Thursday, July 17, 2025
Home Blog Page 3390

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!

ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!

காஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து பாரம்பரியமகா கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் அவர்கள் புயல், கொரோனா போன்ற காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. ஆனால் காதணி விழா போன்றவைகள் தடையின்றி நடந்தது. அதனால் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள காரணத்தால் நடப்பாண்டில் மொய் விருந்து காலம் முடிவிற்கு வரும் நிலையில் 31 குடும்பங்கள் இணைந்து மொய் விருந்து வைக்க ஏற்பாடு செய்தனர். அந்த மொய் விருந்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் அசைவ மொய் விருந்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது அனைத்தும் டிஜிட்டல் நிலைக்கு மாறி வரும் நிலையில் அந்த மொய் விருந்தில் அனைவரும் ஆன்லைன் மூலம் மொய் அளித்தனர். ஒரே நாளில் ரூ 15 கோடி மொய் வசூல்லாகிவுள்ளது என கூறப்படுகிறது.அதில் நெடு வாசல் கிராமத்தை சேர்ந்தவருக்கு மட்டும் ரூ 2 கோடி வசூல் ஆனது குறிப்பிடதக்கது.

ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி!

0

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.

இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். அதேபோல கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கினார். அதாவது, அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று தெரிவித்தார், இதனால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வந்தது.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வந்த இந்த தீர்ப்பை முன்னிட்டு அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றிணைந்து செயல்பட விரும்புவதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் செல்வத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்ததோடு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற கோரி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில், இந்த வழக்கு வருகின்ற திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் குழந்தைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் பரவியது.இதை பற்றி விளக்கம் அளித்தார் ரயில்வே அமைச்சகம்,

ரெயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தி கூறியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியில் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கென ஒரு தனி படுக்கை வேண்டும் என பட்சத்தில் ஒரு நபருக்கு ஈடான கட்டணத்தை செலுத்த வேண்டும்.அப்போது தான் அந்த படுக்கையை ஒதுக்க முடியும்.
இந்த விதிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தற்போது போல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை கேட்ட ரயில் பயணிகள் அவர்களின் குழப்பத்திலிந்து மீண்டும் தெளிவான நிலைக்கு திரும்பினர்.

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா (37). இவரதின் கணவர் அலெக்கேசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.இந்நிலையில் இவர்கள் இருவரும் வளர்ப்பு மகன் ஒருவரை வளர்த்து வந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரினா பலம்சேவா அவரதின் கணவர் அலெக்கேசி என்பவரை விவாகரத்து செய்தார்.அதன் பிறகு வளர்ப்பு மகன் விளாடிமிர் ஸ்வ்ரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வைரல் ஆகி வந்தனர். அவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. தற்போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்த பன்னீர்செல்வம்!

0

அதிமுகவின் பொதுக்குழுவிற்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது அதிமுகவிலிருக்கின்ற ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி, எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழ்நிலை அதிமுகவில் உண்டானது. அவற்றை அவற்றை மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும், நடந்ததை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், எங்களுக்குள் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை.

சிறு சிறு பிரச்சனை எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்டவை காரணமாக ஆளும் திமுக மகிழ்ச்சியடையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக எம் ஜி ஆரால், தொண்டர்களால், தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரையில் அவரை யாரும் வெல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.

எம்ஜிஆர் மறைந்த போது இருந்த 17 லட்சம் உறுப்பினர்களை ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொண்டர் இயக்கமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாற்றினார். 16 வருடங்களாக முதல்வராக இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தார்.

நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பயணம் செய்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்களுடைய தலையாய கோரிக்கை என கூறியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

தர்ம யுத்தத்திற்கு பிறகு 2 தலைமையின் படியே குறையின்றி இருவரும் ஒன்றிணைந்து பயணம் செய்தோம். அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அசாதாரண சூழ்நிலை உண்டானது.

அவற்றை எங்களுடைய மனதிலிருந்து நீக்கிவிட்டு மறுபடியும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்காக சேவை புரிய வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என்று தெரிவித்தார் பன்னீர்செல்வம்.

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள் பேர் மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள்  மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் உள்ள தனியார் சுதா மருத்துவமனை கடந்த ஆறாம் தேதி சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி கருமுட்டை எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பது என உறுதி செய்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட சுதா மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் புதிதாக நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. அங்கு நோயாளிகள் குணமடைந்து வீடுகள் திரும்பி உள்ள நிலையில் சேலம் மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையினால அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுதா மருத்துவமனையில் உள்ள நுழைவுகள், சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர் மற்றும் ஆவண பாதுகாப்பு அறை உள்ளிட்ட இடங்களுக்கு முழுமையாக மூடி சீல் வைத்தனர்.

இதனையடுத்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி,போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தவர் என நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதுதொடர்பான நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

நாட்டில் நோய் தொற்று பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு!

0

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பலியானோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்திருக்கிறது, இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864 என அதிகரித்திருக்கிறது.

இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,36,54,064 என இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 5,27,206 என அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்த நோய் தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,01,343 என இருந்து வருகிறது. இதுவரையில் 208.95 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையின் மூலமாக தெரிவித்திருக்கிறது.

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்திவுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை இன்று காலை 10:30 மணிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். இதனையடுத்து வரும் இருபதாம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை முடிவடைகிறது.இந்த கலந்தாய்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறுமென மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் சிறப்பு பிரிவு மாணவர்கள் அனைவரும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கோ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கோ நேரில் யாரும் வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.விரைவில் மாணவர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்படுமாறு தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! திங்கள்கிழமை விசாரணை!

0

கண்ட ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால் அன்றைய தினம் எந்த விதமான முடிவும் எடுக்கப்படாமல் அந்த கூட்டம் முடிவுற்றது.

இதனை தொடர்ந்து சென்ற மாதம் 11ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று சென்னையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை எதிர் வரும் திங்கள்கிழமை விசாரிப்பதற்கு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு செல்லத்தக்கதல்ல என்று தெரிவித்தார். அதோடு அன்றைய தினம் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது.

ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைமையே அதிமுகவில் தொடரும் என்று தெரிவித்தார். இதனையடுத்து மேல்முறையீடு செய்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் துரைசாமி சுந்தர் மோகன் அமர் முன்பு ஆஜராகி தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், கோரிக்கையை வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த மனுவை எதிர்வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?    

 

 

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?

 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி , கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என எண்ணி வீட்டில் இருதபடியே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டு வந்தது.அதனையடுத்து மாணவர்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்த தன்னார்வலர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடி சென்று கல்வி கற்பித்தல் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

அதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கலுக்கு ஊக்கதொகையாக மாதம் ரூ1000 வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் மே மாதத்தில் இருந்து அந்த ஊக்கதொகை ரூ 1000 வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.அதனால் அரசு அதனை தாமதப்படுத்தாமல் குறித்த நேரத்தில் ஊக்க தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.