செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 26, 2025
Home Blog Page 5835

A1 செம்ம காமெடி! சந்தானம் மாஸ்! ரசிகர்கள், மக்களின் review!

0

சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘A 1’. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜூலை 26-ம் தேதி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

மக்களின் கருத்து:

A1 திரைப்படம் சிறப்பாக உள்ளது என காலை 6 மணி ஷோ பார்த்த மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் கருத்து “படம் வேற லெவல்” “படம் மாஸ்” “செம்ம காமெடி” “செம்ம ப்ரோ” “செம்ம ஆக்டிங்” போன்ற வசனங்களுடன்
ரசிகர்கள் திரையை விட்டு வெளிவருகின்றன.

படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக வெளிவந்துள்ளது.
கண்டிப்பாக சந்தானம் திரை பயணத்தில் இது பெரிதும் பேசப்படும் என கூறுகின்றனர்.

மேலும் இது தவிர சந்தானம் செய்தியாளர் சந்திப்பில் இந்த படத்தை பற்றி கூறியது,
என்னுடைய காமெடி, பன்ச் வசனங்கள் என அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் என்னுடைய டீம் தான். ஆனந்த், முருகன், சேது, மாறன், சுந்தர், குணா, ஜான்சன் உள்ளிட்டவர்கள்தான் என்னுடைய டீம். அவர்கள் தான் எனக்கு முதுகெலும்பு.

நிறைய படங்கள் பார்த்து, இந்தக் காமெடி பண்ணலாம். இந்த பன்ச் போடலாம் என்றெல்லாம் சொல்வார்கள். அதற்குப் பிறகு எனது தயாரிப்பு நிறுவனத்திலும் பலர் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இந்த ‘A1’ படத்தின் மூலம் ஜான்சன் இயக்குநராகவும், என் தயாரிப்பு நிறுவனத்திலிருந்த ராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள்.

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் இயக்குநர் ஜான்சன். ஆகையால், தான் சந்தித்த விஷயங்களை எல்லாம் வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். அதைக் கேட்டவுடன், என் ஸ்டைலுக்கான பன்ச் வசனங்கள் இதில் சேர்க்க முடியுமா? என யோசித்தேன்.

கதையாகவேகொஞ்சம் புதிது என்பதால், என்னுடைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும்.இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, நான் மியூசிக் பண்றேன். கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்னவர் சந்தோஷ் நாராயணன். அவருக்கு நன்றி.

நம் குடும்பம், நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள் என அனைவருமே உறுதுணையாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அந்த விதத்தில் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இப்படி கூறியுள்ளார்.

A1 திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள். சந்தானம் திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைய வாழ்த்துக்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஜெயிலில் பா.ரஞ்சித்? நான் அப்படி பேசவில்லை! நீங்கள் அப்படிதான் பேசினீர்கள்! உச்சநீதி மன்றம் அதிரடி!

0

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த மாதம் ஒரு மேடை பேச்சின் போது ராஜராஜ சோழன் எம் நிலத்தை பறித்தார் அவருடைய ஆட்சி பொற்காலம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கண்டனத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து பலரும் இவர் மேல் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியதற்காகவும் வழக்கு பதிவு செய்துனர்.

இது தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் முன்ஜாமீன் வழங்கக் கோரி கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் தரப்பில் வாதாடியதாவது பல்வேறு வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை நான் குறிப்பிட்டேன் இது தொடர்பாக பலரும் பேசி உள்ளனர் ஆனால் என்னுடைய பேச்சை மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் எந்த வித உள்நோக்கத்துடன் இந்த கருத்தை பதிவு செய்யவில்லை என்று கூறியனர்.

இதையடுத்து நீதிபதி கூறியதாவது பேச்சுரிமையை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும் ராஜராஜசோழன் பட்டியலின மக்களின் நிலத்தை கையகப்படுத்தினர் என எந்த நோக்கத்தில் பேசினீர்கள் எனவும் சரமாறி கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. பா .ரஞ்சித் மீதான ஆதாரங்களுடன் விரிவான மனு தாக்கல் தருமாறு நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் முன்ஜாமீன் கேட்டு ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இதையடுத்து கும்பகோணம் நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் இன்று ஆஜரானர், நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவுயிட்டுள்ளது.
காவல் நிலையத்தில் 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கும்பகோணம் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

