சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5664

இருபதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழிவகை

0

இருபதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழிவகை

தமிழகத்தின் வரவு செலவு திட்டமானது கடந்த வாரம் தமிழக துணை முதல்வரும் தமிழகத்தின் நிதியமைச்சருமான o.பன்னீர்செல்வம் அவர்களால் வெளியிடப்பட்டது.

சட்டமன்றத்தில் இதுகுறித்த பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே பேரவையில் நேற்று தொழில்துறை அமைச்சர் சம்பத் அவர்கள் கூறுகையில், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் பலமுறை எங்கள் மாவட்டத்தில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

.

அவருடையை கோரிக்கையை ஏற்கும் விதமாக தமிழக தொழில்துறை அமைச்சகம் சார்பாக சிப்காட் அமைக்க புதிய நிலம் எடுக்கும் சட்டத்தின் படி 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டதாக தெரிவித்தார்.சிப்காட் தொழிற்சாலையானது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்,மயிலம் பகுதியில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

.

மேலும் இப்பகுதியானது சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தைவான் நாட்டு தொழிற்சாலையான நைக் காலனி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் விரைவான வளர்ச்சியை எட்ட வழி வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் இருபதாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இதற்கு மூலகாரணமாக அமைந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை தனியாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவித்தது, விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி அமைத்தது போன்ற திட்டங்களை செயல்படுத்தி தனது செல்வாக்கை மென்மேலும் வடமாவட்டத்தில் அதிகரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0

ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும், அவர்களை கமாண்டர்களாக நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

நவீன காலத்தில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்திய ராணுவ பாதுகாப்பு படைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்க்கப்படுவதாக பேச்சு எழுந்தது. இதையடுத்து மூத்த வழக்கறிஞர்கள் இராணுவ உயர் பதவிகளில் பெண்களையும் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு குறித்து, பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி தரக்கூடாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் முன்பு அதிரடியாக கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ஆண்களின் உடல் வலிமைக்கு ஈடாக கடுமையான பணிகளை பெண்களால் செய்ய முடியாது என்று பதில் கூறியிருந்தது.

இவ்வழக்கு குறித்த விசாரணையில், மத்திய அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராணுவத்தில் பெண்களை கமாண்டர்களாக நியமிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் மத்திய அரசு பெண்களை மதிக்காமல் அவமதித்துள்ளதாகவும் கருத்து கூறியுள்ளார் மேலும், ராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

ஊரே நாற்றம் அடிக்கும் ஊரப்பாக்கம்! கண்டு கொள்ளாத அரசு

0

ஊரே நாற்றம் அடிக்கும் ஊரப்பாக்கம்! கண்டு கொள்ளாத அரசு

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெருங்களத்தூர் பகுதிக்கு அடுத்து உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேறி வருகின்றனர்.

குறிப்பாக அருகிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் பெருமளவில் இந்த பகுதியில் குடியேறி வருகின்றனர். இவ்வாறு மக்கள் நெருக்கம் அதிகமாக உருவாகி வரும் இந்த பகுதியில் போதிய அளவில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தாலும் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாமல் போன காரணத்தாலும் அந்த பகுதி அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக
ஊரப்பாக்கம் கங்கை நகரில் இது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அரசோ அரசு ஊழியர்களோ இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தம் தரும் ஒன்று அப்பகுதியில் வாழும் போது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ள காரணத்தால் அப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாகி வருகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் குப்பைகளை கொட்டும் தொட்டிகள் இல்லை என்ற காரணத்தால் ஆங்காங்கே சாலையின் ஓரத்திலும் குடியிருப்பு இடத்திலும் பொது மக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டியானது கழிவு நீர் நிரம்பி மழை நீர் சேகரிப்பு தொட்டியா இல்லை கழிவு நீர் சேகரிப்பு தொட்டியா என்ற கேள்வி எழும் நிலையில் தான் உள்ளது. அந்த அளவிற்கு தொட்டியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.

மேலும் அப்பகுதிகளில் உள்ள சாலை ஓரத்தில் வெட்டப்பட்ட குழி இன்னும் சரி செய்யப்படவில்லை இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் அவதியை அனுபவித்து வருகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!!

0

எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!!

திமுகவின் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி ராஜ்யசபா உறுப்பினர் திமுகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகை, ஊடகங்களை மற்றும் பிராமணர் பற்றிய இவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது முகநூலில் திமுக எப்படியெல்லாம் பிராமணர்களை அண்டி பிழைத்தது என்று பல்வேறு ஆதாரங்களுடன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், ஆர்.எஸ்.பாரதியின் தரம்தாழ்ந்த அநாகரிக பேச்சுக்கு பத்திரிகையாளர் சங்கம் மன்னிப்பு கேட்க கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதோடு, ஸ்டாலின் இதுபோன்ற தவறான பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிக்காமல் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், பத்திரிகையாளர் மற்றும் ஊடகங்கள் குறித்த தனது விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார். நான் சில ஊடகங்களை குறிப்பிட்டுதான் பேசினேன் எல்லோரையும் சொல்லவில்லை. இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை, எனது தவறை நான் உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக ஸ்டாலின் தன்னிடம் பேசியதாகவும் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த சிஏஏ சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் இறந்ததாகவும், அதற்கு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை அதிமுக மற்றும் பாமகவின் ஆதரித்து வாக்களித்ததே காரணம் என்றும், இதனால் அந்த மரணம் நிகழ்ந்ததாகவும் திமுகவின் எம்.பி செந்தில்குமார் டுவிட் செய்திருந்தார். பிறகு அது உறுதி செய்யாத தகவல் என்று தெரிந்த பிறகு அதற்காக டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து சர்ச்சையாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகி வருகிறது.

விவாகரத்து ஏற்பட இது ஒன்றுதான் காரணம்: ஆர்எஸ் தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம்

0

விவாகரத்து ஏற்பட இது ஒன்றுதான் காரணம்: ஆர்எஸ் தலைவரின் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம்

தற்போது விவாகரத்து பெறுவது என்பது மிக அதிகமாகி வரும் நிலையில் இந்த விவாகரத்துக்கு கல்வியும் வசதியும் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார்

திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது என்பது படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் மத்தியில் மட்டும் தான் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை சோனம் கபூர் ”அறிவுள்ள எந்த மனிதரும் இப்படிப் பேசுவார்களா? இந்த கருத்து முட்டாள்தனமான பிற்போக்கான கருத்து” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்

ஆர்எஸ்எஸ் தலைவரின் திருமணம் விவாகரத்து குறித்த கருத்தும் அதற்கு சோனம் கபூர் தெரிவித்த பதிலடியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மோகன் பகவத் கருத்தை பிற்போக்குத்தனமானது என்று சோனம்கபூர் விமர்சனம் செய்தாலும் நெட்டிசன்கள் பலர் இவரது கருத்தை ஆதரித்து வருகின்றனர். கல்வி, வசதி ஏற்படுத்திய தன்னம்பிக்கை தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும், இது இரண்டும் இல்லாதவர்கள் கருத்துவேறு ஏற்பட்டாலும் வேறு வழியின்றி விவாகரத்து முடிவை எடுக்காமல் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் கூறியுள்ளனர்.

திரௌபதி படத்தின் இயக்குனர் அதிரடி திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

0

திரௌபதி படத்தின் இயக்குனர் அதிரடி திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி என்பவர் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரைலர் தமிழகத்தில் பல்வேறு வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.

இதற்கு இயக்குனர் மோகன் ஜி அவர்கள் முதலில் திரைப்படத்தை பாருங்கள் பார்த்து விட்டு நீங்கள் விமர்சனங்களை கூறுங்கள் என்றும், இத்திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான திரைப்படம் இத்திரைப்படத்தை தங்கள் பெண் பிள்ளைகளோடு பாருங்கள் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார்

இதில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷியும் கதாநாயகியாக “டூலெட்”படத்தின் நாயகி ஷீலாவும் நடித்துள்ளனர்.

பொதுவாக தமிழ்சினாமாவில் திரைப்படம் என்று சொன்னால் அது தென் மாவட்டமான மதுரையையோ அல்லது கொங்கு மண்டலத்தையோ அடிப்படையாக கொண்டு அமைவதையே பார்த்துள்ளோம்.

இயக்குனர் தங்கர்பச்சன் மட்டுமே தனது திரைப்படங்களில் வட மாவட்ட மக்களை காட்சிப்படுத்துவார். இவரையடுத்து தற்போது இயக்குனர் மோகன் ஜி வட மாவட்ட மக்களை திரையில் காட்ட முயற்சித்துள்ளதால் இது வடமாவட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இத்திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்திலும் இருந்தும் ஆதரவுகள் பெருகி வருகிறது.அதாவது மக்கள் தாங்களாகவே தங்கள் சொந்த பணத்தில் சுவர் விளம்பரங்கள் செய்து திரௌபதி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமும் பலர் தனக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூகவளையதளங்களிலும் திரௌபதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் கூறிய வண்ணமும் திரைப்பட வெளியீட்டு தேதியை கூறும் படியும் கெட்டு வருவதாகவும் இயக்குனர் மோகன்.ஜி கூறி இருந்தார். அவர்கள் அனைவருக்கும் இன்று (18-02-2020) திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

மாஸ்டருக்கு நிகராக வியாபாரத்தை முடித்த தனுஷ் படம்

0

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்கு நிகரான வியாபாரத்தை தனுஷின் படம் செய்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் வியாபாரம் அதன் படப்பிடிப்பு 70% நடந்து கொண்டிருந்தபோதே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை, தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது தனுஷ் நடித்துள்ள 40வது படத்தின் வியாபாரமும் அந்த படத்திற்கு டைட்டில் வைக்க முன்னரே முடிந்துவிட்டது. தனுஷ் 40 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நிலையிலிருந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களின் பெயர்களை இந்நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டின்படி இந்தப் படத்தின் தமிழக உரிமையை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் தெலுங்கு, மலையாளம், ஓவர்சீஸ் உரிமைகளை வாங்கியுள்ள நிறுவனங்களின் பட்டியலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

0

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

தமிழ் திரைத்துறையில் இது வரை எந்தவொரு இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை தைரியமாக திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநரான மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு,கலப்பு திருமணம் என்ற பெயரில் காலம் காலமாக திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டுமே தொடர்ந்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி வருவது பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வாறு திட்டமிட்டே செயல்படும் இவர்கள் இந்த நாடக காதல் மூலம் அந்த சமுதாய பெண்களை திருமணம் செய்து கொண்டு பெற்றோர்களிடம் பணம் வாங்கி வர சொல்வது, சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமல் போலிப் பதிவு திருமணங்கள் மூலமாக பெண்ணை பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களை செய்து வரும் சிலரை பற்றி பெண்களுக்கும் அவர்களை பெற்ற பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை கொடுக்கும் படம் என்று இயக்குனர் மோகன்.ஜி கூறியுள்ளனர்.

மக்களிடமிருந்து முதலீடு பெறும் கிரவுட் பண்ட் மூலமாக எடுக்கபட்ட இந்த திரௌபதி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியான நாள் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யூ டியூபில் முதல் ஐந்து இடந்திற்குள் ட்ரெண்ட் ஆகி வந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு இணையாக ட்ரெண்ட் ஆகி வந்தது. இவ்வாறு தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கான வரவேற்பு பெருகியது. வரவேற்பை போல இந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியது. இவ்வாறு கடந்த சில வாரங்களாக படம் வெளியாகுமா? ஆகாதா? வெளியாகும் என்றால் எப்போ வெளியாகும் என மக்கள் மனதில் கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை நாளை வெளியிடுவதாக இயக்குனர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…

0

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் அதிக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…
அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னாள் நீதிபதி மாசிலாமணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் எந்த தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் அதனை அந்த குழுவில் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


    பள்ளி மாணவர்களின் இடைநீக்கம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் எதன் அடிப்படையில் வெளியிடப்பட்டது என விளக்கம் கோரி கடிதம் எழுதி இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு

0

சுடுகாடுகள் தயார் – தமிழகம் முழுவதும் பரபரப்பு

வருகின்ற 21 ஆம் நாள் சிவராத்திரி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வருகின்ற வெள்ளிக்கிழமை (21.02.2020) கன்னியாகுமரி ஆட்சியரால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்த பின்பு ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் உள்ள காளி கோவில்களில் மயாணக் கொள்ளை என்ற விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

மயாணக் கொள்ளை திருவிழாவானது தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், நகரங்களிலும் வெகு விமரிசையாக காலந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மயாணக் கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற மயாணங்களை தயார்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மிகவும் அமைதியான முறையிலே திருவிழாவை நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலே ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.