Saturday, July 26, 2025
Home Blog Page 4595

மத்திய அரசு வைத்த ஆப்பு! ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு தடையா?

0

இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவை முக்கிய சமூக வலைதளங்கள் ஆக விளங்குகிறது. இந்த சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் போலியான தகவல்களை பரப்புவது வேலையாகிவிட்டது. சில சமயங்களில் ஆபத்தாக முடிந்து விடுகிறது. ஆனாலும் இதில் பல நன்மையான அம்சங்கள் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை உண்டாக்கி இந்த விதிமுறைகள் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு பதில் தெரிவிக்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு செவிசாய்ப்பது தொடர்பாக இந்த சமூக ஊடகங்கள் இன்னும் எந்த விதமான பதிலும் தெரிவிக்காத சூழலில், இதுபோன்ற சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கவும், வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது மாபெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைய விட இதன் காரணமாக,இன்று பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் பதில் தெரிவிக்குமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அலார்ட்! பேய் மழையை சந்திக்கப்போகும் தமிழகம்!

0

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய இருக்கின்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மற்ற மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வரண்ட வானிலைதான் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலை தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடதமிழ்நாட்டில் தரைக் காற்று பலமாக வீசும் இடையிடையே சூரை காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கிற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0

தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நொத்தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது.அதற்க்கு காரணமாக அறிவிக்கப்படுவது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும்,இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதாலும் தான் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் 23ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் , இப்போது 31ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த முழு ஊரடங்கில் மிகப்பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. எந்தவிதமான தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் உறுப்பு காரணங்களுக்காக, மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் நியாயவிலைக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நியாயவிலைக் கடைகள் இன்று முதல் 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை போலவே வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

0

கொரோனா மனதளவில் மக்களை அதிகமாக பாதிக்கின்றது.மேலும் தன்னைப் பற்றியும் தனது அன்புக்குரியவர்களைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.

 

கொரோனா பாதிக்கப்பட்ட பின்னர் மனதளவில் மனச்சோர்வு மனப்பதற்றம் என பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து எப்படி வரலாம் என்பது பற்றி பாருங்கள்.

 

1. எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு இன்சோம்னியா என்ற தூக்கமின்மை பிரச்சனைகள் வந்துள்ளது என்று அர்த்தம்.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்டிப்பாக தூக்கம் வராது. அப்படியே தூக்கம் வந்தாலும் அடுத்த நாள் உங்களுக்கு எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க மாட்டீர்கள். உடல் சோர்வு, மனப் பதற்றம், குழப்பம் போன்ற மன நிலைகள் அதிகரிக்கும்.

2. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஏன் தூக்கமின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. கொரோனா வரும்பொழுது ஒரு கவலை, மனப்பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தனிமையில் இருக்கும்பொழுது தனிமையை உணரும் பொழுது இங்த மாதிரியான பிரச்சினைகள் வரலாம். மிகவும் தீவிரமான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் பொழுது அந்த பயம் தூக்கமின்மைக்கு வழி வகுக்கலாம்.

3. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குஅதன் பக்க விளைவுகளிலிருந்து மீள நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும் மற்றும் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிகள்:

 

1. தனிமையில் இருக்கும்பொழுது தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களை பார்ப்பதை தவிர்க்கவும். செய்திகளை பார்ப்பதையும் தவிர்க்கவும்.

2. தூங்குவதற்கு முன் ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் தினமும் தூங்குவதால் பயிர்ச்சி ஆகி அந்த நேரத்தில் தூக்கம் வந்துவிடும்.

3. காபி மற்றும் டீ அதிகமாக குடிப்பதால் தூக்கம் வராமல் இருக்க வழிவகுக்கும்.

4. கொரோனா இருந்தாலும் உடற்பயிற்சி போன்ற செயல் உடலுக்கு பலத்தை தரும்.

5. தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்யவும். 15 நிமிடம் தியானம் செய்யுங்கள்.

டேய்!! என்னடா சொல்றிங்க!! கொரோனாவுக்கு “கழுதை பால்”.!!

0

தர்மபுரியை அடுத்த காரியமங்கலம் என்ற பகுதியில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லி கழுதை பால் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

கொரோனோ உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்களுக்கு உடனடியாக தாக்கி விடுகிறது. அதனால் தினமும் சத்துள்ள உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், சிறு தானியங்கள், முட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

 

 

இந்த கால நிலை மாற்றத்தால் சளி இருமல் காய்ச்சல் என அனைவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. கொரோனாவில் இருந்து இது சற்று வேறுபடும். இதைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கழுதை பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், என்று தர்மபுரி மற்றும் அதனை உள்ளிட்ட பகுதிகளில் கழுதை பால் விற்பனை சூடுபிடித்து வருகிறது.

 

அதுவும் தர்மபுரி, பாலக்கோடு காரியமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கழுதை பால் விற்பனை செம தூளாக உள்ளதாம். வீடு வீடாக சென்று அது கழுதைகள் உடனே ஓடிச்சென்று சளி, இருமல், காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே காரணம். அதனால் கழுதை பாலை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறி அங்கேயே கறந்து ஒரு டம்ளர் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனராம்.

அதுமட்டுமில்லாமல் கழுதைப் பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். கொரோனா வராது என்றெல்லாம் நம்பி மக்கள் ஏமாந்து கழுதை பாலை வாங்கி குடித்து வருகின்றனர்.

அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை! கவலையில் வாகன ஓட்டிகள்!

0

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. சில தினங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் கூட பல நாட்களில் இந்த விலை உயர்வு உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. ஆகவே பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய தினத்தில் இருந்து சற்றே உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் ஆறு காசுக்கும், டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 11 காசுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் விலை இன்று 95 ரூபாய் கடந்திருக்கிறது .

திமுகவில் இணைகிறாரா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரபரப்பு ஆலோசனையில் அதிமுக தலைமை!

0

அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் இவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, இருந்தாலும் என்னை மட்டும் கட்சியை விட்டு நீக்கியது எதற்காக என்று முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கேள்வி எழுப்பியிருக்கிறார். கட்சியை விட்டு நீக்கியதற்கு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றும் முக்கிய காரணம் கிடையாது. அவர் திமுக பக்கம் சாய்வதை தெரிந்துகொண்டுதான் அதிமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்ததாவது, என்னுடைய தாயும், சகோதரர்களும் சென்னையில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள் 15 தினங்களுக்கு முன்னர் என்னுடைய தாய் உயிரிழந்துவிட்டார். சகோதரிக்கு வென்டிலேட்டர் தேவைபட்டது அதன் காரணமாக, வாணியம்பாடியில் என்னுடைய மகன் நடத்தி வரும் மருத்துவமனையிலிருந்து வெண்டிலேட்டர் எடுத்து செல்வதற்காக வாணியம்பாடி சென்றேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் அந்த சமயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேவராஜ் என்னை தொடர்புகொண்டு என்னுடைய தாய் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தார். இதன் காரணமாக, அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துச் சொல்ல நினைத்தேன். பயணியர் விடுதியில் அவர் தங்கி இருப்பதாக தெரிவித்தார்கள், சென்னை செல்லும் வழியில் தான் பயணியர் மாளிகை இருக்கிறது. அதன் காரணமாக, வழியில் காரை நிறுத்தி தேவராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்று தெரிவித்த அவர் இதன் காரணமாக தான் என்னை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னுடைய தாயின் இறப்பு தொடர்பாக திமுகவின் மாவட்டச் செயலாளர் தூக்கம் விசாரித்ததை தவிர மற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் இது தொடர்பாக என்னிடம் எதையும் விசாரிக்கவில்லை. அமைச்சராக இருந்த போதிலும் இதுவரையில் என்னை கட்சியில் மதிப்பதே கிடையாது. நான் திமுகவில் இணைகிறேன் என்பதை விரைவில் தெரியவரும் என்று தெரிவித்திருக்கிறார் நிலோபர் கபில்.

நற்செய்தி! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் போட்ட புது உத்தரவு!

0

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடக்கத் தொடங்கியது ஆகவே கோவின் செயயலியில் பதிவு செய்தால் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள இயலும் என்ற நடைமுறை இதுவரையில் அமலில் இருந்து வந்தது. இந்த சூழலில் அந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது 18 முதல் 44 வயது மழை இருப்பவர்கள் நேரடியாக பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அதோடு இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களை கருத்தில் வைத்து இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதேசமயத்தில் இந்த முடிவை மாநில அரசுகள் தான் இறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த நடவடிக்கையானது தடுப்பூசி வீணாவதை குறைப்பதற்கு உதவி புரியும் எனவும், தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பது தொடர்பாக தெளிவான தகவல் அனைத்து மாவட்ட நோய்தடுப்பு அதிகாரிகளுக்கும் அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு காரணங்களுக்காக நேரடிப் பதிவு கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பலரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லாத காரணத்தாலும் பதிவு செய்யாதவர்கள் நேரில் வராமல் போனதன் காரணமாகவும் , இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதி அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும் தனியார் தடுப்பூசி மையங்களுக்கு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

சென்னை அரும்பாக்கத்தில் வசிப்பவர் அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் நோய்த்தொற்று நிவாரணம் வழங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் சுவரொட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே ரேஷன் கடைகளுக்கு அருகில் ஆளுங்கட்சியினர் விளம்பர பலகை வைப்பதற்கு தடை விதித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இதன்மூலம் கோரிக்கையை வைத்திருந்தார் தேவராஜ்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி உள்ளிட்டோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நிவாரண உதவி கொடுக்கும்போது அரசை மட்டுமே முன்னிலைப் படுத்த வேண்டுமே ஒழிய ஆளுங்கட்சியை முன்னிலைப் படுத்த கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் புகைப்படம் நியாயவிலைக் கடைகளில் இடம் பெறுவது தவறு கிடையாது எனவும், ஆனால் ஆளும் கட்சியின் சின்னத்தை தான் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் நிவாரணம் கொடுக்கும் நிகழ்வை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக் கூடாது எனவும், தெரிவித்த நீதிபதிகள், நிவாரண உதவிகள் கொடுக்கும் போது நோய்த்தடுப்பு விதிகளை கண்டிப்பாக எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

கோவையில் அதிகமாகும் நோய்த்தொற்று விழிப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தல்!

0

தமிழ்நாடு முழுவதும் ஒரே தினத்தில் 34 ஆயிரத்து 567 பேர் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்றின் மொத்த பாதிப்பு 18 லட்சத்து 77 ஆயிரத்து 711 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்றுக்கு ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தற்சமயம் நோய் தொற்றுக்கு 3 லட்சத்து 1580 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே தினத்தில் 27 ஆயிரத்து 26 பேர் இந்த நோய்களில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இதன்மூலமாக மொத்தமாக ஒரு கோடியே பதினைந்து லட்சத்து 54 ஆயிரத்து 259 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல மாவட்ட அளவில் பார்த்தோமானால் சென்னையை தவிர்த்து விட்டு மற்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து 9 மாவட்டங்களில் ஒரு நாளைய பாதிப்பானது ஆயிரத்தை கடந்து பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் வெகு நாட்களுக்குப் பின்னர் நோய் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழே போயிருக்கிறது. அதே வேளையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. மே மாதம் 10 ஆம் தேதி முதல் கோயம்புத்தூரில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோயம்புத்தூரில் 33 ஆயிரத்து 325 பேர் நோய் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள், 1048 பேர் பலியாகி இருக்கிறார்கள், ஆகவே பாதிப்பு நாள்தோறும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்திருக்கிறது.