சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5675

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

0

மக்களவையில் எதிரொலித்த விஜய் விஷயம்:சன் டீ வி தயாநிதி மாறனா இது!

விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் வருமான வரித்துறை நடந்து கொண்டது தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே வந்ததால் ரெய்டு முடிந்த அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளில் குறைபாடு இருப்பதாகக் கூறி வருமானவரித்துறை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது ரஜினிகாந்த் தான் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததாகவும் அதில் வாராக் கடனாக 1.7 கோடி ரூபாய் ஏற்பட்டதால் தனக்கு நஷ்டம் ஆகி விட்டதாகவும் கணக்கு காட்டியதாக தெரிகிறது. இதை ஏற்று வருமான வரித்துறை வழக்கை வாபஸ் பெற்றது. அதனால் விஜய் மற்றும் ரஜினி சம்மந்தப்படட் இரு வழக்குகளிலும் வருமான வரித்துறைக்குப் பின்னால் பாஜக இருப்பதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த விவகாரம் மக்களவை வரை சென்றுள்ளது. மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் ‘ரஜினிக்கு மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் வரை வரிச்சலுகை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய் குறி வைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். இது எந்தவிதத்தில் நியாயம்.’ எனக் கூறியுள்ளார். தயாநிதி மாறனின் நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியை வைத்துப் படம் ஒன்றைத் தயாரித்து வரும் வேளையில் அவருக்கு எதிராக பேசியுள்ளது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய பிரசன்னா பேச்சு?

0

ரஜினி தலையில் மூளை இல்லை மாட்டு சாணம்தான் இருக்கிறது!! ஆபாச வீடியோவில் சிக்கிய திமுகவின் பிரசன்னா பேச்சு?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்து மனநோயாளி என்றும், குரு மூர்த்தியை பற்றியும் தரக்குறைவாக பேசி திமுகவின் செய்தி தொடர்பாளர் பிரசன்னா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பலரை குறிப்பிட்டு பல்வேறு விதமாகவும், ஒருமையிலும் திட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரசன்னா பேசியதாவது: போயஸ் தோட்டத்தில் இருக்கும் பைத்தியங்களுக்கு NRC பற்றியோ NCR பற்றியோ சரியாக தெரியாது. குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி என்னவென்று தெரியாமல் ஆதரிக்கும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என்றும், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவன் இல்லை என்றும் பிரசன்னா ஆவேசமாக பேசினார்.

எனது தலையில் திறந்து பார்த்தால் அதில் மூளை இருக்கும், ரஜினியின் தலையை திறந்து பார்த்தால் மாட்டு சாணம்தான் இருக்கும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் சங்கிகள் என்று உச்சகட்டமாக பேசினார். பாஜக நாராயணன் மற்றும் கேடி ராகவன் போன்றவர்களையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார். குடியுரிமை சட்டம் கொண்டு வந்த ஆண்டு கூட இவர்களுக்கு சரியாக தெரியவில்லை. நான் சட்டம் படித்தவன் எனக்கு தெரியும் என்று விமர்சன வரிகளை தொடர்ந்தார்.

பிரசன்னாவின் பேச்சுக்கு சிலர் கைதட்டிக் கொண்டே இருந்தனர். திமுக கட்சியின் செய்தி தொடர்பாளரான பிரசன்னாவின் அநாகரிகமான பேச்சு இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுகவின் அரசியலுக்கு முக்கிய ஆலோசனை வழங்கும் இடத்தில் பிரசாந்த் கிஷோர் என்னும் பிராமணர் இருந்து வருகிறார் என்றாலும், ஒரு கட்டத்தில் பிராமணர்களை பற்றியும் கூட்டத்தின் நடுவே பிரசன்னா விமர்சித்தார். இதே பிரசன்னா சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆபாச வீடியோவில் இருப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ( அந்த வீடியோவில் இருந்தது அவர்தானா என்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை)

கல்லூரியில் நுழைந்து மாணவிகளை கற்பழித்த போதை ஆசாமிகள்; டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

0

கல்லூரியில் நுழைந்து மாணவிகளை கற்பழித்த போதை ஆசாமிகள்; டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

சென்ற வாரம் டில்லி கார்கி கல்லூரியில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, சில போதை ஆசாமிகள் விழா நடக்கும் கல்லூரிக்குள் புகுந்து பலாத்காரம் செய்யும் எண்ணத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அங்கிருந்த மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை சந்தித்து பயத்தை அதிகரித்தது.

இந்த கொடூர சம்பவத்தை பற்றி ஒரு மாணவி தான் கற்பழிக்கப்பட்டதாக சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவிட்டார். ஆண்டு விழாவின் போது நடந்த இச்சம்பவத்தை தெரிந்தும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும், காவல் துறையினரும் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேடிக்கை பார்த்ததாகவும் மாணவிகள் தமது குற்றச்சாட்டை முன் வைத்தனர். அங்கு வந்த போதை ஆசாமிகள் கல்லூரி நபர்கள் கிடையாது முப்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்றும் அனைவரும் மது குடித்துவிட்டு புகைபிடித்த படங்களும் எங்களிடம் இருக்கிறது என்று ஒரு மாணவி கூறினார்.

