத்தில் உலாவி வருகிறது. அதோடு திமுகவினருக்கு ஒரு நியாயம் கிஷோர் கே சாமிக்கு ஒரு நியாயமா என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்!

0

திரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்!

சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. சினிமா துணை நடிகையான இவர், ஒரு குப்பையின் கதை உள்ளிட்ட பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவரது வீட்டின் எதிரே உள்ள வீட்டின் கேட்டில் ஏறி குதித்த வாலிபர்கள் சிலர் அங்கு நின்ற புறாவை பிடிக்க முயன்றனர். இதனை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது மர்மநபர்கள் வீடு புகுந்து தன்னையும், தனது மகனையும் அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வளசரவாக்கம் போலீசில் பாண்டி லட்சுமி புகார் அளித்தார். எதிர்தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்பேரில் இருதரப்பினர் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை நடிகை பாண்டி லட்சுமியை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர், அவரது வீட்டின் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், துணை நடிகை பாண்டி லட்சுமி இந்த பகுதியில் பொதுமக்கள் யாராவது சிறிதுநேரம் நின்றாலோ, அல்லது  மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி பேசினாலோ செல்போனில் படம் பிடித்து போலீசாரிடம் புகார் அளித்து விடுவார்.

அதே போல் இந்த பகுதியில், கடை வைத்திருப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அவரால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல விதமான சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து துணை நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

சற்று முன்: தடாலடியான சரிவில் வெள்ளியின் விலை! தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!

0

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வருகிறது. இது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வெள்ளி ஒரு கிராம் 0.40 காசுகள் குறைந்து 75.90-விற்க்கும், ஒரு கிலோ ரூ. 75900 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இன்றைய தங்கத்தின் விலை:

அமெரிக்க டாலர் வலுப்படுத்தும் தங்கத்தின் விலையை எடை போடுகிறது. கீரன்பேக் 0.1 சதவீதம் வலுப் பெற்று உள்ளதால், அதனுடைய சகாக்களுக்கு எதிராக உயர்வைக் கண்டு வருகிறது. இது மற்ற பங்குதாரர்களுக்கும் தங்கத்தை அதிக விலைக்கு கொண்டுவர செய்கிறது.

இம்மாத தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிகரித்து இன்று கிராமக்கு 11 ரூபாய் அதிகரித்து ஒரு சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை போலவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை கண்டது.


இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து
ரூ.4576க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 அதிகரித்து ரூ.36608-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 ரூபாய் அதிகரித்து ரூ.4935-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 அதிகரித்து ரூ.39480-க்கு விற்கப்படுகிறது.

தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!

0

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. தமிழ்நாட்டில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் தற்சமயம் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன .ஆனாலும் வாணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு தமிழக மக்களையும் மதுவிற்கு அடிமையாகி வைத்திருக்கிறது தமிழக அரசு என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

நோய்தொற்று நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரத்து 200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்க இருக்கிறது. ஆனால் ஒரு நாளைய டாஸ்மாக் வருமானம் 165 கோடி அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்தில் 5000 கோடியை பொதுமக்களிடமிருந்து மதுவை கொடுத்து தமிழக அரசு பறித்துக் கொள்கிறது .ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

பொதுமக்கள் நோயில்லாமல், குடும்ப தகராறு எதுவும் இல்லாமல், நிம்மதியாக வாழ்வதற்கு மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவதுதான். இதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை உடனடியாக மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!

0

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அந்த கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கையின் மூலமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

அவருடைய நீக்கத்திற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்ததுதான். அதற்காக தான் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இருந்தாலும் அவர் திமுகவுடன் ரகசிய உறவில் இருந்தது தற்சமயம் தெரியவந்திருக்கிறது. அதோடு அதனை மறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்பதும் தற்சமயம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த புகழேந்தி சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் அவருக்கான உதவிகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் தினகரன் உடன் நெருக்கமாக இருப்பதற்கு முயற்சி செய்த டிடிவி தினகரன் அவரை புறக்கணிக்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் அதிமுகவில் இணைவதற்கு முடிவு செய்த புகழேந்தி நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக செய்தி தொடர்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் முடிவுற்ற பிறகு பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் புகழேந்தி. அதன் மூலமாக அவர் தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராக அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால் அந்த காணொளிக்கு பின்னால் திமுக செய்த சதித்திட்டம் இருப்பதாக தற்சமயம் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோர் இடையே கருத்து வேறுபாட்டை அதிகமாகி அதன்மூலம் கட்சியை பலவீனப்படுத்துவது திமுகவின் திட்டம். அதற்காக புகழேந்தியை திமுக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாகவே புகழேந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் போல தன்னை காட்டிக் கொண்டு பன்னீர்செல்வத்தின் மீது குற்றம்சாட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்களை விமர்சிப்பது போல பேட்டி கொடுத்ததும் திமுகவின் திட்டமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதை கவனித்த எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் தரப்பிடம் அவர் உங்களுடைய ஆதரவாளர் இல்லை நம்முடைய கட்சியில் இருக்கும் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று தெரிவிக்க ஓபிஎஸ் கையெழுத்துப் போட்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

புகழேந்தி திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வரும் ஒருவருடன் நெருங்கி உறவாடுவது தற்சமயம் தெரியவந்திருக்கிறது. அதோடு விவாதங்களில் அதிமுக தரப்பில் யார் கலந்து கொள்ள வேண்டும், என்ன பேச வேண்டும் போன்ற விஷயங்களும் திமுக தரப்பில் இருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்படி செயல்பட்டு அவரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சரியாக கணித்து தற்சமயம் அவரை கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் புகழேந்தியின் திட்டம் வெட்டவெளிச்சமாகி கட்சியை விட்டு தாம் நீக்கப்படுவோம் என்பதை அறிந்த அவர் இறுதி சமயத்தில் அன்புமணியை விமர்சித்த காரணத்தால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியில் இருக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இறுதி சமயத்தில் வெளியான பேட்டிக்கு பின்னணி என சொல்கிறார்கள் அது தொடர்பான விபரம் தெரிந்தவர்கள்.

இந்த 14 வகை மளிகை பொருட்கள் தான் உங்க வீட்டுக்கு வரப் போகுது!!

0

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த 7ஆம் தேதி கொரோனா நிவாரணம் வழங்கும் தொகுப்பில் இரண்டு கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது தவணையாக ரூ 2000 கொரோனா நிவாரண நிதியும் மற்றும் 14 வகை வகை பொருட்களும் அடங்கிய இலவச தொகுப்பு இன்றிலிருந்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் இரண்டாவது தவணையாக ரூ 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும். அதனால் மக்கள் எவ்வித பயமுமின்றி பொறுமையாக நிவாரண பொருட்களை சரியான வழியில் வாங்கிக் கொள்ளலாம். நிவாரண பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் அதை விற்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ரேஷன் கடைகளில் அளிக்கப்பட உள்ள 14 வகை மளிகை பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றிய முழு விவரம் உங்களுக்காக.

1. துணி துவைக்கும் சோப்பு -1
2. குளியல் சோப்பு 25 கிராம் 1
3. மிளகாய் தூள் 100 கிராம்
4. மஞ்சள் தூள் 100 கிராம்
5. சீரகம் 100 கிராம்
6. கடுகு 100 கிராம்
7. டீ தூள் 200 கிராம்
8. கடலை பருப்பு 250 கிராம்
9. புளி 250 கிராம்
10. உளுத்தம் பருப்பு 100 கிராம்
11. ரவை 1 கிலோ
12. உப்பு 1 கிலோ
13. கோதுமை 1 கிலோ
14. சர்க்கரை 500 கிராம்.

இவையெல்லாம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

0

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது.

அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை ஆய்வு செய்ய அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு ராம ஜென்மபூமி சேத்திர அறக்கட்டளை கட்டமைக்கப்பட்டது.

மொத்தம் இந்த அறக்கட்டளையில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கோயில் கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணி தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து நிலையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு மாநில கலாச்சாரத் துறை இடம் உள்ள 9 ஏக்கர் நிலம் போக்குவரத்திற்காக தரப்படும். அதில் 400 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து தரப்படும். இது அயோத்தியிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் நான்கு வழிச்சாலை உடன் கூடிய மேம்பாலம் அயோத்தி மற்றும் சுல்தான்பூர் இடையே அமைக்கப்படும் என்றும், 20 கோடி மதிப்பீட்டில் ஒன்றை கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! சற்று நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

0

இந்தியாவை பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்துவிடுகின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகப்படுத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவற்றில் இன்றையதினம் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 97 ரூபாய் 69 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 96 ரூபாய் 92 காசுக்கும் விற்பனையாகி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.