வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31, 2025
Home Blog Page 5873

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் இணைந்த நடிகர் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்!

0

இந்திய சினிமாவில் பெரும் பங்கு என்றால் அது தமிழ், கேரளா, மலையாளம், தெலுங்கு சினிமா என்றே சொல்லலாம். கன்னட சினிமாவில் அவ்வளவாக படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பெரிது பேசப்படுவதில்லை என்பதே உண்மை.

அப்படி இருக்க கடந்த வருடம் மாபெரும் படைப்பை கன்னட சினிமா ஒன்றை கொடுத்தது. அதுதான் கே.ஜி.எப் பிரசாந்த மற்றும் யஷ் கூட்டணியில் உருவான படம். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும்.

ஹீரோ யஷ் மற்றும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த படம் கே.ஜி.எப். இது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ஆகும். இது தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. யாரும் எதிர் பாராத விதத்தில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் ஆகும். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

கே.ஜி.எப். முதல் படம் வெற்றி பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இந்தி சினிமாவின் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழ் நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார். நடிகர் சரண் சக்தி ஆகும். சரண் சக்தி தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக நடித்திருந்தார். இது இல்லாமல் சகா என்ற தமிழ் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தின் நடிப்பது பற்றி நடிகர் சரண் சக்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். பின்வருமாறு, கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல்லிற்கு நன்றி என நடிகர் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கே.ஜி. எஃப் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போன்று வெற்றியடைய படகுழுவிர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இனி கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் புதுகணக்கு! கலக்கத்தில் கனிமொழி?

0

திமுகவில், நீண்ட கால அரசியல் வாதி கனிமொழியா? புதிய அரசியல் தலைவரான உதயநிதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கலைஞர் கருணாநிதி இறந்து ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இங்குதான் சலசலப்பை உண்டாக்கும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பதற்காக திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். ஆனால் டெல்லியில் மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களும் மம்தா பானர்ஜியை அழைப்பதற்காக மும்முரமாக செயல்பட்டார்.

ஆனால், அறிவாலயம் கனிமொழியின் மும்முரத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மம்தா பானர்ஜியா அழைக்க செல்லவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கட்டலையாம். இதனால் பெரிதும் சர்ச்சை எழுந்துள்ளது. கனிமொழி மும்முரதிர்க்கு தடை போட்டது ஏன் என்ற கேள்வி கனிமொழியின் ஆதரவாளர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் கனிமொழி அதிக அளவு அரசியல் ஈடுபாடு உள்ளவர். இதற்கு முன்னதாகவே மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் ஆக பதவி ஏற்றார். திமுக மகளீர அணி தலைவர் பொறுப்பில் உள்ளார். இது போதாதா கனிமொழியின் அரசியல் நிலைமை என கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எந்த அரசியல் முன் அனுபவம் இல்லாமல் தற்போதுதான் இளைஞர் அணி தலைவர் பதவியை ஏற்றார் அவருக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது. என கனிமொழி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது ஸ்டாலின் நிலைபாடு மற்றும் ஸ்டாலின் மகன் உதயநிதி அவர்களை அரசியலில் இனி முன்னெடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கிறாரோ கனிமொழியை ஓரம் கட்ட படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மேஷம் ரிஷபம் கன்னி ராசி காரர்களே உஷார்! கண்டிப்பாக இன்று இதை செய்யக்கூடாது?

0

மனிதன் எவ்வளவோ திறமையுடன் முயற்சி செய்தாலும் சில தவறுகள் அல்லது அந்த முயற்சி பலன் இல்லாமல் போகலாம். அப்படி இருக்க ஒரு சிலருக்கு எதுமே செய்யாமல் அவர் செய்யும் செயல் வெற்றியை தரும், நினைத்த காரியங்கள் ஈடேறும். காரணம் எல்லாம் என் நேரம் என்று கூறுவது பார்த்திருப்போம்.

இதை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நம்மையே அறியாமல் நடக்கு அதுவே நம்மலுடைய ராசி மற்றும் கிரக தோஷம் கிரக நிலை இவையெல்லாம் பொறுத்தே அமைகிறது. அப்படி இருக்க இன்று மேஷம், ரிஷபம், கன்னி ராசி காரர்களின் சில இன்னல் ஏற்படுவதாக நம் ஜோசிய சிந்தனை கூறுகிறது அதை பற்றி பார்ப்போம்.

