சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5666

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

0

மீண்டும் எழுந்த புர்கா சர்ச்சை – எழுத்தாளருடன் ஏ ஆர் ரஹ்மான் மகள் வாக்குவாதம்!

ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா புர்ஹா அணிந்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எழுத்தாளர் தஸ்ரிமா நஸ்ரினுக்கு சமூகவலைதளத்தில் பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார். அவருடன் அவரது மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டார். இருவருக்கும் இடையிலான கேள்வி பதில் செஷன் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க வேறு விதமான ஒரு சர்ச்சையும் கிளம்பியது.

கதீஜா புர்கா ஆடை அணிந்து இருந்ததால் ஏ ஆர் ரஹ்மானை பிற்போக்குவாதியாக சித்தரித்து நிறைய விமர்சனங்கள் எழவே, அதற்குப் பதிலளித்த கதீஜா ரஹ்மான் ‘இது நான் தேர்ந்துகொண்ட பாதை… இதற்கும் எனது தந்தைக்கும் சம்மந்தம் இல்லை. நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் தந்தை எப்போதும் உறுதுணையாகவும், என்னை ஊக்கப்படுத்தியும் வந்துள்ளார்’ எனக் கூறினார்.

இந்த புர்ஹா விவகாரம் அத்தோடு முடிய இப்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் புதிய வடிவில் சர்ச்சை உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ‘ எனக்கு ஏ ஆர் ரஹ்மானை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும் போதுதான் ஒருவிதமான புழுக்கத்துக்கு ஆளாகிறேன்.’ எனத் தெரிவிக்க மீண்டும் சர்ச்சைகள் உருவாகின. இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் இப்போது மீண்டும் கோபமாக கதீஜா ரஹ்மான் அவருக்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘ஒருவருடத்திற்குள்  மீண்டும் இந்த விஷ்யம் டாப்பிக்காக ஆகியுள்ளது. தஸ்லிமா நஸ்ரின் அவர்களே, என் உடையால் நீங்கள் புழுக்கம் அடைந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். வெளியே சென்று நல்ல காற்றை சுவாசியுங்கள். கூகுளில் சற்று பெண்ணியம் என்றால் என்னவென்று தேடிப் பாருங்கள். ஒரு பெண்ணை இழுத்து அவரின் அப்பாவுக்கு பிரச்சினை கொடுப்பது பெண்ணுரிமை இல்லை. அதேப்போல நான் எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி கருத்து கேட்கவில்லையே’ தடாலடியாக பதிலளித்துள்ளார்.

காதலை தொடங்கும் முன் சபரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

0

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்

\காற்றுவாக்கில ரெண்டு காதல்\ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் என்பவர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிய வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டு சபரிமலையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமான முதல் நோயாளி: சீனாவில் பரபரப்பு

0

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 2000 பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள் மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இருந்தனர். பல நிறுவனங்களும் தனி நபர்களும் இந்த மருந்தை கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேமரூனை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருந்த நிலையில் அவரை தனிமைப்படுத்தி சீன மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் அடிப்படையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தற்போது முழுமையாக குணமாகி விட்டார் என்றும் இதனை அடுத்து அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து தான் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த மருந்தை இன்னும் ஆய்வு செய்து விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் இந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று சீன மருத்துவர்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிகாலை டெல்லி என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்?

0

டெல்லியில் இன்று அதிகாலை 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லியில் உள்ள பிரகலாதபூர் என்ற பகுதியில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதாகவும் அவர்கள் மீது பல வழக்குகள் அடிப்படையில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்த இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பிரகலாதபூர் என்ற பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் இதனை அடுத்து அங்கு சென்ற போலீஸ் படை இருவரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த என்கவுண்டர் குறித்த விரிவான தகவலை போலீசார் இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐதரபாத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்! ஏன் தெரியுமா..?

0

உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்! ஏன் தெரியுமா..?

கெவின் கார்ட்டர் புகைப்படங்களை எடுப்பதில் வல்லவர் மற்றும் உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தது. இந்த ஆர்வம் அவரை பல்வேறு நாடு, நகரம், காடு, மலை வரை இழுத்துச் சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, குடிக்ப நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை கடந்து சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி ஒரு இடத்தில் கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார். அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம், அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்குப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் திண்ணிக் கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும் மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் திண்ணிக் கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார். சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு க்ளிக் செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு, அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டரிடமோ இல்லை.

1994 ஆம் ஆண்டு மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான “புலிட்சர்” விருதைப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம் திண்ணிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம், அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம், கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்.

ஆனால், இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார், பின்னர் கெவின் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி I am Really, Really Sorry…

நாம் எவராக இருந்தாலும்
சரி, நம்மிடம் மனிதம் இல்லையேல்
நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம்.

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

0

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டிச்சேரி கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த தகவல் மனோகரன் குடும்பத்திற்கு அவசர தகவலாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவலர் மனோகரன் பாண்டிச்சேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். உடலை பரிசோதித்த பின்பு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவசர சிகிச்சைக்கு 1.5 லட்சம் செலவாகும் என்று கூறினர். காவலரின் மனைவியால் உடனடியாக ஒன்றரை லட்சத்தை திரட்ட முடியாமல் தவித்தார்.

இந்த அவசர தகவல் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்களிடமும், கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால்சுதர், உதவி ஆய்வாளர் ஆகாசமூர்த்தி, கடலூர் புதுநகர் காவலர்களுக்கும் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களின் முகநூல் குழுக்களிலும் வங்கி எண் தகவலுடன் பண உதவி கேட்டு அவசர தகவலாக பகிரப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்த காவலர்களின் மூலம் இணையத்தின் மூலமாகவும், நேரடியாகவும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது.

திரட்டப்பட்ட தொகையை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் ஒப்படைத்தார். கணவனின் மருத்துவ செலவிற்காக உதவி செய்த காவலர்களுக்கு மனோகரனின் மனைவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். சிகிச்சை முடிந்து காவலர் மனோகரன் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவசர நேரத்தில் உதவி புரிய சமூக வலைதளங்களில் பதிய உத்தரவிட்ட டிஎஸ்பி சாந்தி அவர்களுக்கும், பிற காவலர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வருகிறது. அவசர காலங்களில் எப்படி உதவ வேண்டும் என்பதற்கு காவல்துறையினரின் செயல்பாடு உதாரணமாக அமைந்துள்ளது.

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

0

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

தீனதயாள் உபாத்யாயா : இந்தி தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுனர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர், அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கியவர். பாரதீய ஜனதா சங்க கட்சியின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

இவரது பெயரில் உள்ள நிறுவனங்கள் :

* தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனை புது தில்லி
* தீனதயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கல்விக்கூடம், கான்பூரில் உள்ளது.
* தீனதயாள் உபாத்யாயா கல்லூரி
* பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்
* தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலிய பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்  வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தீனதயாள் உபாத்யாயா நினைவு மண்டபத்தை இந்திய நாட்டிற்காக அர்பணிப்பு செய்கிறார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள 63 அடி உயர சிலையை திறந்து வைத்து பல்வேறு உதவிகளை வழங்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் ராசியான தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது! அமைச்சர் காட்டம்..!!

0

ஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது! அமைச்சர் காட்டம்..!!

நாகை மாவட்டத்தில் சீர்காழி நகர வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் அதிமுகவின் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஒ.எஸ்.மணியன், ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியினரிடையே துளியும் பயம் இல்லாமல் போய்விட்டது என்று காட்டமாக பேசியுள்ளார்.

கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அப்பகுதி சார்ந்த பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ பாரதி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் முதன்முதலாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது மிக சிறப்பான விஷயமாகும். இந்திய அளவில் இதுதான் முதல் முறையான சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு என்று கூறினார்.

இதனையடுத்து, காவிரி டெல்டா வேளாண் மண்டல சிறப்பு அறிவிப்பு அரசாணை விவசாய மேம்பாட்டிற்கு சிக்கல் இல்லாத வகையிலும், அதை மத்திய அரசு ஏற்கும் வகையிலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற முதல்வரின் கூறியதை குறிப்பிட்டு பேசினார்.

மேலும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து சிறப்பான திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா பகுதிகளில் அதிமுக தோல்வியை குறிப்பிட்டு பேசினார். குடியுரிமை திருத்த சட்டம், மீத்தேன்

மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற காரணங்களால் நாம் வெல்ல வேண்டிய பல இடங்களை கோட்டை விட்டுவிட்டோம். பொது மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு அனுமதிக்காது என்ற முதல்வரின் கூறியதை நினைவுபடுத்தினார்.

ஜெயலலிதா இருந்தபோது கட்சியினர் பெரிதும் பயந்து செயல்பட்டனர். தற்போது அவர் இறந்த பிறகு கட்சியினருக்கு பயம் இல்லாமல் போய்விட்டது என்று காட்டமாக பேசி முடித்தார். அமைச்சரின் பேச்சை கூட்டதில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்!

0

மாணவிகளுக்கு மாதவிடாயா என சோதனை: உள்ளாடைகளை களைய சொன்னதால் போராட்டம்!

குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையம் ஒன்றில் மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று மாதவிடாயா என சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் எனும் பகுதியில் ’ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம்’ எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மையம் ஒரு கோவில் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் இன்னமும் 19 ஆம் நூற்றாண்டுக்கான பழமையானப் பழக்கங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வருகின்றனர்.

அவற்றில் முக்கியமானதும் மோசமானதும் மாதவிடாய் நாட்களில் அங்கு பயிலும் மாணவிகள் சக மாணவியரை தொட்டு பேசக்கூடாது மற்றும் எல்லோருடனும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்ணக் கூடாது. ஆனால் இவற்றை சில மாணவிகள் கடைபிடிக்காமல் வழக்கம் போல எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்து கோபமான ஆசிரியைகள் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவிகள் யாருக்கு எல்லாம் மாதவிடாய் எனக் கேட்க இருவர் எழுந்து கை தூக்கியுள்ளனர். ஆனால் அத்தோடு நில்லாமல் அனைவரையும் தனித்தனியாக கழிவறைக்கு அழைத்துச் சென்று மாதவிடாய் இருக்கிறதா என சோதித்துள்ளனர். அதற்காக அவர்கள் உள்ளாடைகளைக் கழற்ற சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த நிறுவனத்துக்கு எதிரில் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம்  ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணை செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த மாணவியும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

0

திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்கும்:வெளியானது முழு அட்டவணை!

ஐபிஎல் தொடரின் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உயர்மட்ட குழுவின் கூட்டம் தொடர்பாக தேதிகள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொன்னபடியே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐசிசி யின் யர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கூட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது. இதனால் ஐபிஎல் தொடங்கும் தேதியில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி நடக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதில் மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சாம்பியனான மும்பை அணியும் ரன்னரான சென்னை அணியும் மோத உள்ளது. மொத்தம் 56 போட்டிகள் கொண்ட லீக் போட்டிகள் மே 17 ஆம் தேதியோடு முடிகிறது.