Tuesday, July 22, 2025
Home Blog Page 4586

காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

0

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே மறுபடியும் பனிப்போர் வெடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுவது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் என்று சொல்லப்படுகிறது. அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது அதிர்ச்சியை உண்டாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியில் இருந்த சமயத்தில் சிறுபான்மையினர் பிரிவின் கருத்துக்களை அதிமுக தலைமை செவிகொடுத்து கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை எடுத்து கூறியும் கேட்கவில்லை என்று அப்போது ஒரு தகவல் வெளியானது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவின் கீழ்மட்ட புலம்பல்கள் சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிமுகவைச் சேர்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களில் ஒரு சிலர் திராவிட முன்னேற்ற கழகத்தின் பக்கம் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் நோய்த்தொற்று பிரச்சனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. திமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது நோய் தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அதிமுகவில் இருக்கின்ற சிறுபான்மையினர் பிரிவில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் வெளியிட்ட நற்செய்தி! விவசாயிகள் மகிழ்ச்சி!

0

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் காணொளி மூலமாக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் விவசாய கடன்களை விரைவாக கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பெரியசாமி அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த கடன்களை விரைவாக வழங்க வேண்டும் விவசாயிகள் பயிர்க் கடன் கேட்டு மனுக்கள் கொடுத்தால் அந்த மனுக்கள் மீது தாமதமில்லாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாய பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான உரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறேன் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்து இருக்கிறார்.

அதோடு தற்போது விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருவதால் இயற்கை உரத்தை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தெரிவித்திருக்கிறார் அமைச்சர். அத்துடன் தமிழ்நாட்டில் சிறு வணிக கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை திரும்ப செலுத்தும் சிறுவணிகர்களுக்கு கூடுதலாக கடன் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அமைச்சர் கூறினார்.

அத்துடன் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மீது எடை குறையாமல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவு பண்டக சாலைகளில் வெளிச்சந்தை விடவும் மிக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.aa

கொரோனா தொற்று! அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

0

நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்த நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவர்கள் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த விதத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை நோய்த்தொற்று நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பில் இருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டோர் ஒரு ஒரு நாளைய ஊதியத்தை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்று தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொள்ள அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன் வழியாக நோய்த்தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்காக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள், உள்ளிட்டோர் அவர்களுடைய ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஊதியத்தை அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி மே மாதம் அல்லது ஜூன் 2021 ஆம் ஆண்டிற்கான ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு அனுமதி தந்து தமிழக அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய ஒருநாள் அல்லது அதற்கு மேலான தினங்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்கு விருப்பம் கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர் பெருமக்கள், போன்றோர் அதற்கான தங்களுடைய விருப்பத்தை சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்திற்கு உரிய நிகர ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் இருக்கின்ற வழிமுறைகளை பயன்படுத்தி பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஆன உதயத்தை பெற்று வழங்கும் அலுவலர் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

0

விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

திருவண்ணாமலையில் மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்.

இது குறித்து பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனே கைது செய்தனர்.இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல்துறை, உளவியல் சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெற்றதா எனவும், இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாற்று திறனாளிகள் நல ஆணைய மாநில ஆணையர், ஜானிடாம் வர்கீஸ் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாசியர், மாவட்ட சமூக நல அலுவலர், ஆகியோரிடம் விரிவான அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் விரிவான அறிக்கையை வரும் 4 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் மாற்று திறனாளிக்கான உரிமை சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

0

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற 3 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சென்ற சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது .அதிலும் குறிப்பாக சென்னையில் படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் படிப்படியாக இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால், பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஒரு தீர்வு காணப்பட்டது. அதாவது நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும், மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஒன்றிணைந்து நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் 3 அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சித்திக் ஆணையர் வணிகவரித்துறை அவர்களும், திருப்பூர் மாவட்டத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி வேளாண்மை துறை செயலாளர், ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் செல்வராஜ் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ஆகிய மூன்று அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

கொரோனா உள்ளவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை! உஷார் மக்களே!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் காலக்கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அடுத்தடுத்தாக புதிய நோய்கள் பரவி கொண்டு தான் வருகிறது.கொரோனா தொற்றை அடுத்து தற்போது அதிகளவு பரவி வருவது தான் கருப்பு பூஞ்சை.இந்த தொற்றானது பரவி இழப்புகள் ஏற்படும் அபாய நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் இந்த தொற்று அதிகளவு சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.ஏனென்றால் அவர்கள் ஸ்டெராய்டு மாத்திரைகள் அதிக அளவு எடுத்துக்கொண்டு சர்க்கரையின் அளவை கவனிக்காமல் இருப்பதால் இந்த தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த தொற்றின் முதல் அறிகுறியே விடாது தலைவலி தான்.இந்த தொற்று வந்தவுடன் வெளிப்படையாக தெரியாது.முதலில் இடைவிடாது தலைவலி ஏற்படும்.

