Sunday, July 13, 2025
Home Blog Page 4224

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

0

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றின், இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மூடப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை வருட காலமாகவே அனைத்தும் மூடிய நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 1ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியில் உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவியை தனிமைப்படுத்திவிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இருவேறு வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கும் கோரோனோ பாசிட்டிவ் வந்திருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவ்விருவரையும் தனிமை படுத்திவிட்டு, மற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு என்றும் ஒரு மாணவி பன்னிரண்டாம் வகுப்பு என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நடத்தப்படவுள்ள பரிசோதனையின் முடிவுகள் வந்தால்தான், கொரோனா  எண்ணிக்கையின் மதிப்பு உயருமா? அல்லது குறையுமா? என்பது தெரியவரும். எனவே அனைவருமே ஒருவித அச்சத்தில் உள்ளனர். தற்போது அரசு வகுத்துள்ள திட்டங்களை செயல் படுத்தித்தான் பள்ளிகள் அனைத்தும் தற்போது நடைபெறுகின்றன. ஒரு வகுப்புக்கு 20 மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் சுழற்சி முறையில் அனைவருக்கும் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும், விருப்பமுள்ளவர்கள் வரலாம். விருப்பமில்லாதவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருந்தே கற்கலாம் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும் எனவும், அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஆரம்பித்த மூன்று நாட்களிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளதால், அனைவருமே மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மாணவிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! பீதியில் பெற்றோர்கள்!

0

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.. பள்ளிகளின் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கின்ற மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாணவிக்கு பரிசு சோதனை மேற்கொண்டதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது தற்சமயம் மாணவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருக்கிறார். பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவரமாக நடந்து வருகிறது.

இதனையடுத்து பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முயற்சி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னரே கடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. தற்சமயம் மாணவி ஒருவருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆன நிலையில். ஆசிரியை மற்றும் மாணவிக்கு நடைபெற்ற உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது..

இதனை சாதாரணமாக, கடந்து செல்ல இயலாது மாணவர்கள் தனிப்பட்டவர்கள் அல்ல முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் இருக்கக்கூடிய குடும்பத்தில் இருந்துதான் அவர்களும் வருகை தருகிறார்கள். பள்ளியில் கூட்டமாக இருக்கிறார்கள் பள்ளி முடிந்த பின்னர் மறுபடியும் வீட்டிற்கு செல்லும் சமயத்தில் இவர் மூலம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவுவத்தற்கான வாய்ப்பு இருக்கிறது.. ஏனென்றால் வீட்டில் முகக் கவசம் அணிவது இல்லை மற்றும் சமூக இடைவெளி நாம் எல்லோரும் கடைபிடிப்பது கிடையாது. இருந்தாலும் இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?

0

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நேற்றையதினம் சட்டசபையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய நிலையில் இன்று அமைச்சர் சுப்பிரமணியம் டெல்லி சென்றிருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த வருடமே மாணவர் சேர்க்கை எய்ம்ஸ் மருத்துவமனை பொது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட 10க்கும் அதிகமான திட்டங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இன்று பிற்பகல் சந்திக்க இருக்கின்றோம். அதற்கான வேலையாக தற்சமயம் டெல்லி புறப்படுகிறோம் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.

அத்துடன் நோய்தொற்று தடுப்பூசி குறித்து நேற்று சட்டசபையில் விளக்கம் கொடுத்த சுப்பிரமணியன் தமிழ்நாட்டிற்கு மேலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் வேண்டும் எனவும் இந்த பயணத்தின் முக்கிய திட்டமாக இதனை வைத்திருக்கிறார் எனவும் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயமுத்தூருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருக்கின்ற நிலையில், முன்னரே அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையில் போதிய நிதி ஒதுக்கப்படாமல் அந்தத் திட்டம் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது.

