சனிக்கிழமை, டிசம்பர் 13, 2025
Home Blog Page 5766

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் !

0

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன ? குற்றவாளிகளின் பதில் !

நிர்பயா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன என்பது குறித்து சிறைத்துறை நிர்வாகம் குற்றவாளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து இதற்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்குத் தண்டனை கைதிகளிடம் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வியான குற்றவாளிகளின் கடைசி ஆசை தொடர்பான கேள்வியை கேட்டுள்ளது. ஆனால் சிறைத்துறையின் கேள்விக்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துவருவதாக  சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குற்றவாளிகளின் தூக்கு சம்மந்தமாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென மூழ்கிய ஸ்பெயின் நாட்டின் நகரம்: அதிர்ச்சி காரணம்

0

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களாக குளோரியா என்ற புயல் கடுமையான தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டின் கேட்டலோனியா கடற்கரை பகுதியில் உள்ள நகரம் ஒன்று இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குளோரியா புயலை அடுத்து கேட்டலோனியா பிராந்தியத்தில் கனமழை விடாது பெய்து வரும் நிலையில் திடீரென அந்த பகுதியின் கடற்கரையில் இருந்து திடீரென ஏராளமான கடல்நுரை நகருக்குள் வந்தது.

கடல் நுரை நகருக்குள் சூழ்ந்ததால், பொதுமக்கள் தெருவில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கட்டிடத்தின் சுவர்களில் பல மீட்டர் உயரத்திற்கு, சிமெண்டு பூச்சுபோன்று கடல் நுரை ஒட்டியுள்ளது பார்ப்பதற்கே பயக்கரமாக உள்ளது. கடல் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்த நுரை உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த நுரையால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்றும், நுரையில் உள்ள பாசியின் அளவைப் பொருத்து, அவை காற்றில் பரவும் நச்சுகளை வெளியிடலாம் என்பதால், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படும் என அமெரிக்க தேசிய பெருங்கடல் சேவை நிறுவனம் கூறி உள்ளது.

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 வது பிறந்தநாள் இன்று!!

0

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 வது பிறந்தநாள் இன்று!!

சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அர்பணித்துக் கொண்டவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்காற்றியவர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். ஒரிசாவில் உள்ள கட்டாக் என்னும் ஊரில் ஜனவரி 23 ஆம் தேதி 1897 ஆம் ஆண்டு பிறந்தார். ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி என்கிற தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தவர். இவருக்கு 8 சகோதரர்கள், 6 சகோதரிகள் இருந்தனர்.

நேதாஜி அவர்கள், கட்டாக்கில் உள்ள பாப்டிஸ்ட் மிஷன் என்ற ஆரம்ப பள்ளியில் பயின்றார். பின்பு 1913 ல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர்கல்வியை பயின்றார். படிப்பில் மிகச்சிறந்த மாணவராக திகழ்ந்தார். சிறுவயதில் இருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீக கொள்கைகளில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா ப்ரெசிடன்சி கல்லூரியில் சேர்ந்த அவர், சி.எஃப் ஓட்டன் என்ற ஆசிரியரின் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இளங்கலை பட்டமும், பெற்றோரின் விருப்பத்தின் பேரில், 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்விற்காக லண்டனுக்கு சென்று படித்து ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவராக தேர்ச்சி பெற்றார். 1919 ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நேதாஜி அவர்களின் மனதை பாதித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட தூண்டுகோலாய் அமைந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலே ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமாகும். இச்சம்பவத்தை அறிந்த நேதாஜி தனது லண்டன் பணியை துறந்து இந்தியாவிற்கு திரும்பினார்.

இந்திய நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில்  இணைந்த நேதாஜி, சி.ஆர் தாசை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு “வேல்ஸ்” என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப முடிவு செய்தது. வேல்ஸ் வருகையை எதிர்த்து, நேதாஜி தலைமையில் கொல்கத்தா தொண்டர் படையும், பல்வேறு காங்கிரஸ் தொண்டர்களும் போராடியதால் ஆங்கில அரசு இவர்களை கைது செய்தது.

சுதந்திரத்தை விரைவில் பெறுவதற்கு தேர்தல் மூலம் சட்டசபைகளை கைப்பற்ற வேண்டும் என்று சி.ஆர்.தாஸும், நேருவும் கருதியதை ஏற்காத காந்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு காட்டினர். இதன் காரணமாகவே சி.ஆர்.தாஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகி சுயாட்சிக் கட்சியை தொடங்கினார். மேலும் சுயராஜ்யா என்ற பத்திரிகையை தொடங்கி நேதாஜியின் தலைமையில் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
காந்தியின் தலைமையில் 1928 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவு தவறானது என்று நேதாஜி குறிப்பிட்டார்.

