தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி
சென்னை கட்டாங்களத்தூரில் செயல்பட்டு வரும் பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துத் துறையில் 4 ஆம் ஆண்டு படித்த வந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த மாணவி அனுப்பிரியா என்பவர் 9-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்த கல்லூரி மாணவர்களிடையேயும்,பெற்றோர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனஅழுத்தத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்று கல்லூரி நிர்வாகத்தால் கூறப்பட்டது. இதையடுத்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் தற்கொலை செய்து கொண்ட அனுப்பிரியாவின் உடலை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிரூத் என்ற மாணவரும் நேற்று தற்கோலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிரூத் மின்னணு பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படித்து வந்த அவர் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அனிரூத் உயிரிழந்தார். அனிருத் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த சில நாட்களில் கல்லூரி விடுதியில் மாணவியும், மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் SRM கல்லூரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் பதவி பிரச்சனையால் அதிமுக மீண்டும் உடைகிறதா?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் தேசிய அளவில் அதிமுக,பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்து மோடி தலைமையிலான பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியை தொடரவுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படு தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணி கட்சிகள் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் மாநிலங்களவை உறுப்பினர் மூலம் அமைச்சர் ஆகும் வாய்ப்பை பற்றி ஒவ்வொரு கட்சியும் சிந்தித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பதவியை தராமல் விட்டால் அதிமுக கட்சியை உடைப்பேன் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்து உள்ளார். இது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்காக பாமக,பாஜக மற்றும் தேமுதிக உடன் அமைந்த கூட்டணியை வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்களை கொண்ட நால்வர் அணியை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியின் முக்கியமான நடவடிக்கைகளை கவனித்து வந்தார். இவர்களும், கட்சி சம்பந்தமான முக்கிய முடிவைகளை எடுத்து செயல்படுத்தி வந்தனர். இந்த நால்வரும் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்தனர். ஜெயலலிதாவின் அறிவுரைப்படி கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் ஜெயலலிதா அவருக்கு மாநிலங்களவை எம்பி பொறுப்பையும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் வழங்கினார். அந்த அளவுக்கு ஜெயலலிதா, வைத்திலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா காலமானார். அதன்பிறகு, அதிமுக சசிகலா, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. அந்த நேரத்தில் கூட சசிகலா அணியில் தான் இருந்தார். இந்த நிலையில் சசிகலா சிறை சென்ற பிறகு, ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அப்போதும் கூட இபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி மீண்டும் இணைந்தது. அதன்பிறகு கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். கட்சியில் முடிவெடுக்குக்கும் குழுவிலும் முக்கிய நபராக உள்ளார். இந்த நிலையில் வைத்திலிங்கத்தின் ஆலோசனையின் படி தான் டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தமிழக அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் இம்முறை தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதேபோல் அதிமுகவில் மாநிலங்களவை எம்பியாக உள்ள ஒன்று அல்லது 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி, தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை வைத்துள்ளார்.
ADMK Will Devide Due to Minister Post Issue-News4 Tamil Online Tamil News Today
இதற்கிடையே ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாநிலங்களவை எம்பியாக வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் வைத்திலிங்கம் சீனியர். அவருக்கு அமைச்சர் பதவி கேட்டும், ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என ஓபிஎஸ், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைப்பேன் என்று வைத்திலிங்கம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்,இதற்காக வைத்திலிங்கமும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் சீனியர் எம்பியான எனக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வைத்திலிங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியை உடைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலவீனமடைந்துள்ளது. இந்த நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் கட்சியை உடைத்தால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக காணாமல் போகும் நிலை ஏற்படும். இது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார்.
இங்கு அன்புமணி ராமதாஸ் கடந்த 5 வருடங்களாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை என்றே பல்வேறு தரப்புகளிலும் கூறப்படுகிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக வேட்பாளரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையெல்லாம் விட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பல்வேறு இலவச மற்றும் தள்ளுபடி சலுகைகளை தேர்தல் வாக்குறுதி அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள்.
திமுக சார்பாக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது. மேலும் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் நகைகளையெல்லாம் இலவசமாக மீட்டு கொடுப்பதாகவும் கூறியிருந்தது. இது பெண்கள்,விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வாக்குகளாக மாறியது.
