சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5557

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை! இன்றைய நிலவரம்

0

உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக விழ்ச்சி அடைந்த நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.இதற்கு காரணம் வரி உயர்வு என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 15 நாட்களுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமதிற்கு உள்ளாகினர்.இந்த பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மற்ற பொருள்களின் விளையும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.59 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 77.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்தும் டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்களை அங்கே இங்கே என அலைபாய விடும் கொலைகாரன் பட நடிகையின் ஹாட் புகைப்படம்

0

இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தை பெற்ற ஆஷிமா. அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது.

தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆகி அடுத்து ஜெர்ஸி என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்தது. அதன் பிறகு தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கொலைகாரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார் என்னும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார்.

Kolaigaran
Kolaigaran Heroine Ashima Narwal Photo Update

தமிழில் இன்னும் பெரிய பிரபல நடிகர்களுடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம்!
அந்த வகையில், தற்போது பாரபட்ட சமின்றி தன்னுடைய அழகை அள்ளி தந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஊடகத்தில் முதல் பலியை ஏற்படுத்திய கொரோனா! அதிர்ச்சி சம்பவம்

0

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த நோயின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பின் தினசரி தொற்று அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஊரடங்கு பணியில் காவல்துறை, தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே நிகழும் சம்பவங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தி சேவையை ஊடகங்களும் களத்தில் நின்று செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் ஊடகத்துறையில் கொரோனா பாதிப்பால் ஒளிப்பதிவாளர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மனைவி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார். இச்சம்பவம் ஊடகத்துறையில் பணியாற்றும் நபர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு?

0

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைப்பது குறித்து தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தேர்வுகளை நடத்துவதாக கூறப்பட்டு வருகிறது.

மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்,பிடிஎஸ், சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.இதற்கான விண்ணப்பப்பதிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி 6 முதல் நடைப்பற்றது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தேர்வானது ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்வு ஜூலை 26 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்தத் தேர்வை தமிழகத்தில் உள்ள சென்னை கோவை,கடலூர்,காஞ்சிபுரம் நாமக்கல்,கரூர்,மதுரை,நாகர்கோவில் ,தஞ்சாவூர், திருச்சி ,திருநெல்வேலி, சேலம்,வேலூர்,திருச்சி ஆகிய இடங்களிலும் மேலும் நாடு முழுவதும் 154 இடங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை செய்து வருகின்றனர்.பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என மற்றொரு தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே தேசிய தேர்வு முகமை கொரோனா பாதிப்பு குறைந்த உடனே தேர்வை நடத்தலாம் என ஆலோசித்து வருகிறது. இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை.

மனதில் ஏதோ ஆபத்து ஏற்பட போவதாக தோன்றுகிறதா? உடனே இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள் எந்த ஆபத்தும் நேராது!!

0

சிலருக்கு தன் குடும்பத்திலோ அல்லது தன்னைச் சுற்றியுள்ள உறவினர் நண்பர்களுக்கோ ஏதோ ஆபத்து ஏற்பட போகிறது என்று கனவின் மூலமாகவும் அல்லது சிலருக்கு மனதில் இதுபோன்ற எண்ணங்கள் உணர்வர்.இதே விஷயம் திருப்பி திருப்பி மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் இந்த சமயத்தில் அந்நபர்கள் தன் நெருங்கியவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனவேதனையுடன் இருப்பர்.

பிராத்தனைகளிலே மிகச் சிறந்தது ஒருவர் மற்றவருக்காக பிரார்த்தனை செய்வது என்று ஆன்மீகரீதியாக நம்பப்படுகிறது. இதுபோன்று எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும் சமயத்தில் உடனே இந்த தெய்வத்திற்கு இந்த முறையில் விளக்கேற்றுங்கள் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எந்த தீமைகளும் அண்டாது.

Kala Bairavar-News4 Tamil Online Tamil News3
Kala Bairavar-News4 Tamil Online Tamil News3

பைரவருக்கு எவ்வளவு பெரிய துன்பத்தையும் எளிதியில் நீக்கி மகிழ்ச்சியை தரக்கூடிய சக்தி உண்டு.பைரவரை வழிபட்டு வருகையில் விபத்து ,துர்மரணம் போன்றவற்றை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்பது ஆன்மீக ரீதியாக முற்றிலும் நம்பப்படுகிறது.தன்னைச் சுற்றி உள்ள யாரோ ஒருவருக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று நினைக்கும் நேரத்தில் காலபைரவரை நாம் வழிபட்டு வந்தால் அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது.பைரவருக்கு மிகவும் உகந்தது செவ்வரளியும் வெள்ளை பூசணி ஆகும்.

Kala Bairavar-News4 Tamil Online Tamil News2
Kala Bairavar-News4 Tamil Online Tamil News2

அவருக்கு உகந்த இந்த செவ்வரளி மாலையை சூட்டி வெள்ளை பூசணியில் தீபமேற்றி நாம் மனதார வழிப்படுகையில் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள நம் சுற்றார் களுக்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் பைரவர் நம்மை கரத்தாருளுவார்.

கொரோனாவை வெற்றிகொண்ட 100 வயதை கடந்த முதியவர்! அவரது குடும்பத்தினர் கூறிய அதியம்?

0
  • சீனாவின் வூகாண் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதிகமான உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு குழந்தை முதல் முதியவர் வரை பாதிப்பு ஏற்படுத்தும் கொரோனா தொற்றால் உலகளவில் 4,96,796 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து 100 வயதை கடந்த முதியவர் குணமடைந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் அப டிகலன் என்ற முதியவர் கொரோனா பாதிப்பு அறிகுறியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்த முதியவருக்கு ஆக்சிஜன் தொடர்ந்து அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நல்ல நிலைக்கு டிகலன் திரும்பியுள்ளார். இரண்டு வாரங்களாக அவர் சிகிச்சை பிரிவில் இருந்தார்.இந்த முதியவருக்கு 114 வயது இருக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வயதை உறுதி செய்ய முடியாது என மருத்துவர் கூறினார். மேலும் இவருக்கு மருத்துவ கணிப்பின்படி 108 வயது இருக்கலாம் என்றும், 80 வயது தாண்டினாலே கொரோனா பாதிப்பில் இருந்து உயிர்பிழைப்பது கடினம் ஆனால் இந்ந வயதிலும் நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கும் இவர் ஆச்சரியமானவர் என்று மருத்துவர் கூறினார். இதுவரை எத்தியோப்பியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை!

0

டெல்லியை சேர்ந்த 16 வயது டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் சிக்கர் ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரை டிக்டாக்கில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு ஷாஹ்தாராவில் உள்ள இவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய டிசிபி அமித் சர்மா தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் சியா கக்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

கடைசியாக சியா கக்கர் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு டிக்டாக் செய்து அதனை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா முன்கூட்டியே விடுதலையா? கர்நாடக சிறைத்துறை கொடுத்த விளக்கம்

0

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே நன்னடத்தை அடிப்படையில் வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து உண்மையை அறிந்து கொள்ளும் வகையில் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக கர்நாடக சிறைத்துறையை நாடியுள்ளார்.இவருடைய மனுவுக்கு பதிலளித்துள்ள கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவின் தண்டனை காலத்தை கணக்கிடுவது குறித்து பல்வேறு நடைமுறைகள் உள்ளதாக கூறியுள்ளது. மேலும் சசிகலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய விடுதலை தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறையில் உள்ள சசிகலா வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு பின்னர் விடுதலை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.மேலும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை மூலமாக சசிகலாவுடன் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தான் பாரதிய ஜனதா கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து கர்நாடக சிறைத்துறை மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகியது போல சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து எந்தவிதமான பரிசீலனையும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி பொருத்த திட்டம்!

0

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.டாஸ்மாக் கடைகளில்
கொலை,கொள்ளை மற்றும் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடைப்பெற்று வருகின்றன.

மேலும் இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுத்தும் அனைத்தும் பலனளிக்காமல் போனது. இதனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் இந்த சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம் என முடிவு செய்துள்ளது.

இதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு கேமரா வீதம் மொத்தம் 3000 கடைகளுக்கு 6000 கேமராக்கள் முதலில் பொருத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிசிடிவி கேமராக்கள் அதிகம் மது விற்பனையாகும் கடைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரும் கடைகளில் பொருத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் ? அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை

0

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை செய்து வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறக்காததால் 10 மற்றும் 11-ம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டனர். மேலும் கலை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.

மேலும் பொறியியல் கல்லூரிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து பேசப்படாத நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இறுதி ஆண்டு மாணவர்கள் அடுத்த ஆண்டு வேலைக்கு செல்ல இருப்பதால் தேர்வுகள் அவசியம். எனவே மாணவர்கள் வீட்டிலிருந்து செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுதுவது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.