தமிழ் சினிமா உலகத்தில் ஒரு காலத்தில் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா இவர்களுடைய அழகில் சொக்கிப் போகாத நடிகர்களும் கிடையாது, ரசிகர்களும் கிடையாது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அழகு ராணியாக வலம் வந்தார் நடிகை மீனா. என்ன தான் மிகப் பெரிய நடிகையாக இருந்தபோது ஒரு காலகட்டத்தில் அவருடைய மார்க்கெட் டல் அடிக்க தொடங்கும் அந்த சமயத்தில் சரியாக திருமணம் செய்து கொண்டு எல்லோரும் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.
அதையேதான் இவரும் செய்தார். கடந்த 2009ஆம் வருடம் வித்யாசாகர் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். தற்சமயம் அவருக்கு நைனிக்கா என்ற மகள் இருக்கிறார். அவரும் விஜயின் தெறி படத்தில் நடித்திருக்கிறார்.
சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருந்த நடிகை மீனா மறுபடியும் சினிமாவிற்குள் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. அந்த விதத்தில் மறுபடியும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளை கொண்டாடிய மீனா அண்மையில் விஜய் சேதுபதியிடம் ஒன்றை கற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கின்றார். நடிக்க ஆசையாக இருப்பதாக நடிகை மீனா தெரிவித்திருக்கின்றார்.
இதன்காரணமாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கிறார் மீனா சிறுபிள்ளை போல தோற்றமளிக்கும் நடிகை மீனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் அது சரிவராது என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
பெண்களில் தனியாக அரசியலில் ஆட்சி செய்தவர்கள் இரண்டே பேர் தான் ஒருவர் தமிழகத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா, வங்க தேசத்தில் மம்தா பானர்ஜி, ஆனால் தற்போது புரட்சி தலைவி உயிரோடு இல்லை.
வங்க தேசத்து சிங்கம் என்று கூட பலரால் அழைக்கப்படுகிறார் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது இவரது பெயரை வைத்து ஒரு வைரல் வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் தன் கட்சியின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக, தன் மூன்று மகன்களுக்கும் கட்சியை சார்ந்தே பெயர் வைத்துள்ளார். தன் முதல் மகனுக்கு கம்யூனிசம் எனவும், ரஷ்யத் தலைவர் லெனின் மீது கொண்ட பற்று காரணமாக 2-வது மகனுக்கு லெனினிசம் என்றும், மூன்றாவது மகனுக்கு சோசலிசம் எனவும் பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில், மூன்றாவது மகன் சோசலிசத்திற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
அங்கு தான் பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது. மணப்பெண்ணின் குடும்பமோ, பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பம் என்பதால், பழனிசாமி நீலாம்பாள் தம்பதியினர், மேற்கு வங்கத்தின் சிங்க பெண் என்றழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் பெயரை தங்கள் மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார்.
தற்போது மம்தா பானர்ஜிக்கும், சோசலிசத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமாடுகிறார்.
ஆனால் சேலத்திலோ கம்யூனிஸ்ட் குடும்பமான, மோகனின் குடும்பத்தில் ஐக்கியமாக உள்ளார் இந்த மம்தா பானர்ஜி. எனவே இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள யார்க் என்ற கடற்கரையில் நடந்த கொண்டு இருக்கும் பொழுது, பாதம் கருப்பாக மாறியுள்ளது. ஒருவாரம் ஆன பின்பும் அந்த நிறமாறாததால், அதை சோதித்த பொழுது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை என்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.
தெற்கு முனையில் உள்ள யார்க் கடற்கரையில் ஜெனி கிரீன் லிப் என்பவரும் அவரது கணவரும் வழக்கமாக அந்தக் கடற்கரையில் நடைப் பயணத்தில் வெறுங்காலுடன் சென்றுள்ளனர்.
சிறிது நேரம் நடந்து விட்டு அவர்கள் அங்குள்ள கடற்கரையில் நாற்காலிக்கு திரும்பி காலில் இருந்த மணலை துடைக்க துவங்கும் பொழுது தான், அவர்கள் இருவரின் கால்கள் கருப்பு நிறமாக மாறி இருப்பதை கவனித்தனர்.