அதோடு முன்னரே தடுப்பூசி உற்பத்திக்காக செங்கல்பட்டு, குன்னூரில் இருக்கும் தொழில் கூடங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. அது குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இந்த பயணத்தின் போது மத்திய அரசிடம் வலியுறுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

0

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த சம்பவத்தில் பிரபல டைரக்டர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவிதேஜா, மற்றும் நடிகைகள் சார்மி கவுர், முமைத்கான் உட்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பு உள்ளதாக தெரியவந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 62 பேரிடம் விசாரணை நடைபெற்றது. மொத்தம் இதற்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என அமலாக்கத் துறை போலீசார் சந்தேகப்படுகிறது. எனவே ஒவ்வொருவரிடமும் தனி தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் கருப்பு பணம் வெள்ளை ஆக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத் துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. அதில் முக்கியமாக ரகுல் பிரீத் சிங், ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை சார்மி அமலாக்கத்துறை முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டனர். அதேபோல் நடிகை ராகுல் பிரீத் சிங் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

வெகுண்டெழுந்த ஜோதிமணி அடக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமை! காரணம் இதுதான்!

0

பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்த கே டி ராகவன் வீடியோ காலில் ஆபாசமாக உரையாற்றி சிக்கிக்கொண்ட சூழ்நிலையில், அவருக்கு எதிரான அறிக்கை வெளிப்படையாகவே வெளியிட்ட ஒரே அரசியல்வாதி ஜோதிமணி தான் என்று சொல்லப்படுகிறது.

கேடி ராகவன் வீடியோ விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்த ஜோதிமணி சென்ற சில தினங்களாகவே அமைதியான நிலைக்கு சென்று விட்டார். பாஜகவின் பெண் நிர்வாகியுடன் பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக பேசி கொண்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான அறிக்கை வெளிப்படையாக வெளியிட்டவர் ஜோதிமணி தான். அதோடு மட்டுமல்லாமல் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனு அளித்து விட்டு வந்தார் அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக ராகவனை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இருந்தாலும் அத்துடன் ஜோதிமணி இந்த விவகாரத்தில் அமைதியாக சென்று விட்டார். இதற்கு காரணம் டெல்லியிலிருந்து ஜோதிமணிக்கு வந்த எச்சரிக்கை தான் என்று சொல்கிறார்கள். கே டி ராகவன் விவகாரம் அரசியலாக்க படவேண்டிய விஷயம் கிடையாது எனவும் இது அவருடைய தனிப்பட்ட விவகாரம் மற்றும் பாஜகவின் விவகாரம் என ஜோதி மணிக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் வரவே அவர் ஆகி விட்டார் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற விவகாரங்களில் தேவையில்லாமல் அரசியல் செய்வது பின்னாளில் நமக்கு பிரச்சினை ஆகிவிடும் என்று ஜோதிமணிக்கு கட்சியின் மேலிடம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதேபோல சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது .அதில் ஆபாச வீடியோவில் சிக்கிய ராகவனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் ,அவருக்கு ஆதரவாக இருக்கும் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அழகிரி இந்த விவகாரத்தை கையில் எடுத்தது தேவையில்லாதது என மேடையிலேயே மகளிர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் எச்சரித்து இருக்கிறார். கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகின்ற நிலையில் அதற்கு எதிராகப் போராடுமாறு மகளிர் காங்கிரசாருக்கு நபர் உத்தரவிட்டு விட்டு சென்று விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு காரணம் ராகவன் விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட தகவல் தான் சொல்லப்படுகிறது அதோடு பாஜகவில் மட்டுமல்ல பெண் நிர்வாகிகள் பாலியல் ரீதியாக உடனே துன்புறுத்தப்படுவது அது குறித்த புகார்கள் இல்லாத கட்சிகளே கிடையாது என்ற சூழ்நிலையில், தேவையில்லாமல் அந்த கட்சியை சீண்டி அது நமக்கு பிரச்சனை ஆகிவிடும் அதுதான் காங்கிரஸ் கட்சி கண்டிப்பதற்கான காரணம் என கூறுகிறார்கள்.

