சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5675

கண்ணியம் தவறாத காவல்துறையினர்! பாதுகாப்பின் இலக்கணமாய் விவசாயிக்கு சல்யூட் அடித்த ருசிகர சம்பவம்.!! எங்கே நடந்தது தெரியுமா..??

0

கண்ணியம் தவறாத காவல்துறையினர்! பாதுகாப்பின் இலக்கணமாய் விவசாயிக்கு சல்யூட் அடித்த ருசிகர சம்பவம்.!! எங்கே நடந்தது தெரியுமா..??

கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மாட்டு வண்டியில் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் வந்த விவசாயிக்கு போலீஸ் ஒருவர் சல்யூட் அடித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி (Kalaburagi) பகுதியில் லகப்பா (Lakappa) என்ற விவசாயி முகத்தில் துணியை கட்டிக்கொண்டி தலையில் தலைகவசத்தை மாட்டிக்கொண்டு இரண்டு மாடுகளை மாட்டுவண்டியில் கட்டிக்கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த சுரேஷ்குமார் என்ற காவல்துறை அதிகாரி மாட்டு வண்டியை நிறுத்தி, ஏன் தலையில் ஹெல்மெட் போட்டு வண்டியை ஓட்டுகிறீர்கள் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த விவசாயி லகப்பா; நாடு முழுக்க கொரோனா வைரஸ் கிருமி பரவி பலர் இறந்து வருகிறார்கள். அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகத்தில் துணியையும் தலையில் ஹெல்மெட்டையும் அணிந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு பூரிப்படைந்த போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், கொரோனா பாதிப்பை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்ட விவசாயிக்கு மரியாதை நிமித்தமாக சல்யூட் அடித்தார்.

காவல்துறை அதிகாரியின் மரியாதையை பார்த்த விவசாயி தானும் அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக போலீசுக்கு சல்யூட் அடித்தார். கர்நாடகாவில் நடந்த இந்ந நெகிழ்ச்சியான விழிப்புணர்வு சம்பவத்தின் புகைப்படமும், வீடியோவும் இணையவாசிகள் மூலமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. விசாயிக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட நகரத்தில் வாழும் பலருக்கு இல்லை என்பதை, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றியதால் வழக்கு வாங்கியதன் மூலம் அறியலாம்.

33.81 கோடி நிதியுதவி அளித்த இந்திய இராணுவ வீரர்கள்! எப்போதும் குறையாத அதே கம்பீரம்..!!

0

33.81 கோடி நிதியுதவி அளித்த இந்திய இராணுவ வீரர்கள்! எப்போதும் குறையாத அதே கம்பீரம்..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக தங்களது ஒரு நாள் சம்பளம் ரூ.33.81 கோடியை தாய்நாட்டிற்காக இந்திய ராணுவ வீரர்கள் வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்தான சூழலை சமாளிக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இது இன்னும் 20 நாட்களுக்கு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தரப்பில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தினமும் கிடைக்கும் வகையில் உத்தரவு கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உலகளவில் பலாயிரம் பேர் இறந்துள்ளனர். தற்போது மக்களிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அவரவர் குடும்பத்தோடு வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய நாட்டுக்காகவே தங்கள் அர்ப்பணித்து வாழும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூபாய் 33,81,00,000 கோடியை மக்களுக்காக அளித்துள்ளனர். வீட்டை மறந்து நாட்டை பாதுகாக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும் இந்தியர்களால் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களே. நாட்டின் ஆபத்தான சூழலிலும் இந்திய ராணுவத்தினர் செய்த உதவி அவர்களின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது.

இன்று “உலக திரையரங்கு” தினம்! உலகின் முதல் சினிமாவை யார் வெளியிட்டது.? 2020 பிளாக்பஸ்டர் திரெளபதி.!!

0

இன்று “உலக திரையரங்கு” தினம்! உலகின் முதல் சினிமாவை யார் வெளியிட்டது.? 2020 பிளாக்பஸ்டர் திரெளபதி.!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கு தினமாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திரைப்படங்கள் பிறந்து மக்கள் கையில் தவழும் முக்கிய இடமாக தியேட்டர்கள் திகழ்கின்றன.

யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948 -ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960 -ஆம் ஆண்டில் உலகத் திரையரங்கு தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதி உலகத் தியேட்டர் தினம் சர்வதேச திரையரங்கு நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

உலகில் அதிகளவில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிசா, வங்கம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்திய சினிமா திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது சினிமாத்துறையில் அதிகளவு படங்கள் தயாரிக்கப்பட்டு தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் போட்டியாக களமிறக்கப்பட்டு வருகின்றன.

உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள “ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியாகிய 6 மாதத்தில் லூமியர் சகோதரர்கள் இந்தியாவில் உள்ள பம்பாய் வாட்சன் ஓட்டலில் திரையிட்டுக் காட்டினர்.

இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு சினிமா திரைப்படம் வெளியிடப்பட்டது. இதன் தொடக்கத்தில் இருந்து 1913 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு திரைப்படங்களே திரையிடப்பட்டன. இதன் பின்னரே இந்தியாவில் குறும்படங்களை தொடர்ந்து சினிமா திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டின் தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக “திரெளபதி” மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு இந்திய சினிமாவில் வித்தியாசமான கூட்டுத் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும். இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே கிட்டத்தட்ட 50 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. படம் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டனர்.

இப்படத்தை வாங்கி திரையிட்டவர்கள் முதலீடு செய்த பணத்தை விட 3 மடங்கு லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி சில சர்ச்சை விவாதங்கள் உருவாகியபோது திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு உண்மை சம்பவங்களை ஆதாரத்தின் அடிப்படையில் கூறி பல்வேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆண்டு பல்வேறு தமிழ்ப் படங்கள் வெளியாகிய நிலையில் திரெளபதி படம் மட்டுமே 15 கோடி வசூலை வாரி குவித்துள்ளதால், 2020 ஆம் ஆண்டின் “பிளாக்பஸ்டர்” மூவியாக திரெளபதி கொண்டாடப்படுகிறது.

சொந்த பந்தம் இல்லாமல் 10 நிமிடத்தில் எளிமையாக நடந்த திருமணம்! 20 பேர் கூட வரவில்லை..!!

0

சொந்த பந்தம் இல்லாமல் 10 நிமிடத்தில் எளிமையாக நடந்த திருமணம்! 20 பேர் கூட வரவில்லை..!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உறவினர்கள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்தியுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உலக நாடுகளை அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், முக்கிய தேவைகளை தவிர்த்து மற்ற எந்த காரடத்திற்காகவும் வெளியே வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பொது இடங்களில் ஐந்து பேர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் கையையும் உடலையும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்ட முரளிதரன் மற்றும் மீனா புதுமண தம்பதியின் திருமணம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் மிக எளிமையாக நடந்தேறியது. இவர்களது திருமணத்திற்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார் மற்றும் மணப்பெண் வீட்டார் சார்பிலும் வெறும் 8 பேர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் வாசலிலும், சாலையிலும் உற்றார் உறவினர்கள் இல்லாமல் மிகவும் எளிமையாக பல திருமணங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!!

0

மக்களுக்காக 7.58 கோடியை வாரி வழங்கிய அதிசய தம்பதி! இது வெறும் தொடக்கம்தான் என்று டுவிட்..!!!

கொரோனாவால் பாதித்த குடும்பங்களுக்கு உதவியாக டென்னிஸ் தம்பதியான ரோஜர் பெடரர் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலரை வழங்கியுள்ளனர். இந்திய மதிப்பில் 7.58 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

உலக நாடுகள் பெருமளவு பாதித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பலரும் மக்களுக்கு உதவும் வகையில் பண உதவி, பொருளுதவி, மருந்து மற்றும் முகத்தில் அணியும் மாஸ்க் போன்ற அவசர உதவிகளை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க 22,000 பேரை கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது மனைவியுடன் இணைந்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவும் விதமாக பெருமளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளனர். உலக அளவில் தனி நபர் யாரும் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை கொடுக்கவில்லை என்பதால் பலரும் இந்த தம்பதியை பாராட்டி வருகின்றனர்.

இந்த மோசமான சம்பவத்தை தனது டுவிட்டர் மூலம் ரோஜர் பெடரர் வெளிப்படுத்தியுள்ளார். இது மிகவும் மோசமான காலம், யாரும் பலரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றும், நானும் எனது மனைவி மிர்காவும் சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ இந்த நிதியை வழங்கியுள்ளோம் என்றும், இது வெறும் தொடக்கம்தான் இதன்மூலம் பலர் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஒருங்கிணைய வேண்டும் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரெஞ்சு போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக வருகிற செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை 8,000 பேர் கொரோனாவால் பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எந்த உயிரிழப்பும் அங்கு ஏற்படவில்லை என்பதே ஆறுதலான விஷயமாகும்.

