சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5765

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

0

சென்னையில் மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடன் திட்ட இணையதள பயிலரங்கு

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை, ஹட்கோ, தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்டம் குறித்த ஒருநாள் இணையதள பயிலரங்கிற்கு சென்னையில் இன்று (23.01.2020) ஏற்பாடு செய்திருந்தது.  தென்னிந்தியாவில் உள்ள முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுக்காக  இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.  

இதில், 60 முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் 125 பேர் கலந்து கொண்டனர்.  இந்த பயிலரங்கின்போது, மானிய உதவியுடன் கூடிய கடன் திட்ட செயல்பாடு, கிளாப் (CLAP) இணையதளம், சர்வர் கட்டுமானக் கலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  முதல் நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது புள்ளி விவரங்களை தரமான முறையில் பராமரிப்பதுடன், கிளாப் வலைதளம் மற்றும் செல்போன் செயலியை பயனாளிகள் 100% பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மானிய உதவியுடன் கூடிய வீட்டு வசதி கடனுதவித் திட்ட இணையதளத்தின் வெற்றி மற்றும் அதனை  செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.  தென்னிந்தியாவில் இருந்து இன்னும் அதிகளவில் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்குமாறு முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மாற்ற மேலாண்மைக்கான பிரச்சார இயக்கமான அங்கீகார் (ANGIKAAR) குறித்த விழிப்புணர்வு அம்சங்களும் முதல்நிலை கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், மானிய உதவியுடன் கூடிய கடனுதவித் திட்ட பயனாளிகளுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து நிதிச் செலவின அறிவாற்றல் குறித்த முகாம்களை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைகளின்படி, நிதிச் செலவின அறிவாற்றல் குறித்து, நேரடி கலந்துரையாடல் வாயிலாக கலந்தாய்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சி குறித்த கேள்வி-பதில் அரங்கம் ஒன்றும் நடத்தப்பட்டது.    இந்த அரங்கம் முதல் நிலை கடன் வழங்கும் நிறுவனங்களான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்ததாக ஹட்கோ நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையறை புகைப்படங்கள் வெளியானது! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் திரைத்துறைக்குள் நுழைந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். இதனையடுத்து பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்களையடுத்து இவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் தான் நடித்த “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தார். 

இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளிவந்த மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” திரைப்படத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார். மேலும் சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அவரது தங்கையாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வர நிறம் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் பக்கத்து வீட்டு பெண் போன்ற மிதமான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கி வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தாறுமாறு வைரலானது. 

இவ்வாறு தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இவர் புதிதாக ஃபோட்டே ஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் படு கவர்ச்சியான ஹாட் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். இதுவரை குடும்பபாங்கான பெண்ணாக ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த திடீர் கவர்ச்சி அவதாரம் அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.படுக்கையறையில் உள்ளவாறு படு கவர்ச்சியாக ஹாட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் லைக்குகளை குவித்து வருகிறது. 

நடிகைகள் பலரும் ஆங்கில நாளிதழுக்கு கவர்ச்சி போஸ்கள் கொடுப்பது புதிதல்ல என்றாலும் இவர் வெளியிட்டுள்ள படங்கள் அவர் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கவர்ச்சி இல்லாத குடும்பபாங்கான நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி ஒரே அடியாக ஓவர் கிளாமர் ரூட்டுக்கு மாறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன?

0

ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன?

சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார்.  மேலும் அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பதிவு செய்யவில்லை என்றும், ஆனால்,துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரான ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையை ரத்து செய்தார்கள். ஆனால் இதனைக்கண்டு கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் பத்திரிக்கையை சோ வெளியிட்டார். இதனையடுத்து அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. இதன் மூலமாக பத்திரிக்கை உலகில் சோ மிகவும் பிரபலமானார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதற்காக விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பேசிய கருத்து உண்மை என்றும் அதற்கான ஆதாரத்தை காட்டி உறுதியாக கூறினார்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அளித்த இந்த பேட்டி தான் பெரியார்வாதிகளையும் திராவிட கட்சிகளையும் அவருக்கு எதிராக விமர்சனம் செய்ய வைத்துள்ளது. பல ஆண்டுகளாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி வந்தாலும் இது வரை அவர் தெளிவாக எந்த ஒரு முடிவும் அறிவித்ததில்லை. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக ரஜினியை வைத்து தமிழகத்தில் காய் நகர்த்துவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தமேயில்லாமல் பெரியார் பற்றி கருத்து தெரிவிக்க அதற்கு திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும், ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் செயல்பட்டு வருவதும் ஏறக்குறைய இரு பிரிவினருக்கும் இடையேயான மறைமுக தொடர்பு இருப்பதை உறுதிபடுத்துகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் பெரியார் மற்றும் ரஜினியின் கருத்துகள் தான் வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கமாக காட்டி கொள்ளும் திமுகவிற்கு எதிராக ரஜினி ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். இதில் முரசொலி, மூலப்பத்திரம், பெரியார் வளர்ப்பு மகளை திருமணம் செய்தது என எதையும் விட்டு வைக்காமல் என்று கலங்கடித்து வருகின்றனர்.

