Thursday, July 17, 2025
Home Blog Page 3391

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என நிர்ணயம் செய்திருந்தன.இந்நிலையில்

அதற்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிகப்படுகிறது.மேலும் அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்திற்கு பிறகு நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் தற்போது வசூலிக்கப்படும் ரூ. 20 லிருந்து ரூ.21 ஆக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த திடீர் மாற்றத்தை வங்கி மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்தனர்.

என்னையா கடிச்ச? தன்னை கடித்த பாம்பை கடித்துத் துப்பிய 2 வயது சிறுமி!

0

துருக்கியில் தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி வீட்டுக்கு பின்புறமிருக்கின்ற தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பாம்பு அவருடைய உதட்டை கடித்து விட்டது. பதிலுக்கு சிறுமியும், அந்த பாம்பை பிடித்து கடிக்கத் தொடங்கினார். அந்த பாம்பு சிறுமியிடமிருந்து தப்பிக்க போராடியது, ஆனால் அவள் விடவில்லை அந்த பாம்பை மடக்கி பிடித்து கடித்து துப்பி விட்டாள், பின்பு அதே இடத்தில் அந்த பாம்பு உயிரிழந்தது.

அதன் பிறகு சற்று நேரத்தில் வீட்டின் பின்புறம் வந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சிறுமியின் வாயில் ரத்தத்துடன் இருந்ததையும், அருகில் பாம்பு இறந்து கிடப்பதையும், பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமையை தூக்கி சென்றனர். அங்கே அந்த சிறுமைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறுமியை கடித்த பாம்பு விஷமற்றது என்பதால் உயிருக்கு எந்த விதமான ஆபத்துமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்!

0

உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகிறது. அசுரன் என்ற ஹிட் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது திருச்சிற்றம்பலம்.

இந்த படத்தில் தனுஷ்  உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். அதையடுத்து தனுஷ் ரசிகர்கள் நெல்லை மாவட்டத்தில் இந்த பணிபுரியும் இளைஞர்கள் 50 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் மித்ரன் தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர்.

தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் லவ் & ஹேட் ரிலேஷன்ஷிப்பை சொல்லும் படமாக திருச்சிற்றம்பலம் உருவாகியுள்ளது. படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். தனுஷ் மற்றும் பாரதிராஜா காம்பினேஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய திட்டத்திற்கு ஊக்க தொகையை நிறுத்திய தமிழக அரசு!

0

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தன்னார்வலர்களுக்கு மே மாதம் முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் நோய் தொற்று பரவல் காரணமாக, 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் இணையதளத்தின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டனர்.

இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. அந்த குறைபாட்டை நீக்கும் வகையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இல்லம் தேடி கல்வியை திட்டத்தை அரசு அறிமுகம் செய்து வைத்தது.

இந்தத் திட்டத்தின் மூலமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் வீடு தேடிச் சென்று தன்னார்வலர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். இதற்காக மாநில அளவில் 11,000 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத்தொகை மே மாதத்திலிருந்து தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவில்லை. தன்னார்வலர்கள் இது தொடர்பாக தெரிவித்ததாவது, சேவை மனப்பான்மையில் தான் இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம்.

ஆனாலும் அரசு உறுதியளித்த ஊக்கத்தொகையை மே மாதத்திலிருந்து வழங்கவில்லை. அவற்றை சரியான சமயத்தில் வழங்காமல் தாமதம் செய்வது எந்த விதமான நியாயமும் அல்லாதது என்று தெரிவித்து வருகிறார்கள்.

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!  

மீண்டும் க்யூட் தேர்வுகள் ரத்து! புகார் அளித்த மாணவர்கள்!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக க்யூட் தேர்வு என்பது நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட க்யூட் தேர்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த க்யூட் தேர்வானது இந்தியாவில் 259 நகரம் மற்றும் வெளிநாடுகளில் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 480 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் ஒரு சில மையங்களில் கடந்த 4 ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இரண்டாம் கட்ட க்யூட் தேர்வு சில மையங்களில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மேலும் மழை மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளின் காரணமாக கேரளா இடறா நகர பகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து க்யூட் தேர்வை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் முடிக்க என் டி ஏ திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 30 வரை நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நான்காம் கட்ட க்யூட் தேர்வு நேற்று தொடங்கியது இந்த தேர்வில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் இந்த கட்டத்திலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாணவர் மத்தியில் புகார் எழுந்து வருகிறது.

இதனையடுத்து டெல்லி குழு ஹர் கோவிந்த் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி ஜஸ்ட் லோ பகுதியில் அமைந்துள்ள ஆசிய பசிபிக் நிறுவனம் ,டெல்லி ரங்கோலியில் உள்ள ஆகாஷ் சர்வதேச மேல்நிலைப்பள்ளி, பிதம்புறா விவேகானந்தா தொழில்படிப்புகள் நிறுவனம் ஆகிய தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் தேர்வு எழுதாமல் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில் தேர்வு இரண்டு மணி நேரம் தாமதமான நிலையில் தொடங்கப்பட்டதாக மாணவர்கள் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது. ஜெகதீஷ் குமார் சில மையங்களில் மட்டும் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத மறு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் தி டர்ட்டி பிக்சர் படத்தின் இரண்டாம் பாகம்… தயாரிப்பாளர் எடுத்த முடிவு

0

சில்க் ஸ்மிதாவின் தி டர்ட்டி பிக்சர் படத்தின் இரண்டாம் பாகம்… தயாரிப்பாளர் எடுத்த முடிவு

சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமான தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது.

மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான தி டர்ட்டி பிக்சரை மீண்டும் கொண்டுவர பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் திட்டமிட்டுள்ளார்.. துணிச்சலான கமர்ஷியல் பாலிவுட் படங்களில் ஒன்றாக கருதப்படும் தி டர்ட்டி பிக்சர் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இருப்பினும், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தி டர்ட்டி பிக்சர் 2 முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் மற்றும் மாறுபட்ட நடிகர்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் ஏக்தா கபூர் நீண்ட நாட்களாக தி டர்ட்டி பிக்சர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார். மன்மர்சியான், ஹசீன் தில்ரூபா, ஜட்ஜ்மெண்டல் ஹை கியா மற்றும் ராஷ்மி ராக்கெட் போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பெண் கதைகளை எழுதியதற்காக அறியப்பட்ட திரைக்கதை எழுத்தாளர் கனிகா தில்லான், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத உள்ளார். அவர் ஒரு மற்றொரு எழுத்தாளருடன் இணைந்து ஸ்கிரிப்டை எழுதுகிறார், மேலும் ஆண்டு இறுதிக்குள் அதை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய பாகத்தில் வித்யா பாலன் நடித்த நிலையில் இந்த பாகத்தில் கீர்த்தி சனோன் அல்லது டாப்ஸி நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.  தமிழிலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

0

விருமன் வெற்றி… சூர்யா & கார்த்திக்கு வைர பிரேஸ்லெட் பரிசளித்த விநியோகஸ்தர்!

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கி வருகிறது. முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் குறையவில்லை. இரண்டு நாட்களிலும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் வசூல் 30 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இது கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நேற்று சக்ஸஸ் பார்ட்டியில் விநியோகஸ்தர் சக்திவேல் படத்தின் கதாநாயகன் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா ஆகிய இருவருக்கும் வைர பிரேஸ்லெட் அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான படங்களில் விக்ரம் திரைப்படத்துக்குப் பிறகு நல்ல லாபம் பெற்ற படமாக விருமன் அமைந்துள்ளது.

இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் காலை சமயத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசானதும் முதல் மிதமான மழை வரையில் செய்வதற்கான வாய்ப்புள்ளது.

கோவை, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது மற்ற மாவட்டங்களில் நாளை முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரத்தினடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு மற்றும் கலசப்பாக்கத்தில் 4 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. செங்கம், அவலாஞ்சி, பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் வரையும், செம்பரம்பாக்கம், திருவண்ணாமலை, ஆத்தூர், சென்னை விமான நிலையம் மற்றும் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழையும், பதிவாகியுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதும் இந்தியா! வெற்றியுடன் துவங்குமா போட்டி?

0

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இன்று முதல் போட்டி நடைபெறவிருக்கிறது.

நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த லோகேஷ் ராகுல் மறுபடியும் 2 மாதங்களுக்கு பிறகு கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளார். இவர் தொடக்க வீரராக சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்.

சமீபத்தில் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஷிக்கர் தவான், சுப்மன், கில் ஜோடி நல்ல துவக்கத்தை கொடுத்தது. ஆனாலும் தற்போது லோகேஷ் ராகுல் வருகை தந்திருப்பதால் 3து இடத்தில் களமிறங்கவுள்ள சுப்மன்கில் இந்த ஆட்டத்திலும், ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட் கீப்பர் பேட்டிங் கான இடத்திற்கு இஷான் கிஷன், சஞ்சீவ் சாம்சங், உள்ளிட்டோரிடையே போட்டி நிலவுகிறது. பேட்டிங்கில் தீபக் ஹூடா, ருதுராஜ் கேய்வாட், ராகுல் திரிபாதி, போன்றோர் கை கொடுத்தால், நல்ல ரன் குவிப்பை சேர்க்கலாம்.

வேகப்பந்துவீச்சை பொறுத்த வரையில் ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹார்,உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சை பொறுத்த வரையில் குலதீப் யாதவ், அக்ஸர் பட்டேல் கூட்டணி விக்கெட்டை எளிதாக வீழ்த்தலாம்.

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் ஜிம்பாப்வே அணி இருக்கிறது. இதில் 2 போட்டிகளில் வங்கதேச ஆணி நிர்ணயித்த இமாலய இலக்கை சேஸ் செய்திருப்பது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலான விஷயம்தான்.

இந்த தொடரில் 2 சதம் உட்பட 252 ரன்கள் குவித்த சிக்கந்தர் ராஜா மறுபடியும் கை கொடுக்கலாம். பேட்டிங்கில் கேப்டன் ரெஜிஸ் சகாப்வா, இன்னொசண்ட் காயா உள்ளிட்டோர் கை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பன்னீர்செல்வத்துடன் சமாதானமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி விளக்கம்!

0

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ஜூன் மாதம் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்ட வேண்டும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருந்து வருவதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றை வழங்கினார்.

அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, கட்சியில் ஒருமித்த கருத்தினடிப்படையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதிமுகவின் சட்டவிதிகளின்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து வாதங்களை நீதிமன்றத்தில் சரியான முறையில் முன் வைத்திருக்கிறோம், பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதங்களை முன் வைத்தார்கள், தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது என்று அவர் கூறினார்.

அதோடு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்வது நன்றாக இருக்காது, தீர்ப்பின் நகல் வந்த பிறகு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாங்கள் முடிவெடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கட்சியில் பன்னீர்செல்வத்திற்கு எந்த விதமான ஆதரவு நிலைப்பாடுமில்லை 95% பேர் ஒருமித்த கருத்துடன் ஒற்றை தலைமையை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அவ்வாறிருக்க சமரசம் ஏற்படுவதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தற்போது எதுவும் சொல்ல முடியாது, சட்ட நடவடிக்கையா அல்லது வேறு விதமான நடவடிக்கையா என்பதை கட்சி முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.