சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5677

வித்தியாசமாக சுகாதார துறை அமைச்சருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொன்ன சினிமா பிரபலம் : நெகிழ்ந்து போன விஜயபாஸ்கர்!

0

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. இதற்கென தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார துறையினருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பில் அமைச்சருக்கு 5 லிட்டர் கிருமி நாசினியை பொக்கேவாக(அன்பளிப்பாக) வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துயுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அமைச்சரையும் இயக்குனரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நபர் குணமடைந்தார்.! மருத்துவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!!

0

கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நபர் குணமடைந்தார்.! மருத்துவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!!

இரண்டு வாரமாக கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த டெல்லியைச் சேர்ந்தவர் மருத்துவ சிகிச்சையால் குணமடைந்துள்ளார்.

டெல்லியில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு தமிழகம் வந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 14 நாட்களாக இரவு பகல் தொடர்ந்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதித்த நபருக்கு மீண்டும் பாதிப்பு உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கான நெகட்டிவ் செய்தி வந்துள்ளது. இதனால் அவர் முழுமையாக குணமாகியது உறுதியானது. தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அயராத உழைப்பே நோயாளி குணமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதேபோன்று ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்திருந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அவருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் முயற்சியால் பூரண குணமடைந்தார். தமிழகத்தில் டெல்லி நபரோடு சேர்த்து இருவர் குணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லி நபரை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் 19,000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வரும் சூழலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க இன்னும் 21 நாட்களுக்கு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சூழலில் பலர் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே சுற்றுகின்றனர்.

பொதிவெளியில் சுற்றுபவர்களை போலீசார் வேண்டாம் என்று கைகூப்பி போக்குவரத்து காவல்துறையினர் வணங்கிய வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் தங்களது குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மத்திய,மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. சிலர் இந்த உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிவதும் வேதனையான விஷயமாகும்.

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

0

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்காக தொலைக்காட்சி மூலம் பல்வேறு முக்கிய தகவல்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.

தொலைகாட்சி மூலம் அவர் கூறிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு;

  • மத்திய அரசு கூறிய தேசிய ஊரடங்கு உத்தரவை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இதுவரை 606 ஆக உயர்வு. மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி.
  • கொரோனாவால் யாரும் அச்சப்படாமல் எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
  • இந்த கொரோனா பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
  • தமிழகத்தை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கொரோனாவை தடுக்க உங்களின் ஒவ்வொருவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாகும்.
  • உங்கள் குடும்பத்தோடு உங்களை தனிமைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் சமுதாயத்தையும், நம் நாட்டையும் பாதிப்பில் இருந்து காப்பாற்றலாம்.
  • அரசின் உத்தரவை ஏற்று பொது இடங்களில் செல்வதை முற்றிலும் தவிர்த்து வீட்டோடு இருங்கள். அரசின் உத்தரவை மதியுங்கள்.
  • மத்திய அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு உங்களையும், உங்களது குடும்பத்தையும் பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்பதை உணரவும். இது விடுமுறை அல்ல.
  • அன்றாடம் வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
  • கொரோனாவிற்கு அவசர சிகிச்சை அளிக்க
    10,000 -த்திற்கும் மேற்பட்ட நோயாளர் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
  • வருகின்ற ஏப்ரல் மாதத்தில் ரேசன் பொருட்களை விலையின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
  • ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் தலா 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
  • காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறவும்.
  • அத்தியாவசிய பொருட்களை வாங்குவோர்
    மூன்று அடி சமூக இடைவெளி விட்டு நிற்கவும்.
  • கொரோனா வைரஸ் குறித்து யாரேனும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அசாதாரண சூழலில் தனித்தும், விழித்தும் வீட்டிலேயே இருங்கள் என்று பல்வேறு முக்கிய விழிப்புணர்வு தகவல்களை எடப்பாடி தொலைக்காட்சியில் கூறினார்.

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

0

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

கொரோனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் மருத்துவர்களும் ஊடகங்களும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலரும் தங்களது வாகனங்களில் ஊர் சுற்றி வருகின்றனர் என்பது வேதனைக்குறிய செயலாக உள்ளது. இவ்வாறாக ஒரு கும்பல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆரணி கூட்டுசாலையில் இருந்து தங்களது போனில் வீடியோவில் எடுத்த படி உலாவி வந்துள்ளனர்

இதனை பார்த்து மிகுந்த கொபம் கொண்ட‌ காவல் துறையினர் அவர்களை அழைத்து விசாரித்த போது செய்யாறில் யாருமே வெளியே வரவில்லை என்று அனைவருக்கும் தெரிவிக்க டிக்டாக் செய்ததாக திமிராக பதிலளித்துள்ளனர்.

இதனால் மிகவும் கோபம் கொண்ட காவல்துறையினர் தங்களுக்கே உரிய பாணியில் கவனித்து அனுப்பி உள்ளனர். இதனையடுத்து செய்யாறு முழுவதும் நாள் முழுக்க ஒரு இரு சக்கர வாகனம் கூட நுழையவில்லை என்கிறார்கள் காவல் துறையினர்.

மக்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சரும், முதலமைச்சரும், பிரதமரும் தினம் தினம் அறிவுறுத்தியும் படித்த இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த தேசத்தையும் பாதிக்கும் என உணராமல் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை என்று காவல் துறையினர் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

இதுவரை தமிழக்த்தில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியதற்காக 13 பேர்மீது வழக்கும் 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குப்பையை ஒழுங்கா எடுக்கமாட்டியா.? தூய்மை பணியாளரை குடும்பமே அடித்து சாக்கடையில் தள்ளிய கொடூரம்!

0

குப்பையை ஒழுங்கா எடுக்கமாட்டியா.? தூய்மை பணியாளரை குடும்பமே அடித்து சாக்கடையில் தள்ளிய கொடூரம்!

தனது வீட்டின் முன்பு சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தூய்மை பணி செய்த பெண்ணை அடித்து சாக்கடையில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் தங்கள் வீட்டிற்கு முன்பு குப்பைகளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி தூய்மை பணி செய்யும் பெண்ணை கணவனும், மனைவியும் சேர்ந்து சண்டையிட்டு தாக்கினர். இன்னொரு தூய்மை பணியாளரை கீழை சாக்கடை கால்வாயில் தள்ளி காலால் மிதித்து அவரின் ஆடையை கிழித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். தெருவில் இருக்கும் குப்பைகளை எடுக்க தெரிந்த உனக்கு என் வீட்டு முன்பு இருக்கும் குப்பையை எடுக்க தெரியாதா? என்று கேள்வி கேட்டு கணவனும் மனைவியும் அடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த வீட்டுகாரர் கடுமையாக பேசியுள்ளார். உன்னால் முடிந்ததை நீ பார்த்துக் கொள் என்று அப்பெண்ணிடம் சவால்விடுவது போல் அந்த வீட்டின் நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது சமூக வலைதளங்களில் அந்த பிரச்சினை குறித்த காணொளி வேகமாக பரவி வருகிறது. தூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளிய சம்பவம் பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

0

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

நீண்ட நாட்களாக மன அழுத்தம் காரணமாக நிம்மதி இல்லாமல் இருந்த பிரபல திருப்பூர் பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளரின் மருமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சூரிய பிரகாஷ் பனியன் கம்பெனியை நடத்தி வந்தார். இவருக்கும் மற்றொரு பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி என்பவரது மகளுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகியது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சூரியபிரகாஷ் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் நேற்று பெங்களூரு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கோவைக்கு வந்துள்ளார்.

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடன்சியில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு தங்கியிருந்த அறையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையில் முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக சூர்யபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்றும் அப்பகுதி பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!

0

தேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!

காட்டுக்குள் நடைபயணமாக சென்றபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள அரலியூத்து வனத்தில் காட்டுத்தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. கொரோனோ பாதுகாப்பிற்காக தரைவழிப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், கேரளா வனப் பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் காட்டு வழியாக வந்த நபர்கள் தீயில் மாட்டிக் கொண்டனர்.

காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ சுழன்று அடித்ததால் அதிலிருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளனர். ஆபத்தில் மாட்டிக் கொண்டவர்களில் 3 குழந்தைகள் உட்பட மொத்தமாக 8 பேர் தீயில் கருகி பலியாகினர். வீட்டில் இருந்து வெளியே போனால்தான் கொரோனா பாதிப்பு என்றால், காட்டுவழி சென்ற அப்பாவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்கள் கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் மாநில எல்லை முடக்கம் மற்றும் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்மூலம் காட்டுவழியாக போடிநாயக்கனூர் சென்றபோது இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. தீயில் மாட்டிக் கொண்டவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் உலக தலைவர்கள்!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அந்த நாடுகளில் மக்கள் பொது இடங்களில் கூட்டம் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாடுகளின் சுகாதாரத்துறை மக்களை தொடர்ந்து பாதுகாப்போடும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கோரோனா அறிகுறி இருந்ததாக தெரிகிறது, இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் சார்லஸுக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்தச் செய்தி உலக தலைவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பறித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார்.

இதைப் பொருட்படுத்தாத பொது மக்கள் பொழுதுபோக்க சாலையில் சுற்றித் திரிவதாக புகார்கள் எழுந்தது. அவ்வாறு சாலையில் சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

புதுச்சேரியில் எச்சரிக்கையையும் மீறி வீதிகளில் அலட்சியமாக சுற்றி திரிந்தவர்களை பிடித்த காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42 பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இதனையடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசிற்கு உதவும் விதமாக கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 600 க்கு அருகில் நெருங்குகிறது. இதனையடுத்து இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மேற்கு வங்காளத்திலும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கு ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனா சிகிச்சைக்காக அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்திலிருந்து எது தேவையென்றாலும் அதை செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சவுரவ் கங்கலி தற்போது பதவி வகித்து வரும் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஏற்கனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கமும் கொரோனா சிகிச்சைக்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.