நிபந்தனைப் படி நேற்று, காவல்நிலையத்தில் ஆஜராகி பா.ரஞ்சித் கையெழுத்திட்டார். இதேபோல் இன்றும் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்று அவர் கையெழுத்து போட்டார்.
முன்னதாக, 3 நாட்கள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை இரண்டு நாட்களாக குறைக்க வேண்டும் என்று பா.ரஞ்சித் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்றது. இதை அடுத்து பா.ரஞ்சித் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

மாமன்னர் ராஜராஜன் பிகப்பெரிய அரசர் ஆவார். அவருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றது. இவரை நாம் போற்ற வேண்டுமே தவிர தூற்ற கூடாது. அவரின் ஆட்சியில் விவசாயம் நீர்நிலைகள் செழிப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அன்புமணி ராமதாஸ் தெறிக்கவிடும் பேச்சு! MP பதவி ஏற்ற முதல் நாளே மத்திய அரசை எதிர்ப்பு?

0

இரண்டு நாட்களாக அனைவரும் விவாதிக்கும் பொருள் வங்கி தேர்வில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது தான். இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு. வேலைவாய்ப்பு என்பது எட்டா கனி ஆகும். அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலையும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் இந்த சூழலில் வங்கி தேர்வில் உயர் சாதியினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தது ஏற்றது அல்ல இதனால் திறமை கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் நிலையிலான பணிகளுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுகளுக்கு தகுதி பெறுவதற்கான தகுதி கான மதிப்பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட, உயர்வகுப்பு ஏழைகளுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான இச்செயல் கடுமையான கண்டிக்கத்தக்கது திரும்பப்பெறப்பட வேண்டியதாகும்.

நாடு முழுவதும் மொத்தம் 8500-க்கும் கூடுதலான எஸ்பிஐ பணியாளர்களை தேர்வு செய்வதற்காக முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மண்டலத்தில் பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு 61.25 தகுதி காண் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான தகுதிகாண் மதிப்பெண் 53.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்பு ஏழைகளுக்கான தகுதி காண் மதிப்பெண் மட்டும் 28.50 என்ற அளவில் உள்ளது.

பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதற்காக தகுதி கான மதிப்பெண்ணாக 35% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் 40 விழுக்காடும், பட்டமேற்படிப்புக்கு 50 விழுக்காடும் தகுதி கான மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் 28.5% மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தால், அவர்களுடைய தகுதி எத்தகையதாக இருக்கும்? அவர்களால் வங்கிப் பணிகளை எவ்வாறு திறம்பட மேற்கொள்ள முடியும்?

இதனால் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு திறமையிருந்தும் பிற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது ஆகும்.

ஆனால், இப்போது தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரைவிட மிகக்குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள போதிலும், அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். சுருக்கமாக கூற வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்வகுப்பு ஏழைகளுக்கு தரப்பட்டுள்ளது. இதை விட மோசமான, கொடூரமான, இயற்கைக்கு மாறான சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்சாதி ஏழைகளின் மக்கள் தொகை அளவை விட இட ஒதுக்கீட்டு அளவு அதிகமாக உள்ளது. அதனால், அந்தப் பிரிவில் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் கூட தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது. உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பதற்கு இது மட்டுமே காரணம் அல்ல…. ஏராளமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தகுதியுடைய இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். எனவே, எந்த புள்ளி விவரமும் இல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என அதில் தெவிக்கப்பட்டுள்ளது.

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த உயர்சாதியினர் இட ஒதுக்கீடு செய்தது பற்றி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பதே இதனால் பாதிக்க படுபவர்களின் கருத்து ஆகும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

சிலைக் கடத்தலில் தொடர்பா? தனியார் தொலைக்காட்சி மீது வழக்கா? அமைச்சர் அதிரடி முடிவு

0

சிலைக் கடத்தலில் தொடர்பா? தனியார் தொலைக்காட்சி மீது வழக்கா? அமைச்சர் அதிரடி முடிவு

தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பிருப்பதாக வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று ஆளும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரியான  பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட திமுக ஆதரவு பெற்ற கலைஞர் தொலைக்காட்சி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தான் அந்த இரு அமைச்சர்கள் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று (ஜூலை 25) கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இதைத் திட்டவட்டமாக மறுத்தனர்.

