வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2025
Home Blog Page 5874

காங்கிரஸ் 12 எம்.பி கள் பிஜேபியில் இணைந்தார்களா? காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்? போட்டு உடைத்த வைகோ?

0

வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை இனத்தை அழித்தவர் காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது காரணம் காங்கிரஸ் என விமர்சனம் செய்துள்ளார்.

’காங்கிரஸ் உதவிஉடன் நான் மாநிலங்கள் அவையில் தேர்வாக வில்லை. காங்கிரஸ் தயவால் நான் என்றுமே நாடாளுமன்றம் செல்லமாட்டேன்’. என வைகோ கூறியுள்ளார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இலங்கையில் ஈழம் இனத்தை கூண்டோடு அழித்த பாவிகள் காங்கிரஸ்” என கே.எஸ்.அழகிரியின் கூற்றுக்கு ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார் ராஜ்யசபா எம்.பி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

முன்னதாக வைகோவை விமர்சித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ks அழகிரி, ”காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸை குறை சொல்வதா? அரசியல் நாகரீகமற்றுப் பேசுகிறார் வைகோ” என தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜ்யசபா எம்.பி. வைகோ-வை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது வைகோ பேசிய பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

வைகோ கூறுகையில், நான் திமுக ஸ்டாலின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு ஆகியுள்ளேன். “நான் ஒன்றும் காங்கிரஸ் உதவியுடன் எம்.பி. ஆகவில்லை.
இனியும் இதற்கு மேலும் காங்கிரஸ் உதவியுடன் செல்லமாட்டேன். என கடுமையாக பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மேலும் அவர் கூறுகையில், இலங்கை எம் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த காங்கிரஸுக்கு ஒருநாளும் மன்னிப்பே கிடையாது. மன்மோகன் சிங் எனக்கு நெருங்கிய நண்பர். மன்மோகன் சிங் இடம் கூட நான் நண்பனாக இருக்கும் வரை குறையை எடுத்துச் சொல்வேன். அவரை ஒரு நண்பராகப் பாராட்டுகிறேன்.

ஆனால், அரசியல் ரீதியாக எதிர்க்கிறேன். இலங்கை எம் ஈழ மக்களை அழித்த காங்கிரஸ்க்கு மன்னிப்பே கிடையாது. நான் திமுக தலைவர் ஸ்டாலின் மூலமாக மட்டுமே ராஜ்யசபா எம்.பி ஆகப் பதவி ஏற்றேன். காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் அல்ல. காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து விவகாரத்தின் முக்கியக் குற்றவாளியே காங்கிரஸ்தான்.

12 காங்கிரஸ் எம்.பி-க்களும் பாஜக-விடம் விலை போய்விட்டதா?” ஏன் அவர்கள் காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து பரிக்கபட்டதன் விவகாரத்தில் கேள்வி எழுப்ப வில்லை? பிஜேபி உடன் விலை போய்விட்டார்களா என்று ஆவேசமாகக் பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

இதனால் காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் இந்த அறிக்கைக்கு தமிழக காங்கிரஸ் என்ன பதிலடி கொடுக்கும் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கோபத்தில் அமித்ஷா !கொந்தளிப்பில் எடப்பாடி ! !கிளுகிளுப்பில் துரைமுருகன்!!!

0

கோபத்தில் அமித்ஷா கொந்தளிப்பில் எடப்பாடி கிளுகிளுப்பில் துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி நூலிழையில் கோட்டை விட்டதால் கோட்டையே கோபத்தில் உள்ளதாம்

திமுகவின் பணபட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு , மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவு கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மத்தியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் தன் மகன் தோற்றால் தன்மானம் இழந்து திமுகவிலிருந்து மதிப்பிழந்து விடும் கட்டாயத்தில் சீறிப்பாய்ந்த சிகப்பு நோட்டுகளின் பின்னால் அதிமுக, திமுக என இரண்டு தரப்பினரும் படுவேகமாக வேலை பார்த்ததில் வெற்றி தங்களுக்கு தான் என்று இரண்டு தரப்பினரும் கூறி வந்தனர்.

அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது, இறுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8 ஆயிரத்து 141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போராடி தனது வெற்றியை அதிமுக நூலிழையில் தவற விட்டது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தோல்வியால் அமித்ஷா, பிரதமர் மோடி தரப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர்களின் நேரடி தொடர்பில் உள்ளவர்களின் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தோல்வியை ஈடுகட்ட தமிழகத்தில் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலிலாவது வெற்றி பெற்று காட்டவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மோடி அமித்ஷா தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் மகனின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள். அவர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்று இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு சற்று நக்கலுடன் பதில் அளித்த துரைமுருகன், “ஆமாம் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். நான் அதில் நினைக்க என்ன இருக்கிறது. அவர்தான் வென்று விட்டாரே”.

அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது பற்றி பத்திரிக்கையாளர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

” அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதே தான் நானும் நினைக்கிறேன்”, என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

கதிர் ஆனந்த் வெற்றிபெறுவாரா என்று திமுகவினர் பதற்றத்தில் இருந்த நேரத்தில் துரைமுருகன் இப்படி பேசியது பெரிய வைரலானது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

0

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க..!? – ஷாக் ஆன ரசிகர்கள்.

பொதுவாக ஒரு பட டீசர்னா, அது வர்ற வெள்ளிக்கிழமை வருது, வர்ற அமாவாசைக்கு வருதுன்னு ஒரு பில்டப் பண்ணி ரிலீஸ் பண்றதுதானே உலக வழக்கம். ஆனா இந்தப் பட டீசரை அப்படி ரிலீஸ் பண்ணலை.

ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை 17, 2020 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.

படத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உளவு பார்ப்பவர்களைப் பற்றிய அறிவியல் புனைவு கலந்த கதை என்று சொல்லப்படுகிறது. மேலும், கால நேரத்தை வைத்து நோலன் வழக்கமாகக் கையாளும் குழப்பும் விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு, ’ஹாப்ஸ் அண்ட் ஷா’ படத்தின் காட்சிக்காக வந்திருந்த சில ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென, ’டெனெட்’ படத்தின் டீஸர் திரையிடப்பட்டது. இந்த டீஸர் இன்னும் இணையத்தில் வெளியாகவில்லை.

ஜான் டேவிட் வாஷிங்டன் என்கிற கதாபாத்திரம் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த கண்ணாடியை பரிசோதிப்பது போல ஒரு காட்சி, அவர் பிராண வாயுவுக்கான மாஸ்க்கை அணிந்திருக்கும் காட்சி, ஸ்வாட் குழு ஆயுதங்களோடு ஓடும் காட்சி ஆகியவை இந்த டீஸரில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம், தனது படத்தின் திரைக்கதை மட்டுமல்லாமல், புரோமோஷன்களையும் வித்தியாசமாக செய்பவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கிறார் நோலன்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வாக்கு எண்ணும் இடத்தில் திடீர் பரபரப்பு! என்ன நடக்கிறது! வேலூர் தேர்தலில்?

0

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன.

திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வந்தார். இருவருக்குமே இடையே கடும் போட்டி நிலவி கொண்டு இருக்கிறது.

காலை முதலே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், திடீர் திருப்பமாக காலை 11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377  வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். 12 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை தகவல்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்4தமிழ் என்ற இணைதலதில் காணலாம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் ! எத்தனை வாக்குகள் முன்னிலை தெரியுமா?

0

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன.

திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வருகிறார். இருவருக்குமே இடையே கடும் போட்டி நிலவி கொண்டு இருக்கிறது.

காலை முதலே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தகவல்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்4தமிழ் என்ற இணைதலதில் காணலாம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சிவகார்த்திகேயன் சித்தார்த் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நீங்களே பாருங்கள்!

0

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8 நேற்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நேற்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக அஜித் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என கருத்து தெரிவித்தனர்.

முன்னதாகவே நேற்று இந்த படம் சிங்கப்பூர் மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது அங்கிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நேற்று திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், கிருஷ்ணா, வரலட்சுமி, சித்தார்த் போன்ற பிரபலங்கள் படத்தை பார்த்து வியந்து தங்களின் பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில திரை பிரபலங்களின் விமர்சனம் உங்களுக்காக!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தோல்விகளிலிருந்து மீட்டு தேமுதிகவை பலப்படுத்த விஜயகாந்த் எடுத்த புதிய வியூகம்

0

தோல்விகளிலிருந்து மீட்டு தேமுதிகவை பலப்படுத்த விஜயகாந்த் எடுத்த புதிய வியூகம்

தொடர் தோல்விகளை பெற்று வரும் தேமுதிகவை பலப்படுத்தும் விதமாக தனது மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் தேமுதிகவின் நம்பிக்கையாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இருந்தார். ஆனால் அவரின் உடல்நிலை பாதித்த பிறகு அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவுகள் கட்சியை சரிவை நோக்கி கொண்டு சென்றது. அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மைத்துனர் சுதீஷ் அவர்கள் கட்சியை நிர்வகித்து வந்தாலும் அவர்களின் அரசியல் ரீதியிலான தவறான முடிவுகள், அதனால் ஏற்பட்ட தொடர் தோல்விகள், விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் தேமுதிக தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அளவிற்கு உயர்ந்த தேமுதிக, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 சீட்டுகளைப் பெறுவதே அக்கட்சிக்கு பெரும் சோதனையாக அமைந்து விட்டது.

Vijayakanth
Vijayakanth

மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் எப்படியாவது மீண்டு புத்துணர்ச்சியுடன் வருவார் என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் தொடர் உடல்நலக் குறைவு காரணமாக முன்பு போல கட்சி பணிகளில் சிறப்பாக ஈடுபட முடியவில்லை. அவரின் சார்பாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வந்தாலும், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களையும் தொடர்ச்சியாக சந்திக்க முடியாத நிலையிலேயே விஜயகாந்த் உள்ளார். அவருக்கு அடுத்து கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்பை பிரேமலதா எடுத்துக் கொண்டிருக்கிறார், என்றாலும் செயல்பாட்டில் முன்பு போல தேமுதிக இல்லை என்ற வாதமும் தொண்டர்களால் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனை முழுமையாக அரசியலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார், அதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார். விஜயகாந்த் அளவிற்கு அவருக்கு வரவேற்பு இல்லையென்றாலும்,அவரின் பேச்சு ஓரளவிற்கு தொண்டர்களை கவரும் வகையில் உள்ளதாலும், திமுகவில் உதயநிதி ஸ்டாலினை எல்லாம் தொண்டர்கள் ஏற்று கொண்ட போது தன்னுடைய மகனுக்கும் தொண்டர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijaya Prabakaran-News4 Tamil Online Tamil News Channel
Vijaya Prabakaran-News4 Tamil Online Tamil News Channel

இதனையடுத்து முதல் கட்டமாக பொது மக்கள் மத்தியிலும் தொண்டர்களிடமும் இவருக்கு அறிமுகமும் நெருக்கமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும்படி விஜய பிரபாகரனுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி முதலில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து விரைவில் தன் சுற்றுப்பயணத்தை விஜய பிரபாகரன் தொடங்க இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிராமங்கள் தோறும் பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து விரைவில் அவரை தேமுதிகவின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கவும் விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி விஜய பிரபாகரனை இளைஞர் அணி தலைவராக நியமிக்க விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

முதன் முதலில் பெண்களே வெற்றியை தீர்மானிக்கும் தேர்தல்! இன்று வாக்கு எண்ணிக்கை வெற்றி யாருக்கு வேலூரில்?

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெற்றது. மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்தலின் போட்டியிட்டனர். இத்தேர்தல் தமிழகத்தின் பெரும் இரு அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஏற்பட்டது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் ஆகஸ்ட் 5 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 71.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7,01,351, வாக்காளர்களும், பெண்கள் 7,31,099, வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என உள்ளன.

இத்தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக பெண்கள் 5,21,452 வாக்காளர்களும், ஆண்கள் 5,02,861 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் வாக்களித்துள்ளனர்.

பெண் வாக்காளர்கள் 18,591 ஆண் வாக்காளர்களை விட பெண் ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என முழுமையாக நம்பப்படுகிறது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), வாக்களித்தனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), வாக்களித்தனர்.

கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்),வாக்களித்தனர்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாக்களித்தனர்.

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), வாக்களித்தனர்.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குகள் இன்று வெள்ளிக்கிழமை எண்ணப்படும் இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது பெண் வாக்காளர்களே உறுப்பினர்களின் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

0

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

‘சிந்துபாத்’ படத்தைத் தொடர்ந்து ‘சங்கத்தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

‘துக்ளக் தர்பார்’ படத்தின் வசனங்களை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதவுள்ளார். ’96’ இயக்குநர் ப்ரேம்குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இப்படம் முழுக்க அரசியல் சாந்த படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபன், அதிதி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மஞ்சிமா மோகனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

கௌதம் மேனனின் ஹீரோயின் என்ற பெருமையுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ஆனால், அந்தப் படம் பெரிதாக எடுபடவில்லை. அதன்பிறகு அவர் நடித்த ‘இப்படை வெல்லும்’, ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’ போன்ற படங்களும் படு தோல்வியைத் தழுவின.

இந்நிலையில் தான் நடித்த எந்தப் படங்களுமே பெரிய வெற்றி அடையாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் மஞ்சிமா மோகன். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் தான் முதன்முறையாக ஜோடி சேரும் இந்தப் படமாவது தனது களங்கத்தை துடைக்குமா என நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
அதெல்லாம் நல்லா வரும் கண்ணு..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்