Sunday, July 27, 2025
Home Blog Page 50

இந்தியா பாகிஸ்தான் போர்: போர் குறித்து முழு விவரம் குறித்த தகவல்!!

இண்டர்-சர்வீஸஸ் அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு) சட்டம், 2023 யின் உருவாக்கப்பட்ட விதிகள் மே 27 முதல் அமலுக்கு வந்துள்ளன, இது இந்திய ஆயுதப்படைகளுக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாடு வழங்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரிக்கின்ற சூழலில், “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சட்ட விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது:

இந்த முக்கியமான நடவடிக்கை, மூன்று துறைப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, Inter-Services Organisations (ISOs) அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.”

இந்த சட்டம் 2023 ஆம் ஆண்டின் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு, அகஸ்ட் 15, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது. இது மே 10, 2024 முதல் நடைமுறையில் வந்தது.

ஆபரேஷன் சிந்தூர் பின்புலத்தில் தளபதி மதிப்பீடு:

பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் இந்திய இராணுவத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியான பாதுகாப்புத் தளங்களில் போர் தயார்நிலையை மதிப்பீடு செய்தார்.

பெரும் பங்கு வகித்த இந்த இரு கட்டளை தளங்களுக்கும் தனித்தனியாகச் சென்ற அவர், கடுமையான சூழ்நிலைகளிலும் அழுத்தமான ஒத்துழைப்பு மற்றும் பணிகளை நேரத்தில் நிறைவேற்றியதற்காக வீரர்களைப் பாராட்டினார்.

அவர் கூறியது:

ஆபரேஷன் சிந்தூரின் போது உயிரைத் தியாகம் செய்த வீரர்களை அவர் நினைவுகூர்ந்தார்; அனைத்து ரேங்குகளினரின் வீரத்தையும், உறுதியையும், துல்லியத்தையும், ஒழுங்கையும் பாராட்டினார்.”

ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் உள்ள வடக்கு மற்றும் மேற்குப் பகுதி சேனைகளின் சிறப்பான செயல்திறன் குறித்து அவர் பாராட்டினார். மேற்கொண்டு மே 7ம் தேதி காலை, பஹல்கம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து 9 பயங்கரவாத கூடங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் பதிலடி முயற்சிகள் உறுதியுடன் தடுக்கப்பட்டன. மே 10ம் தேதி, இருதரப்பு இராணுவ நடவடிக்கைகள் நிறைவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

உதம்பூரில், வடக்கு இராணுவம் மேற்கொண்ட பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்த நடவடிக்கைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தளபதிக்கு விளக்கம் வழங்கப்பட்டது. இந்த செயல் முறைகள், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதங்களுக்கு எதிரான இந்தியாவின் கடும் உள்நோக்கத்தை மற்றும் மூன்று படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் தேவையை வெளிப்படுத்துகின்றன. இந்தச் சட்ட விதிகள், இந்திய இராணுவத் துறையின் எதிர்காலம் இன்னும் வலுவாக உருவாகும் திசையில் முக்கியமான படியாகக் கருதப்படுகின்றன.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அசத்தல் அப்டேட்.. மாதந்தோறும் ரூ 1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழகத்தின் ரேஷன் கடையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் ரேஷன் அட்டைதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும், வீட்டு வருமானம் குறிப்பிட்ட வரம்புக்கு கீழ் கொண்டிருக்க வேண்டும். பிற அரசு திட்டங்களின் பயனாளியாக இருக்கக் கூடாது. மேலும் திட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. 

மேலும் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். இந்த திட்டத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் ரேஷன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்டலில் முதலில் பார்வையிட வேண்டும். கேட்கப்படும் விவரங்களையும் விண்ணப்ப படிவத்தில் நிரப்புவது அவசியம் ,வருமானம் மற்றும் வசிப்பிடச் சான்று உட்பட தேவையான ஆவணங்கள் கேட்கப்படும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அதன் பிறகு ஆவணங்களை சரிபார்த்து உறுதிப்படுத்துதல் மற்றும் சலுகைகளை பெறுவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு சில தகுதிகள் கொண்டிருப்பது அவசியம் விண்ணப்பதாரர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அனைத்து ஆவணங்களும் சரியாகவும் அப்டேட்டாகவும் இருப்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ரேஷன் கார்டு நகல், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் கார்டு, அடையாளச் சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை தேவைப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றது. நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கிடைக்கும். 

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க இருக்கின்றது. முன்கூட்டியே இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இத்திட்டம் தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அதனால் ஜூன் மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் தேதி குறித்து தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

யாரெல்லாம் இந்த திட்டத்தை பெற முடியும்

கேஒய்சி சரி பார்ப்பை முடித்தால் மட்டுமே இந்த உதவியை பெற வாய்ப்புள்ளது. கேஒய்சி சரிபார்ப்பு என்பது ரேஷன் கார்டில் ஆதார் இணைப்பு, மொபைல் நம்பர் அப்டேட் மற்றும் கைரேகை சரிபார்ப்பு போன்றவை அடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பண உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு விதிமுறையாக இது பார்க்கப்படுகின்றது.

2026 – சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகும் பாமக…. தனித்துப் போட்டியிட மாஸ்டர் பிளான் போடும் ராமதாஸ்!!

திண்டிவனம் கே ஆர் எஸ் அம்மா திருமண மண்டபத்தில் பாமக தொழிற்சங்கம் பேரவை சார்பாக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் ராம முத்துக்குமார் என்னுடன் 45 ஆண்டுகள் பணியாற்றி வருகின்றார். ஆனால் அவரால் சட்டமன்றத்திற்கு தற்போது வரை செல்ல முடியவில்லை. அடுத்த முறையாவது ஜிகே மணி உடன் அவரும் சட்டமன்றத்திற்கு செல்ல நாம் உழைக்க வேண்டும் என்பது அவசியம். 

மாமல்லபுரம் மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில் தனித்துப் போட்டியிட்ட நான்கு இடங்களில் வெற்றி பெற்றவர்கள் நாம் கூட்டணி அமைத்து ஐந்து இடங்களில் தான் ஜெயித்திருக்கிறோம். இது வெட்கமா இல்லையா என பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்து பேசி இருந்தார். இந்நிலையில் மாமல்லபுரம் மாநாட்டுக்கு பிறகு ராமதாஸ் தொடர்ச்சியாக பாமக மகளிர் அணி, பாமக மாநில நிர்வாகிகள், பாமக இளைஞர் அணி, பாமக மாணவரணி, வன்னியர் சங்கம், பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான சமூக நீதிப் பேரவை மற்றும் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை, பாமகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனியாக நின்றாலே 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும். அதற்கான ட்ரிக் என்னிடம் உள்ளது எனவும் தொடர்ந்து பேசி வருவதாக தெரிகின்றது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பேன் அப்போது பேசுகிறேன் என்று மட்டும் சொல்லிச் சென்றார். 

இது குறித்து பாமக வட்டாரங்களில் விசாரிக்கும் பொழுது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனை தீர்த்து வைக்க ராமதாஸின் மகள் கவிதா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். மேலும் வன்னியர் சங்கத்தின் தலைவராக முகுந்த நியமிக்கப்படுவார். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என்ற முடிவுக்கு இருதரப்பிலிருந்தும் தற்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ராமதாஸ் கவனம் செலுத்தி வருகின்றார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாமகவின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் ராமதாஸ் களமிறங்கும் திட்டம் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டமாம். கடந்த 1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாட்டையே ஒரு வார காலம் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் 21 உயிர் பலிகளை கொடுத்த போராட்டத்தை விட தீவிரமான ஒரு போராட்டத்தை தற்போது 10.5% இட ஒதுக்கீட்டுக்காக நடத்த வேண்டும் என அவர் உறுதியாக இருக்கின்றார் எனவும் பாமக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. 

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு போராட்டத்தை எப்படி நடத்துவது, சிறைக்கு சென்றால் ஜாமீனில் வெளியே கொண்டு வர வேண்டும், வேறு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றார். 

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்காக ராமதாஸ் கொண்டுள்ளார். தன்னுடைய அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காது என கணித்து கூறி இருக்கின்றார். 

அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணி என்பதை விரும்புகின்றார். எம்பி பதவி காலம் முடிவடையும் நிலையில் அதிமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என கூறப்படுகின்றது. அதிமுக தரப்பிலிருந்து இரண்டு எம் பி சீட்டுகளை ஜிகே வாசனுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் இருவருமே மக்களவைத் தேர்தலின் பொழுது எதிராக மாறியுள்ளனர் அதனால் இந்த முறை வாய்ப்பில்லை என்று கூறியதாக கூறப்படுகின்றது. அதனால் இந்த முறை அன்புமணி ராமதாஸுக்கு எம் பி சி டே கிடைக்க வாய்ப்பில்லை.

மது விடுதிக்கு ஓனரான இயக்குனர் வெங்கட் பிரபு.. விரைவில் திறப்பு விழா!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் விஜய் நடித்த கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. மேலும் அந்தத் திரைப்படம் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

அந்த திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்னதாகவே மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவதினால் இவருக்கு கால் சீட் கிடைப்பதில் சற்று தாமதமானது.

இந்நிலையில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில் அது தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் சிக்கலில் சிக்கி உள்ளது. அதனால் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை அழைத்து முழு திரைக்கதையையும் தயார் செய்யுங்கள் விரைவில் படப்பிடிப்பை தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் ஒரு பழைய ரெஸ்ட்டோபார் விலைக்கு வந்த நிலையில் அதனை வெங்கட் பிரபு வாங்கியுள்ளார். அந்த மது கடையை புதுப்பிக்கும் பொறுப்பை கலை இயக்குனர் ராஜீவனிடம் கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு விரைவில் அந்த ரெஸ்ட்டோபருக்கு திறப்பு விழா நடத்த இருக்கின்றார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இலையில் லட்டு செய்து சாப்பிட்டால்.. முடி உதிர்தல் முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கிடைக்கும்!!

0

நம் அன்றாட சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை வைட்டமின்கள்,இரும்பு,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கறிவேப்பிலையை கொண்டு லட்டு செய்தால் குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கப்
2)தேங்காய் – ஒரு மூடி
3)ஏலக்காய் – நான்கு
4)பேரிச்சை – 10
5)நெய் – ஒரு தேக்கரண்டி
6)முந்திரி பருப்பு – 10
7)பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லம் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கப் கறிவேப்பிலையை பாத்திரம் ஒன்றில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி எடுக்க வேண்டும்.பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி பரப்பி உலர்த்த வேண்டும்.

2.பிறகு அடுப்பில் வாணலி வைத்து உலர்ந்த கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் மொரு மொரு பதம் வரும் வரை வறுக்க வேண்டும்.இதனை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

3.பின்னர் ஒரு மூடி தேங்காயை துருவி வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.இதனை தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து அதே வாணலியில் நாட்டு வெல்லம் மற்றும் விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பாலத்தை போட்டு நன்கு உருகும் வரை கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

5.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவலை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இதனை நாட்டு வெல்ல பாகில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.

6.அதன் பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு
முந்திரி பருப்பை அதில் போட்டு வறுக்க வேண்டும்.இதனை கறிவேப்பிலை கலவையை கொட்ட வேண்டும்.

7.இதற்கு அடுத்து கால் தேக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை லட்டு பயன்கள்:-

**தினமும் ஒரு கறிவேப்பிலை லட்டு சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

**கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கறிவேப்பிலை லட்டு சாப்பிடலாம்.

**சருமம் சார்ந்த பாதிப்புகளுக்கு கறிவேப்பிலை லட்டு தீர்வாக இருக்கின்றது.

**எலும்பு பலம் அதிகரிக்க கறிவேப்பிலை லட்டு செய்து சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை லட்டு செய்து உட்கொள்ளலாம்.

**கருவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

நாள்தோறும் 5 உலர் திராட்சை ஊறவைத்து சாப்பிடுவதால்.. உடலுக்கு 06 நன்மைகள் கிடைக்கும்!!

0

உலர் பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது.இதில் கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கருப்பு உலர் திராட்சை – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒண்றில் கருப்பு உலர் திராட்சை ஐந்து போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி எடுக்க வேண்டும்.இப்படி செய்தால் உலர் திராட்சையில் ஒட்டியிருந்த அழுக்குகள் அனைத்தும் நீங்கும்.

பிறகு கிண்ணத்தில் உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.மறுநாள் திராட்சை ஊறவைத்த நீரை பருகிவிட்டு திராட்சையை சாப்பிடலாம்.

இப்படி தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு பலவித ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகள் தவிர மற்றவர்கள் தினமும் இருப்பது ஐந்து உலர் திராட்சை சாப்பிடலாம்.

இந்த கருப்பு உலர் திராட்சையை பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.அதேபோல் அரைத்து தேன் கலந்தும் சாப்பிட்டு வரலாம்.

காலை நேரத்தில் டீ,காபிக்கு பதில் உலர் திராட்சை பானம் பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உலர் திராட்சை பயன்கள்:-

1)இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உலர் திராட்சையில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

2)உலர் திராட்சை சாப்பிடுவபவர்களுக்கு இரத்த சோகை பாதிப்பு வராமல் இருக்கும்.உலர் திராட்சையில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.

3)கண் பார்வை திறனை மேம்படுத்த,கண் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.

4)பொட்டாசியம் சத்து நிறைந்த உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இதய தசைகள் வலிமை அடைய உலர் திராட்சை பானத்தை பருகலாம்.

5)உடலுக்கு புத்துணர்வு கிடைக்க உலர் திராட்சை பானத்தை பருகலாம்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.

6)குடல் கழிவுகள் வெளியேற உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த அரிசியில் கஞ்சி செய்து குடிங்க!!

0

உடலில் படியும் அதிகப்படியான கெட்ட கொழுப்பால் எடை அதிகரிக்கிறது.உடல் எடை அதிகமாக இருந்தால் சர்க்கரை,மாரடைப்பு,பக்கவாதம்,மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி – 100 கிராம் கிராம்
2)கரு மிளகு – ஐந்து
3)பூண்டு – 5-7 பற்கள்
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)கேரட் – ஒன்று
6)பீன்ஸ் – நான்கு
7)பெரிய வெங்காயம் – ஒன்று
8)இஞ்சி – ஒரு துண்டு
9)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
10)உப்பு – தேவையான அளவு
11)தண்ணீர் – ஒரு கப்
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் 100 கிராம் பார்லி அரிசியை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அறையுங்கள்.

பிறகு கேரட்,பீன்ஸ்,பெரிய வெங்காயம்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் குக்கர் வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு மிளகு,சீரகம் போட்டு பொரியவிடுங்கள்.அதன் பிறகு நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி எடுக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்க வேண்டும்.அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.காய்கறி நன்றாக வதங்கி வந்த பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு அரைத்த பார்லி அரிசியை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு ஒரு விசில் விட்டு இறக்கி கொள்ளுங்கள்.

பின்னர் வாசனைக்காக கொத்தமல்லி தழை தூவி சாப்பிடலாம்.இந்த பார்லி கஞ்சியை தினமும் பருகி வந்தால் உங்கள் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

உங்கள் வீட்டு பிரிட்ஜில் வெட்டிய பழங்கள் வச்சிருக்கீங்களா? இந்த ஆபத்தான தகவல் உங்களுக்குதான்!!

0

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.காய்கறி,பழங்கள்,மாவு,மீந்து போன சாதத்தை பிரஸாக வைக்க பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் சேமித்து வைத்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகத்தை விளைவிக்கும்.

இந்த காலத்தில் பிரிட்ஜ் முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு சாதனமாக பார்க்கப்படுகிறது.ஒருமுறை சமைத்த உணவை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர்.பிரிட்ஜ் தங்கள் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதால் இல்லத்தரசிகளின் விருப்ப பொருளாக இது திகழ்கிறது.

பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்கள் பிரஸாக இருக்கும் என்றாலும் அதை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.சிலப் பொருட்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் ஆரோக்கிய தன்மை குறைந்துவிடும்.

குறிப்பாக பழங்களை வெட்டிய நிலையில் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் நமக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வெட்டிய பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக குறைந்துவிடும்.நறுக்கிய பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அதில் பாக்டீரியா தொற்றுகள் உருவாகிவிடும்.

வெட்டிய பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அதன் சுவை முழுமையாக நீங்கிவிடும்.பிரிட்ஜில் வெட்டிய நிலையில் வைத்த பழங்களை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.

கொய்யாப் பழம்,வாழைப்பழம்,ஆப்பிள் போன்றவற்றை வெட்டிய நிலையில் பிரிட்ஜில் வைத்தால் அதில் பாக்டீரியாக்கள் பாக்டீரியா தொற்றுகள் அதிகமாகிவிடும்.வெட்டிய நிலையில் உள்ள பழங்களை பிரிட்ஜில் வைத்தால் மற்ற உணவுப் பொருட்களின் வாசனை அதில் புகுந்து சுவைக்க ஏற்பற்றதாக மாறிவிடும்.எனவே இனி வெட்டிய பழங்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிரித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

0

உடலில் குவியும் கழிவுகளை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி வருகின்றோம்.நாம் சிறுநீர் வெளியேற்றும் போது அதன்நிறம்,வாசனை மற்றும் அளவு ஆகியவற்றை அவசியம் கவனிக்க வேண்டும்.சிலருக்கு குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.

தண்ணீர் பருகாமை,உடல் சூடு காரணங்களால் குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.அதேபோல் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் வெளியேறும்.அளவிற்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுகிறது என்றால் நிச்சயம் நீங்கள் அலட்சியம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டயாலிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கும்.அதேபோல் சிறுநீர்ப்பாதையில் தொற்றுகள் இருந்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணங்கள்:

1)மருந்து பக்க விளைவுகள்
2)சிறுநீர் பாதை தொற்று
3)நீரிழிவு நோய்
4)கர்ப்பம்
5)வயது முதுமை
6)சிறுநீர் கல்
7)ஈஸ்ட் தொற்று
8)பாக்டீரியா தொற்று
9)சிறுநீரக புற்றுநோய்
10)அதிக தண்ணீர் பருகுதல்

அடிக்கடி சிறுநீர் வருவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

**நெல்லிக்காய்
**சீரகம்
**தண்ணீர்

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து நெல்லிக்காய் மற்றும் சீரகத்தை அதில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.

**துளசி
**தண்ணீர்

ஒரு கைப்பிடி துளசியை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.இதனை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து வடித்து பருகினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படாமல் இருக்கும்.

நாள்பட்ட வெள்ளைமுடி 5 நிமிடத்தில் கருப்பாக.. ஒரே ஒரு பீட்ரூட் போதும்!!

0

உங்கள் தலையில் புதிதாக எட்டி பார்த்துள்ள வெள்ளை முடி அதாவது இளநரையை மீண்டும் கருமையாக மாற்ற கெமிக்கல் இல்லாத ஒரு நேச்சுரல் ஹேர் பேக் ட்ரை பண்ணுங்கள்.

இதை தயாரிக்க பீட்ரூட்,செம்பருத்தி இலை உள்ளிட்ட ஆறு பொருட்கள் தேவைப்படுகிறது.நீங்கள் தொடர்ந்து இந்த ஹேர்பேக் பயன்படுத்தி வந்தால் உங்கள் நரைமுடி கரு கருன்னு மாறும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)செம்பருத்தி இலை – நான்கு
3)மாவிலை – நான்கு
4)நெல்லிக்காய் – நான்கு
5)மருதாணி இலை – ஒரு கப்
6)காபி தூள் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு நான்கு செம்பருத்தி இலை,நான்கு மாவிலை,நான்கு நெல்லிக்காய்,ஒரு கப் மருதாணி இலை ஆகியவற்றை காய்ந்த நிலையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

3.காய வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பீட்ரூட் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

4.இப்பொழுது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அரைத்த பொருட்கள் அனைத்தையும் கொட்டி கிளறுங்கள்.பிறகு இரண்டு தேக்கரண்டி காபி தூளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு தயாரித்த கலவையை ஆறவிடுங்கள்.

5.பிறகு இதனை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.தயாரித்த ஹேர்பேக் முடியில் நன்கு ஊறிய பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுங்கள்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி கருப்பாக மாறும்.

6.இந்த ஹேர் பேக்கை ஒருமுறை பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை முடி கருமையாக இருக்கும்.தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி நிரந்தரமாக கருமையாகும்.