சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5680

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு!

0

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு! 

பிகில் படத்தோடு சம்மந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் ரெய்டுக்கு மிக முக்கியமானக் காரணம் ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன ஊதிப் பெருக்கப்பட்ட வசூல் கணக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்மந்தமாக எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது மற்றும் அடுத்தகட்ட விசாரணை தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரெய்டுக்கு பிகில் படக்குழு செய்த ஒரு செயலும் முக்கியமானக் காரணம் என சொல்லப்படுகிறது. ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களை குஷியாக வைத்துக்கொள்ள படத்தின் வசூல் சாதனை விவரங்கள் இப்போது தேவைப்படுகின்றன. இந்த விவரங்களை அறிவிப்பதற்காகவும் ஆன்லைன் டிராக்கர்ஸ் என்ற சிலர் உள்ளனர். இவர்களின் டிவிட்தான் ரசிகர்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பிகில் படம் வெளியான போது ஒவ்வொரு நாளும் இதுபோல டிராக்கர்ஸ் படம் இத்தனைக் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என அடுக்கிக் கொண்டே சென்றனர். இது ரசிகர்களை சிலிர்த்துப் போய் சில்லறைகளை சிதற விட வைத்தது. இந்த ஆன்லைன் டிராக்கர்ஸ்தான் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவித்தவர்கள்.படத்தின் தயாரிப்பு நிறுவனம் எந்த இடத்திலும் வசூல் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் இதுபோன்ற டிராக்கர்ஸ்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவித்து ரசிகர்களை போதை மனநிலையிலேயே இருக்க வைத்தது. இந்த செயல்தான் இப்போது ரெய்டில் அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த வசூல் விவரங்களை வைத்தேக் கேள்விகள் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ரெய்டு சிக்கல்களுக்கு தயாரிப்புக் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் வெளியானது ரியல்மி C3:பல வசதிகளுடன் சந்தைக்கு வருகை!

0

இந்தியாவில் வெளியானது ரியல்மி C3:பல வசதிகளுடன் சந்தைக்கு வருகை!

ரியல்மி நிறுவனத்தின் புதிய செல்போன் மாடலான C3 இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரியல்மி நிறுவனம் குறிப்பிடத்தக்கதாக மாறி வருகிறது. இந்நிலையில் ரியல்மி தற்போது தங்களது புதிய மாடலான C3 ஐ இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் பின் பகுதியில் இரு கேமரா வசதி கொண்டுள்ள இந்த மாடல் ரியல் மி மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களின் வழி பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பின்னர் கடைகள் மற்றும் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

ரியல் மி C3ன் வசதிகள்:-

  • 6.5-inch HD+ (720×1600 pixels) waterdrop notch டிஸ்பிளே
  • f/1.8 aperture மற்றும் 1.25μm ultra-large single-pixel area உடன் 12-மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் f/2.4 aperture 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா
  • 5-megapixel AI ஃப்ரண்ட் கேமரா உள்ளது
  • 5,000mAh பேட்டரி
  • 195 கிராம் எடை
  • இரட்டை நானோ சிம்
  • 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6,999
  • 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999

என் நிறம் கருப்பு:நான் கிரிக்கெட்டைக் காதலிக்கிறேன்!கொதித்தெழுந்த வீரர்!

0

என் நிறம் கருப்பு:நான் கிரிக்கெட்டைக் காதலிக்கிறேன்!கொதித்தெழுந்த வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் டெம்பா பவுமா தனது நிறம் குறித்து விமர்சிக்கப்படுவது ஆதங்கமாக பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு தொடரின் போதும் தேர்ந்தெடுக்கப்படும் அணியில் குறிப்பிட்ட அளவு கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்பதை விதியாகக் கொண்டுள்ளனர்.

அதுபோல எடுக்கப்படும் வீரர்கள் ஆடும் லெவனில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் கருப்பின வீரர்கள் ஊடகங்கலாலும் சக வீரர்களாலும் கேலி செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார் தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் அவர் அவ்வப்போது காயம் காரணமாகவும் பார்ம் அவுட் காரணமாகவும் அணியில் இருந்து நீக்கப்படுவதும் பின்பு சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 98 ரன்கள் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் தனது நிறம் மற்றும் உயரம் குறித்து கேலி செய்யப்படுவது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில் ‘என் நிறம் கருப்பு. ஆனால் நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். நான் அணியில் இடம்பெறுவது எனது ஆட்டத் திறமைக்காகத்தான்.நான் இல்லாதபோது எனது நிறம் மற்றும் உயரத்தை வைத்து நான் கேலி செய்யப்படுகிறேன் என்பது தெரியும் போது சங்கடமாக உணர்கிறேன். பயிற்சியாளர் காலிஸ் நான் ஃபார்முக்கு வருவதற்கு பெரிதும் உதவினார். அவரது ஒட்டுமொத்த பேட்டிங் நுணுக்கத்தையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார்’ எனப் பேசியுள்ளார். பவுமாவின் பேச்சு அணிக்குள் நிலவும் நிறத்தாக்குதல்கள் பற்றி சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

பூவிற்கும் பெண்மணி வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்?