கன்னத்தில் வலை,கண் வலி ஆகியவை மற்றொரு அறிகுறிகள் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனையடுத்து இந்த பூஞ்சையானது இரத்தகுழாய் மூலம் பரவுவதால் இரத்தம் பரவும் அவ்விடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கருப்பாக உருமாறுகிறது. கொரோனா தொற்று உள்ளவர்கள் குணமாகி சர்க்கரை அளவை கவனிக்காதவர்களுக்கு இத்தொற்று வர வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி தண்ணீர் மூலமாகவோ அல்லது ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதன் மூலமாகவோ இந்த கருப்பு பூஞ்சை வர வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதன் மூலமாக பரவுகிறது என்பதற்கு எவ்வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் கூறுகின்றனர்.இந்த கருப்பு பூஞ்சையானது காற்றின் மூலம் பரவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதற்கு போட்டியாக வெள்ளை பூஞ்சை தொற்று உருவாகியுள்ளது.இந்த வெள்ளை பூஞ்சையால் அதிகளவு பாதிப்புகள் இல்லை எனவும் கூறுகின்றனர்.

வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி!

0

வேணும்னா நாங்க எப்படியும் வருவோம்! சொமட்டோ ஊழியர் செய்த டெலிவரி!

கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.ஆனாலும் சிலர் யாரோ என்னமோ யாருக்கோ சொல்கிறார்கள் எங்களுக்கு என்ன? என்ற பாணியில் வெளியில் சுற்றி திரிகின்றனர்.

சில மதுப்ரியர்கள் மற்றும் குடிமகன்கள் என்று அன்பாக அழைக்கப்படும் நபர்களோ அரசு எப்போது டாஸ்மாக் திறக்கும் என்று ஆவலாக காத்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் சிலரோ அதற்க்கு ஒருபடி மேலே சென்று அவர்களே காய்ச்சி விற்கும் அளவுக்கு போய் கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ சரக்குக்கு பதில் வேறு எதும் புதிதாக தயாரித்து குடித்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

அந்த வகையில் ஒரு புது வழியை கண்டுபிடித்தாலும் போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.

சென்னையில் நியூ ஆவடி சாலையில் கே.ஜி.ரோடு சந்திப்பில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த சொமட்டோ ஊழியரிடம் அடையாள அட்டை காட்ட சொல்லி கேட்டுள்ளனர்.அந்த நபரோ முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர் கொண்டு வந்த உணவுப்பெட்டியை சோதனை செய்து அதிர்ந்து போயினர்.

அந்த பெட்டியில் மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டு அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் கோடம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேச பிரவீன்(32) , என்பதும் சொமட்டோ ஊழியரான இவர், தேவைப்படுவோருக்கு மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரிந்தது.அதனை அடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்தனர்.

எந்த சளி, காய்ச்சலும் பக்கத்தில் அண்டாது! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

கொரோனா காலகட்டத்தில் சாதாரண காய்ச்சல் சளி என்றாலும் மக்கள் பயந்து நடுங்குகின்றனர். சாதாரணமான சளி காய்ச்சலுக்கு வீட்டில் இருந்து எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம்.

 

தேவையான பொருட்கள்:

1. மிளகு -10

2. துளசி இலை -ஒரு கைப்பிடி

3. சுக்கு- ஒரு துண்டு

4. திப்பிலி- 3

5. தனியா- 50 கிராம்

6. பனை வெல்லம்- தேவையான அளவு

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் மிளகு, துளசி, சுக்கு, திப்பிலி, தனியா ஆகியவற்றை சேர்த்து நன்றாக தட்டி கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

4. அந்த தண்ணீரில் தட்டி வைத்த பொருட்களை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் பனை வெல்லத்தை சுவைக்கேற்ப தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

6. நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.

7. இதனை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை 100 மில்லி அளவில் சாப்பிட்டு வர எந்த விதமான காய்ச்சலும் அண்டாது.

8. இந்த முறைப்படி நீங்கள் இந்த பானத்தை அருந்துவதால், காய்ச்சலும்‌,சளியும் உடனடியாக தீரும்.

இவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு! இன்றைய ராசி பலன்கள்

0

இவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும்.தியானம் மேற்கொள்ளலாம்.பணியில் மூழ்கி விடுவீர்கள்.அதனால் நன்மை விளையும்.பெரியோரின் பேச்சை கேட்கவும்.பணப்புழக்கம் குறைவாக இருக்கும்.