இந்திய நாட்டின் விடுதலைக்காக இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி போன்ற பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைக்க, அதுவே பின்பு காதலாக மாறியதால் 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனிதாபோஸ் என்ற மகளும் பிறந்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1938 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் தீவிரவாதிதான் எல்லாம் கிடைக்க வேண்டும் இல்லையேல், எதுவும் தேவையில்லை என்று போராட்ட கொள்கையை முழங்கினார். சுபாஷ் காங்கிரஸ் தலைவரான பிறகு ரவீந்திரநாத் தாகூர் அவரை அழைத்து நேதாஜி என்கிற பட்டத்தை சூட்டினார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக நேதாஜி போட்டியிட்டார். இவரது செல்வாக்கு மக்களிடையே உயர்ந்து வருவதை கண்ட காந்திஜி, அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தினார். முடிவில் காந்தியில் வேட்பாளர் தோல்வியை தழுவியதால் காந்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இந்த கசப்பான சம்பவங்களின் காரணமாக நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து தாமாகவே வெளியேறினார். கட்சியில் நேதாஜிக்கு ஏற்பட்ட பெரும் ஆதரவு காந்திக்கு பிடிக்கவில்லை என்பதும் நேதாஜி வெளியேற ஒரு காரணமாகிவிட்டது.

பிரிட்டன் அரசுக்கு எதிராக மக்களை திரட்டுவதாக கூறி 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நேதாஜியை கைது செய்தது. இதையடுத்து  1941 ஆம் ஆண்டு மாறுவேடத்தின் மூலமாக சிறையிலிருந்து தப்பிச்சென்று  பெஷாவர் வழியாக காபூல் அடைந்து, கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார்.  பின்னர் இந்துகுஷ் கணவாய் வழியே ரஷ்யாவை அடைந்ததும், எதிர்பாராத ஹிட்லரின் அழைப்பை ஏற்று ஜெர்மனியின் மாஸ்கோ சென்று இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் எடுத்து கூறி அவருடைய உதவியைக் கோரினார்.

இதனையடுத்து, சுதந்திர இந்திய மையம் என்கிற அமைப்பை தொடங்கினார். சுதந்திர இந்திய வானொலியில் உலகப்போர் பற்றிய செய்திகளையும், இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றிய செய்திகளையும் ஒளிபரப்பினார். ஜெர்மனி அயலுறவுத் துறையின் மூலம் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிரூட்டப்பட்டது. 1943 ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார்.

1944 ல் இந்திய தேசிய ராணுவத்தின் மூலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்தார். இதில் நேதாஜியின் படை தோல்வியைத் தழுவியது. பின்னடைவு இருந்தும் மனம் தளராத நேதாஜி, தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைய வேண்டாம். இந்தியாவை  நிரந்தரமாக அடிமை தளத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் உலகத்தில் எந்த சக்திக்கும் இல்லை என்றும் கடைசியில் “ஜெய்ஹிந்த்” என்று முழக்கமிட்டார். அவரின் எண்ணத்தைப் போலவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது.

நேதாஜ சுபாஷ் சந்திரபோஸ் 1945 ஆம் ஆண்டு விமான பயணம் செய்தபோது பர்மோசா தீவுக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகியதில் அவர் இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலி நிலையம் அறிவித்தது. இந்த துயர செய்தியை கேட்டு இந்திய மக்கள் பெரும் வேதனை அடைந்தனர். நேதாஜி இறந்துவிட்டதை இன்னும் பலர் நம்பவில்லை, இன்றுவரை அவருடைய மரணம் மர்மமாகவே இருந்து வருகிறுது.

இந்திய நாட்டிற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த  மாவீரன் “சுபாஷ் சந்திரபோஸ்” அவர்களின் 123 வது பிறந்தநாள் இன்று. “எனக்கு கொஞ்சம் ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன்” என்று கூறிய புரட்சி நாயகன் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் புரட்சிகரமான விதையை விதைத்துள்ளார் என்பதே வரலாற்று உண்மை.

இன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

0

இன்று ஜன. 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் வீரத்துடன் போராடியவரான இவர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேதினத்தில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர போராட்ட வீரரான இவரது குடும்பம் ஏறக்குறைய 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்கால், அரசவையில் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க வரலாற்று மரபு வழியைகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய் பிரபாவதி தேவி ‘தத்’ என்ற பிரபுக் குலத்தை சார்ந்தவர். இவரது குடும்பம் 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்டது.

சுபாஷ் சந்திரபோஸ் இக்குடும்பத்தில் ஒன்பதாவதுவாரிசாக பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய், தந்தையரை விட தன்னை கவனித்து வளர்த்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் ஈடுபாட்டுடன் இருந்தார்.