0

கர்நாடக மாநிலத்திலுள்ள ராகியம்மாள் என்ற பூவிற்கும் பெண்மணியின் வங்கி கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் ராகியம்மாள் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.30 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து உங்களுடைய கணக்கில் 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் எப்படி வந்தது என்றும் கேட்டுள்ளார்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் சேலை வாங்கியதாகவும் அந்த சேலைக்கு பரிசு விழுந்துள்ளது எனக்கூறி தங்களுடைய வங்கி கணக்கை ஒருவர் கேட்டு பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்

இதன் மூலம் அந்த பூ விற்கும் பெண்மணி வங்கி கணக்கை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வேறு சிலர் எடுக்க முயற்சித்ததையும் வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

0

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

தர்பார் படத்தின் நஷ்டம் குறித்து விளக்கம் அளிக்க ரஜினியைத் தொடர்பு கொள்ள முயன்று அது முடியாததால் இப்போது இயக்குனர் முருகதாஸை குறிவைத்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ரஜினியை அவர் வீட்டில் சந்தித்து நஷ்டம் சம்மந்தமாக விளக்கம் அளிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் ரஜினி அதற்கு சம்மதிக்காததால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன் பின் நட்புரீதியாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்தித்து முறையிட அவர்கள் முயல, அவரும் விநியோகஸ்தர்களை சந்திக்க மறுத்தார். அதோடு நில்லாமல் காவல்துறையில் புகார் அளித்தார். அங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றதும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாதுகாப்புக் கோரினார். இது விநியோகஸ்தர்களுக்குக் கடுமையான கோபத்தை வரவைக்கவே முருகதாஸுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் A R முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள்’ எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தர்பார் விவகாரம் இப்போது ரஜினியை விட்டு முருகதாஸ் பக்கம் திரும்பியுள்ளது.

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

0

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

விஜய் வீட்டில் கடந்த இரு தினங்களாக ரெய்டு நடந்து வரும் வேளையில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனையில் பல கோடு ரூபாய் கைப்பற்ற பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக பிகில் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்ல. வீட்டில் ரெய்டு நடப்பதால் விஜய்யின் செல்போன் மற்றும் வீட்டு தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதாலும் அவருடன் தொடர்பு கொள்ளாத  முடியாத நிலையிலும் அவர் எப்பொது திரும்ப ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனத் தெரியவில்லை. அதனால் படக்குழு மொத்தமும் படப்பிடிப்பை ரத்து செய்து செய்துவிடு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ரிலிஸ் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

0

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சில மர்ம நபர்கள் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியான இணையதளங்கள் ஆரம்பித்து அதன் மூலம் பக்தர்களை கவர்ந்து பணத்தை மோசடியாக பெற்று வருவதாக தெரிந்துள்ளது. இதனை சமீபத்தில் கண்டுபிடித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் மொத்தம் 19 போலி இணையதளங்கள் இருப்பதாகவும் அதனை அடையாளம் கண்டு பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரிசன டிக்கெட் நன்கொடை உட்பட அனைத்து வங்கி நடைமுறைகளை கீழ்க்கண்ட மூன்று இணையத்தளங்களை மட்டுமே பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த இணையதளங்கள் இவைதான்;

1.tirupatibalaji.ap.gov.in
2.ttdsevaonline.com
3.www.tirumala.org

டிரம்ப் பதவி தப்பியது: தேர்தலில் நிற்கவும் தடையில்லை

0

அமெரிக்க அதிபரு டிரம்புக்கு எதிராக தீர்மானம் தோல்வி அடைந்ததால் அவரது பதவி தப்பியதுடன் அவர் வரும் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது

டிரம்ப் பதவியை நீக்க செனட் சபையில் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் டிரம்புக்கு எதிராக நேற்று தீர்மானம் நடந்தது. மொத்தம் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 57 வாக்களும், அவருக்கு எதிராக 47 வாக்குகளும் கிடைத்தது இதனால் டிரம்பை பதவி நீக்கம் செய்ய செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது

இதனை அடுத்து டிரம்பின் பதவி தப்பியது. அதுமட்டுமின்றி வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடும் தடை இல்லை என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்திருக்கும் நிலையில் அவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது

தனுஷ் குறித்து என் உள்ளுணர்வு சொன்னது இதுதான்: பிரபல நடிகை பேட்டி

0

தனுஷ் இயக்கிய பா.பாண்டி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் இரண்டாவதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் அடுத்தடுத்து தனுஷ் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எப்போது அடுத்த படத்தை இயக்குவார் என்று தெரியவில்லை இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த அதிதி ராவ் கூறியதாவது:

‘தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். எனது உள்ளுணர்வு சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மற்றவர்களிடமிருந்து நல்ல நடிப்பையும் வெளிக்கொண்டு வரும் திறமையும் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார். இவ்வாறு அதிதிராவ் தெரிவித்தார்.

தமிழக முதல்வரை சந்திக்கின்றார் சீமான்: என்ன காரணம்?

0

தமிழக முதல்வரை மிக அதிகமாக விமர்சனம் செய்தவர்களின் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகமாக விமர்சனம் செய்த முதல்வரை இன்று சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் ஒருவர் சீமான் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி கூறுவதற்காக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீமான் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி குடியுரிமை சீர்திருத்த சட்ட விவகாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அவர் கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

எதிரும் புதிருமாக இருந்த தமிழக முதல்வர் மற்றும் சீமான் ஆகியோர் இன்று நேரில் சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது