Monday, July 14, 2025
Home Blog Page 3380

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைந்துள்ளது . அந்த நடைமேம்பாலத்தில்  தினம்தோறும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம் . அந்த பகுதியில் மக்கள் அதிகள் சென்று வருவதால் பயணிகள் செல்ல வசதியாக இருக்க படிக்கட்டுகள் வைக்காமல் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சாய்வு பாதையை புத்திசாலித்தனம்மாக பயன்படுத்தி கொண்ட   ஆட்டோ டிரைவர் நெடுஞ்சாலையை கடக்க வேண்டும் என நடைமேம்பாலம்த்தில் ஆட்டோவை ஏற்றி சென்றுள்ளார். அதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆபத்தை உணராத ஆட்டோ டிரைவர் மீது நெட்டிசன்கள்  கடும் கன்னடம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த ஆட்டோ டிரைவர் தலை மறைவு ஆகிவிட்டதால் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவருகிறார்கள்.

இந்த ரவுடி கும்பல் போலியான ஒரு காவல் நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கைவரிசையை கட்டி வந்திருந்தனர்.இந்த ஆண்டு கடந்த மாதம் பாங்கா நகரில் உள்ள அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஹோட்டலை தேர்ந்தெடுத்த ஆறு ரவுடிகள் அங்குள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து போலீஸ் நிலையமாக மாற்றி கொண்டனர்.

அந்த ரவுடி கும்பலில் இரு பெண்களும் இருந்தனர்.காவலர், தலைமைக் காவலர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்ற கிரேடு வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளை அவர்களின் சட்டை பைகளில் மறைத்து வைத்துக் கொண்டனர்.

பார்ப்பவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராத வகையில் அவர்கள் தன்னை ஒரிஜினல் போலீஸ்காரர்களாகவே மாற்றி கொண்டனர்.இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அப்பகுதியில் உள்ள நிஜ போலீஸ் உயர் அதிகாரியின் வீட்டுக்கு அருகில்தான் அவர்கள் போலி போலீஸ் நிலையத்தை அமைத்திருந்தனர்.

இதனால் பொதுமக்கள் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை.போலீஸ் நிலையம் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அப்பகுதி மக்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் வர தொடங்கினர். அவ்வாறு வரும் புகாரை பொறுத்து ரவுடி போலீசார் பணம் பறிக்க தொடங்கினர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்தும் அவர்கள் மாமூல் வசூலிக்க தொடங்கினர். இதனால் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறு எட்டு மாதங்களாக போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த நிஜ போலீஸ் ஒருவர் இந்த போலி போலீசில் ஒருவரை சந்தேகப்பட்டு பிடித்து உள்ளார். அப்போது அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி வகையைச் சேர்ந்தது என்பதை அவர் கண்டறிந்தார்.

இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணித்த போது அவர்கள் போலி போலீசார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பதினாறாம் ஆம் தேதியன்று போலி காவல் நிலையத்துக்கு சென்ற பத்திற்கும் மேற்பட்ட போலீசார், போலீஸ் உடையில் இருந்த ரவுடிகளை உடனடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள் போலி முத்திரைகள் உள்ளிட்ட பல  ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம் !

சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம்!

தமிழக தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில். அது தற்போது திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது.வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ள பெண்கள் அக்கம் பக்கத்திற்கு சென்று வருவதற்காகவும் இந்த கட்டண இல்லா பயண சீட்டு திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.

இதனால் போக்குவரத்திற்கு ஏற்படும் செலவுகளை மாதம்தோறும் அரசானது வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையை பொருத்த வரை இந்த திட்டத்தின் முதலில் குறைந்த ஐந்து லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்த நிலையில் ஆனால் தற்போது படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இப்போது 11 லட்சமாக உயர்ந்துளளதாகவும் கூறப்படுகிறது.

தினம்தோறும் சராசரியாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்கின்றார்கள். இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசினார்கள். அப்போது கட்டணம் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை பெண்கள் எளிதாக கண்டறியும் வகையில் பிங்க் நிறம் பேருந்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் பூசப்பட்டுள்ளது எனவும் கூறினார்கள்.

இதன் மூலம் மற்ற பேருந்துகளில் ஏறுவது குறைந்துள்ளது. இந்த பிங்க் நிற பேருந்தை மூதாட்டிகள் கூட எளிதில் அடையாளம் காண்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. கடந்த பதினாறாம் தேதியில் இருந்து 11லட்ச பெண்கள் பயணித்துள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

இனி கவலை வேண்டாம் !..குரங்கு அம்மை நோயை கண்டறிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு!.

கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக உலக மக்களை ஆட்டி வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 578,003,88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,09,821 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் ஊடரங்கு அமல்படுத்த தொடங்கியது.இந்த தொற்று பல லட்ச கணக்கில் அப்பாவி மக்களை பலி வாங்கியது.இதனை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா தடுப்பூசி கண்டறிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதனால் கொரோனா சற்று குறைய தொடங்கியது.இருந்தாலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பெருமளவு மக்களின் உயிரை காவு வாங்கியது. இதற்கிடையே தான் பொது மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதார நிறுவனம் வலியுறுத்தியது.

இதனால் மக்கள் சிறிதளவு அமைதி அடைந்த நிலையில் குரங்கு அம்மை எனும் தொற்று நோய் பரவ ஆரம்பித்தது.இந்த நோய் உடம்பில் பல இடங்களில் பெரிய அளவில் கொப்பளங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிய தொடங்கும்.

இதன் முதல் அறிகுறியாக காய்ச்சல், சளி,உடல் சோர்வு,தலைவலி அதிக அளவு ஏற்படும்.இதனையடுத்து குரங்கு அம்மையை கண்டறிய பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டது.அதில் ஒரு பகுதியாக டிரன்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பரிசோதனைக் கருவியை மத்திய அரசு முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய்குமார் சூட் வெளியிட்டார்.

குரங்கம்மை தொற்று உள்ளவருக்கு இந்த கருவியை பயன்படுத்தி மிக எளிதாக எவ்வகை நோய் பாதிப்பு என கண்டறிந்து விடலாம் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் வாஜிராணி தெரிவித்தார்.இந்த நோய் பல்வேறு நாடுகளுக்கிடையே மிக வேகமாக பரவி வரும் குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கோப்ரா படத்தின் சென்சார் & ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்

0

கோப்ரா படத்தின் சென்சார் & ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மற்றப்பட்டுள்ளது.எதிர்பார்த்த நேரத்துக்குள் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலை இன்னும் முடியாததால் அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.

படத்தில் விக்ரம்முடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த கோப்ரா திரைப்படம் பெரும் வரவேற்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆக உள்ளது.சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு இந்த படத்தைப் பார்க்கலாம். அதே போல படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போதைய காலத்தில் 2.15 மணிக்குள் எடுக்கப்படும் படங்களையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்தவகையில் கோப்ரா சற்று நீளமான படமாகவே பார்க்கப்படுகிறது.

பாய்காட் ட்ரண்ட்டால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன… விஜய் தேவரகொண்டா கருத்து

0

பாய்காட் ட்ரண்ட்டால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன… விஜய் தேவரகொண்டா கருத்து

சமீபகாலமாக வட இந்தியாவில் படங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட்கள் உருவாகி வருகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகமாகியுள்ளது எனக் கூறியது சலசலப்புகளை உண்டாக்கியது. இப்போது அவரின் படமான லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்கவேண்டும் என சமுகவலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. படம் வெளியாகி மோசமான வசூலைப் பெற்றுள்ள நிலையில் அதற்கு இந்த பாய்காட் ட்ரண்ட்டும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வரும் காலங்களில் ஷாருக் கான் உள்ளிட்டவர்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் போதும் இதுபோல ஹேஷ்டேக்குகள் பரப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த பாய்காட் ட்ரண்ட் பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “இந்த பாய்காட் ட்ரண்ட்டிங் தவறான புரிதல்களால் நடக்கிறது. இதனால் பாதிகப்படுவது அமீர்கான் மட்டுமல்ல. அந்த படத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பங்களும்தான். அவர்களின் வேலை வாய்ப்பும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம்” எனக் கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகிறது.

பாய்காட் ட்ரண்ட் குறித்து பட ரிலீஸின் போது அமீர் கான் “என் படத்தை யாராவது பார்க்கவேண்டாம் என நினைத்தால் அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். இந்த படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்.” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!

காங்கிரஸ் அரசானது மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸின் செய்தி தொடர்புப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அவரதின் டூவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் முன்னதாகவே ஆர்பிஐ யின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டுகள் வாபஸ் போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலம் மக்கள் மற்றும் நாடு முழுவதும் பெரும் சிரமத்திற்கு உள்ளகினார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளை குறைக்கும் முயற்சியில் தீவிரமகா இடுப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஆர்பிஐ எச்சிரிக்கை விடுத்துள்ளது. தற்பொழுது உள்ள நிலையிலே வங்கிகளின் எண்ணிக்கை 27 ல்லிருந்து 12 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கயை மேலும் குறைத்து ஒரே ஒரு பொதுத் துறை வங்கி என்ற பெயரில் உருவாக்க தற்போது அரசானது முயற்சி செய்து வருகின்றது எனவும் கூறினார். இதனையடுத்து இது பேரழிவுக்கு வழி வகை செய்கிறது எனவும் ஆர்பிஐ எச்சரித்துள்ளது. இதனை மோடி அரசானது வழக்கம் போல தனக்கு தோன்றுவை மட்டுமே செய்வேன் என கூறி செயல்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலுவுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகர்… ரஜினியின் ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

0

வடிவேலுவுக்கு பதில் பிரபல நகைச்சுவை நடிகர்… ரஜினியின் ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினிகாந்தின் கடைசி சில படங்களான காலா, பேட்ட, அண்ணாத்த எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அடுத்து அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தன. சமூகவலைதளங்களில் பல ட்ரோல்களும் உருவாகின. இதையடுத்து இப்போது இந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் நெல்சன் தீவிரமாக மறுவிவாதம் செய்து மெருகேற்றியுள்ளார்.

இந்த படத்தில் ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதுபோல நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது யோகிபாபுதான் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் யோகி பாபுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.

படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்களில் மகாபலிபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் படத்தில் நடிப்பவர்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் அம்சத்தை கொண்டிருக்கும்.ஒரு சிம் ஏற்கனவே அதன் பிரைமரி ஸ்லாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும்.இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது.இதனை மற்ற முடியாது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இணைய இணைப்பு அளிப்பதற்கு மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பண்டிகை காலம் தொடங்குவதற்குள் முதல்கட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.

‘சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்..’ நடிகர் விக்ரம் அறிவிப்பு

0

‘சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்..’ நடிகர் விக்ரம் அறிவிப்பு

நடிகர் விக்ரம் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அப்படி அவர் நடித்த சேது, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணி நடிகராக்கின.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பேர்சொல்லிக்கொள்ளும் படி ஹிட் படம் அமையவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாடலாக ‘சோழா சோழா’ என்ற பாடல் வெளியானது. இந்த நிகழ்வு ஐதராபாத்தில் நடந்த நிலையில் அதில் விக்ரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிவிததது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு மேலும் சில படங்களில் நடிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது சம்மந்தமாக வதந்திகள் பரவின நிலையில் நலமாக இருப்பதாக அறிவித்தார். சமீபத்தில் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் விக்ரம். இது சம்மந்தமாக வீடியோ வெளியிட்ட அவர் ” ரஞ்சித் படத்துக்காக நான் தயாராகி வருகிறேன். நண்பர்கள் டிவிட்டரில் இணைய சொன்னார்கள். டிவிட்டர் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் லேட்டாக இணைகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் விக்ரம்க்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.