இந்நிலையில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில் படு தோல்வியை தழுவி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டது. தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே ஆட்சியே மீண்டும் தொடர்கிறது.
இவ்வாறு உள்ள சூழ்நிலையில் தருமபுரி தொகுதியில் அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் செந்தில்குமாரிடம் திமுக அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் அல்லது நிறைவேற்ற முடியாது என்று நேரிடையாக பதில் கூறாமல் ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினராக வாய்ப்புள்ளதாகவும் அவரும் இந்த தொகுதியில் மக்கள் பணியற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sathya தோழர்., இப்பவும் Dr.Anbumani அமைச்சர் ஆகலாம்., There is a Rajyasabha seat promised by ADMK., Ask NJP to provide ministry to Dr.Anbumani. He too can bring more schemes for Dharmapuri.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 26, 2019
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது திமுக உறுப்பினர் செந்தில்குமார் தான் ஆனால் அவரோ அந்த தொகுதியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகி தருமபுரி தொகுதிக்கு சேவை செய்வார் என்று கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அவர் கூறுவது போல அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் தமிழகம் முழுவதற்குமாக தான் செயல்படுவாரே தவிர குறிப்பிட்ட தொகுதிக்காக செயல்பட முடியாது.
இவ்வாறு திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாக்குகளை கவர மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் தருமபுரி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளால் ஏமாற்றபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மீதி இடங்களில் அதிமுக உட்பட கூட்டணி கட்சிகள் அனைத்துமே தோல்வியை தழுவின.
தோல்விக்கு முக்கிய காரணம் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த காலங்களில் தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது தான் என்றாலும், அதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திற்கு பெரிதாக எதையும் செய்ததில்லை.மேலும் இலங்கை தமிழர் படுகொலையில் கண்டும் காணாமல் இருந்து தமிழக மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த நினைத்த எட்டு வழி சாலை, தூத்துக்குடி கலவரம் மற்றும் தேசிய அளவில் செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை,GST வரி விதிப்பு போன்றவை தமிழக மக்களின் மனதில் பாஜகவிற்கு எதிராக பதிந்து விட்டது. இது போன்ற திட்டங்களுக்கு ஆளும் அதிமுக அரசும் துணை போனது மேலும் தமிழக மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு பொதுவான காரணங்கள் நிறைய இருந்தாலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவரது தனிபட்ட செல்வாக்கின் மூலம் வெற்றி பெற்று விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் திமுகவின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அடைந்த இந்த தோல்வி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கட்சிக்குள் இருந்த உட்கட்சி பிரச்சனைகளும்,கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த போது பாதிக்கப்பட்டவர்களும் சமயம் பார்த்து இந்த தேர்தலில் துரோகம் செய்துள்ளதாக பரவலாக பேசி வருகிறார்கள்.
மேலும் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரை தவிர வேறு யாரையும் சேலம் மாவட்டத்தில் வளர விடவில்லை என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வன்னியர்கள் பெரும்பான்மையினர் வாழும் சேலம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அவர்களை இவர் தொடர்ந்து புறக்கணித்து வந்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எல்லா சமூக மக்களையும் பகைத்து கொண்டு தன்னுடைய சொந்த சமூகமான கொங்கு வெள்ளாள மக்களுக்கு பெரும்பான்மையான உதவிகளை இவர் செய்திருந்தும் இந்த தேர்தலில் அந்த சமுதாய மக்களும் இவரை காலை வாரி விட்டுள்ளனர்.மேலும் தேர்தல் செலவுக்காக வாங்கிய பணத்தை பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
ஜெயலலிதா இல்லாத,கட்சி இரண்டாக பிரிந்து கிடக்கும் நிலையில் தேர்தலை சந்தித்த எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் தேமுதிக வாக்குகள் ஓரளவு கை கொடுத்து வாக்கு சதவீதத்தை ஓரளவு உயர்த்தியுள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட சசிகலா மற்றும் தினகரன் அணியினருக்கு எங்கும் செல்வாக்கில்லை என்பது இந்த தேர்தலில் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு ஆட்சியை ஓரளவு தக்கவைத்து கொண்ட எடப்பாடி பழனிசாமி இனி தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை கண்டறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மக்களவை தேர்தலில் திமுக பெற்ற இந்த மெகா வெற்றிக்கு உண்மையான காரணம்
இது தான்
நடைபெற்று முடிந்த 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான
முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 350 மேற்பட்ட
தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தங்களுடைய ஆட்சியை அமைக்க உள்ளது.