டெல்லிக்கு பறந்த பாஜக தலைமை! தப்புமா தலைவர் பதவி?

0

கேடி ராகவன் வீடியோ வெளியான ஒரு சில தினங்களிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்த சூழ்நிலையில், பல காரணங்களை தெரிவித்து அதனை தவிர்த்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தற்போது திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கிறார்.

யாருக்கும் தெரியாமல் முடிந்திருக்க வேண்டிய அந்த வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முதல் காரணம் அண்ணாமலை தான் என்பது போன்ற தகவல்கள் பாஜகவின் தேசிய தலைமையை கடுமையான அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதிலும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் தலைவர் பதவிக்கு அண்ணாமலை அன் பிட் என்ற விதத்தில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு அவசரமாக கடிதம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுதி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு சில காலத்தில் செல்வாக்கு இருந்த முன்னணியினர் ஒரு சிலரும் கூட அண்ணாமலைக்கு எதிராக டெல்லி தலைமைக்கு கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.

தலைவர் பதவிக்கான குணாதிசியங்கள் ஆன பொறுமை கொஞ்சம் கூட அண்ணாமலை இடம் இல்லை தற்போதும் அவர் ஒரு காவல்துறை அதிகாரி போல தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை தலைவர் பதவியில் வைத்திருப்பது ஆபத்து என்ற விதத்தில் அந்த கடிதங்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல வீடியோ வெளியான பின்னர் சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு இருந்து வந்த ஆதரவை முற்றிலுமாக குறைந்து போய்விட்டது. இதற்கு காரணம் அவருடைய முதிர்ச்சியற்ற செயல்பாடுகள் தான் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை என தெரிவிக்கிறார்கள்.

ராகவன் வீடியோ விவகாரத்திற்கு பின்னர் கட்சியின் சார்பாக நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்று கொள்ளாமல் அண்ணாமலை தவிர்த்து வருகின்றார். இறுதியாக மூப்பனார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பினார். இதற்கிடையில் ராகவன் வீடியோ விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு கடந்த சில தினங்களாகவே டெல்லி மேலிடம் அண்ணாமலையை அழைத்து வருகின்றது. இருந்தாலும் அதற்குள் மதனிடம் இருக்கின்ற வேறு வீடியோக்களில் இருக்கின்ற பெண்களை தொடர்பு கொண்டு அந்த வீடியோவில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த கூடிய வேலையில் அண்ணாமலை தீவிரமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் அண்ணாமலை அதாவது ராகவன் வீடியோ விவகாரத்தில் கைது செய்துவிட்டதாக அறிக்கையுடன் அவர் செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதேநேரம் அண்ணாமலையின் விளக்கத்தை பாஜக மேலிடம் ஏற்றுக் கொள்வது மிக மிக கடினம் என சொல்லப்படுகிறது. அண்ணாமலைக்கு இந்த பதவி கிடைக்க முழுக்க முழுக்க அமித்ஷா மட்டுமே காரணம் வேறு எந்தப் பக்கத்திலிருந்தும் அண்ணாமலைக்கு தற்சமயம் ஆதரவு இல்லை என்று சொல்கிறார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக அண்ணாமலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அமித்ஷா தொடர்ச்சியாக அண்ணாமலையை ஆதரிப்பார் என்பது சந்தேகம்தான் தெரிவிக்கிறார்கள். ஆகவே டெல்லியில் விசாரணை முடிவுற்று அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் அடிக்கடி தான் பாஜகவின் கடைக்கோடி தொண்டன் என்ற விதத்தில் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வந்ததாக சொல்கிறார்கள். அதேநேரம் பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மூலமாகவே தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான தன்னுடைய வேலையை தொடங்கி இருக்கிறார் எனவும் தெரிகிறது.