முதலில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “நானும், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் சிலைக் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பொய்யான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். நாங்கள் சிலைக் கடத்தில் ஈடுபட்டதாகச் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் எந்த அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. உண்மையில் சிலைக் கடத்தல் போன்ற வழக்குகளில் எங்களுக்குத் தொடர்புமில்லை. சிறப்பு அதிகாரி எந்தவோர் அறிக்கையும் தாக்கல் செய்யாத நிலையில், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்வோடு இல்லாத ஒன்றைச் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தவும், தனிப்பட்ட முறையில் எங்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக சட்டரீதியாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். பிரஸ் கவுன்சிலிலும் புகார் அளிக்க உள்ளோம். கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி எந்தவித ஆதாரமுமில்லாமல் இந்தப் பொய் செய்திகளை வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீனிவாசன், “சிலைக் கடத்தல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. ஆனால் எங்கள் இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களுக்குத் தொடர்பிருப்பதாக முழுப் பொய்யைச் சொல்லியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. அமைச்சர்கள் என்றால் வேறு யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது தமிழ்நாடாக இருக்கலாம். ஆந்திரம், கர்நாடகாவாகக் கூட இருக்கலாம். அதற்கு நாங்களா பொறுப்பு. எங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் மறுப்பு தெரிவித்தோம்” என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சேவூர் ராமச்சந்திரன், “மக்கள் மத்தியில் எங்கள் இருவரின் பெயரையும் களங்கப்படுத்துவதற்காக இந்த உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளனர். எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்திய கலைஞர் தொலைக்காட்சி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பான செய்தி வெளியிட தடை

இந்த நிலையில் சிலைக் கடத்தல் தொடர்பாகச் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி ஆனந்த வெங்கடேசன் பிறப்பித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் வருத்தத்திற்குரிய விஷயம் ஒன்று நடந்துள்ளது. நீதிமன்ற நடைமுறைகளை ஊடகங்களில் தவறாகத் திரித்து வெளியிடுவது தொடர் கதையாகியுள்ளது. இதுதொடர்பாக 24.7.2019 அன்று எங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய போதும், மீண்டும் இன்று அதுபோலவே செய்திகள் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடருமானால் இவ்வழக்கை நியாயமாக முடிப்பது மிகுந்த சிரமமான காரியமாகிவிடும்.

இதனால் இந்த விவகாரத்தைக் கையாள்வதை விட ஊடகங்களைக் கையாள்வதே பெரிய வேலையாகிவிடும். ஆகவே, இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகளை அனைத்து வகையான ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்ற செய்திகளை நீதிமன்றத்தில் ஆதாரமாகவும் காட்ட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக

0

மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எப்படியும் பாமக தனித்து போட்டியிடும் அதனால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் இதனை கண்டு விரக்தியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை சூடு, சொரணை இல்லையான்னு கேட்டிருந்தார்.அரசியல் அனுபவம்,வயதில் மூத்தவர் என்று எதையும் பார்க்காமல் வழக்கம் போல ஸ்டாலின் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் வார்த்தைகளை விட்டது அவருக்கு கடும் எதிராக கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் முத்து விழாவை முன்னிட்டு பழையதை எல்லாம் மறந்து விட்டு வார்த்தைக்கு வார்த்தை அய்யா.. அய்யா என்று மருத்துவர் ராமதாசுக்கு ஒரு வாழ்த்து பதிவு போட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!. இன்றைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார். அதில் ‘பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். “முத்து விழா”-வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார்.

அரசியலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று பலருக்கும் தெரியும். ஆனால் தங்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதற்காகவோ,எதிர்கட்சியினருடன் இணைந்து விட்டார் என்பதற்காகவோ ஒரு மூத்த அரசியல் தலைவரை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சித்தது அவரது அரசியல் அனுபவமின்மையை தான் காட்டியது. கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும், மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பு போல தற்போது திமுக தலைவராக உள்ள ஸ்டாலினுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் நெருக்கமான நட்பு இல்லை என்று தான் கூற முடியும். உதாரணதிற்கு சமீபத்திய கூட்டணி நேரத்தின் போது, “சூடு சொரணை இருக்கா, வெட்கம் இருக்கா என்று திமுக தலைவர் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

