Friday, July 4, 2025
Home Blog Page 8

ஹிமாசல் பிரதேசத்தில் கன மழை, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் – 5 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

கடந்த 24 மணி நேரத்தில் ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழையால் மூன்று மேக வெடிப்புகள், ஒன்பது இடங்களில் திடீர் வெள்ளங்கள், மற்றும் மூன்று இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, குல்லு மாவட்டத்தில் மூவர், காங்கிரா மாவட்டத்தில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டறிய SDRF (மாநில பேரிடர் மீட்பு படை), NDRF (தேசிய பேரிடர் மீட்பு படை) மற்றும் ஹோம் கார்ட்ஸ் உள்ளிட்ட குழுக்கள் தீவிரமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 21 பேர் வெற்றிகரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தரம்சாலாவில் மேக வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் NDRF வீரர்கள் இடைநீக்கம் மற்றும் மீட்பு பணிகளை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஷிம்லா நகரிலிருந்து உயரதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் நிலைமையை ஆய்வு செய்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், ஆறுகள் மற்றும் ஆற்றங்கரைகளில் வசித்து வரும் மக்கள், குறிப்பாக வேலை தேடி வந்து தங்கிய பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு கடுமையான உத்தரவு வழங்கியுள்ளார்.

மழை காரணமாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஹிமாசல் பிரதேசத்தில், மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அளித்துள்ளார்.

அண்ணாவை எப்போது விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தால் இந்த மண் தந்தை பெரியார், பயன்படுத்திய மண் அண்ணாவால் மேன்மைப்படுத்தப்பட்ட மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் இழிவுபடுத்தி பேசும் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் பேசி இருக்கின்றார். தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளில் நோக்கத்தை புரிந்து அவர்கள் பாடம் புகட்ட தயாராக இருக்கின்றனர்.

அதற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கின்றார். எங்கள் கொடியிலும் எங்கள் பெயரிலும் இருக்கும் அண்ணாவை ஒருபொழுதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அண்ணாவின் கொள்கைக்கு மாறாக குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார் அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கச்சத்தீவு முதல் காவேரி வரை தமிழ்நாட்டை அதன் உரிமைகளை அடகு வைத்ததும் வைக்க துணிவதும் திமுக தான் என குறிப்பிட்டு பேசியிருக்கின்றார்.

மேலும் தமிழ்நாட்டின் அமைதி வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டு தருவேன். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என குறிப்பிட்டு இருக்கின்றார்

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

தமிழக கூட்டுறவுத்துறையானது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயிர் கடன் வழங்கப்படுகின்றது.

பயிர் கடனில் 30% புதிய உறுப்பினர்களும் 20% பட்டியலில் வகுப்பு விவசாயிகளும் சேர்க்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பயிர் கடன் பெறுவதில் எளிய வசதிகளை கூட்டுறவு துறை தற்போது கொண்டு வந்துள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது முக்கியமாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணைய வழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதி கூட்டுறவு செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதனால் ஒரு சில புகார்கள் அவ்வப்போது ஏற்படுகின்றது.

அண்மையில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்புக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மேலும் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழக அரசு உடனடியாக விளக்கம் தந்துள்ளது.

கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். பயிர் கடனை பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகளில் ஒரிஜினல் சிட்டா, அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டா, போன்றவற்றை ஆவணங்களாக கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஜாமீன் போடும் நபர்களின் போட்டோவும் அதனுடன் இணைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் தற்போது கூறியிருக்கின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம் இவ்வாறு ஜாமின்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுகிறது என புகார் அளிந்துள்ளது. இந்த புகாரை அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர் பெறப்பட்டு கடன் வழங்குவதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது

இனி பெரிய இயக்குனர்கள் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்! Gamechanger பட தயாரிப்பாளர் கதறல்!

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்தியன் 2 படம் மிகப்பெரிய குப்பை படமாக மாறியது. ஷங்கரை நம்பி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தைரியமாக gamechanger படத்தில் நடித்தார்.

இந்த gamechanger படத்திற்கு படம் வெளியாவதற்கு முன்னர் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் ராம் சரணின் கடைசி படமான RRR படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் மலைபோல நம்பினர். ஆனால் படமோ இந்தியன் 2வே பரவால்ல என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அடைந்தது.

இந்த படத்தின் எடிட்டர் கூட 8 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்த படத்தை எப்படி 3 மணி நேரமாக குறைப்பது என்று பாதியிலேயே படத்தில் இருந்து விலகிவிட்டார். அண்மையில் gamechanger படத் தயாரிப்பாளர் தில் ராஜூ ஷங்கர் படத்தின் அனுபவம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். படத்தின் நீளம் நான்கரை மணி நேரம் இருந்தது என எல்லோரும் சொல்வது உண்மை தான். ஷங்கர் மாதிரியான மிகப்பெரிய இயக்குனர்கள் படம் எடுக்கும்போது இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த மாதிரியான முன்னணி இயக்குனர்களுடன் நான் இதுவரை கூட்டணி வைத்ததில்லை.

gamechanger என்னுடைய தவறான முடிவு. ஒப்பந்தத்தில் முன்பே எல்லாவற்றையும் குறிப்பிட்டுவிட்டு படம் தயாரிக்க சென்றிருக்க வேண்டும். எல்லாம் என்னுடைய தவறு தான். இதுபோன்ற ஒரு தவறை இனி நான் செய்ய மாட்டேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் தில் ராஜூ.

