சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5665

பாராளுமன்றத்தில் கொரோனா பற்றி 50நாட்களுக்கு முன்பே எச்சரித்த தலைவர் : மத்திய அரசு மெத்தனம்!

0

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸின் ஆபத்தை உணர்த்தும் விதமாக எடுத்து கூறியுள்ளார். அவர் மாநிலங்கள் அவையில் பேசி அந்த தகவலை அன்றே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த டுவிட் தற்போது தமிழக மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பல விருதுகளை பெற்ற சாதனையாளர் அன்புமணி ராமதாஸ், அவரது எச்சரிக்கையை அன்றே செவி கொடுத்து கேட்டிருக்கலாம் என மத்திய அரசை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

கொரோனாவின் கோரதாண்டவம் விரைவில் 50 ஆயிரத்தை எட்டும்! அதிர்ச்சி தகவல்

0

கொரோனாவின் கோரதாண்டவம் விரைவில் 50 ஆயிரத்தை எட்டும்! அதிர்ச்சி தகவல்

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உலகளவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸால்
9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து 1.93 லட்சம் பேர் மருத்துவர்களின் தீவிர மருத்துவ சிகிச்சையால் நல்ல முறையில் குணமடைந்துள்ளனர். பலாயிரம் பேர் கொரோனா தொற்றின் பாதிப்பில் தவித்து வருகின்றனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பமான கொரோனா தாக்குதல் தற்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி தனது கோரதாண்டவத்தை ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஈரான் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உச்சகட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 12 ஆயிரம் பலியை தாண்டியது, பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது இதேபோன்று அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் அங்கு கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகளவில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொரோனோ இரண்டு வாரங்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்திய பின்னரும் மக்கள் வெளியே சுற்றுவது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா : உலகம் முழுவதும் 46 ஆயிரத்திற்கு மேல் பலி!

0

சீனாவின் வூகான் மாநகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 9 லட்சத்து 28 ஆயிரத்து 98 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 1 லட்சத்து 92 ஆயிரத்து 632 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, அதில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 727 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 667 பேர் பலியாகியுள்ளனர்.

ஃபிரான்ஸில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது, அதில் நேற்று ஒரே நாளில் 563 பேர் பலியாகியுள்ளனர்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

0

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் ஊரங்கு உத்தரவை மத்திய அரசுப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 11மணிக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

கொரோனா பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்டப் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதனால் நாளை மாநில முதல்வர்களிடம் அவர்கள் மாநிலத்தில் எத்தனைப் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது மாநிலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது என்பது பற்றிக் கேட்டறிவார் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரைன்சிங் மூலம் நடத்தப்படுகிறது.

நாளை காலை 11மணிக்கு பிரதமர் அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களோடு கொரோனா பாதிப்பைப் பற்றி ஆலோசனை நடத்துவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு

0

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கொரோனா பாதிப்பு

இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முதல்வர் அவர்கள் டெல்லி மாநாட்டில் 1131 பேர் பங்கேற்றுள்ளனர் என்றும் அதில் 515பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.

இன்று புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இருவவருக்கு நோய்த்தொற்று இருப்பதுக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ராசிபுரத்தில் பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4பேருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் 17பேருக்கும் கும்பகோணத்தில் 12பேருக்கும் ஈரோட்டில் மூவருக்கும் ராசிபுரத்தில் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

0

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

CBSE : சிபிஎஸ்இ 1 முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் அதாவது அனைவரும் “ஆல் பாஸ்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற பாதுகாப்பு எண்ணத்திலேயே அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கும் கட்டாயத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக தமிழகம், புதுச்சேரி, குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அறிவித்தன. மாநில அரசுகளின் திடீர் தேர்ச்சி அறிவிப்பினால் பள்ளி மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை படித்து வரும் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆல் பாஸ் அறிவிப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொண்ட பருவத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திலாவது ஒயின்ஷாப்பை ஓப்பன் பண்ணுங்க : ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!

0

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் குடிமகன்கள் சாராயம் கிடைக்காமல் அல்லாடி வந்தனர். இவ்வாறு சாராயம் கிடைக்காத காரணத்தால் மது பிரியர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் சில இடங்களில் கள்ள மார்க்கெட்டில் சாராய பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாகவும் அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும் அதை குடித்த சிலர் மோசமாக பதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் ‘மாலையில் சில மணி நேரமாவது ஒயின்ஷாப்களை திறக்குமாறு’ அரசிற்கு யோசனை கூறியுள்ளார். இதனால் மது பிரியர்கள் கள்ள சாராயம் குடிப்பதும் தற்கொலை செய்வதும் தடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடியின் யோசனைக்கு நன்றி சொன்ன அமேரிக்க அதிபரின் மகள் : காரணம் இது தான்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கா இன்னும் சில வாரங்களில் மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்று அதிபர் டிரம்ப் கருத்து கூறியிருந்தார். இந்த நிலையில் அதிபர் டிரம்பின் மகளும் அவரின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் பாரத பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்படும் மன சோர்வை போக்க நித்ராஸனா என்ற யோகாசனத்தை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தானும் சோர்வடைந்து உள்ளதாகவும், தனக்கும் இந்த ஆசனம் உபயோகமாக இருக்கும் என்று அதற்கு நன்றி கூறி பதில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

0

பிரதமர் நிவாரண நிதிக்கு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை வழங்கிய ஹாரிபாட்டர் சிறுவன்! எவ்வளவு தெரியுமா.??

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவிலும் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அரசு கூறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தோடு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் பெருமளவு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டை காக்க பிரதமர் மோடி நிவாரண நிதி அளிக்குமாறு மக்களிடம் வேண்டு விடுத்தார். இந்தியாவின் அவசர காலத்தை புரிந்து பல்வேறு தனியார் தொழில்துறை நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர், நடிகைகள் பிரதமரின் நிவாரண நிதிக்கு பணத்தை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தை வழங்கி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளார். மிசோரத்தின் மாநில முதல்வர் “ஜோரம் தங்கா’ அவரது டிவிட்டர் பக்கத்தில் சிறுவனின் நிவாரண நிதியுதவியை பாராட்டி பதிவு செய்துள்ளார். அதில், மக்கள் பலரும் நிவாரண நிதி அளித்த நிலையில் 7 வயது சிறுவன் ரோமல் வீட்டில் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.333 நிவாரண நிதிக்கு உதவியுள்ளார் என்றும், நாட்டிற்காக உதவிய சிறுவனை மனதார பாராட்ட வேண்டும. உண்மையான ஹீரோ ரோமல்தான் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரோமலிடம் கேட்டபோது; எல்லோரும் உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று பிரதமர் கூறியதை டிவியில் பார்த்தேன். எனது உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியாது, ஆனால் அது என் இரண்டு வருட சேமிப்பு. கொரோனா பாதிப்பில் பலர் அத்தியாவசியப் பொருட்களுக்கே சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சமயத்தில் உண்டியல் பணத்தை யாருக்கும் உதவாமல் இருப்பதில் என்ன பயன் என்றும், ஆகையால் எனது அப்பாவின் உதவியுடன் காவல் நிலையத்தில் எனது பணத்தை கொடுத்துவிட்டேன். என்று கூறினார். சிறுவனின் செயல்பாடு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!!

0

கொரோனா பாதிப்பிற்கு 5 கோடி நிதியுதவி! கஜா புயலின் போது 1 கோடி! சமூக அக்கறையில் சக்தி மசாலா நிறுவனம்.!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனங்கள், நடிகர்கள், மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு மருத்துவ பொருட்களை, உபகரணங்கள், படுக்கை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பி.சி.துரைசாமி கொரோனா பாதிப்பு சம்பந்தமான தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அனுப்பியுள்ளார்.

இதே சக்தி மசாலா நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் காசோலையை சக்திமசாலா நிறுவனத்தின் இயக்குனரான பி.சி.துரைசாமியும் அவரது மனைவியாரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.