வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31, 2025
Home Blog Page 5872

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

0

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.

இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அந்த ஒரு மாத விடுப்பில் இருக்கும் போதே மகேஷின் தந்தை இறந்ததால் பெரிதும் மனமுடைந்து போனார். இதனால் தனது விடுப்பை அதிகரித்து கொண்டார். இப்படி இருக்கு சமயத்தில் மகேஷ் தனது வடமாநில நண்பர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். இதனை கண்ட புவனேஸ்வரி சந்தேக பட்டு வேறொரு பெண்களிடம் தான் பேசுகிறார் என்று எண்ணி, யாரிடம் பேசுகிறீர்கள் என்ன ஹிந்தியில் பேசினீர்கள் என்ற சந்தேக கோணத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் பெரிதும் மனமுடைந்து போனார் மகேஷ். இப்படியே சிறிது நாள் பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்க ஒரு நாள் இருவரும் வெளியில் சென்று கொண்டிருந்தனர் வண்டியில். மீண்டும் அந்த விவகாரம் தொடர்பாக இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து மகேஷ் வண்டியை மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு சமயம் இருவருக்கும் பேச்சு முற்றி போக புவனேஸ்வரி இருப்பதை விட சாவதே மேல் என கூறி மேம்பாலத்தில் இருந்து குதிக்க முயன்றிருக்கிறார். உடனே மகேஷ் நீ ஏன் சாகவேண்டும் நானே சாகுறேன் என்று கூறி மனைவியை தடுத்து விடும் மகேஷ் மேம்பாலத்தில் இருந்து குதித்து விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த மகேஷ் அங்கேயே உயிர் விட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஷ்யை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் மனைவி புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். புவனேஸ்வரி கூறியதாவது, தனது கணவர் ஹிந்தியில் நண்பரிடதில் பேசினார் நான் சந்தேகத்தில் வேறொரு பெண்களிடம் பேசுகிறார் என்று எண்ணி என்ன பேசுகிறீர்கள், யாரிடம் பேசினீர்கள் என்று கேட்டேன் இது வாக்குவாதத்தில் முடிந்ததால். தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி காவல் துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!!

0

1.40 கன அடியாக உயர்ந்தது நீர் வரத்து! ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !!நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!!

சென்னை: மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக இருந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. தொடக்கத்தில் 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.88 அடியாகவும் நீர் இருப்பு 26.10 டிஎம்சி-யாகவும் இருந்தது. விநாடிக்கு 82 ஆயிரம் கனஅடி வீதம் நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 67.40 அடியாகவும், நீர் இருப்பு 30.50 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

அதே வேளையில், நீர்வரத்து விநாடிக்கு 93 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 73.60 அடியை எட்டியது. நேற்றிரவு வரை ஒரே நாளில் நீர்மட்டம் 12 அடி அதிகரித்துள்ளது.

இதனிடையே, பிலிகுண்டுலுவில் காவிரியின் நீர்வரத்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

எனவே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி டெல்டா பாசனத்திற்காக அணை நாளை திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக இன்று மாலை விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்…

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி ! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

0

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை விளம்பரங்களுக்கு செலவு செய்வார்கள். ஜொமாட்டோவுக்கு விளம்பரம் கூட சர்ச்சையிலேயே வந்துவிடுகிறது.

தற்போது ஜொமோட்டோ மீண்டும் செய்தியாகி இருப்பதற்கு , ஜொமாட்டோ டெலிவரி செய்யும் நபர்கள் தான் காரணம்.

சென்ற வாரம், ஜொமோட்டோ ஆப்பில், ஒருவர் உணவு ஆர்டர் செய்தார்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைக் கொண்டு வருவதாக நோட்டிஃபிகேஷன் வர, அதை வாங்க மாட்டேன் என உணவை கேன்சல் செய்திருக்கிறார்.

இந்த அரிய செயலை, பெருமையாக எண்ணி சமூக வலைதளத்தில் ஜொமாட்டோ ஐடியை டேக் செய்து அவர் வெளியிட, கடும் விமர்சனத்துக்குள்ளானர். காவல்துறையும் தாமாக முன்வந்து அந்த நபரை எச்சரித்திருக்கிறது.

வாய்ப்பை பயன்படுத்திய ஜொமாட்டோவும், உணவில் மதம் இல்லை , உணவே மதம் என்னும் கோட்பாட்டை முன்வைத்து ஹார்ட் இன்களையும் RTக்களையும் அள்ளியது.

இது என்னடா புது வம்பு என நினைத்த உபர் ஈட்ஸ் என்ற இன்னொரு டெலிவரி நிறுவனம், `நாங்களும் ஜொமாட்டோவை வழிமொழிகிறோம்’ என அறிக்கைவிட்டது.

ஹலால் உணவு என பிரித்து விற்கும் ஜொமோட்டோ, உணவில் மதம் இல்லை என சொல்வது வேடிக்கையானது என யோசித்து வேறு லாஜிக்குடன் வந்தது இன்னொரு கும்பல்.

உணவில் மதம், மதமே உணவு, உணவே மதம் சர்ச்சைகளே நீயா நானா, நமக்கு நாமே என இன்னும் விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன.

சரி சரி மேட்டருக்கு வருவோம். தற்போது ஜொமோட்டோவின் புதுப் பிரச்னை இது தானாம்.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜொமாட்டோ டெலிவரி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள்.

அங்கிருக்கும் மக்கள் மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சி உணவுகளையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதால், இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறியிருக்கிறார்கள் அவர்கள்.

இதுகுறித்து பேசிய மேற்குவங்க அமைச்சர் ராஜீவ் பானர்ஜீ, “மத ரீதியிலான நம்பிக்கை கொண்ட ஒருவரை, அவருக்குப் பிடிக்காத உணவை நிர்பந்தித்து கொண்டு செல்ல சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுகுறித்து நாங்கள் விசாரிப்போம்” என தெரிவித்திருக்கிறார்.

சரி, உங்கள் கருத்து என்ன? கொண்டு வருபவர் வேற்று மதம் என்பதால் வாங்க மறுப்பேன் என்கிறார் ஒருவர்.

கொண்டு செல்லும் உணவு என் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது, நான் கொண்டு செல்ல மாட்டேன் என்கிறார்கள் சிலர்.

இதனால் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

0

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை.

இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் வந்த பிளாஸ்டிக் பொருளை எப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும் அல்லது அதை எப்படி எங்கு சேமிப்பது என்பது பற்றி பலரும் அறிய தவறிவிட்டனர்.

நமது தமிழக அரசு கூட இந்த வருடம் நெகிழி பையை தடை செய்தது. ஆனால் இன்றும் நாம் நெகிழி பையை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். பிளாஸ்டிக் ஆங்காங்கே சேரும் போது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால். மழை நாட்களில் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக உருவாகிறது. இதனால் மலேரியா டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. நீர் நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால் நீர் வளம் நிலத்தடியில் சேர்வதை தடுக்கிறது. ஒரு சில நீர்நிலைகள் மறைந்தே போய்கிறது என்பது நிதர்சன உண்மை.

சமீபத்தில் கூட ஆவின் நிறுவனம் தங்களின் நிறுவனத்தில் தயாராகும் பொருளின் பிளாஸ்டிக் இருக்கும் பட்சத்தில் அந்த பிளாஸ்டிக் பொருளை கொண்டு வந்து கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதே போல் மத்திய பிரதேசத்தில் சிலிகுரி எனும் ஊரில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் பொருளை கொண்டு வந்து கொடுத்தால் உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். இது தற்போது நடைமுறையில் செய்து வருகின்றனர். இந்த திட்டம் அந்த ஊர் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த திட்டத்தை செய்யல் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர்கள் கூறியது குழுவின் தலைவர் சிங் சலூஜா, ”பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளில் கால்வாய்களில் வீசப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்லாமல் நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உருவாகிறது. இதனால் பல நோய்கள் உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் நீர் நிலத்தடியில் சேர்வதை இந்த பிளாஸ்டிக் தடுக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திட்டமிட்டோம். அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்! இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

0

பாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்!
இரவில் சந்தித்த முதலமைச்சர்!!!

சென்னை: பாஜக கூட்டணியினர் தோல்வியை தழுவிய நிலையில்
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய Listening, Learning and Leading என்ற புத்தகம் வெளியீட்டு விழா இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது.

புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையே, இன்று நடைபெறவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு நேற்று சென்னை வந்தடைந்தார்.
இவரை
தொடர்ந்து, உள்துறை மந்திரிஅமித்ஷா-வும் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, ஆளுநர் மாளிகையில் தங்கிய அமித்ஷாவை நேற்றிரவு முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவர் வருகையை முன்னிட்டு, வரலாறு காணாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்



பழைய விதிகளை தகர்த்த நேர்கொண்ட பார்வை! தென் தமிழகத்தை புரட்டியதா! தியேட்டர் உரிமையாளர்களின் கருத்து!

0

போனிக்கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரமாண்டமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பு மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது மாறி தற்பொழுது பார்த்தவர்களின் கருத்தை கேட்டு பார்காதவர்களின் எண்ணகள் பார்க்கவேண்டும் என்ற ஆசை வின்னைமுட்டும் அளவிருக்கு உயர்ந்துள்ளது.

தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பெண்களின் நிலையை எடுத்துக்கூறும் படமாக அமைந்துள்ளது. இதனால் பெண்களின் மத்தியில் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை உள்ளது.

சூர்யா,சிவகார்த்திகேயன், நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி சரதகுமார், சித்தார்த் போன்றவர்கள் வெளிப்படையாக பாராட்டியுள்ளனர். முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக அஜித் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என கருத்து தெரிவித்தனர். இதனால் இன்னும் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

முன்னதாகவே இந்த படம் சிங்கப்பூர் மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது அங்கிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை இந்த கருத்துக்கள் மெருகேற்றியது.

தமிழகத்தில் ரிலீஸ் ஆன முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து உள்ளது. ரிலீஸ் ஆன அன்று வேலை நாட்களாக இருந்தாலும் கூட நல்ல வசூல் செய்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ஏறக்குறைய 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது அஜித் படங்களில் அதிகமாக வசூல் செய்த படமாக கருத படுகிறது.

தென் தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டி உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறும்பொழுது, கமர்சியல் ரீதியான படங்களே தென் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் இந்த படம் அப்படி இல்லாமல் சமூக பிரச்சனை சார்த படமாக உள்ளது. இருந்த போதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமூகம் ரீதியான படங்கள் வெற்றி பெற்றாலும் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையாது. குறைவாகவே வசூலை ஈட்டும். ஆனால் நேர்கொண்ட பார்வை படம் அப்படி இல்லாமல் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படம் நல்ல வசூலையும் படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் விதியையே மாற்றி விட்டது இந்த படம். நாளுக்கு நாள் தியேட்டர் வரும் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

களைகட்டும் ஆடித்திருவிழா ….. மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!

0

களைகட்டும் ஆடித்திருவிழா …..மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!

சேலம்:ஆடி மாதம் என்றாலே விழாக்கோலம் கொள்ளும் சேலம் மாவட்டத்தில் சேலம் பெரிய மாரியம்மன் திருவிழா முடிந்ததை அடுத்து மழவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாரியம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குத் தான் கோலாகலம் என்றால் பெரும்பாலும் வட தமிழகத்தில் கொண்டடப்படும் விழாக்கள் ஆடி மாதத்தில் தான்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதியில் ஓலப்பாடி கிராமத்தில் மழை வேண்டி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், விரதம் இருந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பிறகு சுவாமி உற்சவம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது.

இதே போன்று பல்வேறு ஊர்களில் மக்கள் மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

0

தற்கொலைக்கு இடம் பார்த்த
தம்பதிகள்!
இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

வேலூர்: திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சடலம் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது வாலிபருடன் வந்த இளம்பெண் அலறி துடித்தபடி பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் அவர் மயக்கமானார்.

தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அளித்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்(32) என்பதும், அந்த இளம்பெண் அவரது மனைவி புவனேஸ்வரி(27) கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதிதான் திருமணம் நடந்துள்ளது. ‘திருமணத்துக்கு முன்பே மகேஷுக்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருந்துள்ளது.

இதுதொடர்பாக திருமணமான சில நாட்களிலேயே எங்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அழைத்து சென்றார்.

அங்கு சென்றதும் நான் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தேன். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்தபோது, பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தை திருப்பினார். 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். உடனே என்னை கீழே தள்ளிவிடப்பார்த்தார். நான் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை இறுக்கமாக பிடித்து கொண்டேன். இதனால், அவர் மட்டும் குதித்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் நானும் அங்கிருந்து குதிக்க முயன்றேன். ஆனால் என்னை தடுத்துவிட்டனர்’ என்று புவனேஸ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!

0

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் நம்பமுடியாது!!

சென்னை: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து தற்போது முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.

என்ன காரணம் என்று பார்க்கும்போது

ரமணன் தனது பேட்டியில் கூறியதாவது , பொதுவால் மழை வருவதற்கு சில காரணம் இருக்க வேண்டும்.உதாரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது சுழற்சி இருக்க வேண்டும்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.


கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.

வடககிலிந்து வந்த காற்றானது

மஹாராஷ்டிரா, குஜராத் வழியே இது ராஜஸ்தான் சென்றுவிட்டது. ஆனால் இதனால் அரபிக்கடல் காற்று தமிழகம் வழியாக இழுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் மேலடுக்கு சுழற்சியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்த காற்று தமிழகம் வழியாக வடக்கு நோக்கி இழுக்கப்படுவதால் மழை பெய்கிறது.

காற்று  எப்படி செல்கிறது:
மேலடுக்கில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று செல்வதால்தான் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையை கணிக்க முடியாது. ஏனென்றால் காற்று எப்போது வீசும் என்பதை கணிக்கவே முடியாது. அதிகாலையில் வீசும் காற்று மறுநாள் மழையாக மாறும். இதை முன்பே கணிப்பது கஷ்டம்.

அப்போ சாட்டிலைட் பயன்பாடு தான் என்ன

இதில் நாம் சாட்டிலைட் புகைப்படங்களையும் கணிக்க முடியாது. சாட்டிலைட் புகைப்படங்கள் காற்று காரணமாக நொடிக்கு நெடி மாறும். இதனால் மழை பெய்ய போவதை தகுந்த காலநிலை பொருத்தது. அதனால் நாம் முன் கூட்டியே கணிக்க முடியாது, என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழிநுட்பங்கள் வந்தும்கூட ரமணன் அவர்கள் அறிவித்துள்ள பேட்டியானது மக்களிடையே நம்பிக்கை இழக்க செய்கிறது…. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு முறைகளில் கருத்துகளையும் மீமஸ்களையும் பதிந்துள்ளனர்.
அதில் ஒன்றுதான் சாமி சொல்றவன் கூட மழை வருவதை சரியா சொல்லிட்டான்
சாட்லைட் வச்சிட்டு என்னத்த பண்றாகளோ என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

0

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

“மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் வேகமாக நிரம்புவது மகிழ்ச்சளித்தாலும் இன்னொருபக்கம் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை பரிதவிப்புக்குள்ளாயிருக்கிறது.

சேதமடைந்த தரைப்பாலம்

இந்நிலையில், கனமழையில் அரித்துச்செல்லப்பட்ட சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் தரைப்பாலம் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “தொடர் மழைப்பொழிவால் நீலகிரியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரிகள் நீலகிரியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 275.47மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

லேசான மழையின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதால் சின்னச் சின்ன பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் கோவை மக்களுக்கு மகிழ்ச்சிதான். நொய்யல் ஆற்றில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிறைந்துள்ளது. எல்லா வாய்க்கால்களும் குளங்களும், தூர்வாரபட்டுள்ளதால் நீர்நிலைகளில் நிரம்பிவருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் குளங்களுக்குச் செல்லும் பாதை சிறியது என்பதால் குளங்கள் மெதுவாக நிரம்பி வருகிறது. செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1335பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 72 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளது, 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தங்கள் இருப்பிடம் பாதுகாப்பானது இல்லை என்று கருதினால் பொதுமக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும். ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும். அதற்கு இப்போதே அதற்கு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்றார்.

மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , “நீலகிரி மாவட்டத்தில் பெருக்கெடுத்த மழைவெள்ளம் பவானி ஆற்றின் வழியாக பவானி சகார் அணைக்குச் செல்கிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை வெள்ளம் வந்த போதும் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, மாற்று வீடு கட்டிதருவதாக அம்மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதோடு மட்டுமல்லாது, அதற்காக 3 ஏக்கர் நிலமும் ஏற்கனவே ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த முறை வெள்ளம் வருவதற்குள் பவானி கரையோர மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீர் அனைத்தும் நிலத்தடிக்குள் செல்ல வேண்டும்.” என்று தனது பாணியில் அதிகாரிகளை  எச்சரித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்