அரசியல் முதிர்ச்சி எதையுமே பொறுமையாகவும், பக்குவமாகவும் கையாள வைக்கும். குறிப்பாக தமிழிசை சவுந்தராஜன் எவ்வளவு காரசார ட்வீட்கள் போட்டாலும் அதனை முதிர்ச்சியோடு அணுகி பதில் சொல்லும் ஸ்டாலின், மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸை பார்த்து இப்படி கேட்டது அன்றைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த கட்சியின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு ஆதரவாக சென்று விடும் என்ற கோபமே. அவர் நினைத்தது போலவே தான் தேர்தல் முடிவுகளும் வந்தது. இடைத்தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பெற்று அதிமுக அரசு இன்னும் தொடர்கிறது என்றால் அதற்கு பாமகவுடனான கூட்டணி தான் முக்கிய காரணம் என அரசியல் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பெரும்பான்மையான வன்னியர் சமூகத்தை சேர்ந்த தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான ஸ்டாலினின் இந்த பேச்சு அவர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாமக தன்னுடன் கூட்டணி வைக்காத ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் இந்த பேச்சு என்று அவர்களுக்கும் தெளிவாக தெரிந்தது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு நன்றாகவே தெரியும். தற்போதைய அரசியல் தலைவர்களில் மக்கள் நலனை பற்றி சிந்திக்க கூடிய ஒரே தலைவர் அவர் மட்டுமே. உதாரணமாக பொது மக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு முழுமையான மது விலக்கை கொண்டு வர போராடுவது அதற்காக தங்கள் கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து குறைந்த பட்சம் நெடுஞ்சாலையில் உள்ள 3000 மதுக்கடைகளை நீதி மன்ற உத்தரவின் மூலம் மூட வைத்தார்.

மேலும் வருடம் தோறும் ஆளும் அரசிற்கு உதவியாக நிழல் நிதி நிலை அறிக்கை மற்றும் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கை என தொடர்ந்து சிறந்த அரசியல் தலைவராக செயல்பட்டு வருபவர். கூட்டணி கட்சியாக இருந்தாலும் தன்னுடைய அறிக்கைகள் போராட்டங்கள் மூலம் அவர்களின் தவறுகளை சுட்டி காட்ட தவறியதில்லை. தமிழக அரசியலில் எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டதில்லை.

அந்த வகையில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்து எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை கணித்து அதனுடன் கூட்டணி வைப்பது தான் எல்லா கட்சி தலைவர்களும் செய்வது என்றாலும் இங்கு பாமக கூட்டணி வைத்ததை மட்டும் தொடர்ந்து விமர்சனம் செய்வது அக்கட்சிக்கு எதிரான சதியாகவே தெரிகிறது.

இவ்வளவு சிறந்த ஒரு தலைவரை திமுக தலைவர் கூட்டணி வைக்கவில்லை என்ற விரக்தியில் தரக்குறைவாக பேசியது அக்கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாழ்த்து அரசியல் நாகரிகமாக தெரிவிக்கபட்டதா? அல்லது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரமா? என்பதை காலம் தான் கூற வேண்டும். எது எப்படியோ கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையேயான நட்பை போல தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிறது.

தேர்தல் நேரத்தில் அன்று ஸ்டாலின் ராமதாஸை பார்த்து கேட்ட கேள்வியால், கடும் கோபத்தில் உள்ள பாமக தொண்டர்கள் ஸ்டாலினின் இந்த வாழ்த்து செய்தியால் ஓரளவு திருப்தியடையலாம். மேலும் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருபவர் என்றாலும், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய வாழ்த்து அக்கட்சியின் தொண்டர்களின் கொதிப்பை மட்டுமல்ல, மருத்துவர் ராமதாஸின் கோபத்தையும் குறைக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அரசியல் ரீதியாக எதிரெதிதாக இருந்தாலும் வாழ்த்தியதன் மூலம் கடந்த காலத்தில் ஸ்டாலினிடம் இல்லாத அரசியல் நாகரீகத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் என்பதற்காக பாராட்டலாமே.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

0

தோனி அனைவரும் அறிந்த பெயர். தமிழகத்தில் தல அஜித்திற்கு பிறகு தல என அனைவராலும் அழைக்கபடும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகும். தோனி அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில்
தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது பற்றி பாஜகவில் பல காலமாகப் பேசப்பட்டு வருவதாகவும் கூறிய சஞ்சய், ஆனால் தோனி ஓய்வு பெற்ற பிறகே இது பற்றி உறுதியாகக் கூற முடியும் என்று தெரிவித்தார்.

தோனி எனது நண்பர். உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர், இந்திய அணிக்கு பல பங்களிப்பை அளத்துள்ளார். உலக கோப்பை இந்திய நாட்டிற்க்கு வாங்கி கொடுத்த புகழ் தோனியை சென்றடையும். அவரை பாஜகவுக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என்றார்.

தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அப்போது தோனியின் பாஜக பிரவேசம் நடக்கலாம். ஒரு வேலை தோனி பாஜகவில் இணைந்தால், அவர் ஜார்க்கண்டுக்கான பாஜக முதல்வர் வேட்பாளராகக் கூட அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : இரண்டாக பிரிக்கிறது இந்திய அணி? எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்! வீரர் அதிரடி!

மேலும் படிக்க : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

தோனி சிறப்பான கிரிக்கெட் வீரர் அவர் அணியிலிருந்து ஓய்வு இன்னும் அறிவிக்க பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே ஓய்வு அறிவித்தாலும் பிறகு அரசியலில் இறங்குவார் என்பது அவருக்கு தான் தெரியும். எப்படி இருந்தாலும் சரி அவருடைய இரண்டாவது பாதி நல்லதாக அமைய வேண்டும்.

மேலும் படிக்க : தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இரண்டாக பிரிக்கிறது இந்திய அணி? எங்க ரெண்டு பேருக்கும் சண்டைதான்! வீரர் அதிரடி!

0

இந்திய அணி நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இதற்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அடுத்து இந்திய அணி மேற்கு இந்திய தீவு அணியுடன் மோத உள்ளது. இதற்கு வீரர்கள் அறிவிக்க பட்ட நிலையில் அனைவரும் தயாராகி வருகின்றனர். இது எல்லாம் போக ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டுவருகிறது.

சர்வதேச ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். விராட் கோலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல தருணங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாத நிலையில், அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கோப்பையை வென்றுகொடுத்தார். இவ்வாறு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ரோஹித் சர்மா.

ஆசிய கோப்பையை வென்றபிறகு அதிர்ச்சியான ஒரு அறிவிப்பை கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், கேப்டனாக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்தின் கேப்டன்சி ஆசையும் கோலிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதும் தெரியவந்தது.

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் மீண்டும் ரோஹித் , கோலி மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித்தின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும், ரோஹித் , கோலியின் தலைமையில் இரண்டு பிரிவுகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக ரோஹித் சர்மாவின் செய்கை அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே விராட் கோலியை அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, தற்போது கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் அன்ஃபாலோ செய்திருப்பதாக மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

மேலும் படிக்க : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

ரோஹித் சர்மாவின் இந்த செயல், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மாவின் இந்த செயல், பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.எது என்னவோ இருவரும் நல்ல திறமையான வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யார் கேப்டன் என்பதை இந்திய அணி தேர்வு குழு தான் முடிவு செய்யும்.

மேலும் படிக்க : தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அவையிலேயே கட்சி விட்டு கட்சி மாறிய அமைச்சர்? அதிமுக கலக்கம்! திமுக ஹேப்பி!

0

அதிமுக மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்றனர். திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதே போன்று அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இன்று பதவி ஏற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின். டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

அதிமுக எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். சக எம்.பி.க்கள் அவரை தேற்றினர். அந்த பேச்சில் தனது எதிர்காலம் குறித்து மைத்ரேயன் குறிப்பிட்டது தான் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மாநிலங்களவையின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளது தனக்கு மன திருப்தி அளித்தாலும் ஒரு சம்பவம் மட்டும் முள்ளாய் உறுத்துகிறது. முன்பின் அறியாத எத்தனையோ பேருக்கு இந்த சபை இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆனால் 2009ல் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை
மவுன அஞ்சலியும் செலுத்தப்படவில்லை.

எனவே என் வாழ்வின் முடிவுக்குப் பின் எனக்காக இரங்கல் தீர்மானமோ மவுன அஞ்சலியோ இந்த சபையில் வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதற்குப் பிறகு மைத்ரேயன் பேசியதுதான் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. நீண்ட அனுபவத்திற்கு பிறகு மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்த வரை இது எனக்கு அஸ்தமன நேரம். ஆனால் மாநில அரசியலில் இனிமேல் தான் “சூரியயோதயம்” ஆரம்பிக்கப்போகிறது என்று மைத்ரேயன் தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து டெல்லியுடன் நெருக்கம் காட்டியவர் தான் மைத்ரேயன். ஆனால் அணிகள் இணைந்த பிறகு மைத்ரேயன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டார். ஓபிஎஸ்ம் அவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை
மக்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். மாநிலங்களவையிலாவது மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.
இதையடுத்து தான் அவரது எண்ணங்கள் மாறத் தொடங்கிவிட்டாக அதிமுகவினர் கூறுகின்றனர். இந்நிலையில்தான் தனது வாழ்வின் சூர்யோதயம் குறித்து அவர் பேசி தனது முடிவை உணர்த்தியுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : இவர்களா அந்த இரண்டு அமைச்சர்கள்? சிலை கடத்தல் தொடர்புடையவர்கள்! பொன் மாணிக்கவேல் கூறுவது இவர்களையா?

“சூரியோதயம்” என குறிப்பிட்டது திமுகவின் உதய சூரியன் சின்னத்தை கூறுகிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை திரு மைத்ரேயன் தான் கூறவேண்டும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இவர்களா அந்த இரண்டு அமைச்சர்கள்? சிலை கடத்தல் தொடர்புடையவர்கள்! பொன் மாணிக்கவேல் கூறுவது இவர்களையா?

0

 சிலை கடத்தல் பிரிவிற்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. பொன் மாணிக்கவேல் பொறுப்பு ஏற்ற பின் பல இடங்களில் இருந்து கடத்தப் பட்ட சிலைகளை கண்டு பிடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சோழர் கால சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி காதர் பாஷா விற்கு எதிராக பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐகோர்ட்டில், பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்தார், சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் என்றும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்ககோரி பொன்.
மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன். மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சிலை கடத்தல் வழக்குகளில், அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற செய்தி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து அந்த இரண்டு அமைச்சர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று போக போகத்தான் தெரியும்.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தேசிய அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங் ஆன மருத்துவர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80

0

தேசிய அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங் ஆன மருத்துவர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா முத்து விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் இந்திய மக்களால் சமூக நீதி காவலர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 1980 களில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தையே அதிரவைத்த இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் நடத்தபட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர்.

இதனையடுத்து முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, வன்னியர் உட்பட 108 சாதியினரையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC என்கிற பிரிவில் அனைவரையும் உள்ளடக்கி 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் மேலும் ஈழத் தமிழர் பிரச்சனை,மது விலக்கு,புகையிலை ஒழிப்பு,பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் வாழ்வுரிமை போராட்டம் என பல போராட்டங்களை முன்னெடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.

Dr Ramadoss Birthday Celebration-News4 Tamil Online Tamil News
Dr Ramadoss Birthday Celebration-News4 Tamil Online Tamil News

1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகத்தில் தமிழ்த் தேசியக் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அப்போது துணிச்சலாக தமிழகத்துக்கு தன்னுரிமை கோரி மாநாடு நடத்தினார் மருத்துவர் ராமதாஸ். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரசியல் தலைவரான இவர் தான் வாக்குறுதி அளித்தப்படி இன்று வரை சட்டமன்றத்தில் காலெடுத்து வைக்கவில்லை. இவ்வளவு பெருமைக்கும் உரிய அவரது 80-வது பிறந்த நாளை முத்துவிழாவாக பாமகவினர் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

இந்த விழாவை முன்னிட்டு பமாகவினர் ட்விட்டரில் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மருத்துவரின் சாதனைகளையும் பெருமைகளையும் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் இவ்வாறு பதிவிட்ட பதிவுகள் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த தலைப்பில் இடம்பெற்ற சில ட்விட்டர் பதிவுகள்.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம்

பாமக இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:

மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன். ஆறு வயதில் பள்ளி விடுதியில் சேர்த்த கண்டிப்பு மிக்க தந்தையை பார்த்திருக்கிறேன், ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்து செல்லும் அன்பான அப்பாவை பார்த்திருக்கிறேன், பெரும் போராளியாக சிறையில் பார்த்திருக்கிறேன், ஒரு டாக்டராக மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார் அன்புமணி.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.