பாமக-வின் முழு பவர் யாருக்கு.. மாம்பழம் சின்னத்தால் வரும் ட்விஸ்ட்!! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன??

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே தலைமை பதவி குறித்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இவர்களின் செயல்பாடுகளானது கட்சி இரண்டாக பிரிய போவதை தெள்ளந்த் தெளிவாக காட்டுகிறது. அதிலும் மீண்டும் தலைவராக நான் தான் இருப்பேன் என்று ராமதாஸ் முழக்கம் விட்டாலும் அதனை அன்புமணி ஏற்பதாக இல்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து நிர்வாகிகளின் பதவியையும் பரித்துள்ளார். மாறாக புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்.

இப்படி இருக்கையில் அன்புமணி அப்பாவின் அறிவிப்புக்கு எதிராக அவர் நியமிக்கும் நிர்வாகிகளை நீக்குகிறார். இப்படி இருவரும் கட்சிக்குள் நிர்வாகிகளை நியமிப்பது நீக்குவதும் உண்டான வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் குழப்ப நிலையில் உள்ளனர். இதன் அடுத்தக்கட்டமாக கட்சி இரண்டாக பிரிந்தால் மாம்பழம் சின்னம் யாருக்கு செல்லும் என்பது குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

பாமகவின் சின்ன அதிகாரம் பெறுவதற்கு பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் கையெழுத்து போட்டு தான் பெற முடியும். அதிலும் ட்விஸ்ட் என்னவென்றால் விக்கிரவாண்டி தேர்தலில் மாநில கட்சியின் அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. அதாவது எட்டு சதவீத வாக்கு விகிதத்தை பெற முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை பாமகவிற்கு ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. இது ரீதியாக பாமக தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதியுள்ளது. இருப்பினும் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படும் அதிகாரமானது தற்பொழுது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலம் இருக்கா இதை கவனியுங்கள்; தமிழக அரசு கொடுத்த ஒரு வாய்ப்பு!

தமிழக அரசு தற்போது நிலம் உள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுமதியற்ற மனை பிறவிகளில் இடம் வாங்கியவர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறை படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளில் பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனை வாங்கியவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மனை பிரிவுகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்க 2017 ஆம் ஆண்டு மனைகள் வரைமுறைப்படுத்தப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மீண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.. 2025-26 ஆம் ஆண்டுக்கான மானிய குழு கோரிக்கையின் பொழுது 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2026 ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மனையின் பதிவு தேதி மற்றும் பிரிவு விவரங்களை சரி பார்க்க வேண்டும் இணையதளத்தில் உங்கள் மனையை பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களை தயார் செய்து கொண்டு சட்ட ஆலோசனை பெற்றால் சிறந்தது எனவும் கூறப்படுகின்றது

டம்மியாகிப் போன வானதீ மற்றும் தமிழிசை.. குஷ்பு மீனாவுக்கு போகும் அமைச்சர் சேர்!! ரெடியான லிஸ்ட்!!

BJP: பாஜகவில் திரை பிரபலத்தில் இருக்கும் இரண்டு பெண்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படும் என்ற பேச்சு தீவிரமாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்பை சந்தித்ததால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது பாஜகவில் மாநில அளவில் 28 பேருக்கு புதிய பதவிகள் கொடுக்கப்பட உள்ளது. அந்த 28 பதவிகளில் மத்திய இணை அமைச்சரான எல் முருகனின் நெருக்கங்களுக்கு இதில் இடம் கொடுக்க வேண்டுமென்று  நயினாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை மீனா மற்றும் குஷ்பூ பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.

நடிகை குஷ்பூ பாஜகவில் மாநில பதவியில் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு மத்தியில் பதவி எதிர்பார்க்கிறாராம். அதேபோல பாஜக அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத மீனாவுக்கும் மத்தியில் அமைச்சர் பதவி எனக் கூறுகின்றனர். இதனால் பல ஆண்டுகளாக பாஜகவிற்காக உழைத்து எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காமலிருக்கும் நிர்வாகிகளுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது ரீதியாக தமிழக பாஜக தலைவரிடம் கேட்கையில், பாஜகவில் பல பேர் இணைந்து வருகிறார்கள். அப்படி இணைபவர்களை வரவேற்கிறோம்.