தலைநகர் டெல்லியில் தற்சமயம் ரவி புதிதாக வீடு கட்டி இருக்கிறார் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு செல்வதாக தெரிவித்துவிட்டு அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். ஆகவே தமிழக பாஜகவின் தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா ? இருக்க மாட்டாரா என்ற கடைசி நிமிடங்கள் கமலாலயத்தை சுழற்றி அடித்துக் கொண்டு இருக்கிறது.

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!

0

காதல் திருமணத்திற்காக இதையும் தியாகம் செய்யும் பெண்! அதுவும் சாதாரண பெண் அல்ல!

ஜப்பானின் பட்டத்து இளவரசர்  புமிஹிடோவின் மகளும் பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரை காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்து கொண்டனர்.

2018ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர். ஆனால் கோமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. தற்போது இளவரசியின் காதலர் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, பன்னாட்டு பார்கவுன்சிலில் தேர்வு எழுதியுள்ளார்.

அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரியவும் உள்ளார். இதையடுத்து இளவரசியும் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல் வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்து சாமானியர்களை மக்களை போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இருபத்தி ஒன்பது வயதான மகோ திருமணம் செய்த பின்னர், இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களது திருமணத்தை பாரம்பரிய சடங்குகள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜப்பான் அரசின் குடும்ப விதிமுறைப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால், அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு வழங்கப்படும்.

அதன்படி இளவரசிக்கு 130 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8. 76 கோடி  இழப்பீடாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் இழப்பீடு தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மிகவும் கிரேட் இல்லையா? தற்போது உள்ள பெண்கள் எல்லாம் சொத்துக்காகவும், தன் எதிர்காலத்திற்காகவும் என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனால் அரச குடும்பத்து பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு நடக்காமலும், மேலும் மக்களின் பணம் தனக்கு வேண்டாம் எனவும் சொல்கிறார் பாருங்கள் அவரது வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

இரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் குறித்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் பாரத்பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் , இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஜூன் முதல் இந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் என்ற அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 08 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 38 காசுக்கும், விற்பனையாகி விடுகிறது

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களின் நிலை இதுதான்!

0

தமிழ்நாட்டின் இன்றைய தினம் நீலகிரி , கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளைய தினம் திண்டுக்கல், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ், ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

இடா புயல்! வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்கா!

0

அமெரிக்காவின் பல மகான்களை புரட்டி எடுத்து வரும் சூறாவளி தற்சமயம் நியூயோர்க் நகரில் மிக கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரையில் பலியாகி இருப்பதாக தகவல் கிடைத்தது.

சென்ற மூன்று தினங்களுக்கு முன்னர் தெற்கு மாகாணமான லூசியானாவில் புயல் காரணமாக, பெய்த கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு உண்டானதால் பல நகரங்களில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லூசியானா,மிஸ்ஸிலிப்பியில் இடா புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் தெளிவாக படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடுமையான பாதிப்பை உண்டாக்கிய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா புயல் இருக்கிறது.

சூறாவளியின் பாதிப்பு காரணமாக, கடலோர மாவட்டங்கள் சீன் லேகெட் லிஃப்ட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைகள் கன மழை கொட்டும் காட்சியும் அதற்கு நடுவில் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்துபோகும் காணொளியும் உள்ளூர் மக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் நியூயார்க் நகரின் புரூக்ளின் மற்றும் குயின்ஸ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது பல பகுதிகளில் சுரங்கப் பகுதிகளிலும் வெளி இடங்களிலும் பொது மக்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.

தற்சமயம் நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நகர மேயர் பில் டி பிளாசியோ வரலாறு காணாத வாழ்நிலையை அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் நல்லதா நகர சாலைகள் மிக பயங்கரமான நிலையில் இருக்கின்றன என கூறியிருக்கிறார்.

நியூஜெர்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளம் காரணமாக, நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டிருக்கின்றன. நியூயோர்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது