வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2025
Home Blog Page 48

EPS-க்கு வந்த புதிய சிக்கல்; இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் மீது பெங்களூரு புகழேந்தி வழக்கு!!

0

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அணிகள் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு இணைந்த நிலையில் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அப்போது அதிமுக இவர்கள்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க முடிவு செய்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இதனால் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தற்காலிக அமைப்பை நடத்தி வருகின்றார். மேலும் இரட்டை இலை சின்னம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி ஆகியவை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது தேர்தல் ஆணையம் அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பாக இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் புகழேந்தி மனுதாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடும் படிவங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது, மேலும் அவர் அறிவித்துள்ள வேட்பாளர்களை அதிமுக வேட்பாளராக அறிவிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதில் இரட்டை இலை, அதிமுக விவகாரம் குறித்து புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டன்படி தனது மனுக்கள் மீது 14 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் குறித்தான மனு மீது விசாரணை விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்; தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு என்ன தெரியுமா!!

0

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயிலிருந்து தற்போது 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பில் கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வானது ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 50000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக உயர்த்தப்படும் அகவிலைப்படி போல அதே அளவிற்கு தமிழக அரசும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் எனவும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை மத்திய அரசால் இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை காலம் முன் பணம் ரூ. 10,000 ஆயிரத்திலிருந்து 20000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதனை தொடர்ந்து கல்வி முன் பணம் தொழில்கல்விக்கு ஒரு லட்சம் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு 50000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வேகமெடுக்கும் கொரோனா பரவல்; விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடு அமல்!!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டதால் கொரோனா பரவால் படிப்படியாக குறைந்தது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை சார்பாக அதிகம் மக்கள் கூடும் இடங்களில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் விமான நிலையம் வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பரிசோதனை நடத்தப்படுகின்றது. 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. காய்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருக்கும் பயணிகளுக்கு ஸ்கேனர் கண்காணிப்பு கருவி மூலம் பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று பரவல் இருக்கும் என கண்டறியப்பட்டால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுரை விமான நிலையத்தில் தற்போது பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்; வங்கி கணக்கில் நேரடியாக பணம் டெபாசிட்!!

0

தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகின்றது. அதனால் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மற்றும் இலவச சீருடை ,புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில பகுதிகளில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிக மிக குறைவாக இருப்பதினால் அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை மண்டலம் அருகே கீழூர் என்ற பகுதியில் உள்ள கோக்கலாடா அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடக்கப் பள்ளியும் அமைந்திருக்கின்றது. இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த பள்ளியில் 42 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும் அவர்களுடைய வங்கி கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்படும், 7 ஆம் வகுப்பு வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 4000 ரூபாயும், 8 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3000 ரூபாயும் 9ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாயும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்து செல்லும் பொழுது இந்த டெபாசிட் முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சலுகை குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். 

தொடர் விடுமுறை..சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு; அரசு போக்குவரத்து கழகம் சொன்ன ஹேப்பி நியூஸ்!!

0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தினம்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பணிபுரிபவர்கள் என அனைவரும் சென்னையில் உள்ள நிலையில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பரிசுகள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்றது. அதன் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என வர விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து மற்றும் பிற இடங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் பயணிகள் செல்லும் வகையில் தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகை, பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை அன்று 520 பேருந்துகளும் சனிக்கிழமை 550 பேருந்துக்களும் இயக்கப்படும்.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 24 பேருந்துகள் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதலே பேருந்தில் பயணம் செய்ய முன் பதிவு செய்து வரும் நிலையில் பயணிகள் நீண்ட தூரம் பயணத்தை திட்டமிட்டிருந்தால் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

முகுந்தனுடன் கைகோர்த்த அன்புமணி… அதிர்ச்சியில் ராமதாஸ் – அடுத்தடுத்து நடப்பது என்ன?

பாமகவில் அப்பா-மகன் இடையேயான அதிகாரப்பகிர்வு சார்ந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது முன்னாள் இளைஞரணி தலைவர் முகுந்தனுடன் அன்புமணி ராமதாஸ் சமரசம் செய்திருப்பது போல தகவல்கள் வெளியாகி, ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பொதுக்குழு மேடையில் வெடித்த விவகாரம்

கடந்த டிசம்பர் மாத பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதே மேடையில் அன்புமணி வெளிப்படையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “புதிதாக வந்தவர்களுக்கு பதவியில்லை… அனுபவம் வாய்ந்தவர்களை பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்” என அவர் கூறியதும், கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகுந்தனின் ராஜினாமா… பின்னணியில் அழுத்தம்?

