Tuesday, July 22, 2025
Home Blog Page 4554

நடிகையின் தொடையை முத்தத்தால் நனைத்த RGV!

0

சர்ச்சைக்கு பெயர் போன டைரக்டர் என்றால் ராம்கோபால் வர்மாவை கூறுவார்கள். இவர் இப்பொழுது எல்லாம் அடல்ஸ் ஒன்லி புகைப்படங்களை தான் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

ஆர்ஜிவி வேர்ல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக ஒரு டிஜிட்டல் தளம் வைத்திருக்கிறார். அந்த தளத்தில் படம் பார்ப்பதற்கு ஒரு தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

இப்பொழுதெல்லாம் லாக் டவுன் என்பதால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ஆர்ஜிவி. அதிலும் இவர் அடல்ஸ் ஒன்லி படங்களை மட்டும் தான் வெளியிடுகிறார். அதை பார்க்க இளைஞர்கள் மோதி வருகின்றனர்.

எப்பொழுதும் சர்ச்சைக்கு பெயர் போன இவர் பரபரப்பை கிளப்பும் வகையில் தான் படத்தின் டைட்டில்களும் இருக்கும். நாக்ட் கிளைமாக்ஸ், போன்ற தலைப்புகள் சமூக வலைதளங்களில் மிகவும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது.ஆனாலும் ஆர்ஜிவி அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

இப்பொழுது மறுபடியும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ட்விட்டரில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. நடிகை ஒருவரின் தொடையை முத்தமிட்டு நனைப்பது போல் ஒரு போட்டோவை தான் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த தொடை எந்த நடிகையின் தொடை என்பதையும் வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு அவர் தந்த கேப்சன், ” இந்த போட்டோவில் இருப்பது நான் தான். இது சோனியா நரேஷ்ன் தொடை தான். இந்த போட்டோவை எடுத்தது நைனா கங்குலி தான் , நைனா கங்குலி திறமையான நடிகை என்பதை தாண்டி திறமையான போட்டோகிராபர் உன் கூட என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையான அடல்ட் படங்களை எடுத்து விமர்சனத்திற்கு ஆளாவதை காட்டிலும் அர்த்தமுள்ள படங்களை இயக்கி நற்பெயர் பெறுங்கள் என பொதுமக்கள் கமெண்டில் தெறிக்க விடுகிறார்கள்.

https://twitter.com/RGVzoomin/status/1401082676480602113?s=20

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

0

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது.

கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர்கள் அந்தப் பெண்ணை கொலை செய்வதாகவும் சொன்னார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன்பின் அந்த பெண்ணின் மூத்த அண்ணன் மற்றும் அந்தப் பெண்ணின் பள்ளி நண்பர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

FIR பதிவு செய்த ரோகித் சிங் சாஜ்வான் அவரது படையினர், அந்த பெண்ணின் கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். குற்றவாளிகள் அதே கிராமத்தில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்த நிலையில் , பல காவல் படை கொண்ட குழுக்கள் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ” நான் எனது பள்ளி நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தென், இன்னொரு நண்பர் இன்னொரு பைக்கில் வந்து கொண்டிருந்தார், அப்பொழுது கிராமத்தை கடந்து வழியாக செல்லும் பொழுது , ஒரு சில இளைஞர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர்”. என்று அந்தப் பெண் கூறினார்.

,மூன்று இளைஞர்கள் என்னை வாகனத்தில் இருந்து தள்ளி விட்டு என்னுடன் வந்த நண்பர்களை அடித்தார்கள். என்னுடைய ஒரு நண்பர் அங்கிருந்து தப்பித்த நிலையில் மற்றொருவர் மிகவும் மோசமாக காயமடைந்த சுயநினைவை இழந்தார். என போலீசார் விசாரணையில் அந்தப் பெண் தெரிவித்தனர்.

பிறகு அவர்கள் என்னை அருகில் உள்ள உள்ளத்தில் அருகில் உள்ள கால்வாய் அருகே இழுத்து சென்று என்னை பலாத்காரம் செய்தனர். நான் உதவி கேட்டுக் கொண்டே இருந்தேன். என்னை பலாத்காரம் செய்த பின்பு என்னை கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டினர்.

இன்னும் எனக்கு அவர்களின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது, தர்மேந்திரா, அனோஜ், நீரஜ், அமித், நரேஷ், இதில் நரேஷ் என்பவன் தான் முதலில் மூர்க்கமாக நடந்து கொண்டால் அவன் தான் தலைவன். என அந்தப் பெண் பேசி முடித்தார்.

பிறகு போலீஸார் 18 வயது உடைய அந்த பெண் மிகவும் பயந்து உள்ளார். அவள் இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டது அவரது குடும்பத்திற்கு சொல்ல மிகவும் பயந்து உள்ளார். முதலில் அவர் மிகவும் அமைதியாக இருந்திருக்கிறார். பின் அந்தப் பெண்ணின் சகோதரி கொடுத்த தன்னம்பிக்கையின் படி வீட்டில் சொல்லி இருக்கிறார்.

அந்தப் பெண்ணின் நண்பர் கூறியதாவது, முதலில் அவர்கள் எங்களது போனை உடைத்த எங்களை அடிக்க ஆரம்பித்தனர், அங்கு என்ன நடக்கிறது என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, பிறகு நான் சுயநினைவு இழந்தேன், அதனால் எனது தோழியை என்னால் காப்பாற்ற முடியவில்லை என அந்தப் பெண் நண்பர் கூறியுள்ளார்.

SSP Sajwan கூறியதாவது, அவர்கள் மீது நாங்கள் எப்ஐஆர் பதிவு செய்து ஐபிசி செக்சன் 376-d எஸ்சி எஸ்டி குற்றப் பிரிவின் படி ஆறு நபர்களில் மேல் பதிவு செய்துள்ளதாக என கூறினார். அந்த பெண்ணை மருத்துவ சோதனைக்கு அனுமதிக்கப்பட்டு அந்தப் பெண் சொன்ன வாக்கு மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது.

3 விநாடிகள் அல்ல! 3 மில்லி வினாடிகளில் காதலில் விழுந்தேன்! ராஷ்மிகா பகீர்!

0

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா. சனிக்கிழமை அன்று தனது செல்ல நாயை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த செல்ல நாயின் படங்களை பகிர்ந்து அந்த நாயின் பெயரை அவுரா என்று தெரிவித்தார். அந்த செல்லப்பிராணி அவரை விவேகத்துடன் வைத்திருப்பதாகவும் கூறினார். தன் செல்லப் பிராணி ஆவலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன..

2016 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இவர். இவர் தனது நடிப்பின் மூலம் உன் அழகின் மூலம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்துள்ளார்.

இதனால் கூகுள் இவருக்கு ” National Crush” என்று பெயரைச் சூட்டி அறிவித்துள்ளது. National Crush என்று கூகிளில் தேடினாலே இவர் படம் தான் வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் மிகவும் அழகான இடத்தை பிடித்துள்ளார் ராஷ்மிகா.

இந்நிலையில் அவர் புதிதாக வளர்க்கும் செல்ல பிராணி ,இந்த கொரோனா காலத்தில் அவுரா தன்னை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதாக கூறினார். அந்த போட்டோக்களை வலைதளங்களில் பதிவிட்டு அவர் ” ஹாய் தோழர்களே, இங்கு உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நடுவே எனது மகிழ்ச்சியின் மூட்டையை நான் கண்டேன். இது முழு நேரமும் என்னை விவேகத்துடன் வைத்திருக்கிறது. எனது செல்லப்பிராணியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என கூறி AURA! என பெயரும் சொன்னார்.

நீங்கள் மூன்று வினாடிகளில் ஒருவரை காதலிக்க முடியும் என்று கூறுவார்கள். ஆனால் அவள் என் இதயத்தை 3 மில்லி விநாடிகளில் அன்பினால் கரைத்து விட்டாள். அதை உங்களுக்கு சொல்ல விரும்பினேன்”. என அவர் பதிவிட்டிருந்தார்.

 

 

 

Rashmika Mandanna introduced her pet dog, Aura, to the world.

தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை! தலையில் கைவைத்த வாகன ஓட்டிகள்!

0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுதுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் தேதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 24 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்71 ஒரு காசுக்கும், டீசல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 90.92 காசுக்கு விற்பனை ஆகி வருகின்றது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி மரணம்!

0

அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஜி.சம்மந்தம் கடந்த 27 9 1987 ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் இணைந்தார். சம்மந்தம் மதுரை, செங்கல்பட்டு, போன்ற பகுதிகளில் பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு புகார் எழுந்ததை தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான விசாரணைக் குழு இதனை விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில், 3- 12-1997 அன்று இந்த விசாரணைக் குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் ஜி.சம்பந்தம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் சாட்சிகள், விசாரணை சொத்துக்களின் மதிப்பீடு, அரசு சான்று ஆவணங்கள் போன்ற வேலைகளில் நல்லம்ம நாயுடு உடன் சேர்ந்து செயல்பட்டவர் சம்பந்தம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறிய போதும் கூட இந்த வழக்கை நன்கு அறிந்தவர் என்ற காரணத்தால், ஆட்சி மாறினாலும் சம்மந்தம் இந்த வழக்கில் இருந்து மாற்றப்படாமல் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி கட்டத்தில் சம்பந்தம் ஜெயலலிதா தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 2004ஆம் வருடத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சமயத்தில் விசாரணையை மேற்கொள்ள பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டார் சம்பந்தம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கிலும் தொடர்ச்சியாக இவர் ஆஜராகி இருக்கின்றார்.

சென்னை நீதிமன்றம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் சென்றது சொத்து குவிப்பு வழக்கில் 19 வருடங்களாக பணியாற்றிய ஜி.சம்மந்தம் 2016 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவர் செங்கல்பட்டு அண்ணாநகரில் மனைவி பிச்சையம்மாள் மற்றும் பிள்ளைகள் பாரதி, பார்கவி. முத்துப்பாண்டி, உள்ளிட்டோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவருடைய மூத்த மகள் பாரதி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக கூறப்படுகிறது இரண்டாவது மகள் பார்கவி பைலட்டாக இருக்கின்றார் மகன் முத்துப்பாண்டி மருத்துவர் ஆகிவிட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று உண்டாகி சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று மாலை இயற்கை எய்தி இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெற இருக்கிறது செங்கல்பட்டு அண்ணாநகரில் இருக்கின்ற மின்மயானத்தில் இன்று மதியம் 12 மணியளவில் அவர் உடல் தகணம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவால் அடுத்தடுத்து அதிமுகவில் ஏற்ப்படும் பூகம்பம்!

0

ஒரு சில நாட்களாக சசிகலா அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுடன் உரையாற்றி வருகிறார் அவர் உரையாடும் ஆடியோ வெளியாகி வருகின்றது. இதில் நோய்த்தொற்று முடிவடைந்தவுடன் நான் அரசியலுக்கு வருவேன் தருவேன் என்று சசிகலா உரையாடி இருக்கின்றார். இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவில் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா உரையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் ஆறுமுகம் நான் எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதலே இந்த கட்சியில் இருந்து வருகின்றேன் தலைவரை நீக்கிய போதும், அம்மாவை சட்டசபையில் அவமானம் செய்தபோதும், மறியல் செய்து சிறைக்கு சென்று இருக்கின்றேன். நீங்கள் சிறைக்கு சென்ற சமயத்தில் அதே மனநிலையில் தான் இருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு நீங்கள் விடுதலை ஆனதை வரவேற்று சுவரொட்டிகள் அடித்தேன் ஆனால் துரோகிகள் ஒன்று சேர்ந்து எங்களை வாழ விடவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இப்போதும் கூட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு நகர செயலாளர் உடன் நெருக்கமாக தான் இருக்கின்றேன் என்னுடைய மகன் செந்தில்குமார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். நீங்கள் கட்சிக்கு வருகை தரவேண்டும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஆறுமுகம்.

அதன் பின்னர் உரையாற்றிய சசிகலா நிச்சயமாக வருகை தருவேன் கட்சியை சரிசெய்து அம்மா கொண்டு போனது போல நானும் கட்சியை எடுத்துச் செல்வேன். விரைவாக எல்லோரையும் நேரில் சந்திக்கிறேன் கட்சியை நன்றாக வளர்க்க வேண்டும் இதனால் தான் நான் ஆரம்பம் முதலே கட்சியில் இருப்பவர்களிடம் உரையாற்றி வருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் சசிகலா.

உங்க ஆதார் எண்ணை வைத்து எத்தனை பேர் நம்பர் வாங்கி இருக்காங்க! இதோ செக் பண்ணுங்க!

0

பெருகிவரும் மோசடியில் எத்தனையோ பேர் ஆதார் எண்ணை வைத்து நமது பெயரில் போலி கணக்குகள் தூங்குவதோ அல்லது வங்கியிலிருந்து பணத்தை எடுப்பது மற்றும் பல்வேறு வலைதளங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்துவது போன்ற பல்வேறு ரீதியான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

 

நாம் வேறு ஒரு தேவைக்காக ஆதார் கார்டை கொடுத்து இருப்போம், ஆனால் அவர்கள் அதை வேறு விதமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அதை நம்மை சிக்கலில் கொண்டு போய் சேர்த்துவிடும். அரசின் இந்த வலைதளம் உங்களது மொபைல் போனில் எத்தனை பேர்களின் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன. உங்களது ஆதார் கார்டு களை வைத்து எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை விலாவரியாக காண்பிக்கும்.

 

இந்த வலைதளத்திற்கு உள்நுழைந்து உங்களது நம்பரை கொடுக்க வேண்டும். நம்பர் கொடுத்து நீங்கள் என்டர் செய்தால் உங்களுக்கு பாஸ்வேர்டு வரும். அந்த பாஸ்வேர்டை நீங்கள் சரியாக தட்டச்சு செய்து என்டர் செய்தால் உங்கள் மொபைல் எண்ணின் மூலம் மற்றும் உங்களது ஆதார் கார்டு மூலம் எந்தெந்த எங்கள் தொடர்புடையதாக இருக்கிறதோ அத்தனை எண்களின் விவரமும் காண்பிக்கும்.

 

அந்த நம்பருக்கு கீழே மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 1. இது என்னுடையது அல்ல (This is not my).

2. இது என்னுடையது தான் ஆனால் அவசியமல்ல ( this is mine but not required)

3. எனக்குத் தேவையானது. ( This is required) என்று ஆப்ஷன்கள் இருக்கும். நீங்கள் அதை கிளிக் செய்து கீழே உள்ள ரிப்போர்ட் என்ற பட்டனை அழுத்தினால், அந்த நம்பரை உங்களது ஆதார் எண்ணில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும்.

 

உங்கள் பெயரில் இல்லாத அல்லது தேவையில்லாத எண்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் தக்கவைக்க வேண்டிய எண்களுக்கு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.

 

இந்த வெப்சைட்டில் உள்நுழைந்து https://tafcop.dgtelecom.gov.in/index.php# உங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற மொபைல் நம்பர்களை கண்டறியுங்கள் மற்றும் தேவையறிந்து அதன்பின் நீக்குங்கள்.

வங்கிகளுக்கு வங்கியாளர் குழுமம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ காரணமாக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் உடன் வருகின்ற 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் வங்கி பரிவர்த்தனைகள் முன்னரே அறிவித்தது போல பகல் 2 மணி வரையில் மட்டுமே நடைபெறும் எனவும், வங்கி வேலை நேரத்தையும் வருகின்ற 13ஆம் தேதி வரையில் குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி வங்கியின் கிளைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கி பரிவர்த்தனைகள் முன்னரே அறிவித்தது போல பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும், மண்டல அலுவலகங்கள் நிர்வாக அலுவலகங்கள் போன்றவைகள் வழக்கம்போல மாலை 5 மணிவரையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மாற்று முறையில் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரொக்க பரிவர்த்தனை மற்றும் இணையதள பரிவர்த்தனைகளுக்கு என் இ எஃப் டி என்ற தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மற்றும் ஐ எம் பி எஸ் என்ற உடனடி கட்டண சேவை அதோடு ஆர்டிஜிஎஸ் என்ற ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் செலுத்தும் சேவை அதோடு மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
a
அரசு வர்த்தகம் காசோலை பரிவர்த்தனை சேவைகள் அளிக்கவேண்டும் ஏடிஎம் பணம் செலுத்துதல் இயந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.

ஊரடங்கு தளர்வு! சென்னை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!

0

நோய்த் தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு தளர்வுகளுடன் வருகின்ற 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி பேட்டி கொடுத்திருக்கிறார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் மளிகை மற்றும் காய்கறி பழம் பூ மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்ற வருடம் இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர்கள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள் பொதுமக்கள் என்று பலரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார்கள்.

இதனை அடுத்து கோயம்பேடு காய்கறி சந்தை முழுமையாக மூடப்பட்டிருந்தது. காய்கறி, பழம், பூ, போன்ற சந்தைகள் போன்றவற்றை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இந்த நிலையில், 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு படிப்படியாக மறுபடியும் திறக்கப்பட்ட இந்த சந்தையை தற்சமயம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில்லரை வியாபாரிகள் மட்டும் இந்த மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது தனியார் வாகனங்கள் மோட்டார் வாகனங்களுக்கும் இந்த சந்தையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

காய்கறி மற்றும் பழங்கள் சந்தையில் இருக்கின்ற மொத்தவிற்பனை கடைகளைத் தவிர்த்து சிறு மற்றும் மொத்த விற்பனை கடைகள் நாள்தோறும் 30 சதவீதம் அளவிற்கு சுழற்சி முறையில் செயல்பட இயலும் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். அதோடு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் எல்லோரும் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகளை இன்றியமையாத தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டார். அதேபோல கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வருகைதரும் எல்லோருக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வங்காள தேச பெண் கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பம்! ஆதாரங்களை திரட்டிட போலீசார்!

0

வங்காள தேச பெண் கற்பழிப்பு வழக்கில் புதிய திருப்பம்! ஆதாரங்களை திரட்டிட போலீசார்!

பெங்களூரு ராமமூர்த்திநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காளதேச நாட்டை சேர்ந்த இளம்பெண் 4 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். மேலும் இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மதுபாட்டிலால், அந்த நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தி இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு தம்பதி உள்பட 12 பேர் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து விபசார தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண்ணும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்ததும், பணப்பிரச்சினையில் அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருந்ததும் தெரிந்தது. இந்த நிலையில், கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது வங்காளதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்து கைதான நபர்கள் விபசார தொழில் நடத்தி வந்துள்ளனர். பெங்களூருவில் தங்குவதற்காக போலி ஆதார் அடையாள அட்டையை வாங்கி உள்ளனர். பெங்களூரு மட்டுமின்றி கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் விபசார தொழில் நடத்தி வந்துள்ளனர்.

இதற்காக வங்காளதேசத்தில் இருந்து இளம்பெண்களை சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்திற்கு வரவழைத்து அங்கிருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளனர். இதுவரை 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

அந்த இளம்பெண்களிடம், பெங்களூருவில் மதுபான விடுதியில் நடன அழகி உள்ளிட்ட வேலை வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்து வந்து, அவர்களை விபசாரத்தில் தள்ளி 12 பேரும் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது.

தினமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. சில இளம்பெண்கள், அவர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபடாமல் தனியாக சென்று விபசாரம் செய்ததால் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தி போன மாதமே நமது இதழில் வெளியானது. இந்நிலையில், சம்பத்தப்பட்ட பெண்ணை விசாரித்தால் தான் விவரங்கள் முழுதாக தெரியும் என போலீசார் கூறிய நிலையில் தற்போது விவரங்கள் கிடைத்துள்ளன.