சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5665

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

0

தாயின் சேலையே மகனுக்கு தூக்கு கயிறான அதிர்ச்சி சம்பவம்! விளையாட்டு வினையானது..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் மகன் ஆண்ட்ரூ என்கிற சிறுவன் அங்கிருந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் மிகவும் சுட்டியாக விளையாடுவதை வழக்கமாக கொண்ட சிறுவன் வழக்கம் போல் தனது அம்மாவின் சேலையை ஊஞ்சல் கட்டி விளையாட நினைத்து, தனக்கு தெரிந்த வகையில் சேலையை முடிச்சு போட்டு மேலே மாட்டியுள்ளார்.

குழுந்தையை போல் ஊஞ்சல் சேலையில் படுத்து விளையாடிய போது சரிவர போடப்படாத சேலையின் முடிச்சி சிறுவனின் கழுத்து இறுக்கமாக பற்றிக் கொண்டது. இந்நிலையில் சிறுவன் கத்த முடியாமலும், அதில் இருந்து மீளமுடியாமல் துடிதுடித்து இறந்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்ததும் சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அருகில் இருந்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யாரும் எதிர்பாராத சிறுவனின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

0

போலீஸ் வேலையில் விரும்பி சேர்ந்தேன் இப்போது விரக்தியில் வெளியேற நினைக்கிறேன்! உதவி ஆய்வாளர் வேதனை!!

திருநெல்வேலி மாவட்டைத்தைச் சேர்ந்த ராஜகுமார் என்பவர் 2011 ஆம் ஆண்டு காவல்துறைக்கான முழு பயிற்சிகளையும் முடித்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளும், அடிக்கடி பணியிட மாறுதல்களும், மன அழுத்தமும், பண்டிகை திருவிழா போன்ற நாட்களில் எப்போதுமே விடுமுறை இல்லை. மனைவி மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க நேரமில்லை என்று முகநூல் பக்கத்தில் பணியால் வந்த வேதனைகளை பதிவு வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

இதுவரை சுதந்திரம் கிடைத்து முக்கால் நூற்றாண்டுகள் கடந்தும் இதுவரை சுதந்திரமே கிடைக்காத பணி காவல் பணி என்று தனது வேலையில் ஏற்பட்ட பல்வேறு கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அவரது முகநூல் கூறியிருப்பதாவது:

*  தலைமுடியை கூட நமது விருப்பபடி வைத்துக்கொள்ள முடியாது பணி காவல்பணி.
சொந்த பந்தங்களின் நல்லது, கெட்டதில் கலந்துகொள்ள முடியாத பணி.

*  காலவரையற்ற ஓய்வில்லாத பணி, அரசு விடுமுறை நாட்களை கூட அனுபவிக்க முடியாத பணி, விடுமுறை வாங்கினாலும் அதை நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி காவல் பணி.

*  அமைச்சு பணியாளர்களின் வேலைகளை நம் மீது சுமத்தி அதை செய்ய தவறினாலோ, மறுத்தாலோ விளக்கம் கேட்டு குறிப்பாணைகள் வழங்கும் பணி.

*  ஒட்டுமொத்தமாக கருத்து சுதந்திரமே இல்லாத பணி, மன அழுத்தம் காரணமாக மக்களிடம் வெறுப்பை சம்பாதிக்கு பணி.

http://m.helo-app.com/s/yMjRvMYRS

இவ்வாறு தனது முகநூலில் காவல் பணியின் நெருக்கடிகளை பற்றி பதிவு செய்துள்ளார். மேலும், தனது பணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனக்குமுறலுடன் வெளிப்படுத்தியுள்ளார். காவல்துறையில் பணிபுரிபவர்களின் மனநிலை எந்தளவிற்கு பாதிக்கப்படும் என்பதற்கு இவரின் அனுபவமும் , முகநூல் பதிவுமே சாட்சி.



சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

0

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் வினய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் 35 ஆவது பிறந்த நாளான இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை சிவகார்த்திகேயனுக்குபதிசிவகார்த்திகேயனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!!

0

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!!

திமுகவின் எம்பி ஆர் எஸ் பாரதி முன்பு பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், கோயிலில் திமுக கட்சியினர் போடுகின்ற காணிக்கை வைத்துதான் ஐயர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தொலைக்காட்சி செய்திகள் விபச்சார விடுதியை போல் செயல்படுவதாகவும், ஆதி திராவிடர்கள் நீதிமன்றங்களில் நீதியாக இருப்பதற்கு திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று விமர்சனம் செய்திருந்தார். பாஜகவின் எச்.ராஜாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பல்வேறு ஆதாரங்களுடன் திமுகவை வெளுத்து வாங்கியுள்ளார். அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்படுள்ளதாவது:

1) 1967ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டு தான் வெற்றி பெற முடிந்தது தி மு க வால் என்பதை மறந்து விட வேண்டாம்.

2) 1971ம் ஆண்டு ‘காஷ்மீரத்து பாப்பாத்தி’ என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் தி மு க ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்து விட்டதா தி மு க?

https://www.facebook.com/1474859992810579/posts/2259806510982586/

3) 1989 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம் ஜி ஆர் என்ற இரு பார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, தி மு க ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

4) 1996 ம் ஆண்டு ‘சோ’ என்ற பார்ப்பனரின் முயற்சியால் தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று தி மு க வெற்றி பெற்றது என்பதை மறைக்க முடியுமா?


5) 2006 ம் ஆண்டு நான் ‘பூணூல் அணிந்த பார்ப்பனன்’ என்று தன்னை அழைத்து கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற ‘மைனாரிட்டி ‘ ஆட்சியை தி மு க வால் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியுமா?

6) மேலும்,1999 ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில் தான் தி மு க மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009 ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பாத்தி என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக்கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறு படைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

7) பதவி சுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த ‘பார்ப்பனர்களை’ நாய்கள் என்றுஅழைக்கிறீர்களே தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டி பிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்?

தவறு செய்து விட்டீர்கள் ஆர் எஸ் பாரதி அவர்களே, தவறு செய்து விட்டடீர்கள்.

இவ்வாறு தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி 7 பேரையும் அரசு விடுதலை செய்யலாம்! காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பேச்சு!!

0

சட்டப்படி 7 பேரையும் அரசு விடுதலை செய்யலாம்! காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பேச்சு!!

முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட ஏழு பேரையும் அரசு விடுவிக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சட்டசபையில் கூறியுள்ளார். பட்ஜெட் குறித்த விவாத நேரத்தில் பேசிய விஜயதாரணி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகாலமாக சிறையில் கொடுமை அனுபவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட மன்னித்துவிட்டார்கள். இதன் பிறகு சட்டப்படி அவர்களை விடுதலை செய்யும் நிலைக்கு அனைவரும் ஆதரவு தருகிறார்கள். உடனடியாக அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என்று கூறினார். ஏழ்வரையும் விடுதலை செய்யுமாறு பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், ராஜீவ்காந்தி இறந்த சம்பவத்தின் போது 18 பேர் உயிரிழந்தார்கள், இதுவரை அவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த சம்பவத்தில் தனது தாயும் காயப்பட்டதை குறிப்பிட்டு பேசினார்.

சிறைக் கொடுமையில் இருந்த முருகன் தன்னை கருணை கொலை செய்யுமாறு மனுக்களையும் சிறைத்துறையினரிடம் அளித்துள்ளார். கடந்த மாதங்களில் பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோர் பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

0

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

ஏர்டெல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 10000 கோடு ரூபாயை செலுத்தியுள்ளது.

தொலைதொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அடக்கம். இதனால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது ஏர்டெல்.

இந்த வகையில் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரவேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஆக இருந்தது. அதை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாமல் இருந்தன.

இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் தாம் செலுத்தவேண்டிய தொகையில் ரூ.10 ஆயிரம் கோடியை பிப்.20 ஆம் தேதிக்குள், மீதமுள்ள தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் கெடு கேட்டு இருந்தது. அதன் படி தற்போது 10,000 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. ஏர்டெல் இன்னும் ரூ.25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது.

கடுமையான நிதிப்பற்றாக்குறையில் இருப்பதாக சொல்லப்படும் ஏர்டெல் நிறுவனம் செலவினங்களைக் குறைப்பதற்காக கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது.

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!

0

மோர்கன் வானவேடிக்கை! போட்டியையும் தொடரையும் வென்ற இங்கிலாந்து!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற,  டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து மூன்றாவது போட்டி செண்ட்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க வீர்ரகள் அனைவரும் அதிரடியாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த அணியின் க்ளாசன் 66 ரன்களும் பவுமா 49 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணியும் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியில் இறங்க ஸ்கோர் சீரான வேகத்தில் சென்றது. அந்த அணியின் பட்லர்(57) மற்றும் பேர்ஸ்டோ (64) ஆகியோர் சீரான அடித்தளம் அமைத்துக் கொடுக்க கடைசியில் களமிறங்கிய மோர்கன் அதிரடியில் இறங்கி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை 19.1 ஓவர்களில்  எட்டியது. சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மார்கன் தட்டிச்சென்றார்.

டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் டி 20 தொடரை  2-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது.

விவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!

0

விவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!

அம்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு முத்துவிழா பாராட்டு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்,

தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் கொள்கை, அடித்தட்டு மக்கள் முன்னேற பாமக பாடுபட்டு வருவதாக கூறினார். மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுக்க 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்ததை குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் ஆரம்பிக்கும் எந்த கட்சிக்கும் ஆட்சியில் அமர்வதே நோக்கமாக இருக்கும், பாமகவும் ஆட்சியில் அமர வேண்டும் என பேசினார்.

தமிழகத்திற்கு தேவையான தரமான, அறிவுசார்ந்த கல்வியை இலவசமாக வழங்குவோம். விவசாயிகளை கடவுளாக பார்க்கிறேன் தற்போதைய சூழலில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், தமிழக பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்காக ஒரு லட்சம் கோடி வழங்கினால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நிலை உயரும் என்று கூறினார்.

இதனையடுத்து, விவசாயத்திற்கு முக்கிய தேவையான கோதாவரி மற்றும் காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கூறியதைப் போலவே, 500 டாஸ்மாக் கடைகளை முதல்வர் எடப்பாடி அரசு மூடியது. நீதிமன்ற சட்ட போராட்டத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றாயிரம் மதுபான கடைகள் மூடினோம், சமீபத்தில் எங்களின் முக்கிய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்தது மட்டுமல்லாமல், அதனை சட்ட மசோதாவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தமிழக உரிமைக்காக போராடும் பாமகவை மக்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் பாமக வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மத்திய இரயில்வே துறை அமைச்சர் ஏகே மூர்த்தி ஆகியோருடன் அம்பத்தூர் பகுதி பாமக கட்சியினர் கலந்து கொண்டனர்.

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

0

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே சிவகார்த்திகேயனும் இவரும் நண்பர்கள். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனம் ஈர்த்த போஸ்டர் பரவலான பாராட்டைப் பெற்றது.

ஆனால் மதியத்திற்குள்ளாகவே அந்த போஸ்டர் எந்த படத்தின் காப்பி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர் ரசிகர்கள். இந்த ஆண்டு ஆஸ்கார் பட்டியலில் கவனம் ஈர்த்த நைவ்ஸ் அவுட் என்ற படத்தின் போஸ்டரை சுட்டுதான் லேசாக மாற்றங்களை செய்து டாக்டர் படத்தின் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதேப்போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் ஹீரோ போன்ற படங்களின் போஸ்டர்கள் வெளியான போதும் விமர்சன்ங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்

0

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சுறுசுறுப்பாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7.07 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை 11.03 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிஒவந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு படமான ’அயலான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தான் நடித்து வரும் இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.