Wednesday, July 16, 2025
Home Blog Page 4570

இணையத்தில் வெளியாக தயாராகும் திரைப்படங்கள்!

0

நோய் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பல புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.சென்ற வருடம் சூரரை போற்று, பென்குயின்,பொன்மகள் வந்தாள், போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து பலத்திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கியது. அதன்படி வரும் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கின்ற ஜகமே தந்திரம் திரைப்படம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. அதோடு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் மூன்று புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அந்த தகவலின் படி நெற்றிக்கண், ராக்கி, கூலாங்கல் போன்ற திரைப்படங்கள் இணையதள வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா சோலோ கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கூழாங்கல் திரைப்படத்தை தயார் செய்திருக்கிறது. அதேபோல ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது. விரைவில் இந்த திரைப்படங்களின் இணையதள வெளியீடு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்! கட்டம் கட்டும் காவல்துறை!

0

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த தமிழ் நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து அதன் பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஆனாலும் அவர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் திடீரென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்து புகாரின்படி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சரான மணிகண்டன் ஐந்து வருடங்களாக திருமணம் செய்யாமல் தங்களுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் திருமணம் தொடர்பாக பேச்சை எடுத்தால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் தன்னுடைய ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது கொடுத்த புகாரின் பேரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நடிகை சாந்தினி கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை ஒன்றுதிரட்ட தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் விரைந்திருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாந்தினி கருக்கலைப்பு செய்த மருத்துவமனை விசாரணை வளையத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு மணிகண்டனின் கார் ஓட்டுநர் அவர் அமைச்சராக இருந்த சமயத்தில் அவருடன் பணிபுரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு காவல்துறை தரப்பு தயாராகி வருவதாக சொல்கிறார்கள். அதோடு மணிகண்டனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உதவியால் அவர்களிடமும் விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்த தமிழக அரசு!

0

தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் அதிக அளவில் ஏற்படும் நோய்த் தொற்றானது தற்சமயம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் நோய்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, அங்கு தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி நோய் தடுப்பு பணியில் ஈடுபட தற்காலிக செவிலியர்கள் மூன்று மாதத்திற்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் அதற்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கு 100 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாத சம்பளத்தில் 12 ஆயிரம் கல்வித்தகுதி பிஎஸ்இ நர்சிங் டிப்ளமோ நர்சிங் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விருப்பமிருப்பவர்கள் நாளை காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளுடன் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

0

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

கடந்த ஒரு வருடமாகவே பொது மக்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம், என்பது போல்தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.ஆனால் நாம் தான் நம்மை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றி கொள்ள வேண்டும்.கஷ்டங்களே நமது அனுபவங்கள் என கடந்து போக வேண்டும்.

பெங்களூரூ நகரில் வசித்து வருபவர் விவேக் மதுசூதனன், இவருக்கு திருமணமான நிலையில் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.

மன வேறுபாடு காரணமாக மண வாழ்கையில் மனைவியை பிரிந்துவிட்டார்.மேலும் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த நிலையில் கோர்ட் மூலம் விவாகரத்தும் பெற்று விட்டார்.

இந்நிலையில், விவேக் புதிதாக வீடு வாங்க முடிவு செய்து இருந்தார்.அதன்படி விவேக்நகர், போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கட்டி வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கலாம் என தீர்மானித்தார்.

அதனை தொடர்ந்து விவேக் அந்த அடுக்குமாடி குடியிருப்பில்15 வது மாடியில் வீட்டை பார்க்க சென்று இருந்தார்.அங்கு சென்று நின்று கொண்டு இருந்தவர் திடீரென்று கீழே குதித்தார்.

விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிர் இழந்தார்.தகவலறிந்து அங்கு வந்த விவேக்நகர் போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பற்றியும், எதற்காக தற்கொலை செய்தார் எனவும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

தடுப்பூசி போடுங்க தங்க நாணயம் வாங்குங்க! அதிகரிக்கும் மக்கள் கூட்டம்!

கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலை பாதிப்பிற்கு லட்ச கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.பல ஆயிரம் கணக்கான உயிர்களையும் நாம் இழந்து வருகிறோம்.இந்த 2-ம் அலையிலிருந்து மீண்டு வருவதற்கு மக்கள் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர்.தடுப்பூசி தான் நம் அனைவரின் பாதுகாப்பு கவசம்.அதை அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சில பகுதி மக்கள் விழிப்புணர்வின்றி தடுப்பூசி போட இன்றும் முன் வர வில்லை.அவர்களுக்கு தன்னாரவளர்கள் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழி செய்து வருகின்றனர்.அவ்வாறு ஏற்படுத்தியதில் மக்கள் பலர் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.அந்தவகையில் கோவளம் என்ற கிராம பகுதி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பின்விளைவுகள் ஏற்படும் என்று எண்ணி தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அப்பகுதி இளைஞர்கள் அதை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிரியாணி தரப்படும் எனக் கூறினர்.அத்தோடு குழுக்கள் முறையில் தங்க நாணயம்,மோட்டார் பைக்,வாஷிங் மெஷின் போன்றவை தரப்படும் எனவும் கூறினர்,அதைக்கேட்ட மக்கள் ஆவலுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய அப்பகுதி இளையர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்!

0

பொதுத்தேர்வு ரத்தா? +2 மாணவர்களுக்கு தமிழக அரசு தரப்போகும் குட் நியூஸ்!

கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவில்லாமல் தொடர்கிறது.மக்கள் அனைவரும் இத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.இத்தொற்றிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து நோய்கள் உருமாறி பரவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.

அந்தவகையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்தே எந்த வித பொது தேர்வும் நடத்தவில்லை.கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களை ஒன்று திரட்டி தேர்வு நடத்தினால் அதிகளவு பரவ ஆரம்பித்துவிடும் என்பதால் 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.

தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் பல ஆலோசனைகள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் நேற்று முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.அந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பொறுத்தே தமிழ்நாட்டில் +2 தேர்வு நடத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.அதேபோல நேற்று மதியம் பிரதமர் நரேந்திரமோடி,மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அதில் தொற்று பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் சிபிஎஸ்இ +2 பொது தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பை வெளியிட்டார்.அதனைத்தொடர்ந்து  இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,செயலாளர் காகர்லா உஷா,ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனை நடத்த உள்ளனர்.தற்போது சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் எனக் கூறுகின்றனர்.

அனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்!

0

இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஆனால் இந்த நோய் தொற்றின் முதல் அலையின்போது இதன் இரண்டாவது அலை இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றையும் மூன்றாவது அறை தொடர்பாக அறிவுறுத்தல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த விதத்தில் மூன்றாவது அலைக்கு நாம் அனேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சஞ்சீவ் பஜாஜ் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை மாதத்திற்குள் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது நடைபெறும் என்று நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.அதோடு இந்த வருட இறுதிக்குள் வயது வந்தவருக்கு தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் அரசின் திட்டமானது பட்ஜெட்டில் தொடரவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த மத்திய அரசு!

0

சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்து நாட்டில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது நிர்ணயிக்கப்படும் இந்த எரிவாயு விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தற்சமயம் இந்த விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை வர்த்தக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 122 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சிலிண்டர் ஒன்றின் விலை 1473 ரூபாய் 50 காசு ஆக இருக்கிறது. இதற்கு முன்னர் சிலிண்டர் விலை ஆயிரத்து 595 ரூபாய் 50 பைசா ஆக இருந்தது. மே மாதத்தில் சிலிண்டர் விலை 45 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது..

சிலிண்டர் விலை தலைநகர் டில்லியில் 1473 ரூபாய் 50 காசு ஆக மும்பையில் 1422 ரூபாய் 50 காசு கல்கத்தாவில் 1544 ரூபாய் 50 காசு சென்னையில் 1603 ரூபாயாகவும் இருக்கிறது.

ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலை எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

நிச்சயம் வருவேன் சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

0

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்த சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் தீவிரமான அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், அவருடைய அரசியல் பிரவேசம் என்பது மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

ஆனாலும் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்த சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக நினைத்தது நடக்கவில்லை..ஆனாலும் எதிர்க்கட்சியாக வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சசிகலா உரையாற்றிய ஒரு ஆடியோ வெளியானது. அதில் தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள் நான் வந்து விடுவேன் அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல நேற்று முன்தினம் வெளியான ஒரு ஆடியோ விற்பனை செய்த தவறுதான் என்ன செய்ய இயலும் என ஒரு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டரிடம் உரையாற்றியிருந்தார்.சசிகலா அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் உரையாடிய ஆதாரங்கள் எதுவும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சசிகலா பேசிய நான்காவது ஆடியோ தற்சமயம் வெளியாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றொருவருடன் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அவருடன் சசிகலா கவலைப்படாதே நான் நிச்சயம் வருவேன் அனைத்தையும் சரி செய்து விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்..

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 12 அதிகாரிகள் மாற்றம்!

0

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதன் பின்னர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசியலில் அதன் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்து வருகிறது. தற்சமயம் நாற்பதிற்கும் அதிகமான ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் புதிதாக 12 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய தமிழக அரசு சார்பாக உத்தரவு தரப்பட்டிருக்கிறது. அதாவது தர்மபுரி, சேலம், போன்ற மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளராக சந்திரசேகர் சகாயம் நியமனம் செய்யப்படுகிறார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலாளராக அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். டாக்டர் ஜக்மோகன் சிங் டெல்லியில் இருக்கின்ற தமிழகத்திற்கு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளராக இருந்த மதுமதி ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சஜன் சிங் ஆர் சவான் நியாய விலை கடை பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் தற்சமயம் மீன்வளத் துறையின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சேலம் மாவட்ட ஆட்சியர் தோட்டக்கலைத்துறை மற்றும் பயிர் வளர்ச்சி துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் கார்த்திகா உயர்கல்வித் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார். பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பிகாம் தாலி தற்சமயம் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழக சிவில் சப்ளை துறை ஆணையராக இருந்த சுதாதேவி தமிழ்நாடு நீர்நிலை துறை வளர்ச்சி இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.