இதனையடுத்து ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27 ஆம் ஆண்டில் ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு 1942 ஆம் ஆண்டில் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் சிறையில் அடைபட்டு கிடந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இதன் மூலமாக அப்போது நமது இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை காக்கஅவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இந்நிலையில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று தைவான் நாட்டில் நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாககூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கும் பல்வேறு சான்றுகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970 களில் அங்கேயே இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 ஆண்டு வாக்கில் இறந்துவிட்டதாகவும் அவரது இறப்பு குறித்துபல்வேறு கருத்துக்கள்நிலவுகின்றன.

இந்நிலையில் 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தைவானில் எந்த விமான விபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது அவர் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு ஆதாரமாக திகழ்கிறது. இதனையடுத்து இவர் இறப்பு குறித்து விசாரிக்க இந்திய அரசால் நியமிக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் இதைப்பற்றி விசாரித்து, நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசோஅந்த அறிக்கையை ஏற்கவில்லை.

1992 ஆண்டில் சுபாஷ் சந்திரபோஸுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் திரட்டி தர முடியவில்லை இதனால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.

தெருவில் நின்ற நடிகையை போவோர் வருவோர் எல்லாம் கட்டிப்பிடித்த காட்சி: வைரலாகும் வீடியோ

0

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்திய தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். இதனால் மன அழுத்தம் குறையும் என்றும் இதயம் பலம் பெறும் என்றும் ஒரு நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. ஆனால் இந்த தினம் இந்தியாவில் பொதுவாக கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு தினம் இருப்பதே பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை இந்தி நடிகை ரிச்சா சத்தா என்பவர் இந்த தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்று முன் தினம் அதாவது ஜனவரி 21ஆம் தேதி மும்பையின் முக்கிய வீதி ஒன்றில் நின்று கொண்டு என்னை கட்டிப் பிடியுங்கள் என்ற பதாகையோடு நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அவரை கட்டிப்பிடித்தனர். அவரோ தன்னை கட்டிப்பிடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21-ஆம் தேதி இந்த தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் இப்படி ஒரு தினம் இருப்பதையே பலர் அறிந்துகொண்டு மற்றவர்களுடன் கட்டி பிடித்து வருகின்றனர் கட்டிப்பிடி தினம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

https://www.instagram.com/tv/B7lmuXpjzMI/?utm_source=ig_embed

ரஜினியின் சர்ச்சைப் பேச்சு ! மீண்டும் பிரசுரமாகும் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பதிப்பு :குருமூர்த்தி தகவல் !

0

ரஜினியின் சர்ச்சைப் பேச்சு ! மீண்டும் பிரசுரமாகும் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பதிப்பு :குருமூர்த்தி தகவல் !

ரஜினி சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அந்த ஆண்டு வெளியான துக்ளக் பத்திரிக்கை மறு பிரசுரம் செய்யப்பட உள்ளதாக துக்ளக் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஆகியோர்களின் சிலைகளை நிர்வாணமாக அழைத்துச் சென்றதாகவும் இருவருக்கும் செருப்பு மாலை போட்டார். அதைப்பற்றி அப்போது எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை. துக்ளக்கில் சோதான் அட்டைப்படத்தில் செய்தி வெளியிட்டார். அதனால் திமுகவிற்கு அடுத்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது.’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இதையடுத்து பெரியாரியவாதிகள் இதை ஆதாரப்பூர்வமாக மறுத்தனர். தவறான கருத்துகளைப் பரப்பிய ரஜினி மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர் வீடு முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ரஜினி தான் கேட்டவற்றையும் பத்திரிக்கைகளில் வந்தவற்றையும் வைத்துதான் பேசினேன் அதனால் மன்னிப்புக் கேட்க முடியாது எனக் கூறினார்.

இதற்கிடையில் 1971 ஆம் ஆண்டு சோ பத்திரிக்கையின் மீது நடந்த வழக்கில் அவர் கேட்ட செய்திகளை வைத்துதான் செய்தி வெளியிட்டோம். எனவே எங்களை மன்னித்து விடுங்கள் என சொல்லியதாக திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.

இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க சர்ச்சைக்குக் காரணமான அந்த 1971 ஆம் ஆண்டு இதழை மறுபடியும் மீள்பிரசுரம் செய்ய இருப்பதாக துக்ளக்கின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சை வளர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

 

தனுஷூக்காக தேசிய விருதையும் புறக்கணிப்போம்: இயக்குனர் அமீர்

0

தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் தேசிய விருதை புறக்கணிப்போம் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ‘அசுரன்’ படம் குறித்து மிகப் பெருமையாக பேசினார். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒருவர் என்றும், வடசென்னை படத்தில் தன்னுடைய ராஜன் கேரக்டர் மிகச் சிறப்பாக அமைய அவர் தான் காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் இந்திய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் என்றும் அந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தேசிய விருதையும் தமிழ் சினிமா புறக்கணிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெற்றிமாறனின் முந்தைய படமான ’வடசென்னை’ திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்று இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களால் அந்தப் படத்துக்கு விருது வழங்கப்படவில்லை என்றும் அமீர் அதை விழாவில் பேசினார். அமீரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? தெறிக்கவிடும் அதிமுக அமைச்சர்!!

0

துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? தெறிக்கவிடும் அதிமுக அமைச்சர்!!

அதிமுகவில் எல்லோருமே முதலமைச்சர்தான் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வத்திற்கு விட்டுத் தருவாரா..? என்று திமுகவின் துரைமுருகன் விமர்சனம் செய்திருந்தார். இது பற்றி அதிமுக மீன்வளத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது:

உங்களால் முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டுங்கள் என்று துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார் மேலும், உள்ளாட்சித் தேர்தல் இடைவேளை போன்றதுதான் என்றும், எப்போதும் அதிமுக மட்டும்தான் ஹூரோ 2021 தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

பாஸ்டேக் முறையில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சமீப நாட்களாக திமுக, அதிமுக இடையே அரசியல் புகைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திமுக கூட்டணி சலசலப்பு மற்றும் துரைமுருகனின் பேட்டிகளுக்கு அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிகள் சரியான பதிலடியாக அமைந்துள்ளது. துரைமுருகன் திமுகவின் தலைவராக முடியுமா..? என்கிற பதிலடி பேச்சு திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

0

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

கடைசி தொண்டனாக இருந்து இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வரவு ஆரம்ப கட்டத்தில் பலருக்கு திருப்தி இல்லை. காரணம் அவரிடம் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது சீனியர் நிர்வாகிகளிடம் நல்ல நகைச்சுவை மற்றும் கட்சி ரீதியான கணிப்புகளோடு பேசுவதை பார்த்து சீனியர் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சீனியர்களை ஈர்க்கும் விதமாக செயல்படும் உதயநிதியை பலருக்கு மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால், ஜீனியர் கலைஞர் என்று பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர். தனக்கு எந்த பட்டப் பெயரும் வேண்டாம் என உதயநிதி தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் மூத்த அரசியல் தலைகள் உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் என்று பட்டத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது.

சினிமா களத்தில் இருந்தவருக்கு அரசியல் களம் செட்டாகுமா என்கிற கட்சியினரின் குறுக்கு கணக்குகளை உடைத்தெரிந்த உதயநிதி. தற்போது பல லட்சம் இளைஞர்களை புதிதாக கட்சியில் இணைக்க ஆயத்தமானது பலருக்கு வியப்பில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத உதயநிதிக்கு பெரிய பொறுப்புகளை எப்படி சமாளிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு தனது அரசியல் பேச்சுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஆரம்ப கட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்று கட்சியினர் கூறினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், புகழ் பேசும் பெயர்களை தவிர்த்து நாம் அனைவரும் அண்ணன் தம்பியாக இருப்போம் என்று புகழ்ச்சியினை புறந்தள்ளினார்.

தொடக்க அரசியலில் உதயநிதியை பிடிக்காத சீனியர் நிர்வாகிகளுக்கும் தற்போது பாராட்டக்கூடிய அளவிற்கு தனது அரசியல் பார்வையை மாற்றியுள்ளார் உதயநிதி. அவருக்கான ஜீனியர் பட்டம் கொடுக்கும் மூத்த நிர்வாகிகள் பெருகி வருகின்றனர்.

ரஜினி-பெரியார் விவகாரத்தில் கமல், டிடிவி தினகரன் அமைதி ஏன்?

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக, திக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வருவதாக கூறப்படும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் தினகரன் ஆகிய இரண்டு இருவரும் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பாஜகவுடன் நெருக்கமாகி வருவதாக டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தவறில்லை என்று சொன்னதில் இருந்தே டிடிவி தினகரன் பாஜகவை நெருங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளில் தீவிரமாக இருந்து வரும் டிடிவிதினகரன் ரஜினியை இன்னும் விமர்சனம் செய்யாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. வரும் பொதுத்தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைக்க டிடிவிதினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் விமர்சனம் செய்யாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் தான் கமலஹாசன் அமைதியாக இருப்பதாக தெரிகிறது மொத்தத்தில் ரஜினி – பெரியார் விவகாரம் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி விடும் போல் தெரிகிறது.