இதைப்பற்றி கிரீன் லிப் கூறியபொழுது இதுபோன்ற இதற்கு முன் நான் எதையும் பார்த்ததில்லை, நான் கரித்துண்டுகள் மீது நடந்ததைப் போலவே என் கால்கள் இருந்தன என்று கூறினார்.
பின் வீட்டிற்கு சென்று கால்களை நன்றாக கழுவித் துடைத்து உள்ளனர். ஆனால் ஓரளவுக்கு மட்டுமே அந்த நிறம் போய் உள்ளது. இதுபோன்ற மைனேயின் தெற்கு கடற்கரையில் உள்ள அண்டை நாடான நியூ ஹாம்ப்ஷயரீலும் பலர் தங்கள் கால்களில் கறுப்பு கறைகள் படிந்து உள்ளதாக தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை யார்க் கடற்கரைக்கு மேற்கே 14 மைலில் தொலைவிலுள்ள கிரேட் ஐலன்ட் காமன் கடற்கரைக்கு சென்றதிலிருந்து எனது கால்கள் கருப்பு நிறங்களை கொண்டுள்ளது. என்னால் மறுபடியும் என் காலில் நிறத்தை பெற முடியவில்லை என்று பலர் கூறியுள்ளார்.
யார்க் நகரத்தில் உள்ள பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இயக்குனர் ராபின் கோகர் அவருக்கு இந்த வாரம் மட்டும் தங்களது கரைபடிந்த கால்களைப் பற்றி சுமார் 100 அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் அவருக்கு வந்ததாக கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் இதேபோன்று அறிக்கைகள் தெற்கிலிருந்து கிளஸ்டர், மாசசூசெட்ஸ் மற்றும் வடக்கே வெல்ஸ் மைனே -70 மைல்களுக்கு மேல் இது போன்ற நிகழ்வுகள் நடந்ததாக பரவி வருகிறது.
ஹவாயில் மணல் எரிமலை வாயுவிலிருந்து கருப்பாக மாற கூடும். ஆனால் மைனேயில் எரிமலைகளில் இல்லை. எப்படி இந்த நிறங்கள் மாறின. இது கண்டிப்பாக ஏதாவது ஒரு பிரச்சனையாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவிவருகிறது.
இதற்கு வேளாண்மை மற்றும் பாதுகாப்பு வனவியல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜிம் பிரட் என்பவர் விடை அளித்து உள்ளார். கடற்பாசிக்கு உணவளிக்கும் மில்லியன் கணக்கான சிறிய கருப்பு ஈக்கள் கடற்கரையில் முழுவதுமாக இறந்து கிடக்கிறது என்று தெரிவித்தார்.
ஆனால் ஏன் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார். இயற்கை எதிர்மாறான விஷயங்களை செய்து வருகிறது. அதில் இதுவும் ஒரு நிகழ்வாக இருக்கலாம் என்று கூறினார். கரை ஒதுங்கிய மணலில் உள்ள அந்த பூச்சிகளில் இயற்கையாக உருவாகும் நிறமி உள்ளது என்று அவர் கூறினார்.
இது எப்படி வந்தது என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதன்மீது காலடி வைப்பது எந்த ஒரு சுகாதார பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார்.
இதை நாய்கள் உண்பதால் நாய்களுக்கு தொற்று ஏற்படுமா? என்ற கேள்விக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.
ஓய்வு பெற்ற கடல்சார்வியலாளர் லிண்டா என்பவர் யார்க் கடற்கரையில் உள்ள மணலை ஆய்வு செய்ய மாதிரியை சேகரித்து நுண்ணோக்கியின் வழியாக பார்த்தபோது தான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.
ஒரு சிறிய முள்ளின் நுனி அளவுள்ள மணலில் மில்லியன் கணக்கில் சின்ன சின்ன ஈக்கள் மற்றும் பூச்சிகள் இருந்துள்ளன. இவை ஒன்று 2 இறக்கைகளை கொண்டுள்ளது. மற்றொன்று நான்கு இறக்கைகளை கொண்டுள்ளது. ஆனால் கண்டிப்பாக அனைத்தும் இறந்து விட்டது. என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதாக அவர் நினைவில் இல்லை என்று கூறியுள்ளார்.
மைனி கடற்கரையில் 40 ஆண்டுகளாக கடற்கரைகளில் புவியியலில் பணியாற்றியுள்ளேன். இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை வேறு எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை என்று லிண்டா தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகளை கண்டிராத மக்கள் அனைவரும் பயத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போது வரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களுடைய ஆதரவு காரணமாக, கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து நடிகர்களும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயங்கிய சமயத்தில் தைரியமாக மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டார் நடிகர் விஜய்.
இந்த திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்தது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களும் இதனை அடுத்து திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். நடிகர் விஜய் ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களின் குடும்பங்களிலும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அதாவது நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என்றுதான் தெரிவிக்க வேண்டும்.
அந்த அளவிற்கு பல ரசிகர்களை வைத்து இருக்கின்றார். 6 வயதிலிருந்து 60 வயது வரையில் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படும் ஒரு நபராக விஜய் இருந்து வருகிறார். அண்மைக்காலமாக விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த விதத்தில் தற்சமயம் நடிகர் விஜய் இரண்டு குழந்தைகள் கையில் வைத்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
தற்சமயம் அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது அந்த குழந்தைகளின் தாய் தந்தையர் யார் என்ற விபரம் வெளியாகி இருக்கிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே பெரிய நடிகையாக பிரபலமானார் வனிதா விஜயகுமார் இவரது வீட்டு நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் பங்கேற்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அனிதா தன் மகன் ஸ்ரீஹரியை விஜய் தூக்கி வைத்திருக்கின்றார். தற்சமயம் இந்த புகைப்படம்தான் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நாளுக்கு நாள் அதிகமாகி வரும் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிட பணிகளை தொடர இயலாமல் கட்டுமான தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.
மணல், கம்பி, சிமென்ட், ஜல்லி, செங்கல், போன்ற கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதால் கட்டுமான பணிகள் முழுவதுமாக வழங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.
கட்டுமான தொழிலை சார்ந்திருக்கும் சாதாரண கூலித் தொழிலாளிகள் எல்லோரும் பயன்படுத்திய முதற்கட்டப் பணிகளை விரைவாக நடைபெறும் விதமாக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.
நோய்தொற்று பாதிப்பால் வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானத்தை இழந்து பல லட்சம் தொழிலாளர்களுக்கு இன்று வறுமையில் வாடி வருகிறார்கள். அவர்களுக்கு இது மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில் கட்டுமான தொழில் செய்து ஏற்கனவே விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கின்ற கட்டுமான தொழிலை மேம்படுத்த எரிமலை தேர்ந்தெடுக்கும் கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.
வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது!
கடந்த வருடம் லாக் டவுனில் ஒரு கறுப்பினத்தவரை கொன்றதாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக உலகெங்கிலும் போரட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணம் ஆகும்.
உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) என்ற பெயரில், கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தனர்.அதேபோல கொரோனாவின் விஸ்வரூபம் ஆரம்பிக்கும் காலம் முன்பே அரசாங்கமும் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மக்களும் கால வரையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததில் தொற்றின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது.
அப்போது மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்தனர்.தேர்வு எழுத நேர்ந்தால் அதிகப்படியாக கொரோனா தொற்று பரவும் அபாயம் நேரும் என்பதால் முதன்முதலாக தேர்வின்றி மாணவர்கள் அனைவருக்கும் ஆள் பாஸ் செய்தனர்.குறிப்பாக பொதுத்தேர்வான 10,11, ஆகிய வகுப்புகளுக்கு ஆள் பாஸ் செய்தனர்.அதனையடுத்து தொற்று குறைந்த காரணத்தினால் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவ்வாறு அனுமதித்ததை அடுத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.அவ்வாறு திறந்த ஓரிரு வாரங்களிலேயே தஞ்சாவூரில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விறுவிறுவென தொற்று பரவியது.
அதனால் மேற்கொண்டு தொற்று பரவாமலிருக்க மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது.அதனையடுத்து கொரோனாவின் 2 வது அலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கபடாமல்,மீண்டும் பொதுத்தேர்வின்றி ஆல்பாஸ் செய்தனர்.இந்நிலையில் மேற்கொண்டு உயர்கல்வியை எவ்வாறு சேர்ப்பது என்று பெரியே கேள்வி நிலவி வந்தது.அதற்காக பல ஆலோசனைக்கூட்டமும் நடந்து வந்தது.