இதனையடுத்து, முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பொதுமக்களுக்கு சொல்வது போல, அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகினாலும், குடும்ப அழுத்தம் காரணமாகவே பதவியை விட்டதாக கூறப்படுகிறது. அதிலும் “தலைவர் அன்புமணி” என அவர் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

அன்புமணியின் டீல்?

சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் நேரடியாக முகுந்தனை அழைத்து, இங்கதான் எதிர்காலம் இருக்கு. அங்க இருந்தா வளர்ச்சி கிடையாது. இப்போ திடீர்னு விலகினாலும் சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ சீட் தருகிறேன். வெற்றி பெற்று முன்னேறு” என்ற டீல் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட கணக்குகளில் அன்புமணிக்கு பலம்

மாநில அளவில் அன்புமணியின் ஆதரவாளர்களே பெரும்பான்மை என்பதை அறிந்த முகுந்தன், ஆரம்பத்தில் கண்டிப்பாக இருந்தாலும், தன்னை சுற்றியுள்ள குடும்ப அழுத்தத்தையும், அன்புமணியின் வாக்குறுதியையும் கணக்கில் கொண்டு, அதை ஒப்புக்கொள்ள முன்வந்ததாக கூறப்படுகிறது.

ராமதாஸ் அதிர்ச்சி – சட்ட ஆலோசனையில் தீவிரம்

இந்த திடீர் முடிவுகள் அனைத்தும் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் தரப்பில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தற்போது அவர் கட்சி கட்டுப்பாட்டை சட்ட ரீதியில் எவ்வாறு நிலைநாட்டலாம் என்பதை ஆராய முன்னணி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னர் பாமகவில் வெடிக்கும் பூகம்பம்?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாமகவின் உட்கட்சியில் இந்த அப்பா-மகன் குழப்பம், கட்சியின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பரிதவிக்கும் கட்சி நிர்வாகிகள், “கட்சி தலைமை யாரிடம்?”, “அதிகாரம் யாரிடம்?” என குழப்பத்தில் இருக்கின்றனர்.

பாஜக-காங்கிரஸ் மறைமுக கூட்டணி என்ற பரபரப்பு குற்றச்சாட்டு! ‘இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறியது ஆம்ஆத்மி!

0

தேசிய அரசியல் தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், ஆம்ஆத்மி கட்சி (‘AAP’), ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, இனி அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிடும் என்ற முடிவையும் எடுத்துள்ளது.

பாஜக-காங்கிரஸ் இரண்டும் ஒரு பக்கம்?

ஆம்ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவில் எடுத்த முடிவை விளக்கும் அறிக்கையில்mகூறியுள்ளதாவது:

பாஜகவும் காங்கிரசும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. மக்களவை தேர்தலுக்காக உருவான INDIA கூட்டணி, இப்போது தனது நோக்கத்தை இழந்துவிட்டது. அதனால், நாம் இனி தனித்துப் போட்டியிட முடிவு செய்கிறோம்.”

மோடிக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு

பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு விசாரணைக்கான சிறப்பு கூட்டத்தை கோரி INDIA கூட்டணியில் உள்ள 16 எதிர்க்கட்சிகள் இணைந்து கடிதம் எழுதியன. ஆனால் ஆம்ஆத்மி மட்டும் கையெழுத்திடாமலேயே விலகியது, இது பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடையாளமாக விளங்கியது.

“ராகுல் பேசுவது மோடிக்கு ஆதாயம்!” – ஆம்ஆத்மி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக ஆதாயமாகவே இருக்கிறது. அதற்குப் பதிலாக, மோடி, சோனியா குடும்பத்தை சிறைவாசத்திலிருந்து காப்பாற்றுகிறார். இரு கட்சிகளும் பள்ளி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் முழுமையாக அக்கறை காட்டவில்லை.” என ஆம்ஆத்மியின் மூத்த தலைவர் அனுராக் தண்டா தெரிவித்துள்ளார்:

அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் தனித்து போட்டி 

ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளதாவது:

  • இனி வரும் அனைத்து மாநில தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும்.

  • 2025 இறுதியில் நடைபெறும் பீகார் சட்டமன்ற தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும்.

  • தேசிய நலனுக்கேற்ப எதிர்க்கட்சிகளின் சிறந்த முயற்சிகளை ஆதரிக்க தயாராக உள்ளது.