What Happened between MGR and Rajini in Ramavaram Garden
What Happened between MGR and Rajini in Ramavaram Garden

பதிலுக்கு திமுகவினரும் ரஜினியின் கடந்த கால திரை வாழ்க்கை, தமிழக மக்களின் மீது அவர் கொண்டிருந்த ஓரவஞ்சனை என்று தங்கள் விருப்பம்போல விமர்சன கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் முழுக்க ரஜினி Vs திராவிட கட்சிகள் என்று ஆதரவு மற்றும் விமர்சன பதிவுகளாக காணப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கடந்த கால சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை வைத்து அவரது எதிர்ப்பாளர்களான திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக நடிகை லதா விவகாரத்தில் ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தார் என்று பேசப்பட்டு வருவதை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல ஊடகம் ஒன்றில் நடிகை லதா இது குறித்து அளித்த விளக்கமான அந்த பேட்டியை ரஜினி ரசிகர்களும் பரப்பி வருகின்றனர்.

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் பல ஆண்டுகளாக பேசப்படுகிறது .அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிக்கையாளர் கேட்கிறார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பதிலளித்த நடிகை லதா கூறியதாவது. பாவம் அவரை பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று மழுப்பலாக பதிலளித்தார். இதன் மூலமாக ராமாவரம் தோட்டத்தில் நடிகர் ரஜினிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய வதந்தி மர்மமாகவே உள்ளது.

அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!

0

அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!

சென்னையில் காவல் துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட 4 மாதங்களில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பம் என்ற பகுதியை சேர்ந்தவரான அருள் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். 38 வயதாகும் இவர் காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், கடலூர் மாவட்டதிலுள்ள பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவரான வடிவேல் என்பவரின் மகள் ராஜேஸ்வரிக்கும் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறையினருக்கான குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது குறித்து அருகிலுள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டினப்பாக்கம் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரி உடலை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அருகிலுள்ளவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தான் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ கடந்த 20-ந்தேதி அவரது அக்கா ராஜேஸ்வரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது அவர் அவரது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், ‘நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்து விட்டால் சொத்து அனைத்தும் எங்களுக்கே கிடைக்கும் என்றும் கூறி தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என கூறி அழுததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது செல்போனில் அண்ணியுடன் இணைந்துள்ள ஆபாச படங்களை காட்டி எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், அவரது கணவர் அடித்து துன்புறுத்துவதாக அக்கா கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, எனது அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அதில் கூறியிருந்தார்.

அவர் அளித்துள்ள புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்

0

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்

ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்ற 49 குழந்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை, ஜனவரி 24, 2020 அன்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

விருதுபெற்ற இந்த 49 பேரும், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். 

கலை & கலாச்சாரம், புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, விளையாட்டு மற்றும் வீர-தீர செயலுக்காக இந்த குழந்தைகள் விருதுபெற்றுள்ளனர்.

தேச வளர்ச்சியில் குழந்தைகளும் மிக முக்கியப் பங்குதாரர்கள் என்பதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.  அவர்களது நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படுவதுடன், அவர்களது சாதனைகளுக்கு உரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். 

ஒவ்வொரு குழந்தையும் மிக முக்கியமானவர் என்பதோடு, அவரது சாதனைகள் பாராட்டப்பட வேண்டியவையாகும்.  இவர்களில் சிலரது சாதனைகள், மற்ற பலருக்கு ஊக்கமளிப்பதாக அமையும். 

அந்த வகையில்தான், நமது குழந்தைகளின் சிறப்புமிக்க சாதனைகளுக்காக அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, மத்திய அரசு ஆண்டுதோறும் இதுபோன்ற விருதுகளை வழங்கி வருகிறது. 

புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, கலை & கலாச்சாரம், விளையாட்டு  மற்றும் வீர-தீர செயலாற்றுவதில் சிறப்புமிக்க சாதனை படைத்த எந்தவொரு குழந்தையும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  உயர்மட்டக் குழு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் கவனத்துடன் பரிசீலித்து விருதுபெறுவோரை தேர்வு செய்யும்.

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுகளை நேற்று (22.01.2020) வழங்கினார். 

பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் & அலங்கார ஊர்தி கலைஞர்களுக்கு வரவேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள பழங்குடியின கலைஞர்கள்தேசிய மாணவர் படையினர்நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் அலங்கார ஊர்தி கலைஞர்கள்1,730-க்கு மேற்பட்டோருக்கு 24.01.2020 அன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – இருவர் கைது

0

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – இருவர் கைது

செவ்வாய்க்கிழமை அன்று இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைத் (27) மற்றும் சந்திரகுமார் (23) ஆகிய இருவரையும், விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத் துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, இவர்களது பேண்ட் பைகளிலிருநது ரூ.39.12 லட்சம் மதிப்புள்ள 948 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய தங்கத்தால் ஆன 5 கச்சா தங்க மோதிரங்களும், 4 கச்சா தங்கச் சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

அதே நாளன்று இரவில், துபாயிலிருந்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த மாதவன் (21) என்பவரிடமும், விமான நிலைய வெளியேறும் பகுதியில் சோதனையிடப்பட்டது.  அதில் அவரது பைகளில் இருந்து ரூ.16.43 லட்சம் மதிப்புள்ள 398 கிராம் எடையுள்ள நீளமான இரண்டு தங்கக் கம்பிகள், அவரது பையின் ஓர மடிப்புகளில் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. 

இதேபோன்று புதன் கிழமையன்று கிடைத்த தகவலின் பேரில், பாங்காக்கில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த சுப்ரீத் சிங் (34) மற்றும் தமன்ப்ரீத் சிங் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது தலைப்பாகைகளுக்குள் இரண்டு பவுச்களில் பசை வடிவிலான தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.    மேலும், அவர்களது உள்ளாடைகள் மற்றும் மலக்குடல்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட 4 பண்டல் பசை வடிவிலான தங்கம் கடத்தி வரப்பட்டதும் கண்டறியப்பட்டது.  மொத்தத்தில் ரூ.74.20 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள 3.14 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.   இதுகுறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு குடியுரிமை கேட்ட அர்ச்சகரால் பரபரப்பு

0

திருப்பதி ஏழுமலையானுக்கு குடியுரிமை கேட்ட அர்ச்சகரால் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அருகே சில்கூர் என்ற பகுதியில் பாலாஜி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று பாஸ்போர்ட்டை வைத்து வழிபட்டால் உடனே விசா கிடைக்கும் என்று அந்தப்பகுதியில் உள்ளவர்களின் நீண்டநாள் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த பெருமாளுக்கு ’விசா பாலாஜி’ என்று பெயர் வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த பெருமாளுக்கு சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்த கோவிலின் அர்ச்சகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. எனவே அர்ச்சகர் தான் நீதிமன்றத்தின் மூலம் பிரதிநிதித்துவம் பெற முடியும். எனவே திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி, ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக்கும், புதிய திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும்.

அனைத்து தெய்வங்களையும் குடிமக்களாக அரசு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழே ஆடை எதுவுமில்லாமல் முற்றும் துறந்த பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை

0

கீழே ஆடை எதுவுமில்லாமல் முற்றும் துறந்த பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அவருக்கு மருமகளாக நடித்து தமிழக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நடிகை தான் சாக்‌ஷி அகர்வால்.

நடிகை சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “ஓராயிரம் கினாக்களால்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனையடுத்து அதே 2018 ஆம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். இவர் இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

மேலும் இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக கல்யாண் சில்க்ஸ், சக்தி மசாலா, மலபார் கோல்ட் போன்ற விளம்பரங்களிலும் மற்றும் திரையுலகின் விருது வழங்கும் விழாவில் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை சாக்‌ஷி இந்த ஆண்டு விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக நடிகை சாக்‌ஷி அகர்வால் தமிழகம் முழுவது அனைவருக்கும் தெரிந்த முகமானார்.

இந்நிலையில் அவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கீழே ஆடை அணிந்து உள்ளாரா இல்லையா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் படு கவர்ச்சியாக உள்ளது.

https://www.instagram.com/p/B7n2A0vAPHu/?igshid=1e4tgznn80e8h
https://www.instagram.com/p/B6kTmKyAeSe/?igshid=1lkcyvwmyyryx

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்ல விராட் கோலி புது பார்முலா ?

0

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கு செல்லாது : நியுசிலாந்தை வெல்லை விராட் கோலி புது பார்முலா ?

ஆஸ்திரேலியாவை வென்ற பார்முலா நியுசிலாந்தில் செல்லாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரை வென்ற உற்சாகத்தோடு இந்திய அணி நியுசிலாந்துக்கு சென்றுள்ளது. அன்று நாளை முதல் தொடங்கும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி நியுசிலாந்து தொடர் குறித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது :-’நியுசிலாந்து அணி அதன் தாய்நாட்டில் மிகவும் பலமான அணி. ஆடுகளங்களை அவர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். எனவே இந்திய அணியும் சிறப்பாக ஆடினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால் நாமும் இங்கு குறிப்பிடத்தக்க போட்டிகளை விளையாடியுள்ளோம். நாம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளோம் என்ற பார்முலா எல்லாம் இங்கு உதவாது.

ஒவ்வொரு தொடரையும் சிறப்பாக விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். நியுசிலாந்து அணியை அதன் மண்ணில் வெல்லும் சவாலுடன் வந்துள்ளோம். அதற்கு தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி டி 20 போட்டிகளில் மிகவும் மோசமான சாதனை வைத்துள்ளது நியுசிலாந்து அணியுடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி சம பலத்துடன் இருப்பதால் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.