மேஷம்: இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் சிந்தித்து நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இதனால் உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும். உங்கள் ராசியில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் எல்லா நன்மை உண்டாகும். பணம் வரவு கூடும் நாள். உங்கள் நண்பர்களால் பயன்கள் கிடைக்க தோன்றும். புதிய நபர்களின் நட்பும் அதனால் அதனால் சந்தோசம் உண்டாகும். சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் ஏற்கனவே செய்த செயலை நினைத்து கஷ்டம் நேரிடும். உங்கள் நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

ரிஷபம்: இன்று செய்யும் செயலில் தாமதம் ஏற்படலாம். எடுத்துக் கொண்ட செயலில் சற்று சறுக்கல் மற்றும் காரிய தடை ஏற்படலாம். உடல் சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். செய்த செயலால் தேவையற்ற பயம் ஏற்படும். முன்னதாக செய்த செயலுக்கு பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் சில விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க கூடும். தேவையற்ற வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

கன்னி: இன்று உங்களுக்கு உங்கள் சிந்தனை வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும் நாள். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லாவற்றையும், எல்லோரையும் ஏற்று நடந்தால் நலன் உண்டாகும். பழைய கடன் குடுக்கல் வாங்கள் பாக்கிகளை வசூல் செய்வதில் புதிய உற்சாகம் இருக்கும். நினைத்த செயலை செய்து முடிக்க எடுக்கும் சிந்தனை சாதகமான பலன் தரும். தேவையற்ற சிந்தனை மனவருத்தம் உண்டாகும். உங்கள் நிறம்: வெளிர் நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

0

காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரிய பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஜேபி தரப்பில் பதில் வந்துள்ளது பிஜேபி காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினார். பின்னர் சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநில தனி அந்தஸ்து நீக்கப்பட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்து பேசினார்.

காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது பற்றி பேசும் போது, பிஜேபி செய்தது இது ஜனநாயக படுகொலை எனவும் ஆனால், காங்கிரஸ் தான் முதன்மை குற்றவாளி என கூறினார். காஷ்மீரை பாதுகாக்க கார்கில் போரில் தமிழக இளைஞர்கள் பலர் பங்கு பெற்று பலர் உயிர் தியாகம் செய்து காஷ்மீரை பாதுகாத்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்படும் பொழுது காங்கிரஸ் 12 உறுப்பினர்கள் எங்கே சென்றனர். பிஜேபி உடன் விலை போய்விட்டார்களா? என கேள்வி எழுப்பி காங்கிரஸ் கட்சி தான் முதல் குற்றவாளி என கூறினார். இதனால் கோவம் அடைந்த காங்கிரஸ் பதிலடியாக கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பேசும் பொழுது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தி இழந்து பேசுகிறார். காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசை குறை சொல்வதா? இது முட்டால் தனம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி கட்சியின் உதவியில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு காங்கிரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.
இதற்கு பதிலடயாக திரு வைகோ அவர்கள் பேசும் பொழுது, நான் காங்கிரசின் தயவில் தேர்ந்தெடுக்க வில்லை என தெரிவித்தார்.

நான் திமுக தலைவர் ஸ்டாலின் உதவியுடன் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். காங்கிரஸ் தயவில் இல்லை. இனி எப்போதும் காங்கிரஸ் உதவிவுடன் பொறுப்பு ஏற்க்கமாட்டென் எனவும் தெரிவித்தார். இலங்கையில் ஈழ மக்களை அழித்த இன துரோகிதான் காங்கிரஸ் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதை பற்றி பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் காங்கிரஸ் கட்சி கூறுவதை ஏற்று கொள்கிறேன். கூட்டணி கட்சியின் உதவி உடன் உறுப்பினராக பதவி ஏற்று பின்பு கூட்டணி கட்சியை விமர்சிக்கும் வைகோவின் கூற்று தவறு. வைகோ கட்சி மாறி பேசுவது புதிதல்ல. கூட்டணியில் இருக்கும் போதே விமர்சிக்கவில்லை பதவி கிடைத்த உடன் விமர்சிப்பது வைகோவின் நிலைப்பாட்டை உறுதி படுத்துகிறது என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

0

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இந்நிலையில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் இது குறித்து அறிக்கை ஒன்றை அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ளார். அதில் 2530 வாக்குகள் அள்ளிதந்த வாக்காளர்களுக்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவை வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் பாசமிகு நண்பர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மாறி மாறி இலவசங்களை வழங்கி சலித்து போன திராவிட கட்சிகள் மத்தியில்
அவர்கள் வழி வந்தது போல தமிழகத்தை சீர் கெடுக்கும் இந்த அறிக்கை பிரச்சாரம் அதற்க்கும் வாக்களித்த குடி மகன்களை பார்க்கும் போது இந்நிலை மாற முதலில் மக்களே சிந்திக்க வேண்டும்.

ஆகையால் இந்த தேர்தல் ஒரு வெளிப்படையான பள்ளி மாணவர்களையும்
இளைஞர்களையும் பாதாலத்துக்கு இழுத்து செல்லும் திட்டமாக உள்ளது. இருப்பினும் மது குடிப்போர் சங்கத்துக்கு 2530 வாக்குகள் விழுந்ததை அரசியல் கட்சியினரும் மற்ற சுயேட்சை வேட்பாளர்களும் வியப்புடன் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

0

நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னியர் சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சியால் உருவான வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் அனைத்து சமுதாய மக்களுக்குமான பாட்டாளி மக்கள்
கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து பெரும்பாலான முறை ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்களின் ஆதரவோடு திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் பாமக பெரும் பங்கு வகித்தது.

பாமக அனைத்து சமுதயத்திற்குமான கட்சி தான் என்பதை உறுதி செய்யும் நோக்கில் தங்களுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கியது. மேலும் பாமகவை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற அமைச்சர் பதவியில் இருந்த போது ரயில்வே துறையில் சேலம் ரயில்வே கோட்டம் போன்ற திட்டங்கள், போலியோ தடுப்பு, 108 இலவச ஆம்புலன்ஸ்,தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இந்தியா முழுவதும் கொண்டு வந்து வெற்றியும் கண்டது.

விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பாமக அதற்காக தனி நிதி நிலை அறிக்கையும் வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது.மேலும் ஆளும் அரசிற்கு ஆலோசனை வழங்கும் விதமாக வருடம் தோறும் நிழல் நிதி நிலை அறிக்கையும் வெளியிட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தினமும் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் வெளியிட்டு தங்களை ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக நிரூபித்து வருகிறது பாமக.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனியாக போட்டியிட்டு தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிரூபித்து காட்டியது. பின்பு தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்களின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தங்களுக்கான அரசியல் வியூகத்தை மாற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்திருந்தும் தமிழக அளவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாமக பெரிதும் உதவியுள்ளது.

இந்நிலையில் பாமகவின் ஆணி வேராக செயல்பட்ட வன்னியர் சங்கத்தின் தலைவர் மாவீரன் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மறைவையடுத்து கடந்த ஒரு வருடமாகவே எதிர்க்கட்சிகள் அவரின் மறைவை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். உயிருடன் இருந்த போது அவரை சாதி தலைவர் என்று விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் மறைந்த பிறகு அவருக்கு ஆதரவாக பேச தொடங்கியது தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காடுவெட்டி குரு வன்னியர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பின்பு தனது ஆவேசமான பேச்சு மூலம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெரும் குற்றங்களுக்கும், சமூக சீர்குலைவுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இத்தகைய செயல்பாடுகளால் அவர் மாற்று சமுதாய மக்களால் கூட பெரிதும் மதிக்கப்படும் மாமனிதர் ஆனார். அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் பெருமளவு இளைஞர்கள் இடம்பெற்று இருப்பதற்கு இவரும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இருப்பினும் இவர் மறைந்த பிறகு மாற்று கட்சியில் உள்ள வன்னியர்களே இவரது படத்தை உபயோகிக்கும் போது சொந்த கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் பெரும்பாலான இடங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும், பத்திரிக்கைகளிலும், பாதகைகளிலும் தொடர்ந்து இவரது பெயரோ படமோ இடம் பெறாமல் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் புறக்கணித்து வருவதாக தொண்டர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பாமகவின் மாநில பொருளாளராக விளங்கும் திலகபாமா அவர்கள் வெளியிட்டுள்ள நோட்டீஸில் மாவீரர் படம் இடம்பெறாமல் இருப்பதே இதை உறுதி செய்யும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்வு பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காடுவெட்டி குரு படத்தை புறக்கணித்த இவர்கள் மாற்றாக கட்சிக்கு சம்பந்தமே இல்லாத காமராஜர் மற்றும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் படமும் இடம் பெறுமாறு செய்துள்ளது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கார் உள்ளிட்ட பாமக ஆதரிக்கும் அனைத்து தலைவர்களையும் பின்பற்ற தயாராக இருக்கும் பாமக தொண்டர்கள் மத்தியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரான திலகபாமா அவர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை மட்டும் முன்னிறுத்தியது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதே போன்று தொடர்ந்து காடுவெட்டி ஜெ குரு அவர்களை சொந்த கட்சியிலேயே வன்னியர் சங்கத் தலைவர் என்ற ஒரே காரணத்தினால் புறக்கணித்து வருவதால் பாமக இளைஞர்கள் மத்தியில் இன்று திலகபாமா பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக்கு பாமக இளைஞர்கள் தரப்பில் சமூகவலைதளங்களில் தங்களது தனிப்பட்ட எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாத திலகபாமா இன்று காலை வெளியிட்டுள்ள தனது முகநூல் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

கவிதையில் மாவீரரை மறைக்கப்பட்ட அதாவது ஒடிந்து விழுந்த சருகாகவும் அவருக்காக கேள்வி எழுப்பிய இளைஞர்களை புலம்பும் பாதையாகவும் இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது என்றும் வெளியிட்டுள்ளார் .

இதனால் கோபத்தில் இருந்த பாமக இளைஞர்கள் திலகபாமா வெளியிட்ட பதிவிற்கும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மதியம் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஒரு கவிதையும் எழுதி விட்டு தான் எழுதிய கவிதை எல்லாம் இன்று எனக்கே துருப்பு சீட்டாய் அரசியலாக வந்து அமைந்துள்ளது என்றும், அடுத்து தனது மறு முகநூல் பதிவில் நான் எதற்கோ போட்ட பதிவு இன்று எனக்கே எதிர்ப்பாய் வந்து நின்றுள்ளது என தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மேல்மட்ட பொறுப்பாளர்களே இவ்வாறு நடந்து கொள்வது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் காடுவெட்டி குரு அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும் அவரது புகைப்படம் பத்திரிக்கைகளிலும்,பாதாகைகளிலும் இது போல புறக்கணிக்கபட்டால் வன்னிய சமுதாய வாக்குகள் கிடைப்பது சந்தேகம் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை கவனத்தில் கொண்டு இப்படிப்பட்ட ஒரு பொறுப்பாளர் போட்ட பதிவினால் கோபத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார் போல நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தும் வருகின்றனர். எது எப்படியோ வன்னிய சமுதாயத்திலிருந்து உருவான பாமக அனைத்து சமுதயத்திற்கான கட்சி என வளர்ந்து தற்போது நாடார்கள் வசமாகி விடுமோ? என்ற பாமக தொண்டர்களின் அச்சமும் நியமானது தானே.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை !! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!!

0

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை!! அடுத்த வாய்ப்பு
மறுநாளே எதிர்பார்ப்பு!!!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நாளை முதல் தமிழகம், கேராளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு உருவானால் 13ஆம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

0

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

அடுத்த கூட்டத் தொடரிலியே மத மாற்றத்தைத் தடுக்கும் மசோதாவை மோடி அரசு கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக் கூடும் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், மத மாற்றத்தையும் தடுக்கக்கூடிய மசோதாவைக் கொண்டு வருவதற்கான விவாதம் நடைபெற்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின் படி, இந்த மசோதா எந்த விதமான மத மாற்றத்தையும் பின்பற்றுவதை தடுக்கும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வில் 30 க்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்றியதால் இது மிகவும் பயனுள்ள அமர்வாக இருந்தது. மக்களவை ஒரே அமர்வில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனையை பதிவுசெய்து உள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏறக்குறைய அனைத்து தரப்பு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த அமர்வு பல வழிகளில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அது கூறியுள்ளது. இந்த அமர்வில் முப்பது மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அதன் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மதமாற்ற மசோதா கொண்டுவந்தாலும் ஆச்சர்யம் இல்லை

ஆனால் இந்திய அரசியலமைப்பு பகுதி 3 அடிப்படை உரிமைகள் ஆனது இதற்கு இடம் கொடுக்காது. அதனால் சட்டத்திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

0

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ‘கோமாளி’ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்குத் தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார். இதனால் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் தெரிவித்தனர். ஜெயம் ரவியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரான நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு. நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது. விடு தலைவா.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்று தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினியைக் கிண்டல் செய்ததற்கு, மறைமுகமாகச் சாடியே இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. தற்போது ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வரும் லாரன்ஸ். அதை முடித்துவிட்டு, தமிழில் சூப்பர் ஹீரோ கதையொன்றை இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார்.
புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனா…

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திண்டிவன கை அசைவில் திறந்துவிடப்பட்ட காவிரி ஆட்டம் கண்டது தமிழக டெல்டா!!

0

திண்டிவன கை அசைவில் திறந்து விடப்பட்ட காவிரி டெல்டா மக்கள் கொண்டாட்டம்

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் விளைவாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் கர்நாடக அணைகள் நிரம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதிப்பதை நேற்று முன் தினம் புள்ளி விவரத்துடன் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

கர்நாடகம் – கேரளத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சித்துறை தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தாராளமாக தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று வரை தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவில்லை. இதையெல்லாம் கண்காணித்து தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறக்கும்படி ஆணையிட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும். எனவே, கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி முழுமையான பரப்பளவில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை அட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதே போன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000ம கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தைலாபுரத்திலிருந்து கொண்டே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை புள்ளிவிவரத்தோடு அறிக்கை விட்டு அலறவிட்டுள்ளார் ராமதாஸ் …

உரிமையை மீட்பதில் என்றும் முதல் குறல் கொடுத்து மக்களை தன்பக்கமே வைத்துக்கொள்கிறார் மூத்த அரசியல்வாதி ….

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்