இதில் பாஜக மட்டும் தனியாகவே 302 தொகுதிகளில் தனிபெரும்பன்மையுடன்
வெற்றி பெற்றுள்ளது பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை
பெற்று படு தோல்வியை தழுவியுள்ளது.
இந்த மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும்
பாஜகவிற்கு ஆதரவாக முடிவை எடுக்க தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டும் மாநில
கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேறு மாதிரியான முடிவை தந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.எதிர்தரப்பில்
பாஜக மற்றும் அதிமுக கூட்டணி 1 தொகுதியில் மட்டுமே வெற்றி வேற முடிந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தமிழகம்
முழுவதும் பாஜகவிற்கு எதிராக பிரதிபலித்த மக்கள் எண்ணமே. கடந்த பாஜக ஆட்சியில்
செயல்படுத்தப்பட்ட மனமதிப்பிழப்பு நடவடிக்கை, GST வரி போன்றவை பெரும்பாலான
தொழில்களை நசுக்கிவிட்டது உண்மையே ஆனால் நாடு முழுவதும் நேர்மறையாக பார்க்கப்பட்ட
இந்த திட்டங்கள் தென் மாநிலங்களில் மட்டும் ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகளால் சித்தரிக்கபட்டுவிட்டன.முக்கியமாக
அதிமுகவின் கோட்டையான தொழில்வளம் மிக்க கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட
கொங்குமண்டலத்தில் அதிமுக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறமுடியவில்லை.
இதுமட்டுமில்லாமல் திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பத்திற்கு மாதம் 6000 ரூபாய் தருவேன் என்றும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் ஆக்குவேன் என்றும்
கூறியது பெரும்பாலான மக்களை கவர்ந்துவிட்டது.
.ஏற்கனவே தமிழக மக்களை தள்ளுபடிக்கும்
இலவசதிற்கும் அடிமையாக்கிய திமுக மீண்டும் தள்ளுபடி மற்றும் இலவச யுக்தியை
கையிலெடுத்தது அதாவது விவசாயிகளும் மாணவர்களும் தாங்கள் வாங்கிய வங்கிக்கடன்கள் எல்லாம்
தள்ளுபடி செய்யப்படும் என்றும் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. மேலும் 5 சவரனுக்கு குறைவாக அடகுகடையில் வைத்துள்ள தங்க
நகைகளை இலவசமாக மீட்டு தருவோம் என்பதெல்லாம் கிராமம் நகரம் என்றில்லாமல் எல்லா
பெண்களிடமும் அமோக ஆதரவை பெற்றுள்ளது.
இவ்வாறு திமுக மற்றும்
காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற அதிமுக சார்பாக அமைக்கப்பட்ட பாஜக
கூட்டணி மீதிருந்த அதிர்ப்தியும்,இந்த திமுகவின் இலவச மற்றும் தள்ளுபடி வாக்குறுதிகளுமே
முக்கிய காரணம். இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான ஊடகங்களை
கட்டுபடுத்தி திமுகவின் கடந்த கால குறைபாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்காமல்
பார்த்து கொண்டது அதே நேரத்தில் தங்களிடம் உள்ள ஊடகங்கள் மூலம் பாஜக மற்றும்
அதிமுக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பியதும் முக்கிய காரணங்களே.
இந்த தேர்தல் ஸ்டாலின் வாரிசான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் நுழைவை மட்டுமே உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் இவ்வளவு மக்களவை தொகுதிகளில் திமுக தலைமை பெரும்பான்மையாக வெற்றி பெற்றாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியை எதுவும் செய்ய முடியாமல் போனது தான் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி.
நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி?
கடந்த 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த மக்களவை தேர்தலில் தேசிய
கட்சியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுகவின் செயல்பாடுகள் எப்படி
இருந்தது என்பது பற்றிய அலசல் .
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான
ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தமிழக
அரசியலில் இரண்டு பெரும் தலைவர்களும் இல்லாத சூழலில் அதிமுக கட்சியில் ஏற்பட்ட
உட்கட்சி பூசலால் தமிழகத்தில் ஆட்சியே கவிழும் வாய்ப்பு இருந்தும் அதை சரியாக
பயன்படுத்தி கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே தொடர திமுக
தலைவர் ஸ்டாலின் வழிவகுத்து கொடுத்து விட்டார்.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத ஸ்டாலின்
எப்படியாவது ஆட்சி கவிழுமா? முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைக்குமா? என காத்திருந்த
ஸ்டாலின் அதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இந்த
விரக்தியில் அவர் கலந்துகொண்ட பெரும்பாலான கட்சி கூட்டங்களில் தொடர்ந்து எதாவது உளறுவதும்
அது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாவதும் தொடர் கதையானது.
இந்நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் ஆட்சி
காலம் முடிவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. ஆரம்பத்தில்
காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறி வந்த ஸ்டாலின் திடீரென்று தேசிய
அளவில் மூன்றாவது அணியை ஏற்படுத்துவது குறித்து மற்ற மாநில கட்சி தலைவர்களுடன்
ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியலிலேயே தடுமாறிய ஸ்டாலின் தேசிய அரசியலில்
மூன்றாவது அணியை ஏற்படுத்த முயன்றது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது.
அந்த சமயத்தில் தான் தனித்து போட்டியிடுவதாக கூறிய பாமக
நிறுவனர் திமுக இல்லாதா காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட தயார் என்று
அறிக்கை வெளியிட்டார். இதை சற்றும் எதிர் பார்க்காத ஸ்டாலின் மூன்றாவது அணியை
மறந்து அவரச அவசரமாக வேறு எதையும் யோசிக்காமல் ராகுல்காந்தி தான் பிரதமர்
வேட்பாளர் என்று அறிவித்து காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை உறுதி செய்தார். இவ்வாறு
பல குழப்பங்களுக்கு பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. மேலும்
இக்கூட்டணியில் கம்யூனிஸ்ட்டு கட்சிகள்,மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சிகள்
இணைந்து கூட்டணியை பலமாக்கின.
இவ்வாறு உருவான திமுக கூட்டணியின் செயல்பாடுகளில்
சிறப்பானவைகளில் சில.
அதிமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தமிழகத்தின் பல கட்சிகளை
ஒருங்கிணைத்து வலிமையான கூட்டணியாக அமைத்தது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான
தொகுதி பங்கீட்டை சுமூகமாக கையாண்டது.
திமுகவிற்குள் நிர்வாகிகளுக்கிடையே இருந்த உட்கட்சி
பிரச்சனைகளை சமாளித்து அவர்களை தேர்தல் பணியாற்ற வைத்தது. மேலும் எந்த
பிரச்சனைகளும் இல்லாமல் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வழக்கம் போல
ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் இல்லை என்று கூறினாலும் அவரை பிரச்சாரத்தில் ஈடுபட
வைத்தது.
முக்கியமாக திமுகவின் கடந்த கால ஆட்சியில் பல்வேறு குற்றசாட்டுகள்
மற்றும் ஊழல் புகார்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஊடகங்கள் மூலம் பொதுவெளியில் மக்களிடையே
சென்றடையாமல் தமிழக ஊடகங்களை கட்டுபடுத்தியது.தொடர்ந்து தமிழக ஊடகங்கள்
திமுகவிற்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுமாறு பார்த்து கொண்டது.
இவ்வாறே இந்த கூட்டணியின் செயல்பாடுகளில் இருந்த குறைகள்
சில
தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை சந்திக்கும் விதமாக
கடந்த காலங்களில் நடத்திய நமக்கு நாமே நடை பயணம் போல இந்த தேர்தலில் கிராம சபை
கூட்டம் நடத்தியது தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகவே பார்க்கப்பட்டது.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு திமுக தொண்டர்களால் பொது
வெளியில் நடத்தப்பட்ட அராஜகங்கள்.குறிப்பாக பிரியாணி கடையை அடித்து உடைத்தது,டீ
கடை காரரை அடித்தது என திமுகவினர் செய்த அடாவடிகள் கட்சிக்கு தலைகுனிவை
ஏற்படுத்தியது.
கூட்டணி விவகாரங்களில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை
எதிர்பார்க்காத ஸ்டாலின் விரக்தியில் வயதில் மூத்தவர் என்றும் பார்க்காமல் பாமக
நிறுவனர் மருத்துவர் ராமதாசை தரக்குறைவாக விமர்சித்தது மக்கள் மத்தியில்
அதிருப்தியை உண்டாக்கியது.
திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி
தலைவரான திருமாவளவனை அவர் தொகுதியை தவிர்த்து வேறு எங்கும் பிரச்சாரத்திற்கு
அழைத்து செல்லாமல் நவீன தீண்டாமையை கடைபிடித்திருக்கிறார்கள் என குற்றசாட்டுகள்
எழுந்தது.
திமுக சார்பாக போட்டியிடும் துரைமுருகன் மகன் தொகுதியான
வேலூரில் வாக்குக்கு பணம் கொடுத்ததாக கூறி தேர்தலை ரத்து செய்தது தேசிய அளவில்
தமிழகத்திற்கும் திமுகவுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.
மேலும் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினின் பேச்சு, நடை மற்றும்
அவருடைய உடை என எல்லாமே இயல்பாக இல்லாமல் தேர்தலுக்கான நாடகம் போலவே அமைந்தது.
இவ்வாறு பல நிறை குறைகள் உள்ள திமுகவின் தேர்தல் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எவ்வாறு சென்றடைந்தது என்பதை வெளிவரயிருக்கும் தேர்தல் முடிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்
தமிழக சட்ட பேரவைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது முஸ்லிம்கள் வசிக்கும் பள்ளப்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இந்துக்கள் குறித்து கமல்ஹாசன் பேசிய சர்ச்சைகுரிய கருத்தானது இந்துக்கள் இடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் போல அல்லாமல் நடிகர் கமலஹாசன் எதாவது மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பெரும்பாலான மக்களுக்கு இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் ஏமாற்றமே மிஞ்சியது.
பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என்றும் அது கோட்ஸே என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.இவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து முஸ்லிம்கள் வாக்கை பெறுவதற்காக என்பதை அனைவரும் அறிவர்.மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் செய்ய கமலும் ஆரம்பித்து விட்டார். அதற்காகவே இது போன்ற சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார் என்றும் மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.
நடிகர் கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் பாஜக தலைவர் H ராஜா கூறியுள்ளதாவது தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையை செய்த முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டிக்கவோ,அவர்களின் தவறை சுட்டிக்காட்டவோ கமலஹாசனுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் அவர் கேட்டுள்ளார்.மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் இவரது கருத்துக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தவரான விவேக் ஓபராய் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் முஸ்லிம் மக்களை சந்தோசப்படுத்த பல வழிகள் உள்ளன. அவர்களை சந்தோஷப்படுத்த எங்கள் மதத்தை இழுக்காதீர்கள் என்றும், உங்களை சிறந்த நடிகராக மதிக்கிறேன் ஆனால் இப்படி ஒரு கேவலமான செயலில் மீண்டும் ஈடுபடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கமல்ஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு, திராவிட கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் K.S அழகிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகள் தான் சாதி,மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள் என்றால் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன் என்று கட்சி ஆரம்பித்த கமலஹாசனும் அதையே செய்ய முயற்சிப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் இடைத்தேர்தலுக்கான அவரது பிரச்சாரம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்? என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து அந்த இளைஞரை ஆதரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக மட்டுமே அந்த அப்பாவிப் பெண்ணை அந்த இளைஞர் கொலை செய்திருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் கொலையாளி ஆகாஷை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும் காவல் துறையில் உள்ள சிலர் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் இருப்பதாலும் அப்பகுதியில் சாதிய மோதல் ஏற்படும் பதற்றம் தொடர்கிறது. இதுதொடர்பாக கொலை குற்றவாளி ஆகாஷ் தானே கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டு காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வீடியோவாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.