இதில் ஒன்று மட்டும் புரிகிறது, அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போவது எந்த கட்சி என்று தெரிந்து பலரும் இணைவதாக கூறியுள்ளார். திமுக ஆட்சி முடிய போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகைகளுக்கு முக்கிய பதவி வழங்கவில்லை என்று கூறவில்லை. இதை வைத்து தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் பலரும் கோபத்தில் உள்ளனர். வெளிப்படை தன்மையுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் இது ரீதியாக உட்கட்சி மோதல் உண்டாகும் என நன்கு தெரிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மகளிர் உரிமை தொகையில் இனி இவர்களும் சேரலாம்; அரசு வெளியிட்ட அறிவிப்பு!

திமுக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தகுதி வாய்ந்த ஒரு சில பெண்களுக்கு இந்த பணம் கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மீண்டும் இதற்கு முகாம் நடத்தப்படும் அந்த முகாமில் விண்ணப்பிக்கும் பெண்களை இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளாக சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் வீட்டில் குடும்ப தலைவி இல்லாத பட்சத்தில் 21 வயதை தாண்டிய திருமணம் ஆகாத மகள்களும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் குடும்பத்தலைவி இயற்கையை எய்திவிட்டாலும் அந்த வீட்டில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் இருந்தால் அவர் உரிமை பெற்றவர் என தெரிவித்துள்ளனர்

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி பெயர் இல்லாவிட்டாலும் பிற தகுதிகள் இருந்தால் அந்த பெண் விண்ணப்பிக்கலாம். இந்த முறை தன்னார்வலர்கள் நேரில் சென்று தேவையான ஆவணங்களை சரிபார்த்து உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை நிரப்ப வழி காட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பணம் பெற்று வரும் மகளிர்களுக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் அவர்களுக்கு இனி பணம் கிடைக்காது என அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தமிழ்நாடு முழுக்க ஆட்டு இறைச்சி ஒரே விலை தான்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

0

Tamilnadu Gov: இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்ய புதிய இணைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பரஸ்பர உறவு இருப்பதோடு வெளிப்படையான விலையையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டு இறைச்சியின் விலையானது மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக ஆட்டை விலை கொடுத்து வாங்குவது, டிரான்ஸ்போர்ட் என பல விலைகளை உள்ளடக்கி தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் ஒரு சில தினங்களில் ஆயிரம் ரூபாய் வரைக்கும் மாற்று நாட்களில் ₹800 வரைக்கும் விற்கப்படுகிறது. இதனை சமரசப்படுத்த தற்போது புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் ஆட்டு இறைச்சியின் விலையை நிர்ணயிக்கும் முறையை தமிழக அரசு கொண்டு வருவதாக கூறியுள்ளது. இது ரீதியான அறிவிப்பை கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து இது குறித்து அவர் பேசுகையில், கூடிய விரைவிலேயே ஆட்டு இறைச்சி விலையை தெரிந்து கொள்ளும்படி இணையதளம் வெளியாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபட்டு காணப்படும் விலையை ஒழுங்குபடுத்த முடியும். மேற்கொண்டு இந்த ஆட்டு இறைச்சி விலை தினம்தோறும் மாற்றமும் செய்யப்படும். அதேபோல இந்த இணையத்தில் வெளியிடப்படும் விலையில் தான் கடைகளில் ஆட்டு இறைச்சியை விற்கிறார்களா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த புது முயற்சியானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆட்டு இறைச்சியை ஒரு போல விலையில் வாங்கி பயன்பெற முடியும்.

கனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரும் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதும், நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு முதலில் எம்.எல்.ஏ பதவி அடுத்த அமைச்சர் பதவி அதன் பிறகு தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். கடந்த ஆண்டு மகன் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

துணை முதல்வர் ஆக இருந்தாலும் கட்சி பதவி அல்ல திமுகவின் முக்கிய கூட்டங்களில் கூட உதயநிதியால் கலந்து கொள்ள முடிவதில்லை என பேசப்பட்டு வந்த நிலையில் உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் உதயநிதிக்கு வழங்கப் போவதாக கூறுகின்றனர். திமுகவில் திருச்சி சிவா, ஆர் ராசா, கனிமொழி, ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ,ஆகிய ஐந்து பேர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில் உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி துணை பொதுச்செயலாளராக பதவி ஏற்றார், கருணாநிதியின் இன்னொரு வாரிசான ஸ்டாலினின் சகோதரி கனிமொழியும் அதே பதவியில் இருப்பது சரியாக இருக்காது, அதனால் கனிமொழிக்கு ப்ரமோஷன் வழங்க முடிவு செய்துள்ளார். அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை வழங்கிய அவரை அங்கு இருக்கையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமர வைத்து அழகு பார்த்து வருகின்றார்,

உதயநிதி ஸ்டாலினுக்காக தான் கனிமொழியை தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் திருப்பி விடுவதாக விமர்சித்து வருகின்றனர். உதயநிதி துணை பொதுச்செயலாளர் பதவி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது