Wednesday, July 9, 2025
Home Blog Page 24

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த எதுவும் இல்லையா? உண்மை இதுதான்!

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியதால் ஜனநாயகன் படம் தான் விஜய் சினிமாவில் நடிக்கப்போகும் கடைசி படம் என்கிற தகவலை விஜய் ஏற்கனவே வெளியிட்டார். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22.

பொதுவாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தின் ட்ரைலர், டீஸர் அல்லது பாடல் வெளியாகும். இந்நிலையில் ஜனநாயகன் தளபதியின் கடைசி படம் என்பதால் படத்தின் டீசரோ ட்ரைலரோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஜனநாயகன் படம் வெளியாவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் படத்தின் ட்ரைலர், டீசெர் அல்லது பாடலை இப்போதே வெளியிடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பையம், படத்தின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும் என படக்குழுவினரும், விஜய்யும் நினைத்துள்ளனர். இதனால் விஜய் பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என முதலில் முடிவெடுத்திருந்தனர்.

தளபதி பிறந்தநாளில் எந்த அப்டேட்டும் வெளியிடாவிட்டால் அது ரசிகர்களை சோர்வடைய செய்யும் என்பதால் படம் தொடர்பான சிறு glimpseஒன்றை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் இடம்பெறும் ஆறுபடை வீடுகள்; உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மாநாட்டு வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பாக ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாடு வளாகத்தில் ஆறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து அங்கு பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாதிரி ஆறு படை வீடுகள் அமைக்க போலீசார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர் .அதனைத் தொடர்ந்து ஆறு படை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்த போலீசார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக முருகு பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாதிரி ஆறுபடை வீடுகளுக்கு மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கலாம் என கூறப்பட்ட நிலையில் இந்து முன்னணி தரப்பிலிருந்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபதனைகள் போடப்பட்டுள்ள நிலையில் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த மாநாட்டிற்கு பைக்கில் வரக்கூடாது, வாகனங்களில் மாநாட்டுக்கு வர உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும். மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீசார் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறக்கூடிய வளாகத்தில் மாதிரி ஆறுபடை வீடுகள் அமைக்கப்பட்டு பூஜை செய்யலாம். இந்த மாநாட்டில் தமிழக மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் உள்ள மண்டலங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி பாஸ் வழங்க வேண்டும். தனித்தனி பார்க்கின் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

விஐபி மேடையில் பங்கேற்பவர்களுக்கென பார்க்கிங் வசதிகளை உருவாக்க வேண்டும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. மேலும் மாநாட்டில் பங்கேற்கும் ஆண், பெண்களுக்களை மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும். மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள், உள்ளிட்டவை ஏற்படுத்தி தரவேண்டும். மாநாட்டு மேடை மற்றும் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

பார்க்கிங்கில் நிறுத்திய வாகனங்களை தன்னார்வலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். அதனை பட்டியலிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைக்க முறையாக சம்பந்தப்பட்ட கோயில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம்.

ரிங்கு ரோடு என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல் காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 52 நிமிடங்கள் விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்கை தேடி வரும் பணம்; வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியோஜனா திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் நேரடி பலன் பரிமாற்றங்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். இந்த திட்டத்தின் மூலம் 2000 ரூபாய் 19 தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இருபதாவது தவணைத் தொகை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் இந்த திட்டத்தின் இருபதாவது தவணை தொகையாக சுமார் 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் இருபதாவது தவணை எப்போது டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஜூன் 20ஆம் தேதி அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இந்த பணம் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிதி உதவி பெறுவதற்கு விவசாயிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம். ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு நிலையை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கில் உள்ள நேரடி பரிமாற்ற விருப்பத்தை செயலில் வைத்திருக்க வேண்டும்.

கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது அவசியம். மேலும் பிஎம் கிசான் வெப்சைட்டில் உள்ள know you are status வசதியின் கீழ் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தங்களுடைய முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

அதில் மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஷோ பட்டனை கிளிக் செய்தால் தங்களுடைய விவரங்கள் காண்பிக்கப்படும். மேலும் கேஒய்சி சரி பார்ப்பை சரியாக முடித்த பயனாளிகளுக்கு மட்டுமே பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

உயிரிழந்த நபருக்கு பதவியா; அதிமுக தலமையால் நிர்வாகிகள் அதிருப்தி!

2026 தேர்தலுக்காக அதிமுக தனது கட்சியை பலப்படுத்தி வரும் நிலையில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ள நிலையில் ஆரணி மற்றும் போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பதவியில் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அவர்களின் பெயர்களையும் அதிமுக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்து வருகின்றது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்துக்கிருஷ்ணனுக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கி அதிமுக தலைமை அறிவித்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி மறைந்த தீவிர விவசாய இவருக்கு பதவி வழங்கப்பட்ட செய்தி அதிமுகவினர் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பால் காலமான முத்துகிருஷ்ணனுக்கு கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டு பகுதியில் உள்ள முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி போடாமல் இறந்தவருக்கு பதவி வழங்கியது ஏன் என கேள்வி எழுந்து வருகின்றது.

உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்; பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்!

ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே அந்த ஆண்டுக்கான கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் எத்தனை நாட்கள் பள்ளி வேலை நாள் மற்றும் காலாண்டு அரையாண்டு விடுமுறை தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 210 நாட்கள் பள்ளி செயல்படும். 2026 ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் இடைப்பருவ தேர்வு ஜூலை 16ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. காலாண்டு தேர்வு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும். ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். அதன் பிறகு 12 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இறுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு கோடை விடுமுறை தொடங்கும். மேலும் இந்த கல்வியாண்டில் தீபாவளிக்கு மூன்று நாட்களும், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ,11 மற்றும் 12 ஆகிய பொது தேர்வு எப்போது தொடங்கும் என கால அட்டவணை வெளியாகவில்லை.

மேலும் அண்ணன் தான் மாவட்டங்களில் கோவில் பண்டிகை அல்லது வேறு காரணங்களுக்காக விடப்படும் உள்ளூர் விடுமுறை மற்றும் பேரிடர் இழப்புகளால் ஏற்படும் உள்ளூர் விடுமுறை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி; உடனே முந்துங்கள்!

தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் டிஜிட்டல் கல்வியை அணுக முடியும். இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்த இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் ,புத்தகப் பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வர அதிகளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.

இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 48.95 கோடி கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தங்களது பள்ளியின் மூலம் அணுகி விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் உயர்கல்வி மாணவர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்காங்களா இதை நோட் பண்ணிக்கோங்க; அரசு வழங்கும் அசத்தல் திட்டம்!

இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் புதிதாக பிறந்த குழந்தைக்கு உரிய நேரத்தில் போதிய மருத்துவ வசதியும் சுகாதார பராமரிப்பும் எளிதாக கிடைக்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து வரும் நிலையில் குழந்தையும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கின்றது. இத்தகைய கடுமையான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சுரர்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக சிறந்த முறையில் தரமான மருத்துவ சேவைகளை வழங்க இந்திய அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி இந்த மகப்பேறு நலத்திட்டத்தை தொடங்கியது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவைப்படும் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளும், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் பொது சுகாதார மையங்களில் சிசேரியன் மற்றும் சாதாரண முறையில் குழந்தை பெற்றெடுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும். கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தி தருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற பெண்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள், வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், மேலும் மருத்துவமனையில் இருந்து பெண்களின் கர்ப்ப விவரங்கள் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம்.

கலையப்போகும் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு பெரும் ஆப்பு!! சைலண்டாக நடக்கும் மீட்டிங்!!

DMK: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுகள் உள்ள நிலையில் எந்தெந்த கட்சி ஆறுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரை பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் திமுக கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்தது மாற்றம் ஏதும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இதில் தான் பெரிய மாற்றம் உண்டாகப் போவதாக அதிகாரப்பூர்வ அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

அதாவது திமுக கூட்டணியான காங்கிரஸ் மற்றும் வைகோ உள்ளிட்டோர் மிகவும் அதிருப்தியில் உள்ளார்களாம். அதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பல மேடைகளில் நாம் எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பது தனித்துப் போட்டியிட வேண்டாமா என்று பேசியுள்ளார். அதேபோல நேரடியாக தேமுதிக கூட்டணியில் இணைந்து கொள்ள அழைப்பும் விடுத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விடுத்து வெளியேறலாம்.

முன்னதாகவே பாமக தேமுதிக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவைகள் ஒன்றிணையும் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில் இவர்களுடன் மதிமுக மற்றும் காங்கிரசும் இணைய அதிக வாய்ப்புள்ளதாம். அதனுடைய அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் மறைமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜம்மு வை பாகிஸ்தானுடன் இணைத்த இஸ்ரேல்.. வெகுண்டெழுந்த இந்தியர்கள்!! திடீரென்று வந்த அறிவிப்பு!!

0

India: இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் மோதல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதன் தீவிரமானது அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென ஈரானும் தொடர்ந்து ட்ரோன், ஏவுகணை மூலம் இஸ்ரேலை தாக்குகிறது. இருவருக்குமிடையே தினசரி மோதல் போக்கானது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்க பலமான ஆதரவையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு இஸ்ரேல் நாடானது நேற்று புகைப்படத்துடன் கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஈரான், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினால் எவ்வளவு தூரம் செல்லும் என்பது குறித்து விவரத்திருந்தது. அந்த புகைப்படத்தில் இந்தியா உள்ள இடத்தில் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் உடன் இணைந்தது போல் காட்டியுள்ளனர். இதைப் பார்த்த இந்தியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது ரீதியாக தற்போது இஸ்ரேல் வாய் திறந்து உள்ளது.

நாங்கள் வெளியிட்ட மேப்பில் சில தவறுகள் உள்ளது துல்லியமான எல்லைகளை கூறுவதில் தவறு நடந்து விட்டது. இதனால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் எனக் கூறியுள்ளனர். இஸ்ரேலின் மன்னிப்பு அறிவிப்பு பிறகு தான் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதை நிறுத்தியுள்ளனர்.

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

India: இந்தியாவின் தற்போது நான்கு வரி விகிதம் உள்ளது. அதில் பொதுமக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5%, ஆடம்பர பொருள்களுக்கு 12%, மேற்கொண்டு 18 மற்றும் 24% என்ற விகிதத்தில் கட்டுமான பொருட்கள், உயர்தர ஹோட்டல்களில் தங்கப்படும் அறை, பிளைட்டில் எக்னாமிக் வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட சில தொழில் ரீதியான அமைப்புகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்த 12 சதவீதத்திற்கு கீழ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், முட்டை, மீன், டிரிங்கிங் வாட்டர், வாக்கி டாக்கி, காண்டாக்ட் லென்ஸ், டேட்ஸ், நட்ஸ், சாசேஜ், டூத் பேஸ்ட்,பவுடர், குழந்தைகளுக்கு உபயோகிக்கும் பீடிங் பாட்டில், குடைத், தொட்டில், சைக்கிள், அதுமட்டுமின்றி பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்படுத்தும் பலவகை பொருள்களுக்கும் இந்த வரி விகிதம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சமநிலைப்படுத்தும் வகையில் இனி 12 சதவீத வரி விதிப்பு தேவை இருக்காது என்ற முடிவை இதன் நிர்வாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர். மாறாக பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவை பொருட்கள் அனைத்தையும் ஐந்து சதவீதத்திற்குள் கொண்டு வருமாறு கேட்டுள்ளனர். அதேபோல மற்ற ஆடம்பர வரிசையில் வரும் அனைத்திற்கும் 18 சதவீதம் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சமநிலை வரி விகிதத்திற்கு பல மாநில அரசு அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ரீதியாக வரும் 23ஆம் தேதி வருமான வரித்துறையின் முதன்மை தலைமை நிர்வாகிகளை நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் ஆலோசனைக்கு பிறகு நான்கு அடுக்குகளாக இருக்கும் வரி விகிதம் மூன்று அடுக்குகளாக குறையும் என கூறுகின்றனர்.