அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட இருக்கின்ற ஒரு அறிக்கையில் சட்டசபை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வருகின்ற 14ஆம் தேதி பகல் 12 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு பன்னீர்செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிற என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களும் தவறாமல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிந்து அதோடு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சட்டசபை உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 14ஆம் தேதியன்று தலைமை கழகத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால் நோய் தோற்று காரணமாக, அன்றைய தினம் அதிமுக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் தலைமை செயலகத்திற்கு வருகை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்0 அதோடு தலைமை கழக வளாகத்தில் கடந்த சட்டசபை உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள்.
ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பெண்களே உஷாராக இருங்க! மார்பிங் செய்த புகைப்படத்தால் கல்லூரி மாணவி தற்கொலை!
சமூக வலைத்தளத்தில் தனது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படம் வெளியானதால் 20 வயதான கல்லூரி பயிலும் மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் 20 வயதான மாணவி செங்கல்பட்டை அடுத்த வெம்பாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். அதேபோல் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வந்துள்ளார்.
இவரை பின்பற்றும் யாரோ ஒரு நபர்கள் இவரின் புகைப்படங்களை சிலவற்றை மார்பிங் செய்து மற்றொரு வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த மாணவி யோடு சேர்த்து இன்னொரு மாணவனின் புகைப்படமும் மார்பிங் செய்யப்பட்ட வெளிவந்துள்ளது. இதனால் இந்த மாணவி அந்த மாணவரை கேட்டபொழுது புகைப்படத்தை நான் பதிவேற்றி வில்லை என்று கூறியுள்ளார்.
எப்பொழுதும் சமூக வலைதளங்களை பொழுதை போக்கும் மாணவியை குடும்பத்தார் எச்சரித்து வந்த நிலையில் இந்த மாதிரியான சம்பவம் அந்த மாணவிக்கு மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இது நம் பெற்றோரை அவமானப்படுத்தும் என்று அஞ்சி உள்ளார்.
இதனால் மிகவும் மனமுடைந்த மாணவி ஞாயிற்றுக்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். மாணவியை காணாததை அடுத்து அவரது குடும்பத்தினர் தேடியதில் பாழடைந்த கிணற்றில் இறந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புகைப்படம் குறித்து மாணவியின் நண்பர்களின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையாக அவரது நண்பர்களில் யாரோ தான் இதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புகைப்படங்கள் பதிவேற்றப்பட்ட வலைதள கணக்கை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் இந்த நாகரீக காலத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சற்றே தளர்ந்த பெட்ரோல் டீசல் விலை!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொருத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நோய்த் தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக விளங்கிவரும் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் என்னையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 97 ரூபாய் 15 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! சென்னை வாசிகளே உஷார்!
தமிழ்நாட்டுக்கு வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்கள் தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுச்சேரி காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாளை மறுநாள் மற்றும் 13ஆம் தேதி ஆகிய தினங்களில் கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு அளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகர் உடைய ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
அவருக்கு மட்டும் ஊரடங்கில் எங்கே டாஸ்மார்க் திறந்திருக்கிறது?
அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களுடன் சசிகலா பேசுவதாக நாள்தோறும் ஒரு ஆடியோ வெளியாகி கொண்டு இருக்கின்றது. அதிமுகவிற்கு தான் தலைமை ஏற்க வருவதாக அந்த ஆடியோவில் தெரிவித்திருக்கிறார் சசிகலா. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது அது நிச்சயம் நடக்கவே நடக்காது என்று உறுதி பட தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
கேபி முனுசாமி, ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இதே கருத்தை தான் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருவாடு மீன் ஆனாலும் ஆகலாமே தவிர சசிகலாவிற்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்திருக்கின்ற சசிகலாவின் ஆதரவாளர் தேனி கர்ணன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இவ்வாறு பேசுகிறார் என்று சொன்னால் அவர் சாதாரணமாக இப்படி பேசுபவர் கிடையாது. நிதானமாக இருக்கும் போது அவர் இவ்வாறு பேசவே மாட்டார். அவருக்கு மட்டும் ஊரடங்கில் எங்கே டாஸ்மார்க் திறந்திருக்கிறது. என்று தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .
அதோடு மதுபானத்தின் போதையில் தான் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இவ்வாறு உளறிக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கின்றார் சசிகலாவின் ஆதரவாளரான தேனி கர்ணன்.
உச்சம் தொட்ட மதுவிற்பனை!
நோய் தொற்று பரவல் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன. நோய் தோற்று பரவலின் இரண்டாவது அலையில் புதுச்சேரி மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அங்கே நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக, ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி மதுபான கடைகள் உட்பட எல்லா விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருந்தாலும் மதுக் கடைகள் மற்றும் பார்கள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 43 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் மதுபான கடை திறக்கப்பட்டது. அதன் காரணமாக, குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக, மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில் புதுச்சேரியில் முழுவதும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரையில் மதுபானம் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் ஒரே தினத்தில் ஏழு கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டாம் நாளான நேற்றைய தினமும் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இளைஞர்களே உங்களுக்காக புதிய திட்டம்! ரூ. 50,000 உதவித் தொகை! பிரதமர் மோடி அறிவிப்பு!
மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 75 பேருக்கு, 6 மாதங்களுக்கு, 50,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் கலை, எழுத்து இலக்கிய திறனை அதிகப்படுத்த, சர்வதேச அளவில் இந்தியாவின் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.