இந்த சம்பவத்தால் சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். சில மாணவிகள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகள் கும்பலாக வந்ததால் எங்களால் தப்பிக்க முடியவில்லை என்றும் மாணவிகள் சார்பாக கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக யாரும் காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும் கல்லூரியின் முதல்வர் பிரமிளா குமார் தெரிவித்துள்ளார்.

கல்லூரியிலேயே நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த செய்தி குறித்து எங்கும் பெரிதாக பேசப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும். பெண்கள் கல்லூரிக்குள் பாதுகாப்பு இருந்தும் பாலியல் சம்பவம் அரங்கேறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

0

மத்திய பட்ஜெட் 2020:தமிழகத்துக்கு இவ்வளவு!உத்தரபிரதேசத்துக்கு அவ்வளவு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கி வஞ்சித்திருப்பதாக மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக ரயில்வேத் துறைக்கு மிகவும் கம்மியான தொகையை ஒதுக்கி மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் கனடனம் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவரது பேச்சில் ‘தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்படட் ரயில்வே திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகை மட்டுமே 10,000 கோடி ரூபாய். ஆனால் பட்ஜெட்டில் தமிழக ரயில்வேவுக்காக ஒதுக்கப் பட்டுள்ள தொகையோ வெறும் 10,000 ரூபாய். ஆனால் உத்தர பிரதேச ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 7000 கோடி ரூபாய். இப்படி ஒரு செயலை செய்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து உள்ளது. இத்தனைக்கும் ஜி எஸ் டி வரி அதிகமாக அளிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்டுள்ள தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை: 70 கி.மீ: ரூ.900 கோடி
  • அத்திப்பட்டு-புத்தூர் (2008-09): 88 கி.மீ: ரூ. 1,150 கோடி
  • ஈரோடு-பழனி (2008-09): 91 கி.மீ : ரூ.1,140 கோடி
  • சென்னை–கடலூர்-மயிலாடுதுறை(2008-09): 179கி.மீ: ரூ. 2,300 கோடி
  • மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி(2011-12): 143 கி.மீ: ரூ.1,800 கோடி
  • கூடுவாஞ்சேரி-ஸ்ரீபெரும்புதூர்-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி: 60கோடி (2013-14): 60 கிமீ: ரூ.1,500 கோடி
  • மொரப்பூர்-தர்மபுரி (2016-17): 36 கி.மீ: ரூ.360 கோடி
  • திண்டிவனம்-ஏஹிரி: (2006-07): 179கி.மீ: ரூ. 2,300 கோடி

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

0

’தளபதி 65’ உறுதியான இரு விஷயங்கள்:புது ரூட்டில் புகுந்த விஜய்!

விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் முக்கியக் கதாநாயகி ஆகியோர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் தன் 64 ஆவது படமான மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகளில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.  சமீபத்திய ரெய்டு நடவடிக்கைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்காத நிலையில் இப்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை கனா படத்தின் இயக்குனரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அருண்ராஜா காமராஜா இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரின் முதல் படமானக் கணா வெற்றி பெற்றதை அடுத்து அவர் விஜய்யின் குட் லிஸ்ட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் பல இயக்குனர்கள் விஜய்க்காக அடுத்த படத்தின் கதை சொல்லியுள்ள நிலையில் இவரின் கதை விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்புக்குப் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இவரையே தனது அடுத்தப் படத்தின் இயக்குனராக விஜய் டிக் அடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக தளபதி 65 –ன் இயக்குனர் பட்டியலில் பேரரசு மற்றும் பாண்டிராஜ் அகிய முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் ஒரே ஒரு படம் இயக்கிய அருண்ராஜாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது எப்படி என கோலிவுட்டே ஆச்சர்யமடைந்துள்ளது. சமீபகாலமாக விஜய் தனது வழக்கமான ரூட்டை மாற்றி அட்லி, லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களின் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

0

முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டும் விதமாக நடந்து கொண்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்ப ஜெய்ஸ்வால் மட்டுமே அதிகபட்சமாக 88 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் ஒருவழியாக போட்டியை வென்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோப்பையைக் கைப்பற்றிய கொண்டாட்டத்தில் ஓய்வறையில் இருந்த வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களின் செய்கை இந்திய வீரர்களை சீண்டும் விதமாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது. இதையடுத்து இதை ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு சென்றது பிசிசிஐ. இதையடுத்து ஐசிசி வங்கதேச வீரர்களுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமாகப் பேசிய வங்கதேச கேப்டன் அக்பர் அலி ‘வெற்றி பெற்ற உற்சாகத்தில் எங்கள் வீரர்கள் செய்த செயலுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,கிரிக்கெட் எப்போதுமே ஜெண்டில் மேன்களின் விளையாட்டு. எதிரணி வீரர்களை மதிக்க வேண்டியது ஒவ்வொரு வீரரின் கடமை’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஐசிசி அவர்களின் மன்னிப்பை ஏற்குமா அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

0

காவிரி வேளாண் மண்டல அறிவிப்பால் பொதுமக்களிடம் எடப்பாடிக்கு பேராதரவு! ராமதாஸின் வழிகாட்டல்தான் காரணமா..?

கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்டம் தலைவாசலில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் மூலமாக அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்த தகவல்களையும் பட்டியலிட்டு பேசினார்.

இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார். பின்னர், இயற்கையின் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் எதிர் நீச்சலோடு விவசாயம் செய்து வருகிறார்கள். ஆகையால், இந்த விவசாய நிலப்பகுதிகளை தமிழக வேளாண் நலன் கருதி பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறவித்தார்.

இது வெற்று அறிவிப்போடு மட்டும் இல்லாமல் இதற்குரிய சட்ட வல்லுனர்களோடு கலந்துரையாடி இதற்காக தனிச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கும் திட்டம் குறித்த, முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு பொது மக்களிடையே மகிழ்ச்சியையும்,பெரும் ஆதரவையும் கொடுத்துள்ளது.

தமிழக அரசின் வேளாண் மண்டல அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில்  இடம்பெற்ற பாமக, தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி அமைத்தது. அந்த பத்து அம்ச கோரிக்கையில் முதல் கோரிக்கைதான் இந்த காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டல அறிவிப்பாகும்.

இந்த விஷயத்தில் அதிமுகவிற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் ராமதாஸ் இருக்கக்கூடும் என்று ஒரு கருத்து நிலவுவதோடு மட்டுமல்லாமல், இது பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறப்படுகிறது. மேலும், வேளாண் மண்டல அறிவிப்பு சம்பந்தமாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

0

திமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!

பாஜக கட்சியின் முப்பெரும் விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று நடிகர் ராதாரவி வெளிப்படையாக பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரும் கையெழுத்து போராட்டத்தை திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து சில நாட்களில் 2 கோடி கையெழுத்துக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. தான் எதிர்பார்த்ததை விட அதிக்பட்சமான மக்களின் ஆதரவு கிடைத்த காரணத்தால் ஸ்டாலின் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். எதற்காக இந்த இயக்கத்தின் மூலம் மக்களிடம் கையெழுத்து வாங்கினோம் என்கிற விளக்கமுக் திமுக தரப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. மக்களிடம் வாங்கப்பட்ட கையெழுத்துகள் இந்திய குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப் போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவின் கையெழுத்து போராட்ட இயக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இந்திய நாட்டுக்கு திமுக செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றும் நடிகர் ராதாரவி பாஜக கூட்டத்தில் பேசினார். மேலும், தமிழகத்தில் பாரதியாருக்கு பெரிய அளவில் சிலை வைக்க. வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விவகாரத்தில் சரியான கருத்துகளையே கூறி வருவதாகவும் கூறினார். இந்த பாஜக முப்பெரும் விழாவில் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜகவின் சில முக்கிய தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

0

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் எனப் போற்றப்படும் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக டிவிட்டரில் வெளியான தகவலால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரையும் வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததால் ஆந்திர மற்றும் கன்னட தேசங்களில் அடைக்கலமாகி பழைய ஹிட் படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திடீரென தமிழ் ரசிகர்களின் பேசுபொருளாக ஆகியுள்ளார் ரவிக்குமார். அதற்குக் காரணம் அவர் அஜித்தை அடுத்த படத்தில் இயக்கப் போவதாகவும் அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்திகளே. யாரோ ஒரு நபர் டிவிட்டரில் இந்த செய்தியைக் கொளுத்திப் போட ரணகள்மானது டிவிட்டர். ஏனென்றால் கே எஸ் ரவிக்குமார் ஏற்கனவே அஜித்தை வைத்து வில்லன், வரலாறு என இரு ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது உண்மையா இல்லை பொய்யா என்று விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கே எஸ் ரவிக்குமார்.

இதையடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் ‘அன்பான நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு… நேற்று முதல் ஒரு வதந்தி வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித்தை நான் இயக்கப் போகிறேன் என்று. ஆனால் அது உண்மை இல்லை. மேலும் எனக்கு டிவிட்டரில் எந்த கணக்கும் இல்லை. அதனால் டிவிட்டர் மூலம் என் சம்மந்தமாக வரும் எந்த விஷயத்தையும் நம்ப வேண்டாம்.’ எனத் தெரிவித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது அஜித் ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தில் அவர் கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

0

கொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !

சீனாவில் மக்களை பெரும் பீதிக்கு ஆளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் பிறந்த குழந்தை ஒன்று தப்பித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 800 பேருக்கும் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 30000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். இந்நிலையில் இப்படிப் பட்ட கொடூரமான வைரஸிடம் இருந்து கருவில் இருக்கும் ஒரு குழந்தை தப்பித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் முழு ஆரோக்யத்துடன் உள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.