4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு 

0
68
They have once again complained to Stalin about the internal party problem in Dharmapuri.

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திமுக தலைமையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அங்கங்கே கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு என குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மது மற்றும் காஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கத்தினால் குடும்பத்தில் பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொலை நடக்கும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக அரசு, தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளதாக அடிக்கடி கூறி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2024-ல், 2023-ஐ ஒப்பிடுகையில் கொலைகள் 7% குறைந்துள்ளன என்றும், பழிவாங்கும் கொலைகள் 42% குறைந்துள்ளன என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஆனால் நிலவரம் வெறும் புள்ளிவிவரங்களால் விவரிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக உள்ளது.

தொடர்ச்சியாக நடந்த கொலைகள், அதுவும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள், இந்த “அமைதியான தமிழகம்” என்ற அவருடைய பேச்சை கேள்விக்குள்ளாக்குகின்றன.

2024-ல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதும், பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கப்பட்டதும், அதிகாரிகளான வி.ஏ.ஓ. லூர்துசாமி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாஹீர் உசேன் ஆகியோர் தங்களை பாதுகாப்பற்ற நிலையில் காண நேர்ந்ததும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், போதைப்பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 2023-இல் பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் எண்ணிக்கை 39,000 ஆக இருந்த நிலையில், 2024-ல் அது 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதோடு, சைபர் குற்றங்கள், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் மனைவி, குழந்தைகள் மீதான வன்முறைகளும் உயர்வில் இருக்கின்றன.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான குற்றங்கள் 33.5% அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள் 16%, குழந்தைகள் மீதான போக்சோ வழக்குகள் 52% வரை அதிகரித்துள்ளன.

இந்த எல்லா சூழலிலும், ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புக் கரம்” எங்கே என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அறிவித்த வாக்குறுதிகளை நிலைநாட்டுவதில் அரசாங்கம் தளர்ந்துள்ளதா? அல்லது குற்றச்செயல்களுக்கு நேரடி நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவுக்கு அமைப்புகள் வலுவாகிவிட்டதா? என்பதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில், “குற்றமற்ற அமைதியான தமிழகம்” என்ற திமுக அரசின் நம்பிக்கையூட்டும் தேர்தல் வாக்குறுதி, வெறும் தேர்தல் வாசகமாகவே தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

Previous articleஇனிதான் ஆட்டம் ஆரம்பம்! அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் டீம் – ராமதாஸ் உத்தரவு 
Next articleவெறும் பாடல் என்று நம்மால் கடந்துவிட முடியாது! படத்தின் வெற்றியையே பாட்டு தான் தீர்மானிக்கும்! வெறும் பாடலுக்காக ஏன் கோடிகளை வாரிக்குவிக்கிறார்கள்?