தயவுசெய்து யாரும் வெளிய வராதிங்க! ரொம்ப அசால்ட்டா இருக்காதிங்க! வடிவேலு கண்ணீர் பேச்சு!

0

தயவுசெய்து யாரும் வெளிய வராதிங்க! ரொம்ப அசால்ட்டா இருக்காதிங்க! வடிவேலு கண்ணீர் பேச்சு!

உலகளவில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவில் அதிகளவில் பரவி வருகிறது. ஒட்டுமொத்தமாக 22,000 பேரை கொரோனா பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும்
650 க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மாநில எல்லைகள் மூடப்பட்டதோடு, தமிழக அளவில் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. உத்தரவை மீறி வெளியே செல்பவர்களுக்கு வழக்கு மற்றும் நூதன தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு கண்ணீருடன் கொரோனா பாதிப்பு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தயவுசெய்து யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அரசு சொல்வதை கேட்டு கொஞ்ச நாட்களுக்கு வீட்டிலேயே இருங்கள் இன்றும் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் நமது வருங்கால சந்ததி பாதிக்க கூடாது என்றும், பொதுமக்கள் யாரும் பாதிக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் நெகிழ்ச்சியுடன் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

வடிவேலு பேசிய காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதுகாப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறையில் நடிகர், நடிகைகள் போன்றோர் பலர் கொரோனா பாதிப்பில் இருந்து விழிப்புணர்வாக இருக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காதவர்கள் மீதும் உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

0

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு திடீரென இறந்த சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் தனது நடிப்பை காட்டியவர் சேதுராமன். இவர் தமிழ்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மருத்துவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

சினிமாவில் சக்கபோடு போடு ராஜா மற்றும் வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்த மருத்துவர் சேதுராமன், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் தனது மருத்துவர் தொழிலை சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் இளம் நடிகர் சேதுராமன் இறப்பு தனக்கு அதிர்ச்சி தருவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை அதுல்யா ரவி தனது டுவிட்டரில், அவரது இறப்பை நம்பவே முடியவில்லை இது பேரதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இறக்க வேண்டிய வயதா இது அடகடவுளே என்று மாரடைப்பால் சேதுராமன் இறந்த செய்தியை வெங்கட் பிரவு பதிவு செய்துள்ளார்.

இளம் வயதில் நடிகர் இறந்த சம்பவம் சினிமா துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

0

குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1000 நியாயவிலை கடைகளின் மூலம் உங்கள் வீடு தேடி வரும் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், மக்களின் அன்றாட தேவைக்கான சூழலை அறிந்து ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களான இலவச அரிசி, எண்ணெய், பருப்பு போன்றவை ஏப்ரல் மாதம் தருவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், குடும்ப அட்டைகளுக்கான
ரூ.1,000 நிவாரணத் தொகை உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் என்று கவலை வேண்டாம் என்றும் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது;

கொரோனா வைரஸை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஒன்று கூடி விடுவார்கள். இந்த அசாதாரண சூழலில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். மேலும் கொரோனா பரவாமல் இருக்க அந்தந்த நியாயவிலை கடையின் மூலம் அவரவர் வீட்டுக்கே நிவாரண தொகை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

0

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

மலேசிய அரண்மனையில் ஊழியர்களாக பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலேசிய மன்னர் மற்றும் ராணியை தனிமைப்படுத்தி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்றுக் கிருமி உலக நாடுகளில் பரவி இதுவரை 22,000 பேருக்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. உலகில் முன்னேறிய நாடுகளான சைனா, இத்தாலி, அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் மலேசியா நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இதுவரை 2,031 பேர் கொரோனா தொற்றினால் பாதித்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மலேசிய மன்னரின் அரண்மனையில் பணிபுரியும் வேலையாட்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய அரண்மனை அறிக்கை வெளியிட்டு, அதில் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்று அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆபத்தான சூழலில் மலேசிய மன்னர்
“கிங் சுல்தான் அப்துல்லா’வுக்கும் மற்றும் மலேசிய ராணி “துங்கு அஸிசா அமினா மைமுனா’வுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. பின்னர் பாதுகாப்பு கருதி இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க 2 வாரத்திற்கு தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் : தயார் நிலையில் இருப்பதாக வீடியோ வெளியிட்டார்!

0

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. இதற்கென தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார துறையினருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள கொரோனா வார்டை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டார். அதில் 350 படுக்கைகள் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்து அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.