அவ்வாறு நடந்ததில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பில் எழுதிய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிவிப்பை வெளியிட்டார்.அந்தவகையில் நாளை முதல் பாலிடெக்னிக் சேர்க்கை நாள் முதல் நடைபெறும்.அதனையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை ஆலோசனைக்கூட்டம் மூலம் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் 18 வயது முதல் 44 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல பொது மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை செலுத்தும் பணி நடந்துகொண்டிருக்கிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று நோய் தடுப்பூசியை செலுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் வைத்த கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதன் விளைவாக, இலவச நோய் தடுப்பூசி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். நோய் தொற்று காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு சிறிதுசிறிதாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு குறைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கின்றார்.
நோய்த்தொற்று பரவல் குறைந்து கொண்டே இருப்பதால் மாநில வருவாய் துறை மதுபான கடைகளை திறப்பதற்கு கோரிக்கை வைத்திருக்கின்றது. அதனடிப்படையில் மதுபானக்கடைகள் தற்சமயம் திறக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார். நோய்த்தொற்று பரவல் தற்சமயம் குறைந்து வருகின்றது. இந்த நோய்த் தொற்று பரவல் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒயின்ஷாப் புகழ் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு தான் இருந்தன என்று தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் அத்தியாவசிய தேவைகள் பலவற்றை தொடங்காமல் குறிப்பாக ஒயின் சார்புகளை மட்டும் பிறப்பதற்கு காரணம் என்ன என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நோய்த் தொற்று பரவல் காரணமாக, போடப்பட்ட உரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மற்றும் தேநீர் கடைகள், முடி திருத்துபவர்கள் உள்ளிட்ட பல முக்கிய தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு தீர்வை கொடுக்காமல் நோய்த்தொற்று நிவாரண நிதி என சொல்லிக்கொண்டு நான்காயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அவர்களுடைய வாழ்வியல் பிரச்சனையை பற்றி சிந்திக்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக அவர்களுக்கான தளர்வுகள் எதையும் அறிவிக்காமல் இருக்கிறது. ஆனால் மதுபான கடைகளை மட்டும் திறப்பதற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள்.
ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர்.
அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக பணம் எடுத்தல் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களை கடந்த வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளது.
அதன்படி இலவச வரம்புக்கு பின் அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபடும்பொழுது சம்பந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
1. சொந்த வங்கியில் இருந்து 5 இலவச பரிவர்த்தனைகள். தனது சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்த பணம் எடுப்பதற்கு 5 இலவச பரிவர்த்தனையை பணம் எடுத்தல் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு கொடுக்கிறது.
2. மற்ற வங்கிகளில் இருந்து 3 முதல் 5 வரை இலவச பரிவர்த்தனைகள். அதாவது ஒரு நகரில் வசிப்பவர்கள் அங்குள்ள ஏடிஎம்களில் பணம் எடுக்கும் பொழுது மூன்று இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். நகரங்களுக்கு வெளியே கிராமப் புறத்தில் இருப்பவர்கள் ஐந்து முறை இலவச பரிவர்த்தனை வழங்கப்படும்.
3. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைக்கும் மேல் அதிகமாக உபயோகித்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணமாக வசூலிக்கப்படும்.
4. வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ 15 முதல் 17 வரை, நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ 5 முதல் 6 வரையும் சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு முதல் முடிவில்லா நிலையில் பரவி வருகிறது.சென்ற ஆண்டு இந்த கொரோனா தொற்றின் முதல் நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியா நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்தவகையில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
அதன்பின் முழு ஊரடங்கை தளர்த்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.அதனால் கொரோனாவானது 2-வது அலையாக உருமாறி அதிகளவு பரவ ஆரம்பித்தது.நமது இந்தியாவானது இந்த கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழந்துள்ளோம்.
கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாமல் தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் மக்கள் நலன் கருத்தி முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அவ்வாறு அமல்படுத்துவதன் மூலம் தொற்றின் பாதிப்பை குறைக்க முடியும்.தமிழ்நாட்டை அடுத்து புதுச்சேரியில் தற்போது புதிதாதக 445 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ஓர் நாளில் மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மொத்தமாக கொரோனா தொற்றால் 5,575 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்பொழுது புதுச்சேரியில் தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதால் மீண்டும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுவட்டாரங்கள் கூறி வருகின்றனர்.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் கூறும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.மக்கள் அனைவரும் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும்.அத்தோடு அனைவரும் முகக்கவசம் அணிந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.