30 வயதிற்கு உட்பட்ட இந்திய மொழி மற்றும் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசிக்கத் தெரிந்த அறிவும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இது அமைய வேண்டும். மேலும் உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாட்டில் இளைஞர்களின் சிந்தனையை மற்றும் அவர்களது உள்ளாற்றல் வெளிப்படுத்தும் வகையாக இந்த திட்டம் அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்த திட்டத்திற்கு, innovateindia.mygov.in/yuva/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பித்து அடுத்த மாதத்திற்குள் உங்களது செயல்திறன் மற்றும் படைப்புகளை பதிவு செய்ய வேண்டும். தேசிய அளவிலான மிகச்சிறந்த 75 படைப்புகளை இந்திய புத்தக அறக்கட்டளையின் மூலம் உள்ள வல்லுநர்கள் குழு அமைத்து தேர்வு செய்வார்கள். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் சுதந்திர தினத்தின் போது வெளியிடப்படும். இந்தப் படைப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 12 இளைஞர் தினம் அன்று படைப்புகளாக வெளியிடப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 75 எழுத்தாளர்களுக்கு தேசிய அளவில் இலக்கிய பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் 50 ஆயிரம் உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.
அந்த எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகள் இந்திய மொழிகளில் மாற்றப்பட்டு புத்தகங்களாக வெளியிடப்படும். 10 சதவீத புத்தக காப்புரிமையும் வழங்கப்படும்.
இந்த இலக்கியப் பயிற்சியானது நம் தமிழ் இலக்கியங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் நேரமாக அமையும் என்பதால் மூத்த எழுத்தாளர்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிக அளவில் பங்கேற்று தமிழ் மொழியை மேம்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
கடும் எதிர்ப்பின் எதிரொலி! ரத்தானது பிளஸ் 1ல் நுழைவு தேர்வு !
பள்ளிகள் அளவில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அவர்களும் தேர்ச்சி ஆனதாக அறிவிப்பு வெளியானது.
ஆகவே இவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் பாடப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்கள் கொண்ட சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையிலான நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பதினோராம் வகுப்புக்கு எப்படி நுழைவு தேர்வை நடத்தலாம் என்று தமிழகம் முழுவதும் கேள்வி எழ தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கும் ஒரு சுற்று அறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையின் போது மிகவும் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பாடப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு வகுப்பின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த வேண்டாம். அதற்க்கு பதிலாக மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவுரையின்படி பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.
மானின் வயிற்றில் இருந்த. 7 கிலோ எடை கொண்ட பொருள்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!
தாய்லாந்தில் உடல்நலக்குறைவு எதுவுமின்றி 10 வயது மான் உயிரிழந்த பொழுது, சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மானை பரிசோதித்த போது வயிற்றில் 7 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் துணிகள் ஆகியவை இருந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு வரும் பொழுது அதனை தடுக்க வேண்டும் என்று எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் நம்மைச் சார்ந்த உயிரினங்கள் கடல் அமைப்புகள் என அனைவருக்கும் பிளாஸ்டிக் ஒரு மிகப்பெரிய எமனாகவே இருக்கிறது.
விலங்குகள் பறவைகள் மீன்கள் ஆகியவை நாம் என்ன எண்ணுகிறோம் என்றே தெரியாமல் அதை சாப்பிட்டு வயிறு பெருத்து இறந்து விடுகின்றன. அந்த மாதிரியான ஒரு சம்பவம்தான் ஒரு பத்து வயது மானுக்கு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மாகாணத்தில் குன் தான் என்ற வனவிலங்கு பூங்கா உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த பூங்காவிற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் அந்த பூங்காவில் இருக்கும் பத்து வயது மான் திடீரென உயிரிழந்த சம்பவம் அங்கு உள்ள வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் இருந்து போன மானை கண்ட பொழுது அந்தமானின் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லையே எப்படி இது நடந்தது என்று குழப்பம் அடைந்தனர்.
மான் இருக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள வன ஆய்வாளர்கள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மானை உடற்கூறு ஆய்வு செய்தனர்.
உடற்கூறு செய்யும் பொழுது வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பைகளையும், ப்ளாஸ்டிக் காபி கப், ரப்பர் கையுறை, துண்டுகள் மற்றும் உள்ளாடைகள் என இருந்து கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் 7 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் துணிப்பைகள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் அதன் வயிற்றிலிருந்து அதுதான் அதனால் செரிமானம் அடையாமல் உயிரிழந்து உள்ளது. ஏற்கனவே இந்த மாதிரியான ஒரு சம்பவம் கடற் பசுவின் குட்டிக்கு ஏற்பட்டு இருந்த நிலை குறிப்பிடத்தக்கது.
இதனால் பூங்காவிற்குள் பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் வன ஆய்வாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு தடுத்தனர். இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.
விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற இனங்களால் நமக்கு எந்த கேடும் இல்லை. ஆனால் மனிதர்களால் மற்ற உயிரினங்களுக்கு கேடை தவிர வேறு எதுவும் இல்லை. மனிதகுலம் அழிவிற்கு இதுவே சான்று.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
தமிழக முதலமைச்சராக ஸ்டாலில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெண்கள் நகர்புற தேர்வுகள் இலவசமாக பயணம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார். அதோடு அனைத்தினமும் பலவிதமான வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக எழுந்து வந்தது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பல விதமான திட்டங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து ஆரம்பித்ததும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்சமயம் வெளிவந்திருக்கிறது. அதோடு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. மாற்றுத்திறனாளிகள் நகர சாதாரண கட்டணம் இருக்கின்ற பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுடைய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.