“விஜய்க்கு செல்வாக்கு! தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்” – வெளியான பரபரப்பு தகவல்!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், தற்போது தவெகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மை அல்ல எனத் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

“விஜய் இளைஞர்களை ஈர்க்கக்கூடியவர்!”

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், “விஜயின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இணையவில்லை. இணைய விரும்பினால் அதை முறைப்படி, முழு காரணங்களுடன் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

“கணிக்க முடியாத அரசியல் சூழல்”

காளியம்மாள் மேலும் கூறுகையில், “இப்போதுள்ள அரசியல் சூழல் மிகக் குழப்பமானது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யார் எப்போது என்ன முடிவெடுப்பார்கள் என்பதை சொல்ல முடியாத நிலைதான் உள்ளது” என்றார்.

தவெகவில் இணைய திட்டம் இல்லை

அண்மையில் சமூக வலைதளங்களில் பரவிய “காளியம்மாள் தவெகவில் சேர்ந்துவிடுவார்” என்ற செய்தியை முற்றிலும் மறுத்த அவர், “அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிர்கால அரசியல் திட்டம்

“நான் மக்கள் பிரச்சனைகளுக்காக குரலெழுப்ப விரும்புகிறேன். எனது அடுத்த நிலைப்பாடு எது என்றாலும் அது முழுமையாக மக்களுக்கானதாயிருக்கும். கட்சியில் இணையும் நேரம் வந்தால் ஏன் இணைகிறேன் என்பது உட்பட அனைத்து தகவல்களையும் முறைப்படி வெளிப்படுத்துவேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

“தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” – கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் நேரு! பரபரக்கும் அரசியல்களம் 

0

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த கருத்தே தற்போது பரபரப்பான விவகாரமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழியின் பிறப்பு குறித்து தெரிவித்த கருத்து அடிப்படையில் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு கமலுக்கு ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பம் முதல் கமல் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் கூட்டணி வகிக்கும் திமுக தலைவர்கள் பெரும்பாலோனோர் அமைதி காத்து வந்தனர்.

தக் லைஃப் திரைப்பட விழாவில் வெடித்த சர்ச்சை

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் கமல்தமிழிலிருந்துதான் கன்னடம் உருவானது” என கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் கூறினார். இது கர்நாடகாவில் தீவிர எதிர்ப்பை கிளப்பியது. பல கன்னட அமைப்புகள் கமலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டன. தக் லைஃப் திரைப்படம் வெளியாவதை தடுக்க பல விதங்களில் மிரட்டல்கள் வந்தன.

மன்னிப்பு கேட்க வேண்டும் என அழுத்தம் – கமல் மறுப்பு

இந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலிடம் அழுத்தம் வந்தபோதும், கமல் தன்னிடம் தவறு இல்லை என மறுத்தார். இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், திரைப்படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இது ஜூன் 10ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு – “கமல் தவறாக பேசவில்லை”

இந்நிலையில், திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களிடம் கூறுகையில்:

தமிழிலிருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் வந்தன. கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்து வரலாற்று அடிப்படையிலான உண்மை,” என தெரிவித்தார். கமலுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியின் மூத்த தலைவரும் ஆளும் கட்சி அமைச்சருமான கே.என்.நேரு கருத்து தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற தடையை மீறி வசூலித்த சுங்கச்சாவடி! வழியை மறித்து போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள்

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இருப்பதாக கூறி, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடிக்கு முன் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நெடுஞ்சாலை ஒப்பந்தமும் முறையில்லா வசூலும்!

2011ம் ஆண்டு சாலையை கட்டும் ஒப்பந்தத்தின் படி, மரம் நடும் பணிகள், சென்டர் மீடியன், பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் தரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கேற்ற பணிகள் செய்யப்படவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு.

இதனிடையே, 2023ல் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டும், சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. மாதம் ரூ.11 கோடி வசூலித்தும், பராமரிப்புக்காக வெறும் ரூ.30 லட்சமே செலவழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற தடையை மீறி தொடரும் வசூல்!

இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர, நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். தரமான சாலை வசதி இல்லையெனில் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

போராட்டம் வெடித்தது – சுங்கச்சாவடிக்கு முன் லாரி நிறுத்தம்!

தடை உத்தரவை மீறி இன்று (ஜூன் 4) புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் சமாதானம் 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பரபரப்பை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை ஜூன் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.