ரிஷப ராசி:

     பிரார்த்தனைகள் பலன் தரும்.இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.பணி இடத்தில் நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.கவனமாக இருக்கவும்.சில விசயங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மிதுன ராசி:

     உங்களுக்கு வளர்ச்சி தரும் செயல்களில் பங்கு கொள்ளுங்கள்.பங்கு வர்த்தகத்தில் லாபம் பார்க்கலாம்.பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள்.இன்று உற்சாகமான நாளாக இருக்கும்.கோவில்களில் பணம் செலவு செய்யலாம்.

கடக ராசி:

     உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும்.உங்களிடம் தொழில் சார்ந்த அணுகுமுறை இருக்கும்.அதனால் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் ஏற்படும்.நிதிநிலை சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசி:

     இன்றைய நாள் பரபரப்பாக இருக்கும்.யோகா செய்யலாம்.உங்கள் அறிவு திறனை பயன்படுத்தி செயல்படவும்.பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி:

     பல தடைகளை கடந்து பணியில் வெற்றி பெற வேண்டி இருக்கும்.உறவுகளில் விவாதம் ஏற்படும்.பண வரவும், செலவும் சேர்ந்து இருக்கும்.தியானம் மேற்கொள்வதால் ஆறுதல் அடையலாம்.

துலாம் ராசி:

     நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வெற்றி அடையலாம்.வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.பெரியோருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.கணிசமான தொகை குறையும்.

விருச்சிக ராசி:

     இன்று சிறப்பான நாள்.நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி தரும்.தன்னம்பிக்கை,உறுதியுடன் இருக்க வேண்டும்.உரையாற்றும் போது கவனமாக இருக்கவும்.பணவரவு இருக்கும்.

தனுசு ராசி:

     இன்று எதையும் அதிகம் யோசிக்க வேண்டாம்.பணியில் மகிழ்ச்சி இருக்காது.தடைகளை தாண்டும் ஆற்றல் உள்ளது.உறவில் குழப்பம் அடையலாம்.பணத்தை பத்திரமாக கையாளவும்.

மகர ராசி:

     உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து செயல்படுங்கள்.அதிக பொறுப்பாக நடந்து கொள்வீர்கள்.சூழ்நிலை சாதகமாக இருக்காது.பணம் செலவு இருக்கும்.

கும்ப ராசி:

     நன்மைகள் அதிகளவு காணப்படும்.முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும்.விருப்பங்கள் நிறைவேறலாம்.உங்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீன ராசி:

     இன்று அதிக நேரம் செயல் பட வேண்டி இருக்கும்.பொறுப்பின் காரணமாக நீங்கள் பணியில் மூழ்கி இருப்பீர்கள்.பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

0

கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆயுஷ் நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது.

 

ஆயுஷ் அமைச்சகம் சொன்ன அனைத்துமே நான் வீட்டில் இருந்தே செய்ய கூடிய அருமையான ஆரோக்கியமான குறிப்புகள். அவை என்னவென்று பார்க்கலாம்.

 

1. சூடான நீரை மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரை பருக வேண்டும். நீருடன் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.

2. நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் அடையும் உணவு ஆக இருக்க வேண்டும். இஞ்சி, பூண்டு ,மஞ்சள், சீரகம் கொத்தமல்லி போன்ற வாசனைப் பொருட்களை உணவில் பயன்படுத்தும் பொழுது எளிதில் ஜீரணமாகும்.

3. ஆயுஷ் அமைச்சகம் சொன்ன தகவலின் படி உடற்பயிற்சிகள் மற்றும் தியானங்களை 30 நிமிடம் செய்ய வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்த்து இரவு 8 மணி நேர தூக்கம் அவசியம் ஆக இருக்க வேண்டும்.

4. அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை 150 மில்லி பாலில் கலந்து தினமும் 2 வேளை குடிக்கலாம்.

5. குடுச்சி கன்வதி (500 மி.கி) அல்லது அஸ்வகந்தா மாத்திரை (500 மி.கி) சாப்பிட்ட பிறகு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

6. மூலிகை டீ அல்லது துளசி, இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றால் செய்யப்பட்ட காபி தண்ணீரைக் குடிக்கவும். தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து பருகலாம்.

7. நீராவி பிடிக்கலாம். அதில் துளசி இலை மற்றும் கற்பூரத்தை சேர்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதிக சூடான நீரை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

8. கிராம்பு மற்றும் திரிபலா பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது தொண்டைவலி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கும்.

9. வாயில் ஒன்று இரண்டு கிராம்புகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.

10. தினம் ஒரு நெல்லிக் கனியை சாப்பிடலாம்.

11. தினமும் நீரை பருக கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம், கிராம்பு, துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

12. கொரோனாவால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும் பொழுது ராகியினால் ஆன கஞ்சியை குடித்து வரலாம்.

இவ்வாறு ஆயூஷ் நிர்வாகம் கூறியது.