சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5676

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பு இல்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

0

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பில்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

திருத்தனி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன் அவர்கள் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவையை பாதிக்க தொடங்கி உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது‌. 21 நாட்கள் ஊரடங்கை பாரத பிரதமர் நரேபனந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்தளை ஒத்துழைக்கச் செய்வது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை ஆகும்.

நமது ஊராட்சியின் சார்பில் அனைத்து கிராமங்களுக்கும் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியும் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் மக்களை தனித்து இருக்குமாறு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஊராட்சி அலுவலர்களும், மருத்துவப் பணியாளர்களும் இணைந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை தேவைகளையும் நிவர்த்தி செய்தல் வேண்டும். மேலும் எந்த ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு 100 சதவீதம் மக்களை காக்கிறீர்களோ அந்த ஊராட்சிக்கு எனது சொந்த செலவில் ₹50000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 21 நாள் ஊரடங்கை பாராட்டி ஐ.நா சபை அறிக்கை – கொரோனோவை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்

0

இந்தியாவின் 21 நாள் ஊரடங்கை பாராட்டி ஐ.நா சபை அறிக்கை – கொரோனோவை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்

இந்தியாவில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து இந்திய மக்கள் தொகையில் சுமார்‌ 5 கோடி அதிதியாவசிய பணியாளர்களை தவிர்த்த மற்ற பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் தங்களை தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையை பாராட்டி ஐ.நா சபை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மிகப்பரந்த அளவிலான திடமான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 125 கோடி மக்களுக்கும் மேல் வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இதுவே உலகல அளவில் மிகப்பெரிய ஊரடங்காக பார்க்கப்படுகிறது. இதுவரை 180 நாடுகளில் 4.20 இலட்சம் மக்களுக்கும் மேல் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை 656 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது‌. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் அவர்களை தனிமைப்படுத்துதல் மேலும் அவர்கள் சார்ந்த நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற செயல்கள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்தியா மேற்கொள்ளும் மிகப்பரந்த அளவிலான நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் எனவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் கிடைக்கும் : வெளியான அதிரடி அறிவிப்பு!

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவது பலருக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பொது இடங்களில் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அரசு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் நேரங்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது;
காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 9 வரை செயல்படும்.
மளிகை கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
உணவகங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலால் கொரோனா பரவுவதை ஒரளவு கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பால் மற்றும் பெட்ரோல் பங்குகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செயல்படும் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பால் விற்பனையை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படும் என்று பால் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அதிகாலை 3 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து மனு அளித்துள்ளது. அந்த மனுவில் பெட்ரோல் வினியோக நேரம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும் அரசு ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அமலுக்கு வந்தால் பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கலாம் என்று பெட்ரோல் விற்பனை யாளர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

ஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.?

0

ஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.?

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் தயாரித்த நடிகரின் செயல்பாடு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் கொரோனா பரவாமல் இருக்க இந்திய மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. அடுத்த இருபத்தோரு நாட்களுக்கும் ஊரடங்கு தொடரும் என்றி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சினிமா துறையினர் நடத்தி வந்த சீரியல் மற்றும் திரைப்பட ஷூட்டிங் வேலைப்பாடுகள் அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் பல நடிகைகள் ஷூட்டிங் இல்லாத காரணத்தால் முகநூல், இன்ஸ்டாகிராம் இணையத்தில் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் வரிசையில் தெலுங்கு சினிமா படங்களில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நாக சவுரியா. வீட்டில் சும்மா இருக்காமல் தனது அம்மாவுடன் சேர்ந்து வீட்டுக்கு தேவையான பிரபல சைடிஷான ஊறுகாயை தயாரித்துள்ளார். தான் தயாரித்த ஊறுகாயுடன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி நிவாரண நிதி வழங்கிய சினிமா நட்சத்திரம் : டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து பாராட்டும் பொது மக்கள்!

0

பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 650 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 13 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 42 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் ராஜ்யசபா எம்பி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 3 கோடி ரூபாய் தனது தொகுதி நிதியில் இருந்து வழங்கியிருந்தார். இதனை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரம் பவன் கல்யாண் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக கூறியுள்ளார். அதில் மத்திய அரசுக்கு 1 கோடி ரூபாயையும், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணின் இந்த செயலை பாராட்டி பொது மக்கள் #PawanKalyalforPeople என்று டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த ட்ரெண்டிங் 25 ஆயிரம் டுவிட்டுகளை கடந்து உலக அளவில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய பெண்! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்! – வைரல் வீடியோ

0

கத்தியை காட்டி போலீசாரை மிரட்டிய பெண்! பின்னர் நடந்த அதிரடி சம்பவம்! – வைரல் வீடியோ

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்திரபிரதேச பெண் சாமியார் ஒருவர் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதாக கூறி காவல்துறையினருக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, சைனா, வடகொரியா போன்ற நாடுகளே கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. ஒவ்வொரு நாளும் உயிர் பலியும், கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் மட்டும் 564 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மதுரையில் ஒரு நபர் இறப்பு உட்பட இந்தியாவில் 10 பேர் இறந்துள்ளனர். அத்தியாவசிய தேவையற்ற காரணங்களை தவிர்த்து எதற்காகவும் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை மீறியும் சிலர் வெளியில் சுற்றுவதால் காவல்துறையினரின் அபராதம் மற்றும் நூதன தண்டனைக்கு ஆளாகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அதிகம் கூடும் வணிக கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மதுக்கடைகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் உட்பட மக்கள் தேவையற்று கூடும் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவும் என்பதால் தமிழக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மளிகை கடைகள், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய கடைகள் திறந்திருக்காலம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தின் தியோரியா பகுதியில் “மா ஆதி சக்தி’ என்ற ஆன்மீக ஆசிரமத்தை பெண் சாமியார் ஒருவர் நடத்தி வருகிறார். இன்று காலை தனது பக்தர்கள் உட்பட 50 – க்கும் மேற்பட்டோரை வீட்டில் சேர்த்துக் கொண்டு பூசை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தியபோது பெண் சாமியார் கத்தியை காட்டி காவல்துறையினரை மிரட்டல் விடுப்பது போல் பேசினார்.

இதையடுத்து, அதிரடியில் இறங்கிய போலீசார் அங்கிருந்த கூட்டத்தை கலைத்து பெண் சாமியாரை கைது செய்து ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திறந்த வெளி மார்க்கெட்களை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெளியிட்ட வீடியோ வைரலாகியது : சேவையை பாராட்டும் பொது மக்கள்!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மக்கள் இதனால் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவ்வாறு மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி காய்கறிகளை விற்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் திறந்தவெளியில் காய்கறி கடைகளை எவ்வாறு அமைப்பது என்று வியாபாரிகளுக்கு எடுத்து கூறப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக எடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ரயில்வேத்துறை பொதுமக்களுக்கு இதுபோன்ற சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்று அதில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பொது மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பாகிஸ்தான்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த இளம் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு!

0

பாகிஸ்தான்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த இளம் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்கி சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் இதுவரை 850-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. குறிப்பாக அங்கிருக்கும் சிந்து மாகாணத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதோடு அங்கு மட்டுமே அதிகபட்சமாக 394 பேரை பாதித்துள்ளது.

இந்த சூழலில், கில்ஜித் பலுசிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் உஷாமா ரியாஸ் என்ற இளம் மருத்துவர் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வந்ததால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை அளிபக்கப்பட்டு வந்தார். பின்னர் தீவிர சிகிச்சை பலனின்றி உஷாமா ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். எத்தனையோ நோயாளிகளை காப்பாற்றிய மருத்துவரின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம் மருத்துவரின் உயிரிழப்பு எப்படி நடந்தது என்று கேட்டபோது, கொரோனா தொற்று நோயாளிகளை கவனிக்க சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாக்கிஸ்தானில் இன்றுவரை ஒரு இளம் மருத்துவர் உட்பட 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

0

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கு பற்றி அரசுகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் பலர் அதை மதிக்காமல் கொரோனாவின் ஆபத்தை உணராமல் பொதுவில் வலம் வருகின்றனர்.

இதனையடுத்து, வெளியே சுற்றிய நபர்களுக்கு சில மாவட்டங்களில் நூதன தண்டனைகளும் வழங்கப்பட்டன. கேரளாவில் ஒரே நாளில் 500 பேர் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த வழக்கும் நூதன தண்டனையும் தொடரும் என கூறப்படுகிறது.வெளியில் சுற்றி திரிபவர்களை கண்டால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதும் நேற்று வைரலாக பரவியது.

இந்நிலையில், தங்கள் குடும்பத்தை கொரோனா ஆபத்தில் இருந்து பாதுகாக்க வீட்டு வாசலில் வேப்பிலை கொத்துகளும், வீட்டுக்கு வெளியே கிருமிநாசினிகளை அழிக்கும் பழந்தமிழர் மருத்துவமான மாட்டு சாணத்தை கரைத்து தெளித்து வருகின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குழந்தைகளையும், குடும்பத்தையும் பாதுகாத்து வருகின்றனர்.

இதனை பாராட்டும் விதமாக “ஆக்கும் சக்தியும் காக்கும் சக்தியும் பெண்கள்தான்” என்று பாமக வின் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஊரடங்கு உத்தரவை வீட்டளவில் செயல்படுத்தும் கடைமையும், பொறுப்பும் இல்லத்து அரசிகளுக்கு உண்டு. பெண்கள் வீட்டையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மற்றும் இராணிப்பேட்டையில் களத்தில் இறங்கி வேப்பிலை தோரணம் கட்டுவதும், மஞ்சள் நீரை தெருக்களில் தெளித்தும் கொரோனா தொற்றில் இருந்து தங்களது பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். குடியாத்தம் பகுதியில் டேங்கர் லாரியில் மஞ்சள், சாணம் மற்றும் உப்பு கலந்த தண்ணீரை பாதுகாப்பிற்காக இளைஞர்கள் தெருக்களில் திறந்துவிட்டு வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய முறைகளை அடிக்கடி பகுத்தறிவு என்கிற பெயரில் மூடநம்பிக்கை என முத்திரை குத்திய போலி பகுத்தறிவு பேசும் நபர்கள் பலரும் கொரோனாவுக்கு பயந்து பகுத்தறிவு பேசாமல் வீட்டில் தலைமறைவாகி இருக்கின்றனர். தமிழரின் வழிபாட்டில் கடத்தப்பட்ட வேப்பிலை, மஞ்சளின் மரபுவழி மருத்துவத்தை புரியாமல் பேசிய பிழைப்புவாத பகுத்தறிவாளர்களுக்கு இதுபோன்ற இல்லத்தரசிகளின் கொரோனா பாதுகாப்பு செயல்பாடுகள் சாட்டையால் அடித்தது போலவும், அவர்களின் முகத்தில் கரியை பூசியது போலவும் அமைந்துள்ளது.