குற்றவாளியின் தந்தை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றோர் இந்த கொலையை ஆகாஷ் செய்யவில்லை என்றும் இது அந்த மாணவியின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என்றும் கூறி வந்த நிலையில் கொலையாளி ஆகாஷே குற்றத்தை ஒப்பு கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது அவர் தான் கொலையை செய்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திலகவதி படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், வெளியில் சென்றுவரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இவ்வழக்கில் ஆகாஷ் என்னும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக காவல் துறையே வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அவர் கொலை செய்திருக்கலாம். போலீசார் அந்த இளைஞரிடம் வாக்குமூலம் வாங்கியும் இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்கனும். வாட்ஸ் அப்பில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் போலீசால் என்ன செய்யும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்றும், மாணவியைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் தனது மகனுக்கு இல்லை என்றும் அந்த இளைஞரின் தந்தை புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படியான இரண்டு மாறுபட்ட கருத்துகள் வருவது பலத்த சந்தேகமாகவே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாணவி திலகவதியை யார் கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றத்தை கொலையாளியே ஒப்பு கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அரசியல் லாபத்திற்காக இவர் போன்றவர்கள் வழக்கை திசை திருப்பும் வகையில் பேசி குற்றவாளியை ஆதரிக்கலாமா? என்று பொது மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்
ஏற்கனவே வெளிவந்த தகவல்களின் படி தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மதியம் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திங்கள் அன்று இது சம்பந்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திரசேகர ராவ், சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையொட்டி, தனது குடும்பத்தினருடன் திருச்சி வந்துள்ள சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று காலை வழிபாடு நடத்துகிறார். பிறகு சென்னைக்கு திரும்பி, மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மூன்றாவது அணி அமைப்பது குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பிரச்சாரம் செய்த ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விட்டு மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் திமுக ஆட்சியை பிடிக்க சாதகமான சூழ்நிலை இருந்தும் அதை செய்ய முடியாத ஸ்டாலின் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிப்பது நடக்குமா? என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம்
விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்ததற்காக
வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான
முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் தனது மகனை
சம்பந்தமில்லாமல் கைது செய்திருப்பதாக கொலையாளியின் தந்தை காவல் துறையில் புகார்
அளித்திருந்தார்.
இந்த கொடுமையான சம்பவத்தையடுத்து பெரும்பாலான தமிழக அரசியல்
கட்சிகள் அனைத்தும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வழக்கம் போல பாமக நிறுவனர்
மருத்துவர் ராமதாஸ் மட்டுமே கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இந்த
கொலைக்கு ஒரு சில அமைப்பினரால் நடத்தப்படும் நாடக காதலே காரணம் என்றும்
அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த
அறிக்கையில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் அமைப்பையோ அல்லது தலைவர்களையோ
குறிப்பிடாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் தன்னை
சம்பந்தமில்லாமல் அந்த கொலை வழக்குடன் இணைத்து பேச கூடாது என்று அந்த அறிக்கைக்கு
பதில் அளித்திருந்தார்.மீறினால் மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இந்த கொலையானது அந்த பெண்ணின் குடும்பத்தினரால்
நடத்தப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என காவல் துறையினரின் விசாரணையை
திசைதிருப்பும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய
விசாரணையில் குற்றவாளியே அந்த கொலையை தான் தான் செய்ததாக வாக்குமூலம் அளித்தது
உண்மையை உறுதி செய்தது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன் ஒரு கொலையாளியை காப்பாற்றும் வகையில் அவனுக்கு ஆதரவாக கொலையை திசை
திருப்ப முயன்றது மக்கள் மத்தியில் உறுதியானது. இதற்கு முன்பே திருமாவளவன் அவரது
கட்சி பொது கூட்டத்தில் மற்ற சமுதாய பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும்
என்று அந்த கட்சி இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு தலித் இளைஞர்களே காரணமாக இருப்பதற்க இவரின் அந்த தவறான வழிகாட்டுதலே காரணம் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இவரை எதிர்த்து பதிவிடும் பெரும்பாலோனோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றே கோரிக்கை வைக்கின்றனர்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கூறி சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக
நாடக காதல் கும்பல்களால் தமிழகபெண்கள் சீரழிக்கபடுகின்றனர்!நாடக காதலை ஆதரிக்கும் விசிக,கம்யூனிஸ்ட் போன்ற காட்சிகளையும்,அதன் தலைவர்களையும் தடை செய்ய படவேண்டும்!#BanVCK#BanComunisampic.twitter.com/oqnSdieVFF
— பிள்ளைப்பூச்சி 🇮🇳🚩 (@Being_Hindustan) May 9, 2019